புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை : புரட்சியாளர் டாக்டர்அம்பேத்கர் 63 ஆவது நினைவு நாளான டிசம்பர் 6 அன்று திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர்.

அதன் பின் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ மாலை அணிவித்தார். இராயப்பேட்டை, பத்ரி நாராயணன் நினைவு நூலகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு சைதை அன்பரசன் மாலை அணிவித்தார், கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கோவை : கோவை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வடகோவை, உணவு கிடங்கில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு கொள்கை முழக்கங்கள் எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது, இராதாகிருஷ்ணன் சாலையில் வாழக்காய் மண்டியில் அம்பேத்கர் அவர்களின் உருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. தோழர்கள் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், நிர்மல் குமார், வெங்கட், லோகு, மாதவன் சங்கர்,  இயல்,  விஷ்ணு, பார்த்திபன்  கலந்து கொண்டனர்.

திருப்பூர் : திருப்பூர் கழக சார்பில் 06.12.2019 வெள்ளி காலை 9.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பொருளாளர் துரைசாமி  மாலை  அணிவித்தார். தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். தேன்மொழி ஜாதி ஒழிப்பு உறுதி மொழி கூற தொடர்ந்து தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

நிகழ்வில் மாவட்டத்தலைவர் முகில் ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார் முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன். மதிமுக தொழிற்சங்க நிர்வாகி சம்பத், கழக பொறுப்பாளர்கள் அகிலன், பாண்டியநாதன்,மூர்த்தி,ராமசாமி, தனபால், அய்யப்பன், முத்து, சங்கீதா, மணி, சக்திவேல், ரஜினி, சூர்யா, மற்றும் குழந்தைகள் ஈழமாறன், முத்தமிழ், யாழினி, யாழிசை, பரிதி ஆகியோர் உள்ளிட்ட 25 பேர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்டோர்க்கு தோழர் முத்து நன்றி கூறினார்.

திருச்செங்கோடு : திருச்செங்கோடு நரிப்பள்ளத்தில் அமைந்துள்ள, அம்பேத்கர் சிலைக்கு திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், நகரச் செயலாளர் பூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் நகர கழகம் சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு, நாமக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட கழக சார்பில் கொள்கை முழக்க உறுதியேற்பு நிகழ்ச்சி கண்டமங்கலத்தில்  நடைபெற்றது.  கடலூர் மாவட்ட கழகத் தலைவர் நட. பாரதிதாசன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி விஜி,  கண்டமங்கலம் விசிக அம்பேத்கர் தோழர்கள்  விஜயகுமார், மதிவாணன்,  வழக்கறிஞர் பிரபாகரன் சட்டக்கல்லூரி மாணவர் முருகன், பெ.இளங்கோவன், இராவண இராமன், தமிழ்மாறன்,  மோகன் மற்றும் மருதூர் வனத்தாம்பாளையம் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 12122019 இதழ்

You may also like...