பெரியார் பிறந்த நாள்: திருப்பூர் தயாராகிறது

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருப்பூர் மாநகரில் பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்   30.08.2022 செவ்வாய் மாலை மாஸ்கோ நகரில் உள்ள மாதவன் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக நிர்வாகிகள் மாதவன், முத்து,  அய்யப்பன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

வரும் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று கழகத்தின் சார்பில் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கு தோழர்கள் திரளாக கலந்து கொள்வது எனவும்

செப்டம்பர் 18 ஞாயிற்றுகிழமை அன்று கீழ்கண்ட இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

1) ராயபுரம், 2) மாஸ்கோ நகர், 3) ரங்கநாதபுரம், 4) பெரியார் காலனி,

5) அம்மாபாளையம், 6) ஆத்துப்பாளையம், 7)அனுப்பர்பாளையம்,

8) சந்தைப்பேட்டை, 9) குளத்துப்பாளையம், 10) வீரபாண்டி பிரிவு.

 

பெரியார் முழக்கம் 08092022 இதழ்

You may also like...