பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் 17032019

தமிழகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் அரசியல் தலையீடு இல்லாமல் கைது செய்யவும், இனிமேல் இதுபோல் குற்றங்கள் நடக்காமலிருக்க நிரந்தர தீர்வான “பாலியல் கல்வியை” பள்ளி பாடங்களில் நடைமுறைபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைய நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து தோழமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து  ஞாயிறு(17.03.2019) மாலை 5 மணிக்கு பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு பள்ளிபாளையம் நகரத் தலைவர் தோழர் மீனா தலைமை வகிக்க, திருச்செங்கோடு நகர அமைப்பாளர் தோழர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட தலைவர் தோழர் சாமிநாதன் வரவேற்புறையாற்றினார். பாலியல் குற்றவாளிகளை கண்டித்து, CPIML நகரச்செயலாளர் மாரியப்பன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் அஜ்மீர், திராவிடர் கழகம் மாவட்ட துணைச்செயலாளர் பொன்னுசாமி, DYFI ஒன்றியக்குழு செயலாளர் பிரபாகரன், புரட்சிகர இளைஞர் முன்னணி அமுதன், திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி மற்றும் வழக்குரைஞர் அ.பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையை பதிவு செய்தனர்.

ஆர்பாட்டத்தில், தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பள்ளிபாளையம் திராவிடர் விடுதலைக் கழக நகர துணைச் செயலாளர் சங்கர் நன்றியுரையாற்றினார்.

You may also like...