Category: பெரியார் முழக்கம்

உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டுகிறோம்!

உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டுகிறோம்!

டெங்கு, காலராவைப் போல் சனாதனம் ஒரு நோய். அது ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 2023, செப்டம்பரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பேசிய இந்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சங்கிகளும் பார்ப்பனர்களும் கொந்தளித்தார்கள். பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்குகளைத் தொடர்ந்தார்கள். ஒரு பார்ப்பன சாமியார் அவரது தலைக்கு விலை வைத்தார். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்கள். ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் சாபமிட்டார். அவரது கட்சியினர் கோயில் வாசலில் உதயநிதி படத்தை மிதியடியாகப் போட்டு காலால் மிதித்தனர். உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ஒரு அமைச்சரே சனாதனத்தை எதிர்க்கலாமா? கருத்துச் சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு நீதிபதி வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் உதயநிதி...

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

கழகப் பொதுச்செயலாளருக்குப் பாராட்டு விழா!

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளரும், புரட்சிப் பெரியார் முழக்கம் இதழின் ஆசிரியருமான விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ‘பெரியார் விருது’ வழங்கி பெருமை சேர்த்தது. இதற்காக பொதுச்செயலாளரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சார்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் அசோசியேசன் சங்க கட்டடத்தில் 26.01.2025 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர் நகலக உரிமையாளர் செளரிராஜன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வாலாசா வல்லவன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மருத்துவர் அமலோற்பவநாதன், வீ.அரசு, பேராசிரியர் கல்யாணி, தடா ஓ.சுந்தரம், பத்திரிகையாளர்கள் சிகாமணி, வீரபாண்டியன், சுகுணா திவாகர், வழக்கறிஞர் அஜிதா, மனநல மருத்துவர் சிவபாலன், மருத்துவர் தாயப்பன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் பொதுச்செயலாளர் உடனான தங்களது அனுபவங்கள், பொதுச்செயலாளரின் அர்ப்பணிப்புமிக்க இயக்க – எழுத்துப் பணிகளை பாராட்டிப் பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர்....

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

கும்பமேளாவில் சாமியார்கள் கொட்டம் – இந்தியாவை இந்து நாடாக்க சங்கிகள் முயற்சி

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவில் கூடும் சாமியார்கள், 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்து அரசமைப்புச் சட்டம் கும்பமேளா தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அதுவே மனிதத்தின் மதம். நமது வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால், மதம் ஒன்றுதான். அந்த மதம் சனாதன தர்மம். அந்த சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக கும்பமேளா விளங்குகிறது. பிரயாக்ராஜில் நடந்து வரும் மாபெரும் மத நிகழ்வான மகா கும்பமேளா, எந்த ஒரு ஜாதி அல்லது மதத்திற்கும் உட்பட்டது அல்ல. இது அனைத்து மதம், கலாசாரம் மற்றும் சமயங்களின் மாபெரும் கலவையாக திகழ்கிறது.’’ என்று கூறியுள்ளார். ஆனால் கும்பமேளாவில் கூடிய சாமியார் கூட்டம் இந்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கக் குழு அமைத்துள்ளது....

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தை திறந்து வைத்து சிறப்புரை-கடுவனூர் நாகராஜ் – சுலோச்சனா இல்லத் திறப்பு விழா

கள்ளக்குறிச்சி: கடுவனூர் கழகத் தோழர் மு.நாகராஜ் – நா.சுலோச்சனா ஆகியோரின் புதிய இல்லத் திறப்பு விழா 09.01.2025 அன்று கடுவனூர் கிராமத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதிய இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் செல்வி பகுத்தறிவுப் பாடலை பாடினார் கீதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முருகன், ராமச்சந்திரன், ஆசைத்தம்பி ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர் கார்மேகம், ஒன்றியத் தலைவர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மதியழகன், மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர்,  மக்கள் அதிகாரம் ராமலிங்கம், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் நிறைவாக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கதிரவன் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூமாலை, த.பெ.தி.க....

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.01.2025 அன்று மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத், மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா மற்றும் பொறுப்பாளர்களும், தோழர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். 2025ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இயக்க வளர்ச்சி குறித்தும் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தலைமைக்கு ஒப்படைப்பது குறித்தும், சேலம் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நங்கவள்ளி கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளராக இராஜேந்திரன்,...

பார்ப்பனிய புனித பிம்பங்களை உடைத்த அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர எழுத்துக்கள்

பார்ப்பனிய புனித பிம்பங்களை உடைத்த அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர எழுத்துக்கள்

24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி.. இந்திய அரசியல் களத்தில் ஜாதி குறித்தான விவாதங்கள் அண்ணல் அம்பேத்கருக்கு முன்பாகவே வெகுவாக தொடங்கிவிட்டது. 1917இல் மாண்டேகு – செம்ஸ்போர்ட் குழு உருவாக்கப்பட்டது. முதல் உலகப்போர் முடிவில் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசு அதிகாரத்துவத்தில் இந்தியர்களுக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவமாவது வழங்கப்பட்ட வேண்டும் என்கிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இக்குழுவினை பல்வேறு தரப்பினர் சென்று சந்தித்து தங்கள் கருத்தை முன் வைத்தனர். அதில் மதராஸ் மாகாணத்தின் ‘பஞ்சமர் கல்வி அபிவிருத்தி அபிமான சங்கம்’, ‘மதராஸ் ஆதி திராவிட சங்கம்’, வங்காள மாகாணத்திலிருந்து குரு சந்த் தாக்கூர் உருவாக்கிய அமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த அமைப்புகள் “சமூகத்தில் நீடித்து வரும் ஜாதி அமைப்பு முறையை ஒழிக்காமல் உயர் ஜாதி இந்துக்கள் கையில் அளிக்கப்படும் எவ்விதமான அதிகார பகிர்வு அல்லது அதிகார மாற்றம் மிகவும்...

சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா

சென்னை – திருப்பூரில் பொங்கல் விழா

சென்னை : திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 25ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 12.01.2025 அன்று இராயப்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். கோபிநாத் வரவேற்புரை நிகழ்த்தினார். இராஜேசு – தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, கழகத் தலைமை நிலையச் தபசி குமரன், தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, மாமன்ற உறுப்பினர் கமலா செழியன், வட்டச் செயலாளர் க.வே.மோகன், வி.சி.க. எஸ்.எஸ்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அதிர்வு கலைக்குழுவின் தமிழர் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், பகுதி மாணவிகளின் மாறுவேடப் போட்டி, பட்டுக்கோட்டை அபிராமியின் கிராமியப் பாடல்கள் மற்றும் பூவையார், கானா பிரபா, மெர்லின் ஆகியோரின் கானா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 2024ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார்...

இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்ற பா.ஜ.க.-வின் பெரும்பான்மைவாதம் வெறும் வாக்கு அரசியலுக்கான உத்தி என்பதை வருணாசிரமவாதிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். “பார்ப்பனர்களே ஒன்றுபடுங்கள், பார்ப்பனர்களே உங்கள் மேலாதிக்கத்தை விட்டுவிடாதீர்கள்” என்பதுதான் அவர்களின் உண்மையான முழக்கம். அந்த முழக்கத்தைக் கர்நாடாகாவிற்கு சென்று எதிரொலித்திருக்கிறார் காஞ்சி காமகோடி பீடத்தின் விஜயேந்திர சரஸ்வதி. சனவரி 19-ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற ‘அகில கர்நாடகா பிராமண மகாசபா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கும் இவர், “சனாதன தர்மத்தைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றுவது பார்ப்பனர்களே. இந்திய விடுதலைக்குப் பிறகு வேத தர்மத்தைப் பரப்ப பார்ப்பனர்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். வைதீக மதம் நிலையாக இருக்கவும், பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாசார பெருமைகளைப் பாதுகாக்கவும் பார்ப்பனியத்தின் இருப்பு அவசியம். நிர்வாக மட்டத்தில் பார்ப்பனர்களை அதீத எண்ணிக்கையில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் சனதான தர்மத்தைப் பரப்ப முடியும். பார்ப்பன சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அவரது பேச்சில் ஒரு இடத்தில் கூட,...

பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்

பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருண், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பெரியார் சாக்ரடீஸ், கடலூர் சிவா, பெங்களூரு சித்தார்த்தன், திண்டுக்கல் மாக்சிம் கார்கி உட்பட சென்னை, திருச்சி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நீலாங்கரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி சீமான் வீடு அருகில் உள்ள ரிலையன்ஸ் மார்க்கெட்...

வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!

ஆர்ப்பாட்டம் நடைபெறும் வரை காவல்துறை பாதுகாப்போடு சீமான் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து முடித்தவுடன், வெளியே வந்து ஊடகங்களுக்கு வீராவேசமாக பேட்டி அளித்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் வீட்டை நெருங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். “காவல்துறை பாதுகாப்பு எனக்கு வேண்டாம், ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதியுங்கள்” என முன்பே சொல்ல சீமானுக்கு தைரியம் இல்லாமல் போனது ஏன் என அந்த பேட்டியைப் பார்த்து பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர். மீண்டும் மீண்டும் பெரியார் குறித்து சீமான் வைக்கும் விமர்சனங்களால் பெரியாரின் புகழ் மென்மேலும் பரவிக் கொண்டிருக்கிறது. எதிரிகள்தான் தனக்கு விளம்பரமே என வாழ்ந்த காலத்திலேயே கூறியவர் பெரியார். இப்போது மறைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் அந்த கூற்று நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது. சீமானின் விமர்சனங்களால் பெரியார் தமிழ் குறித்தும், பெண்கள் குறித்தும் உண்மையில் என்ன கூறினார் என்று தேடித்தேடி இளைஞர்கள் படிக்கிற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் இதுவரை சென்று சேராத தரப்பினரிடமும் பெரியாரின்...

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்-பெரியார் கொள்கைகள் வேகமாகப் பரவுகிறது!

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார். பெரியார் குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஆதாரம் கேட்டால், அவரின் சங்கி நண்பர்களான அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும், தமிழிசை செளந்தரராஜனும், துக்ளக் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களும் ஆதாரத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை சீமானும் ஆதாரத்தைத் தரவில்லை, அவருடைய சங்கி நண்பர்களும் ஆதாரத்தைத் தரவில்லை. சீமானின் இத்தகைய அவதூறுப் பேச்சு பெரியாரிய உணர்வாளர்கள் மத்தியிலும், பொதுமக்களிடத்திலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அவதூறுப் பேச்சுக்களை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சீமானோ மீண்டும் மீண்டும் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனால் சனவரி 22-ஆம் தேதி பனையூரில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக ‘பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ அறிவித்திருந்தது. சீமானின் அருவருப்புப் பேச்சுகளால் ஆத்திரமடைந்த பெரியாரியத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைநகர்...

கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவை மாநகர மாவட்டக் கழக சார்பில் புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம் 24.12.2024 அன்று சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகில் கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக நிகர் கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் “தற்கால அரசியலும் அம்பேத்கரும்” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், “ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் “ என்ற தலைப்பில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனும், “மார்க்சிய பார்வையில் பெரியாரும் – அம்பேத்கரும்” என்ற தலைப்பில் சிபிஐ (மாலெ) ரெட் ஸ்டார் மத்தியக்குழு உறுப்பினர்  மு. இனியவனும்  சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்ப்புலிகள் கட்சி பொதுச்செயலாளர் இளவேனில், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாநகரத் தலைவர் நிர்மல்...

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

ஜாதி அமைப்பு முறையைத் தகர்க்காமல் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடாது!

தற்போது இந்தியாவில் நிலவுகிற பாசிச காவி கார்ப்ரேட் இந்துத்துவ அரசியல் சூழலில் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த அரசியல் மாநாட்டிற்கு (24.12.2024) நான் சார்ந்திருக்கும் சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார் சார்பாக புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிய பார்வையில் பெரியார், அம்பேத்கார் என்கிற தலைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரை மார்க்சிய பார்வையில் அணுகுவது என்னளவில் சற்று கடினமான பணி என்பதால் தோழர்களின் ஒப்புதலோடு அதனை சற்று மாற்றத்திற்கு உட்படுத்தி “கம்யூனிஸ்ட் பார்வையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்” என்கிற தலைப்பினில் எனது உரையை முன்வைக்கிறேன். ஏனென்றால், மார்க்சியம் என்பது சமூக அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டு அடிப்படையிலான தத்துவம். பொதுவாக கோட்பாட்டளவில் ஓர் மார்க்சிஸ்ட்டாக வாழ்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் கம்யூனிஸ்ட் என்பது மார்க்சிய அடிப்படையிலான கட்சி, கொள்கை அரசியல் முன்னெடுப்பு சார்ந்தது என்பதனால்...

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார்

பெரியார் பற்றி அண்ணா இவ்வாறு கூறினார்; “ஒரு சகாப்தம்; ஒரு திருப்புமுனை; ஒரு காலகட்டம்; நூற்றாண்டு வரலாற்றை ஒரு குடுவைக்குள் அடக்கியவர்.” (Putting Centuries In Capsules) சமூகவியல் பார்வையில் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர் பெரியார். இந்தியாவில் பார்ப்பனியத்தை எதிர்த்த முதல் புரட்சிக்காரர் புத்தர். வேதம் – யாகம் – சமூகக் கொடுமைகளை எதிர்த்து புத்தர் மக்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் கொள்கைகளைப் பரப்ப அவரது சீடர்கள் மக்களைச் சந்தித்து புத்தரின் கருத்தியலைப் பரப்பினார்கள். அதே புத்தர் இயக்கத்தை அவரது மறைவுக்குப் பிறகு பார்ப்பனியம் ஊடுருவிச் சிதைத்தது. பார்ப்பனியத்தை எதிர்த்து சார்வாகர்கள், சித்தர்கள், சமணர்கள், வள்ளலார் என்ற சீர்திருத்தவாதிகள் வந்தார்கள். பார்ப்பனியம் அவர்களை ஜீரணித்துவிட்டது. வரலாற்றில் இருந்து பாடம் பெற்ற பெரியார் எந்த இயக்கமும் எந்தப் புரட்சியாளரும் பின்பற்றாத புதிய நடைமுறைகளையும், கருத்துகளையும் தனது இயக்கத்துக்காகக் கட்டமைத்தார். 1. தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக்கினார். 2. எதைச் சொன்னால்...

முதலமைச்சரின் தகுதியுரை

முதலமைச்சரின் தகுதியுரை

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாள ருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள், 1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் தொடர்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பேசவும் எழுதவும் தொடங்கியவர். தந்தை பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவர். பெரியாரின் இயக்க ஏடுகளில் 25 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியதோடு பெரியார் பேசிய கூட்டங்களில் அவரது உரையைக் குறிப்பெடுத்து பதிவு செய்தவர். இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைத் தளங்களில் கடந்த 58 வருடங்களாகத் தொண்டாற்றி வருகிறார். பெரியார் கண்ட கனவான ஜாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராடி வருபவர். மக்களை விழிப்படையச் செய்யும் வகையில்...

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

பெரியார் பேசுபொருளாக மாறியிருக்கிற காலச்சூழலில் திராவிட மாடல் அரசு எனக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்திருப்பதை ஒரு மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் கருத்துக்கள் நாட்டிற்கு மிக மிகத் தேவையான கருத்துக்களாக இருக்கிறது என்பதைச் சமகால சமூக – அரசியல் சூழல்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பெரியாரியலை மேலும் வலுவாகக் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளாக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பெரியாரியத்தின் எதிரிகளே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் காலத்தில் இருந்து அவருடைய கொள்கைகள் வேகமாகப் பரவியது அவருடைய எதிரிகளால் தான் என்று பெரியாரே திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஒரு சூழ்நிலையில் பெரியார் விருதை வழங்கி கவுரவித்திருப்பது, பெரியாரியத் தொண்டை மேலும் உற்சாகமாகச் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிற விருதாகவே நாங்கள் கருதுகிறோம். அதற்காக முதலமைச்சருக்கு எங்களுடைய நன்றி. பெரியாரியலுக்கு எதிராக பரப்பப்படும் தவறான திசைதிருப்பும் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உந்துசக்தியும் அதிகரித்திருக்கிறது. பெரியாரியலை இன்னும் வேகமாக முன்னெடுக்க...

இராயப்பேட்டையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

இராயப்பேட்டையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகப் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருதுடன், ரூ.5 இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கிக் கவுரவித்தார். ஏற்கெனவே கழகப் பணிகள் மற்றும் பொதுச்செயலாளரின் அரை நூற்றாண்டுக்கும் மேலான எழுத்துப் பணிகளுக்கான அங்கீகாரமாக, 2022-ஆம் ஆண்டில் கழகப் பொதுச்செயலாளரின் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது திராவிட மாடல் அரசு. தற்போது பெரியார் குறித்த விவாதங்களும், உரையாடல்களும் தீவிரமாக நடந்துவரும் இந்த காலகட்டத்தில் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது அளித்திருப்பது கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராயப்பேட்டையில் உற்சாக வரவேற்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி...

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனை மேடைக்கு அழைத்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

விடுதலை இராசேந்திரனுக்கு ஆடை போர்த்தி பாராட்டு!

தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனை மேடைக்கு அழைத்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

பேராவூரணியில் பெரியாரியல் பயிலரங்கம்

பேராவூரணியில் பெரியாரியல் பயிலரங்கம்

பேராவூரணி: பெரியாரின் 51ஆவது நினைவுநாளை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் மாணவர்களுக்கான பெரியாரியல் பயிலரங்கம் 25.12.2024 அன்று செங்கை க.கதிர்வேல் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக தோழர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் பெரியார் அறிமுகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் “திராவிட இயக்க வரலாறு” குறித்தும் “பெரியார் கொள்கையின் இன்றைய தேவை” குறித்தும் உரையாற்றினார். மதிய உணவிற்கு பிறகு இட ஒதுக்கீடு வரலாறு குறித்து உரையாற்றினார். நிறைவாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09012025 இதழ்

ஜெயலலிதா –- ஆளுநர் சென்னா ரெட்டி மோதல்

ஜெயலலிதா –- ஆளுநர் சென்னா ரெட்டி மோதல்

ஆளுநர் ரவிக்கு உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு அளித்தும் ஆளுநர் சட்டமன்றத்தை அவமானப்படுத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை நியாயப்படுத்துகிறார். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த 1994இல் ஆளுநரை எப்படி நடத்தினார்? மோதலில் பின்னணி குறித்த ஒரு மீள் பார்வை. 1994ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் இடையே முரன்பாடு வந்தது. தனது அரசைக் கவிழ்ப்பதற்கு அன்றைய காங்கிரஸ் ஆட்சியால் அனுப்பிவைக்கப்பட்டவர் தான் சென்னா ரெட்டி என்று உறுதியாக நம்பினார் ஜெயலலிதா. இருவரும் பத்திரிக்கை அறிக்கைகள் வழியாக தங்கள் எதிர்ப்புகளை வெளியிடத் தொடங்கினர். ஆளுநரிடமிருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் ஜெயலலிதா செயல்படத் தொடங்கினார். புத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கும். ( இப்போது ஆர்.என்.ரவி அந்த உரையைத் தான் வாசிக்க மறுத்து வெளியேறினார்.) அப்போது பேரவைத் தலைவராக இருந்த சேடப்பட்டி முத்தய்யா ஆளுநர் உரையே தேவையில்லை என்று கருதி ஆளுநருக்கு அழைப்பு விடுக்காமலேயே சட்டசபையைக் கூட்டினார்....

சிறுபான்மையினர் நலன்

சிறுபான்மையினர் நலன்

ளுக்கான நிரந்தரச் சான்றுகளை இணைய வழியில் எளிமையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மை சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களை புனரமைத்து பாதுகாக்கும் வகையில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, ஆதிச்ச நல்லூர், சிவகளை மற்றும் கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு திருநெல்வேலியில் உலகத்தரம் வாய்ந்த பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ராஜேந்திர சோழனின் கடல் கடந்த வெற்றிப் பயணம், அயல்நாட்டு வணிகத் தொடர்புகளை நினைவுகூரும் வகையில், கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலைையையும் இணைக்கும் வகையில் நாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

பெரியாரை நோக்கி திரளும் இளைஞர்கள் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் அமோக விற்பனை!

பெரியாரை நோக்கி திரளும் இளைஞர்கள் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் அமோக விற்பனை!

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் இளைஞர்களைக் கவர்ந்து நிற்கின்றது என்று “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 18லிருந்து 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் கூட்டம் பெரியார் நூல் விற்பனைக் கடைகளில் அலைமோதுகிறது. அதே நேரத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பக்தி, ஆன்மீக நூலை வாங்குகிறார்கள் என்றும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. பெரியாரிய – கடவுள் மறுப்புக் கொள்கையில் இளம் வயது முதல் ஈர்க்கப்பட்டேன் என்று தனியார் கல்லூரியில் பணியாற்றும் 27 வயது இளைஞர் சவுமியா நாராயணசாமி கூறுகிறார். மதத்தோடு ஜாதி பிணைந்திருக்கிறது என்று அந்த நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த காலத்தில் சமூகம், ஜாதி, மதம், பெண்ணடிமை கருத்துகளில் மூழ்கிக் கிடந்தது. “தமிழ்நாட்டு வரலாற்றில் சமூகத்தை வர்ணாஸ்ரமும், ஜாதியும் ஊடுறுவி சிதைத்தது. இப்போது மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். மாற்றம் தொடங்கிவிட்டது” என்கிறார் 19 வயது இளைஞர் கருணாகரன். தமிழ் இலக்கியப் பட்டப் படிப்பில்...

தமிழ்நாடு அரசை நிதிக் குழுப் பாராட்டுகிறது.

தமிழ்நாடு அரசை நிதிக் குழுப் பாராட்டுகிறது.

டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16வது நிதிக்குழு தமிழ்நாடு வந்தபோது நமது கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன. அவற்றில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 50 சதவீமாக அதிகரித்தல், நிதிப் பகிர்வுக்கு முற்போக்கான கணக்கீட்டு முறையை பின்பற்றுதல், மாநிலங்களின் செயல்திறனுக்கு உரிய நிதிப் பகிர்வு அளித்தல் போன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டன. தமிழ்நாட்டின் அறிக்கை குறித்து ஆணையம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. பெரியார் முழக்கம் 09012025 இதழ்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

ன்னேடுகளில் பொறிக்கச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தற்போது கிராமப்புறங்களில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 34,987 தொடக்கப் பள்ளிகளில் 17.53 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தனிச் செயலி உருவாக்கப்பட்டு ஆன்லைன் வழியாக திட்டத்தை அன்றாடம் கண்காணித்து, எந்தக் குறையும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்படுகிறது அரசு. பெரியார் முழக்கம் 09012025 இதழ்

கல்விக்கு நிதி மறுக்கும் ஒன்றிய ஆட்சி

கல்விக்கு நிதி மறுக்கும் ஒன்றிய ஆட்சி

தரமான கல்வியை வழங்குவதில் உறுதியுடன் செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டில் எந்தவொரு நிதியையும் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. கல்வியாண்டுகளில், கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 1,165 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35,530 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டம் எனும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு அவர்களின் இளங்கலைக் கல்விக் காலம் முழுவதும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதனைதொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயிலும் காலத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் கடந்த ஆண்டு...

வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு!

வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக் குறித்து சட்ட சபையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கியத் தகவல்களின் தொகுப்பு இது. ஆளுநர் உரையைப் படிக்க மறுத்ததால் பேரவைத் தலைவர் உரையைப் படித்தார். பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னோடி நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்று திகழ்கிறது. வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. முந்தைய ஆண்டுகளில் தேசிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த 4 ஆண்டுகளில் 9.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளதே திராவிட இயக்க கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. இதனை முன்னேற்றிடும் வகையில் எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழ்நாடு தனது இலக்காக கொண்டுள்ளது. மருத்துவம், கல்வி மற்றும் சமூகநலனையும் மேம்படுத்துவதிலும் நாட்டிற்கே முன்னோடியாகத் தமிழ்நாடு விளங்குகிறது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் வழியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வை செம்மையாக வடிவமைத்திடுவதற்காக பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படித்தியுள்ளார். சிறந்த திட்டங்களின் ஒன்றான...

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.

பெரியாரின் பெரும் தொண்டரும், தமிழ்நாடு அரசின் ‘நல்லாசிரியர்’ விருது பெற்றவரும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக, தனது மகள், மகனுடனும், கழகத் தலைவர், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோருடன் தடா வழக்கில் சிறை சென்றவருமான முடி கொண்டான் சா.சாரங்கபாணி, தனது 93ஆவது வயதில் 03.01.2025 அன்று தனது இல்லத்தில் முடிவெய்தினார். அவருக்கு நமது புகழ் வணக்கங்கள். பெரியார் முழக்கம் 09012025 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழக மாணவர்கள் சாதனை

தமிழ்நாடு மாணவர் கழக மாணவர்கள் சாதனை

நாசா, ஐஏஎஸ்சி, எஸ்ஐஏயூ இணைந்து நடத்திய பிஎஸ்1 மற்றும் பிஎஸ்2 தொலைநோக்கிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விண்கற்களை கண்டுபிடிக்கும் போட்டியில் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் துறையிலிருந்து சந்தியா, ஷியாம், பிரபாகர், அகிலேஷ்வரன், பிஎஸ்சி வேதியியல் துறையிலிருந்து கோபாலன் ஆகிய தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களும் இவர்களுடைய ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் கூடுதல் சிறப்பாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் “3 புதிய” விண்கற்களை கண்டுபிடித்துள்ளதால் அந்த விண்கற்களுக்கு பெயர் சூட்டும் அரிய வாய்ப்பை நமது தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களுக்கு நாசா வழங்கியுள்ளது. 3 விண்கற்களில் ஒன்றுக்கு “பெரியாரியல்” சார்ந்தப் பெயரை நாசாவிடம் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் பரிந்துரைக்க உள்ளனர். இதற்கு நாசா ஒப்புதல் தரும்பட்சத்தில் வானியல் சார்ந்த ஆராய்ச்சியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் பெயர் இடம்பெறும் என்றும் தமிழ்நாடு...

பல்கலைக்கழக உரிமைகளைப் பறிப்பதா?

பல்கலைக்கழக உரிமைகளைப் பறிப்பதா?

பல்கலைக்கழகங்களை தமிழ்நாடு அரசிடம் இருந்து விடுவித்து தனது நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவரப் போகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் எதிர்ப்போம் என்று அறிவித்துள்ளதைப் பாராட்டி வரவேற்கிறோம். பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிகளுக்கு இடமில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு ஒரு சட்டத்தைக் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. ஆளுநரின் பிரதிநிதி, மானியக் குழுவின் பிரதிநிதி, பல்கலைக்கழகப் பிரதிநிதி என்ற மூவர் மட்டுமே துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பார்களாம். கல்வித்துறை சாராதோரும் துணைவேந்தர்களாகலாம் என்றும் புதிய சட்டம் கூறுகிறது. இதற்கான மசோதா இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 21 பக்கங்கள் கொண்ட சட்டத்துக்கான வரைவு அறிக்கை ஒன்றை கல்வித்துறை அமைச்சகத்திடம் பல்கலைக்கழக மானியக்குழு அளித்துள்ளது. இந்தப் புதியக் கொள்கையை ஏற்காத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாநிலக்குழுவின் வரம்பில் இருந்து நீக்கப்பட்டு நிதி வழங்குவது நிறுத்தப்படும் என்றும் இந்த நிறுவனங்கள் தரும் பட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும்...

சீமான் முகத்திரை கிழிந்தது

சீமான் முகத்திரை கிழிந்தது

தந்தை பெரியாரை அவமதிக்கும் சீமானைக் கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை 5.1.2025 அன்று மாலை சென்னையில் சைதைத் தேரடி தெருவில் பொதுக்கூட்டம் நடத்தியது. அனைத்துப் பெரியார் இயக்கத் தோழர்களும் பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். ஏராளமான இளைஞர்கள் பெரியார் படம் போட்ட டீ சட்டையுடன் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரின் உரையும் அழுத்தமானதாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. சீமான் என்ற ஏமாற்றுப் பேர்வழி நாக்கில் நரம்பின்றி சாக்கடை மொழியில் பெரியாரைப் பேசுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்று எச்சரிப்பதாக இருந்தது இக்கூட்டம். கூட்டம் கருங்கடலில் மூழ்கி இருந்த நிலையில் ‘சீமான் ரசிகர்கள்’ கூட்டத்துக்கு ஆள் வரவில்லை என்று பொய்யாக வெளியிட்ட ‘ட்வீட்’டுகளை மக்கள் மத்தியில் படித்துக்காட்டிய போது கூட்டத்தினர் கைத்தட்டி எள்ளி நகையாடினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்ட கழகத் தோழர்களும், திராவிடர்...

அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்

அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்

ஜனவரி: சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வட சென்னை, திருப்பூரில் கழக சார்பில் பொங்கல் விழாக்கள் நடந்தன. திருவல்லிக்கேணி விழாவில் சென்னை மேயர் பிரியா சிறப்பு விருந்தினர். திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையர் குடும்ப விழாவை இந்திய அரசியலும் பார்ப்பனியமும் என்ற கருத்தரங்கமாக நடத்தினர். சிறப்புரை : கொளத்தூர் மணி. பிப்ரவரி: ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கழகம் தொடர் கூட்டங்களை நடத்தியது. சென்னை, சேலம், திண்டுக்கல், திருச்சி மற்றும் ஈரோடு தெற்கு பகுதிகளில் கூட்டங்கள் நடந்தன. பிப்ரவரி 03: மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்குப் பாராட்டு விழா. பிப்ரவரி 15: திண்டுக்கல், திருப்பூர், சென்னை மாவட்டங்களில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” “சமூக ஒற்றுமையைக் காப்போம்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மேட்டூரில் பரப்புரைக் கூட்டத்துக்கு ஜலகண்டபுரம் காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கூட்டங்கள் நடந்தன....

தீபாவளி வாழ்த்து கிடையாது போயா! – கோடங்குடி மாரிமுத்து

தீபாவளி வாழ்த்து கிடையாது போயா! – கோடங்குடி மாரிமுத்து

விஜயதசமி நாளில் இராவணன் படத்தைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இராவணன் எரிவதைப் பார்த்து கைத்தட்டி கும்மாளம் அடிக்கிறார்கள். இராவணன் மீது அம்புகள் ஏவப்படுகின்றன. தொலைக்காட்சிகள் இதை ஒளிபரப்புகின்றன. மோடியும், அதன் பரிவாரங்களும் மட்டுமல்ல, ராகுல், சோனியாவும் இதில் பங்கேற்கிறார்கள். ஏன் இந்த எரிப்புகள் நடக்கின்றன? தொலைக்காட்சியில் பார்த்த இருவர் இதுகுறித்து உரையாடுகிறார்கள். (விவாதம் தொடங்குகிறது) கேள்வி : தசரா என்பது இந்துப் பண்டிகை. இதுல எதுக்கு இராவணனை எரிக்கனும்? இராமனைக் கொண்டாடனும்? இராமாயணக் காலத்துலயே இந்துமதம் வந்துடுச்சா? பதில் : அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… இந்து என்ற பெயரே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல தான் வந்துச்சு. ஆனால் பிராமணர் தெய்வம், அவர் பேச்சை மீறுவது குற்றம், மற்றவர்கள் சூத்திரர்கள், பிராமணர்களுக்கு அடிமை என்ற கருத்து இராமாயணக் காலத்துலேயே வந்துருச்சு. அதனால் தான் இராமன், சூத்திரன் சம்பூகனின் தலையை வெட்டி வீசினான். இந்துமதம் அப்போது வரல, ஆனால் வர்ணாசிரம தர்மம் வந்துருச்சு. கேள்வி : இந்துமதம்...

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. வள்ளலார் விழா ஒன்றில் பேசிய கலைஞர், வள்ளலார் சாமிகளைப் போல மென்மையானக் கருத்துகளை எல்லாம் சொல்லி இந்த மக்களைத் திருத்த முடியாது. இந்தத் தமிழன் கும்பகர்ணனாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். தூங்கிக் கொண்டிருக்கிற இந்தக் கும்பகர்ணன் விழிப்பதற்குப் பெரியார் என்ற யானை மிதித்தால் தான் நடக்கும் என்று பேசினார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் இருக்கலாமா? என்ற கேள்விக்குப் பெரியார் இப்படி பதிலளித்தார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் தாராளமாக இருக்கலாம். கோயில் சொத்துக்களை மக்களுக்கு பயன்படுத்துகிற முயற்சியில் நீங்கள் பங்களிக்கலாம். ஆனால் வெறும் மூடநம்பிக்கைகளையும், வர்ணாசிரமத்தை மட்டும் பரப்புவதற்காக மட்டும் அந்தக் கமிட்டி இருக்கிறது என்று சொன்னால் அதில் இருப்பதற்கான...

திராவிட இயக்க இதழ்கள் – புரட்சிப் பெரியார் முழக்கம்

திராவிட இயக்க இதழ்கள் – புரட்சிப் பெரியார் முழக்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ் புரட்சிப் பெரியார் முழக்கம். இது திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடாக வெளியாகி வருகிறது. 1997-ஆம் ஆண்டின் முதல் 2001-ஆம் ஆண்டின் இறுதிவரை மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த இது, 2002-ஆம் ஆண்டு முதல் வார ஏடாக வெளிவரத் தொடங்கியது. தற்போது அது மின்னிதழாகவும் வெளிவருகிறது. முந்தைய இதழ்களும் மின்னிதழ்களாக மாற்றப்பட்டு, அவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் அரசியல் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அவற்றில் பெரும்பாலான கட்டுரைகளை இதழின் ஆசிரியரே படைக்கிறார். கட்டுரைகள் தவிர, வினா விடை – துணுக்குப் பத்திகள் – தலையங்கம் – ஆசிரியரது பொது நிகழ்ச்சி உரைகள் ஆகியவையும் இடம்பெற்றுவருகின்றன. நன்றி : முரசொலி – 15.10.2024 இதழ் பெரியார் முழக்கம் 17.10.2024 இதழ்

முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா

முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா

மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா முடிவெய்தினார். அவரது உடலில் 90 சதவீத உறுப்புகள் செயலிழந்தவை. சக்கர நாற்காலியிலேயே அவரது வாழ்க்கை நகர்ந்தது. மாவோயிஸ்ட் நூல்களை தனது வீட்டில் வைத்திருந்தார் என்பதற்காக ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை இணைந்து அவரை உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. 3592 நாட்கள் சிறையில் கழித்தார். அவர் செய்த குற்றமே மாவோயிசம் சம்பந்தப்பட்ட நூல்களை தனது அறையில் வைத்திருந்தார் என்பது தான். அந்த நூல்களை ரகசியமாக சுற்றுக்கு அனுப்பி நாட்டை உடைப்பதற்கு சதி செய்தார் என்று கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 3592 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு அவரிடம் அப்படி நூல்கள் கைப்பற்றுவதற்கான ஆதாரமே இல்லை என கூறி உச்சநீதிமன்றம் அவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. சிறைக்கு சென்ற பின் கடுமையான நோய் உபாதைகளுக்கு உள்ளானார். எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாத நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கழிவறைக்கு...

தலையங்கம் – நூற்றாண்டு காணும் ஜாதி ஒழிப்புப் போராளி

தலையங்கம் – நூற்றாண்டு காணும் ஜாதி ஒழிப்புப் போராளி

ஜாதி ஒழிப்புக் களத்தில் உயிர்நீத்த மாவீரன் இமானுவேல் சேகரன் நூற்றாண்டு இது. தென் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடிய ஜாதிவெறிக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடிய மாவீரன். 1924, அக்டோபர் 09ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூரில் அவர் பிறந்தார். இராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக் காலங்களில் ஊருக்கு வரும் போது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார். மக்களை அணிதிரட்டினார். ஒருகட்டத்தில் இராணுவத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புக் களத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டார். தேவேந்திர குல வேளாளர் என்ற ஜாதிப் பிரிவில் அவர் பிறந்தாலும் சுயஜாதியைக் கடந்து தீண்டாமையால் பாதிக்கப்பட்ட நாடார் உள்ளிட்ட அனைத்து ஜாதிகளையும் அவர் ஒருங்கிணைத்தார். 1953இல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை அவர் தொடங்கினார். ஜாதி ஒழிப்புடன் பெண்ணுரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். கணவனை இழந்தப் பெண்கள் மறுமணம் செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் நேரடியாகச் சென்று பரப்புரை செய்தார். அன்றைய காலகட்டத்தில் இராஜகோபாலாச்சாரி...

“ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்”

“ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்”

நூற்றாண்டைத் தொடங்கி இருக்கிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் கரங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த தமிழ் மண்ணில் இன்று தடியோடு ஊர்வலம் போகும் அளவிற்கு வந்திருக்கிறது. ஒரு நூறாண்டு கால சமூகநீதி கொள்கைகளுக்கான போராட்ட வரலாறு கொண்ட திராவிட நிலத்தில் தன் விதையினை ஊன்றிவிட ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இதனை ஒரு தொடக்கப்புள்ளியாகவே பார்க்க வேண்டி உள்ளது. முழுக்க முழுக்க சித்பவன பார்ப்பனர்களைத் தலைமையாகக் கொண்ட ஓர் இயக்கம் மதத்தின் பெயரைச்சொல்லி மக்களைப் பிளவுபடுத்த மட்டும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்து இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட பின்னணி மற்றும் வரலாறு, ஒட்டு மொத்த இந்தியாவும் விடுலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது அவர்களது செயல்பாடு என்னவாக இருந்தது? அந்த அமைப்பின் தலைமை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது? காந்தியின் கொலை வழக்கில் அவர்களின் பங்கு, வரலாறு முழுக்கவே முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் என ஆர்.எஸ்.எஸ்-ஸைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தரும் நூல். அனைத்துத் தகவல்களையும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய...

கோல்வாக்கர்: இந்தியப் பாசிசத்தின் தந்தை!

கோல்வாக்கர்: இந்தியப் பாசிசத்தின் தந்தை!

இன்றைய இந்தியாவின் மிக முக்கிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இந்திய ஒன்றியத்தை அந்த அமைப்புதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளது. அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க மிகவும் சக்திவாய்ந்த, பணக்கார கட்சியாக உருவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து முக்கிய நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. பல்கலைக் கழகங்கள் முதல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான அனைத்து நிறுவனங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது இந்த அமைப்பு உலகின் பிற நாடுகளிலும் பல பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அது ஒரு தனித்த அமைப்பு மட்டுமல்ல, பல நூறு அமைப்புகளுக்கான அமைப்பு என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஒரு நூற்றாண்டில் எப்படி இத்தகைய நிலையை ஆர்.எஸ்.எஸ் அடைந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கோல்வாக்கரை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான படைப்புதான் “Golwalkar: The Myth Behind the Man, The Man Behind the...

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

ஆளுநருக்கு எதிராகப் போராட்டம்; சேலத்தில் நடந்த இளைஞர் – மாணவர் கூட்டத்தில் முடிவு!

சேலம்: சேலம் மாவட்டக் கழக இளைஞரணி – தமிழ்நாடு மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.09.2024 அன்று சேலம் தாதகாப்பட்டியில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏற்காடு தேவபிரகாசு தலைமை தாங்கினார். அமைப்பாளர் வெற்றிமுருகன் முன்னிலை வகித்தார். இதில் வருகிற 16.10.2024 அன்று சேலம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநர் ரவியைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பெரியார் நினைவு நாளில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A (h) மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு ஆகியவற்றை விளக்கி மாணவர்களிடையே விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துவது எனவும், மாணவர் விடுதிகளில் சந்திப்பு – அறிவியல் கண்காட்சி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மாநகரத் தலைவர் பாலு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகரச் செயலாளர்...

குன்றக்குடி அடிகளார் மற்றும் சேரன் மாதேவி நூற்றாண்டு சிறப்பு வாசகர் வட்டம்

குன்றக்குடி அடிகளார் மற்றும் சேரன் மாதேவி நூற்றாண்டு சிறப்பு வாசகர் வட்டம்

“குன்றக்குடி அடிகளார்” மற்றும் “சேரன் மாதேவி” நூற்றாண்டு சிறப்பு நிமிர்வோம் வாசகர் வட்ட 24வது சந்திப்பு 29.09.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சந்திப்பிற்கு தௌபீக் தலைமை தாங்கினார். மயிலை அஸ்வின் வரவேற்புரையாற்றினார். பொன்மலர் முன்னிலை வகித்தார். முதல் நிகழ்வாகத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார். பின்னர் “வைதீக எதிர்ப்பு மரபில் பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும்!” என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனும், “பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சியில் சேரன்மாதேவி” என்ற தலைப்பில் கழக இளைஞரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளர் ஜெயப்பிரகாசும் சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக நிறை நன்றி கூறினார். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாசு நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, ஆய்வாளர் பழ.அதியமான் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார்...

சரவணக்குமார் எழுதிய இரு நூல்கள் வெளியீடு! கழகப் பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

சரவணக்குமார் எழுதிய இரு நூல்கள் வெளியீடு! கழகப் பொதுச்செயலாளர் வெளியிட்டார்.

சென்னை: எழுத்தாளரும், கழகத் தோழருமான சரவணக்குமார் எழுதிய ‘ஊர் வாயி’, ‘இவர்களும் தெய்வமாக்கப்படலாம்’ என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா 06.10.2024 அன்று பெருங்குடியில் உள்ள கழகப் பொதுச் செயலாளரின் இல்லத்தில் நடைபெற்றது.. நூலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பெற்றுக் கொண்டார். இதில் நூலாசிரியர் சரவணக்குமார், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், அருள் நாராயணா, கோபிநாத், அன்னூர் விஷ்ணு, அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்

திருப்பூரில் எழுச்சி; கழக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம்!

திருப்பூரில் எழுச்சி; கழக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம்!

திருப்பூர் : தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் 06.10.2024 அன்று காலை 11 மணி தொடங்கி இரவு 8 மணி வரை முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது. வீரபாண்டி பிரிவு, கொளத்துப்பாளையம், இராயபுரம், பெரியார் காலனி, 15-வேலம்பாளையம், அனுப்பர் பாளையம், அம்மாபாளையம், ஆத்துப்பாளையம், மாஸ்கோ நகர் உள்ளிட்ட இடங்களில் திருப்பூர் மாநகர அமைப்பாளர் சரஸ்வதி, தெற்கு பகுதி பொறுப்பாளர் இராமசாமி, மடத்துக்குளம் ஒன்றிய அமைப்பாளர் கடத்தூர் அய்யப்பன், கார்த்தி, மோகன், மதன், சூர்யா, கார்த்திகா ஆகியோர் கழகக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்பித்தனர். இந்நிகழ்விற்குக் கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு முன்னிலை வகித்தார். இதில் கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்து, மாநகரத் துணைத் தலைவர்...

நவராத்திரி கொலுவில் இப்படி ஓர் கலகம்

நவராத்திரி கொலுவில் இப்படி ஓர் கலகம்

நவராத்திரி கொலுவில் சரசுவதி, லட்சுமி, கிருஷ்ணன், இராமன், சீதை, பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. தனது வீட்டுக்கு வந்த நவராத்திரி விருந்தினருக்கு சுண்டல், தயிர் சாதம் வழங்கினார், கோபால அய்யர். இரவு ஓ.டி.டி-யில் நடிகர்கள், கடவுள் வேடமிட்டு நடித்த பக்திப் படம் ஒன்றைப் பார்த்து உறங்கச் சென்றார். கனவில் கொலுவில் இருந்த கடவுள் பொம்மைகளும், உருவங்களாகப் பேசத் தொடங்கின…. கிருஷ்ணன் கீழே இறங்கி வந்து அய்யர் ‘ஆத்து’ சமையலறைக்குப் போகிறான். பாத்திரங்களை உருட்டுகிறான். சத்தம் கேட்ட விநாயகன், கிருஷ்ணனைப் பின் தொடருகிறான். கிருஷ்ணன் : டேய், யானைத் தலையா! இங்கே, ஏண்டா வந்தே? விநாயகன் : நிறுத்துடா, வெண்ணெய் திருடா; நீ எதையெதை எல்லாம் உருட்டப் போகிறாய், திருடப் போகிறாய் என்பதைப் பார்க்கத்தான் வந்தேன். கிருஷ்ணன் : நான் திருடினாலும் சரி; குளிக்கும் பெண்களின் ஆடைகளை உருவி மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டாலும்; நான் எப் போதுமே பக்தர்களுக்கு...

ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மப்’ பார்வை அடிமைச் சின்னத்தின் அடையாளமா திருமணம்? – ர.பிரகாசு

ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மப்’ பார்வை அடிமைச் சின்னத்தின் அடையாளமா திருமணம்? – ர.பிரகாசு

திருமணமான பெண்களின் விருப்பத்துக்கு மாறாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய ஆட்சி. உலகம் முழுக்கவே பெண்ணுரிமை சார்நது நடைபெறும் விவாதங்களில் திருமணத்திற்குப் பின்பு கணவனால் பெண்கள் எதிர்கொள்ளும் கட்டாய உறவு முக்கியமான ஒன்று. இத்தகைய வல்லுறவை Marital Rape என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். உலகில் மூன்றில் ஒரு பெண் இத்தகைய கொடுமைக்கு உள்ளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே சுமார் 14 விழுக்காடு பெண்கள் இக்கொடுமைக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் 18 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் 82 விழுக்காட்டினர் கணவனால் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்வதாக 2019-21ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வு கூறுகிறது. சுமார் 150 நாடுகளில் திருமணத்திற்குப் பிந்தைய கட்டாயப் பாலியல் வன்கொடுமை குற்றமாக்கப்பட்டுள்ளது. எனினும் சட்டத்தையும் மீறி உலகம் முழுவதும் இக்கொடுமையைப் பெண்கள் எதிர்கொண்டே வருகின்றனர். 32 நாடுகளில் மட்டும்தான் இதனைக் குற்றமாகக் கருதுகிற சட்டம் இல்லை....

மனிதம் தழைத்தோங்கும் தமிழ்நாடு!

மனிதம் தழைத்தோங்கும் தமிழ்நாடு!

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு கலைஞர், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் பெறும் மகத்தான திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உடல் உறுப்புகளைத் தானம் செய்பவர்களுக்கு, இறுதி நிகழ்வின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்தகைய முன்னெடுப்புகளால், தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 8 மாதங்களில் 1086 உடல் உறுப்புகள் அரசுக்குத் தானமாகக் கிடைத்துள்ளது. குறிப்பாக முதலமைச்சர் அறிவித்த முதல் 11 மாதத்தில் மட்டும் இதுவரை 192 பேர், உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிறுநீரகம், நுரையீரல், இதயம், கல்லீரல், கார்னியா என மொத்தம் 1086 உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சாதனை ஆகும். 2023ஆம் ஆண்டு 178 நபர்களும், 2022ஆம் ஆண்டு 156 நபர்களும், 2021ஆம்...

ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

‘அது என்னப்பா! ஆர்.எஸ்.எஸ் பேரணியில அமைச்சர் முருகன் சீருடையுடன் போஸ் குடுக்குறாரு. தமிழிசையும், வானதியும் காணோமே என்றார் ஒரு நண்பர். ஆமாம் அப்படித்தான். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை ஊடகங்கள் ஒளிபரப்பின. காக்கி பேண்ட் – குல்லாவுடன் நடந்தார்கள். ஒரு பெண்ணை மருந்துக்குக் கூட காணவில்லை . அது ‘ஆர்.எஸ்.எஸ் ஆண்கள்’ மட்டும் பேரணி. ஏதோ ஒரு சுயம் சேவக்கைப் பிடித்து அவருக்கு பெண் வேடம் போட்டுக்கூட அழைத்து வந்திருக்கலாம். அதற்கும் தயாராக இல்லை. பெண்கள் விண்வெளிக்குப் போகிறார்கள். பல மாதங்கள் சந்திர மண்டலத்தில் எங்களால் வாழ முடியும் என்று சாதனை படைக்கிறார்கள். இராணுவக் கமாண்டர்களாக வருகிறார்கள். குடியரசுத் தலைவராகக் கூட வரலாம், ஆனால் அதே பெண் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக மட்டும் முடியாது. சனாதன தர்மம் அப்படி ஒரு இரும்புக் கோட்டை. ‘என்னப்பா இது; தமிழிசையும் வானதியும் ஒவ்வொரு நாளும் இந்து தர்மத்துக்காக முழங்குறாங்க, ஆனா அவங்க தாய் அமைப்பு பேரணிக்குள் வராதே என்று...

தலையங்கம் – மதச்சார்பின்மையா? மனுதர்மமா?

தலையங்கம் – மதச்சார்பின்மையா? மனுதர்மமா?

மதச்சார்பின்மை ‘சோசலிசம்’ என்ற சொற்கள் 1976ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் தான் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது இல்லவே இல்லை என்று சங்பரிவாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். பரப்புரைச் செயலாளர் போல் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் அண்மையில் இவ்வாறு பேசியிருக்கிறார். அரசியல் சட்டத்தின் கீழ் உறுதி மொழியேற்று – பதவிக்கு வந்தவர் ஆளுநர். அவர் மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்கிவிட வேண்டும் என்று சட்ட மறுப்புப் பேசுகிறார். ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லை ஏன் அகற்ற வேண்டும்? அகற்றிவிட்டால் ’இந்துக்கள்’ நாடு என்றாகிவிடுமா? அதாவது அரசியல் சட்டக் குழு மதச்சார்பின்மைக் கொள்கையை ஏற்கவில்லை, அதை இந்திரா காந்தி தான் திணித்தார் என்று இவர்கள் வாதாடுகிறார்கள். அரசியல் சட்டத்தின் அடித்தளமே மதச்சார்பின்மை தான். சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் மதப் பாகுபாடு கூடாது; ஜாதிப் பாகுபாடு கூடாது; இனப் பாகுபாடு கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது....

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு சனாதனத்தை மிரள வைத்த ‘குடிஅரசு’

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு சனாதனத்தை மிரள வைத்த ‘குடிஅரசு’

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. குடிஅரசும் சுயமரியாதை இயக்கமும் தமிழ்நாட்டின் வரலாற்றில் 1925 முதல் 1949 வரை அதன் எழுத்தையும் பேச்சையும் வரலாறாகப் பதிவு செய்யப்பட்டதன் காரணமாகத்தான் இன்றைக்கும் நாம் அதைப் படிக்கவும் பேசவும் முடிகிறது. பெரியார் குடிஅரசு இதழை ஆரம்பித்த போது வெறும் 7 சதவீதம் பேர் தான் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் கூட தந்தை பெரியார் “நான் ஒருவனே எழுதி, நான் ஒருவனே அச்சிட்டு, நான் ஒருவனே எழுதிப் படிக்கின்ற நிலை வந்தாலும் குடிஅரசு இதழை நடத்திக் கொண்டு இருப்பேன்”. நவீன அச்சு இயந்திரங்களோ, தொலை தொடர்பு வசதி என எதுவுமே இல்லாத காலம் அது. 1929ஆம்...

தோழர் தேவ.சீனி சுந்தரம் மறைந்தார் உடல் கொடையாக வழங்கப்பட்டது

தோழர் தேவ.சீனி சுந்தரம் மறைந்தார் உடல் கொடையாக வழங்கப்பட்டது

மதுரை: பெரியார் திராவிடர் கழகத்தின் சிவகங்கை முன்னாள் மாவட்டத் தலைவரும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் காப்பாளருமான தளபதி அவர்களின் தந்தையுமான தேவ.சீனி.சுந்தரம் 21.09.2024 அன்று முடிவெய்தினார். 23.09.2024 அன்று நடைபெற்ற இறுதி நிகழ்வை பெண்களே முன்னின்று நடத்தினர்.சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அவரது “உடல் கொடை”யாக வழங்கப்பட்டது. முன்னதாக கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் த.தே.ம.மு. தலைவர் மீ.த.பாண்டியன், த.தே.பே, தி.க உள்ளிட்ட தோழமை அமைப்பினரும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்