சென்னையில் கழக மாநாட்டின் எழுச்சி “தன்னுரிமை கிளர்ச்சிக்குத் தயாராவோம்!”
பெரியாரிய களப் போராளி பத்ரிநாராயணன் படுகொலை செய்யப்பட்ட ஏப்.30ஆம் நாளில் தன்மான தன்னுரிமை மீட்பு மாநாட்டை ‘நிலம் பாழ் – நீர் மறுப்பு – நீட் திணிப்பு’ என்ற தலைப்பில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மண்டல மாநாடாக இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் நடத்தியது. ஏப்.30, 2018 காலை பத்ரி அடக்கம் செய்யப்பட்ட அவரது நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், நூற்றுக்கணக்கான தோழர்களுடன் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். தோழர்கள் எடுத்த உறுதி மொழி: “பெரியார் இலட்சியப் பணியில் உயிர்ப் பலியாகிய பத்ரியின் நினைவு நாள் எங்களின் கொள்கை உணர்வுகளை புதுப்பிக்கும் நாள். கொள்கைத் தோழன் பத்ரியே… இராயப்பேட்டை பகுதியில் நீ பெரியாரின் கொள்கையை வலிமையாகப் பரப்பினாய்; திசை மாறி குழம்பி நின்ற இளைஞர்களை இயக்கமாக்கி நல்வழிப்படுத்தினாய்; தோழர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று அரவணைத்தாய்; இயக்கத்தில் பதவி என்பது...
