“ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” தமிழை மறுக்கும் வேதமரபுகள் – கருத்தரங்கம் 30012018

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக 30.01.2018 அன்று நடைபெற்ற “ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை” #தமிழை_மறுக்கும்_வேதமரபுகள்கருத்தரங்கம் இராயப்பேட்டை, விஜய் திருமண மண்டபத்தில் தோழர்.அன்புதனசேகரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் ஒருங்கிணைத்தார்.

தொடக்கமாக தோழர்.சுகுமார் (தென்சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரையாற்றினார். அதை தொடர்ந்து தோழர்.வாலஜாவல்லவன் (மார்ச்சிய பெரியாரிய கட்சி) அவர்கள் பல்வேறு வரலாற்று ஆய்வுகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் ஆண்டாள் பற்றிய தனது ஆய்வுகளையும், தமிழை மறுக்கும் வேதமரபுகள் பற்றியும், சங்கராச்சாரியின் வரலாறுகளையும் பல்வேறு கருத்துகளையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ச்சியாக முனைவர்.தோழர்.சுந்தரவள்ளி அவர்கள் பல்வேறு கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினார்.

இறுதியாக தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

You may also like...