மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை,சிவகங்கை,விருதுநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 24.12.205 அன்று மதுரையில் வழக்கறிஞர் தோழர் பொற்கொடி அவர்கள் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது.
மதுரையில் பிப்ரவரி மாதம்  ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” நடத்துவது குறித்து கழக தோழர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.மதுரை மாவட்ட செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் முன்னிலை வகித்தார்.மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
விருதுநகர் ஜெயக்குமார்,செந்தில்குமார்,சிவகங்கை நா.முத்துக்குமார், கா.தர்மலிங்கம்,ராஜா,ராமகிருஷ்ணன்,அருண்குமார்,திருநாவுக்கரசு,  நித்தீஷ்,செந்தில்குமார்,மஜீத் உள்ளிட்ட தோழர்கள் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

0002 0003

You may also like...