உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டுகிறோம்!
டெங்கு, காலராவைப் போல் சனாதனம் ஒரு நோய். அது ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 2023, செப்டம்பரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பேசிய இந்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சங்கிகளும் பார்ப்பனர்களும் கொந்தளித்தார்கள். பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்குகளைத் தொடர்ந்தார்கள். ஒரு பார்ப்பன சாமியார் அவரது தலைக்கு விலை வைத்தார். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்கள். ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் சாபமிட்டார். அவரது கட்சியினர் கோயில் வாசலில் உதயநிதி படத்தை மிதியடியாகப் போட்டு காலால் மிதித்தனர். உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ஒரு அமைச்சரே சனாதனத்தை எதிர்க்கலாமா? கருத்துச் சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு நீதிபதி வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் உதயநிதி...
