நிமிர்வோம் வாசகர் வட்டம் – சென்னை 31122017

நிமிர்வோம் வாசகர் வட்டம் – சென்னை.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான “நிமிர்வோம்” இதழை குறித்து வாசகர் வட்டம் 31.12.2017 அன்று மாலை 6 மணிக்கு தலைமைக் குழு உறுப்பினர் தோழர்.ந.அய்யனார் அவர்கள் தலைமையில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

வாசகர் வட்டத்தினை தோழர்.வே.இராமசாமி ஒருங்கிணைத்தார்.
இந்த வாசகர் வட்டத்தின் பிப்ரவரி மற்றும் மார்ச் 2017 இதழைக் குறித்து விவாதிக்கப்பட்டது.

வாசகர் வட்டத்தில் இதழைக் குறித்து தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், பிரகாஷ், மதன்குமார், வே.இராமசாமி போன்ற தோழர்கள் இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை குறித்து தங்களது பார்வையும், கருத்துகளையும் எடுத்துரைத்தனர்.

வாசகர் வட்டத்தில் சிறப்புரையாற்ற தோழர்.க.காமராசன் அவர்கள் “வால்கோவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை குறித்து தன் ஆழமான கருத்துகளையும், நூலின் சிறப்புகளை குறித்து தோழர்களிடம் தெளிவான விளக்கத்தை கொடுத்தார்.

இறுதியாக, தோழர்.மா.தேன்ராஜ் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

26112002_2057689777848245_1394589251874104264_n

You may also like...