இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா, ஆணவப் படு கொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் பாராட்டு விழா, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற (தி.மு.க.கூட்டணி) முதல் நகர்மன்ற பெண் தலைவர், மற்றும் நகர்மன்ற பெண் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றன.

இம்முப்பெரும் விழா 25.04.2022 அன்று மாலை 5 மணியளவில், ராசிபுரம் கன்னட சைனியர் மண்ட பத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழக நகரச் செயலாளர் பிடல் சே குவேரா தலைமை வகித்தார்.திராவிடர் விடுதலை கழக நகர அமைப் பாளர் சுமதி மதிவதனி வரவேற்பு கூறினார்.

நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, இராசிபுரம் நகரத் தலைவர் அன்பரசன், வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் ஏற்புரை வழங்கினார்.

கார்த்திகேயன் வழக்கறிஞர் மாவட்ட குழு உறுப்பினர் சிபிஐ, நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், திமுக நகர கழக செயலாளர் என்.ஆர். சங்கர், திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.பாலு, சுந்தரம் , நகர கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனர்.

நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை, வழக்கறிஞர் அய்யாசாமி, தொழி லாளர் விடுதலை முன்னணி, எஸ்டிபிஐ ஆகிய தோழமை இயக்கங்களின் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.

நகர்மன்றத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வழங்கி நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டது. நிகழ்வில் சிறப்பு அழைப் பாளராக பங்கேற்றவர்களுக்கும், மற்றும் இந்த விழா சிறப்பாக நடை பெற உறுதுணையாக இருந்தவர் களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழகம் மல்லசமுத்திரம் ஒன்றிய பொறுப் பாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.

 

பெரியார் முழக்கம் 12052022 இதழ்

You may also like...