குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் 05.02.2021 அன்று காலை 11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக நகரத் தலைவர் மீ.த.தண்டபாணி தலைமையில் தலித்குமார் வரவேற்புரை நிகழ்த்த, மு. கேப்டன் அண்ணாதுரை, வழக்கறிஞர் கார்த்திகேயன், ஏ. தேவி, எழில்சேரன், பி.ஏ., பி.எல்., பி.லிட்., வழக்குரைஞர் முன்னிலை வகிக்க வாழ்த்துரையாக மு.சாமிநாதன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேணுகோபால், அன்பழகன் (இலக்கியத் தளம்), பொன் கதிரவன், மார்க்சிய கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிஸ்ட்) வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மணமக்கள் சரண்யா, பி.ஏ., ச. நந்தக்குமார், பி.ஏ.,  ஆகியோருக்கு உறுதிமொழி கூறி நகரத் தலைவர் வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். குருவை வேல்முருகன், முருகாண்டி, வடிவேல் மற்றும் குமாரபாளையம் கழகத் தோழர்களும், கழகக் குடும்பங்களும், மாவட்டச் செயலாளர் மு.சரவணன், முத்துப்பாண்டி மற்றும் தோழர்களும் கலந்து கொண்டனர். இணையேற்பு விழாவில் அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. தேவி-மாதேஸ்வரன் நன்றி கூற நிகழ்வு நிறைவடைந்தது.

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ. 1000 நன்கொடை வழங்கினார்கள். மாதேஸ்வரனின் இளைய சகோதரியின் மகன் தான் மணமகன் நந்தகுமார்.

2020 கொரோனா காலம் மே மாதத்தில் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் உறுதி மொழி கூறி நடந்த மணமக்கள் பெயர் சொல்ல விரும்பாத வாழ்க்கை இணையேற்பு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த வழக்கறிஞர் பவானி ப.பா.மோகன், கார்த்திகேயன், மலைவாழ் மக்கள் அமைப்பைச் சார்ந்த வி.பி. குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்வு முன்னிட்டு ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினார்கள் மணமக்கள்.

பெரியார் முழக்கம் 18022021 இதழ்

You may also like...