குமாரபாளையத்தில் நடந்த சரண்யா-நந்தகுமார் மணவிழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த இ.சரண்யா – ச. நந்தகுமார் இணையரின் சுயமரியாதை திருமணம் 05.02.2021 அன்று காலை 11 மணியளவில் குமாரபாளையம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு  திராவிடர் விடுதலைக் கழக குமாரபாளையம் நகரத் தலைவர் மீ.த. தண்டபாணி தலைமையில், கழகத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் உறுதிமொழி கூறி சுயமரி யாதை திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்வில், நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன், மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

வாழ்விணையர்கள் சார்பாக புரட்சி பெரியார் முழக்கத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 11022021 இதழ்

You may also like...