Category: பெரியார் முழக்கம்

கழகத் தொடக்கநாளில் ஜாதியை ஒழிக்க உறுதியேற்பு!

கழகத் தொடக்கநாளில் ஜாதியை ஒழிக்க உறுதியேற்பு!

சென்னை:திராவிடர் விடுதலைக் கழகத்தின் 13ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில் 12.08.2024 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்விற்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை வகித்து, கழகக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் தோழர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கழக மாநில – மாவட்ட – பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் திரளாகக் கலந்துக் கொண்டனர். கோவை:திராவிடர் விடுதலைக் கழகத்தின் 13ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு சூலூர் தமிழ்ச்செல்வி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கழக மாநகரத் தலைவர் நிர்மல் குமார் உறுதிமொழி வாசிக்க கழகத் தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் கழகம் கடந்துவந்த பயணத்தையும், எதிர்காலப் பணிகள்...

கழகத் தலைமையகத்தில் குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் திறந்துவைத்தார்!

கழகத் தலைமையகத்தில் குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் திறந்துவைத்தார்!

சென்னை : திராவிடர் விடுதலைக் கழகத்தின் 13ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு 12.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் “குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகம்” திறக்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், நூலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் கருஞ்சட்டைப் பதிப்பக இயக்குனர் பெல் இராசன் சிறப்புரையாற்றினார். அவர் குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத்திற்காக சுமார் 15,000/- மதிப்புள்ள 96 நூல்களை வழங்கியதுடன் கணினி வாங்குவதற்காக நன்கொடையாக ரூ.25,000/-யை கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினார். நிறைவாகக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், விழாப் பேருரை யாற்றினார். கூட்டத்தை ஒருங்கிணைந்தச் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி ஒருங்கிணைத்தார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் மற்றும் கழக மாவட்ட – பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழமை இயக்கத்தினர்,...

முகிலன் – ஜஹான் ஆரா இணையேற்பு விழா

முகிலன் – ஜஹான் ஆரா இணையேற்பு விழா

பல்லடம் முகில்நிலா மணிகண்டன் – ஜெயபாரதி இணையரின் மகன் முகிலனுக்கும், ஷாஜகான் ஆயினா இணையரின் மகள் ஜஹான் ஆராவுக்கும் இணையேற்பு விழாவானது 28.07.2024 பல்லடம் சாய் மகாலில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் வரவேற்புரை யாற்றினார். இணையேற்பு விழாவிற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். இணையேற்பு நிகழ்வைத் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் நடத்தி வைத்தார். நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, எழுத்தாளர் பாமரன், திராவிட நட்புக் கழகத்தின் சிங்கராயர், த.பெ.தி.க திருமூர்த்தி, தி.இ.த.பே.பொதுச் செயலாளர் சிற்பி செல்வராஜ், பொள்ளாச்சி கா.சு.நாகராசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள் திருமண விழாவைத் திவிக திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு நெறியாள்கை செய்தார். நிறைவாக தி.இ.த.பே மாவட்டச் செயலாளர் அனுப்பட்டி பிரகாசு நன்றியுரையாற்றினர். திருமண விழாவில் திராவிடர் இயக்க நூல்கள் ரூபாய் 42,000 க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம்...

கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை: கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு 2009ஆம் ஆண்டு கொண்டு வந்த அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைக் கொண்டாடும் விதமாக 02.08.2024 அன்று மதுரை மாவட்டக் கழக சார்பில் மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமையில் சிம்மக்கல்லில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடத் தமிழர் கட்சி மாநிலச் செயலாளர் விடுதலை வீரன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சந்துரு, கழக மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, வேங்கை மாறன், அழகர், கண்ணன் காமாட்சி மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

“பாண்டியாறு – மோயாறு” இயக்கத்தினர் தலைவருடன் சந்திப்பு

“பாண்டியாறு – மோயாறு” இயக்கத்தினர் தலைவருடன் சந்திப்பு

கோபி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பளையத்திற்கு வருகைபுரிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், பாண்டியாறு – மோயாறு இணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் கழக முன்னோடியுமான அக்ரி அ.நே.ஆசைத்தம்பி சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களில், உள்ள சுமார் ஒரு கோடி பொதுமக்களுக்கும், லட்சக்கணக்கான கால் நடைகளுக்கும், 5 இலட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கும் பெரிதும் பயனளிக்கும் “பாண்டியாறு – மோயாறு” இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கழகத்தின், ஆதரவு கோரியும், உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ள வலியுறுத்தியும் கோரிக்கை மனுவினை வழங்கினார். இந்தச் சந்திப்பில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

வனவாசியில் கலந்துரையாடல் கூட்டம்

வனவாசியில் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி : வனவாசி கிளைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 01.08.2024 அன்று வனவாசி நகரத் தலைவர் பா.செந்தில்குமாரின் இல்லத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்டக் கழக அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, மேட்டூர் அண்ணாதுரை, கிட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாதந்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது, கிளைக் கழக சந்தாவாக ரூ.100/- வழங்குவது, புதிய தோழர்களைக் கழகத்தில் இணைப்பது எனப் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் இராசேந்திரன், கிருஷ்ணன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், பொருளாளர் பன்னீர்செல்வம், அமைப்பாளர் கதிர்வேல், நங்கவள்ளி பகுதி தோழர்கள் சிவக்குமார், விஸ்வநாதன், தானாவதியூர் பகுதியைச் சேர்ந்த புதிய தோழர்கள் சந்திரசேகரன், விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை ஓமலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை ஓமலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும், தொடர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், 04.08.2024 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணா சிலை அருகில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல் தலைமை தாங்கினார். நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், சிந்தாமணியூர் நகரத் தலைவர் ம.ரவிக்குமார், சிந்தாமணியூர் நகரப் பொருளாளர் கோ.ஜெயபிரகாஷ், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சி.தங்கதுரை, பவளத்தானூர் இரா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்டச் செயலாளர் இரா.தெய்வானை, வி.சி.க ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாநிலத் துணைச் செயலாளர் சௌ.பாவேந்தன், திராவிடர்...

ஹிந்துஸ்தானில் கரையும் காஷ்மீர்! – அபூர்வானந்த்

ஹிந்துஸ்தானில் கரையும் காஷ்மீர்! – அபூர்வானந்த்

(நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2019ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தைப் பறித்தது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், 5 ஆண்டுகளில் காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சிக் கண்டிருப்பதாகப் பாஜகவும், சங்கிகளும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரத்து அமைதியின் பின்னால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அரச வன்முறைகளை விவரித்து டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் தி வயரில் எழுதிவரும் தொடரின் ஒரு பாகம் தமிழில்) அவமானம், அநீதி மற்றும் அடக்குமுறையின் மற்றொரு ஆண்டு கடந்துவிட்டது. காலண்டர் ஆண்டில் ஏற்படும் மாற்றம் இந்தச் சூழ்நிலைகளில் மாற்றத்தைக் கொண்டு வருமா? நான் ஒரு காஷ்மீரியாக இருந்திருந்தால், ஆகஸ்ட் 5 தேதியைக் காலண்டரில் பார்த்ததும் இதுதான் என் நினைவுக்கு வந்திருக்கும். இந்த அவமானத்தையும், அநீதியையும், அடக்குமுறையையும் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் என் பார்வையிலேயே என்னைச் சிறுமைப்படுத்துகிறது. இத்தகைய அவமானம் மற்றும் அடக்குமுறையை எனக்கு நினைவூட்டும் தேதி இந்தியாவின் பிற பகுதிகளுக்கு...

உள்இடஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

உள்இடஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது தலித் பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாமா? கூடாதா? என்பது குறித்த தீர்ப்பாகும். அப்படி சட்டப்படி உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்பதே இந்தத் தீர்ப்பின் முக்கிய சாரம்சமாகும். ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவர் மட்டுமே உள் இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார். மீதி ஆறு பேரும் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அதில் மூன்று நீதிபதிகள் உள் இட ஒதுகீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தாலும் எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை பின்பற்றப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். குறிப்பாக ஒரு நீதிபதி மட்டும் முதல் தலைமுறையாகப் படிக்க வருகிறவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். மற்ற மூன்று நீதிபதிகள் இப்போது உள்ள...

தலையங்கம் – பார்ப்பனிய மனநிலை கூடாது!

தலையங்கம் – பார்ப்பனிய மனநிலை கூடாது!

பட்டியல் பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு பல்வேறு மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பட்டியல் ஜாதியினரைக் கூறுபோடலாமா என்பதுதான் அந்த விவாதத்தின் மையப்பொருளாக இருக்கிறது. இந்த வாதம் என்பது இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பார்ப்பனியம் நீண்டகாலமாக முன்வைக்கும் வாதம்தான். இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்து இந்துக்களைக் கூறுபோடலாமா என்ற பார்ப்பனிய சிந்தனைதான், பட்டியல் சமூகத்தினரை கூறுபோடலாமா என்று இப்போது மருவியிருக்கிறது. எல்லா மட்டங்களிலும் சமத்துவம் வேண்டும், பட்டியல் சமூகத்தினருக்குள்ளும் சமத்துவம் வேண்டுமென்பதுதான் உள்இடஒதுக்கீட்டின் நோக்கம். ஆனால் அதை ஏற்காமல், உள்இடஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் அவர்களும் கூறியிருக்கிறார். “பட்டியல் பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கக்கூடாது. பட்டியல் பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்திலேயே வழங்கப்பட்டுவிட்டது. அதன் அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்க வேண்டும்” என்ற வாதத்தை அவர் முன்வைக்கிறார்....

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

19.07.2024 அன்று தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கழகத் தலைவரின் மாவட்ட வாரியான சுற்றுப்பயணம் சென்னையில் தொடங்கியது. சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 04.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக அண்மையில் மறைந்த கழகச் செயல்வீரர் மதிவாணன் அவர்களின் படத்தைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவரது மகன் தமிழரசன் மாவட்டக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000/- வழங்கினார். மேலும் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் சூழலில் அதற்கு எதிரான பரப்புரைகளைக் கழகத் தோழர்கள் திவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கழகத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் பேசுகையில் ஊடகங்களும், பத்திரிகைகளும்...

கொளத்தூரில் கலந்துரையாடல்;  மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொளத்தூரில் கலந்துரையாடல்; மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொளத்தூர்: கொளத்தூர் நகரக் கலந்துரையாடல் கூட்டம் 27-07-2024 அன்று கொளத்தூர் சோதனைச் சாவடி அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு, நங்கவள்ளி பொறுப்பாளர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இயக்க வளர்ச்சி மற்றும் புதியத் தோழர்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான செய்திகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கொளத்தூர் நகரக் கழகத்தின் எதிர்காலப் பணிகள் – புதியத் தோழர்களை அமைப்பாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.. மேலும் இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அது பின்வருமாறு:- 1. மாதம்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது. 2. பெரியார் படிப்பகத்தை முறையாக பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவது. 3. புதிய தோழர்களைச் சந்தித்து அவர்களுடன் கழகம் – பெரியாரியல் குறித்து எடுத்துக்கூறி அமைப்பாக்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. கூட்டத்தின் முடிவில் பெரியார் இயக்கத்தின்...

கழகத் தோழர் மதிவாணன் முடிவெய்தினார்

கழகத் தோழர் மதிவாணன் முடிவெய்தினார்

கோவை : வட சென்னையில் வசித்து வந்த கழகத் தோழர் மதிவாணன், 28.07.2024 அன்று அவரது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென முடிவெய்தினார். அவரின் பூர்வீகம் கோவை என்பதால் அவரது உடல் கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கோவை குறிச்சி அண்ணா நகரில் உள்ள மயானத்தில் எந்தவித மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளை கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், கழக மாநகர அமைப்பாளர் கிருட்டிணன், கழகத் தோழர் சதிஷ்குமார் ஆகியோர் மேற்கொண்டனர். தோழரின் உடலுக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர், குமரேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செந்தில்குமார் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தோழர் மதிவாணன் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுப் பணியாற்றி வந்தவர் என்பதால் அவரது உடலை எந்த மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் எவ்வித...

ரூ.5,000 வளர்ச்சி நிதி

ரூ.5,000 வளர்ச்சி நிதி

கோபி : ஓய்வுபெற்ற வேளாண் இயக்குநரும், கழக முன்னோடியுமான ஆசைத்தம்பி – கற்பகம் இணையரின் மகளான தமிழ்ப்பாவை – அருண் இணையருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையொட்டி 28.07.2024 அன்று கோபியில் உள்ள அவரது இல்லத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். குழந்தை பிறந்ததன் மகிழ்வாக கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ. 5000/-யைக் கழகத் தலைவரிடம் வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

பகுத்தறிவாளர் வி.பி.சண்முகசுந்தரம் மறைவு; கழகத் தலைவர் மரியாதை

பகுத்தறிவாளர் வி.பி.சண்முகசுந்தரம் மறைவு; கழகத் தலைவர் மரியாதை

கோபி : மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சீரிய பகுத்தறிவாளர் வி.பி. சண்முகசுந்தரம் 20.07.2024 அன்று முடிவெய்தினார். இந்நிலையில் 28.07.2024 அன்று கோபியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டார். மேலும் அன்பழகன் IAS, மதிமுக மாவட்டச் செயலாளர் கந்தசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட கழகத் தோழர்களும் ஆறுதல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

புதிய குற்றவியல் சட்டங்களின் ஆபத்துகள் விளக்கக் கருத்தரங்கம்

புதிய குற்றவியல் சட்டங்களின் ஆபத்துகள் விளக்கக் கருத்தரங்கம்

பொள்ளாச்சி: சமஸ்கிருத பெயரிலான நஞ்சு தடவிய மூன்று குற்றவியல் சட்டங்களை அனுமதியோம்! சிறப்புக் கருத்தரங்கம் 28.07.2024 அன்று பொள்ளாச்சி பர்வானா அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பொள்ளாச்சி யாழ்.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். சபரிகிரி வரவேற்புரையாற்றினார். அரிதாசு முன்னிலை வகித்தார். இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலாளர் வழக்குரைஞர் ச.பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் கா.சு.நாகராசன், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் கா.மாரிமுத்து, தமிழ்நாடு தன்னுரிமை மீட்புக் கழகம் வழக்குரைஞர் சேதுபதி, திராவிடர் கழகம் மாரிமுத்து, தமிழ்ப்புலிகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வானுகன், புரட்சிகர இளைஞர் முன்னணி வழக்குரைஞர் மலரவன் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினார்கள். நிறைவாக வினோதினி நன்றி கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி,...

ஆழ்ந்து உறங்கும் ஒன்றிய சுகாதாரத்துறை

ஆழ்ந்து உறங்கும் ஒன்றிய சுகாதாரத்துறை

கொரோனா பேரிடருக்குப் பிறகு உலக நாடுகள் அனைத்தும் சுகாதாரத்துறைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்கின்றன. ஆனால் பாஜக ஆளும் இந்திய ஒன்றியம், கொரோனா பேரிடரில் இருந்து துளியும் பாடம் கற்கவில்லை. நடப்பு நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கான நிதியை 3 விழுக்காடு குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு. கடந்த நிதியாண்டில் மட்டும் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 10 விழுக்காடு பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட தொகை ரூ.8,550.21 கோடி. இது மதுரை உட்பட 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய தொகையை விட அதிகம். ஒன்றிய அரசு 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு கடந்த நிதியாண்டில் ஒதுக்குவதாக, நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்ட தொகையே ரூ.6800 கோடிதான். வீணாய்க் கிடந்தாலும் பரவாயில்லை, மக்கள் நலனுக்குப் பயன்பட்டுவிடக்கூடாது என்பது மோடி அரசின் எண்ணமா? பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கக்கோரி தனி மசோதா

பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கக்கோரி தனி மசோதா

கேரளா, சாலக்குடி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பென்னி பெஹனன். காங்கிரஸ் எம்பியான பென்னி பகுத்தறிவு சிந்தனை மற்றும் விமர்சன சிந்தனைகளை ஊக்குவிப்பதற்கான மசோதா 2024-யைக் கடந்த வெள்ளியன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பென்னி பெஹனன் கூறுகையில் ‘‘சமூகத்தில் அதிகரித்து வரும் மூட நம்பிக்கைகளையடுத்து பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிப்பதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளது. கடந்த 2014 முதல் விமர்சன சிந்தனைகள் ஊக்குவிக்கப்படவில்லை. நான் உயிரியல் ரீதியாகப் பிறக்கவில்லை, கடவுள்தான் என்னை இங்கு அனுப்பினார் என்று மோடி பேசும் நிலையில் பகுத்தறிவு சிந்தனைகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய மசோதாவாகும் இது. நாட்டின் முதல் பிரதமரான நேரு தான் பகுத்தறிவு சிந்தனை மற்றும் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்தார். பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, விமர்சன சிந்தனைகள், மாறுபட்ட கருத்துகள் ஏற்கப்படுவது இல்லை. ஏனெனில் பிரதமரும் அவரது கட்சியினரும் பகுத்தறிவில்லாத, மூட நம்பிக்கைகளையே ஊக்குவித்து வருகின்றனர்.அரசின் கொள்கைகள், திட்டங்கள், சமூக திட்டங்களில் அனுபவ ஆதாரங்கள், பகுத்தறிவு பகுப்பாய்வை...

மக்களுக்கான விடுதலையை மந்திரங்கள் தராது – எஸ்.வி.வேணுகோபால்

மக்களுக்கான விடுதலையை மந்திரங்கள் தராது – எஸ்.வி.வேணுகோபால்

மரித்துப்போன 15 வயதுப் பெண்ணை, ‘மீண்டும் உயிரோடு கொண்டுவந்து நிறுத்துவேன்’ என்று சொல்லி, அவரது சடலத்தைத் தனது ஆட்கள் உதவியோடு எடுத்துக்கொண்டு போனவர், காவல் துறையால் அதற்காகக் கைது செய்யப்படுகிறார். ஆனால், அதற்குப் பின்னும் அந்த ஊரே அவரைக் கொண்டாடுகிறது. அப்படியான ஒருவர் குறித்த ‘சாமியார்’ என்னும் பிம்பக் கட்டமைப்பு, ஜூலை 2 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் நகரை நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் சவக்கிடங்காக மாற்றிவிட்டது. ஹாத்ரஸ் நகர நெரிசல் நிகழ்வில் குழந்தைகள் உள்ளிட்ட 121 பேர் பலி என்பது அரசு சொல்லும் கணக்கு என்றாலும், ‘முந்நூறு சடலங்களுக்கு மேல் எண்ணிப் பார்த்தேன்’ என உள்ளூர் மனிதர் ஒருவர் கூறியது ‘தி இந்து’ நாளேட்டில் பதிவாகியுள்ளது. ஒரு பேருந்தின் இருக்கைகள் எல்லாம் சடலங்களால் நிரப்பப்பட்டு இருக்கும் கோரமான ஒரு காட்சியை இதற்குமுன் நாளேடுகளில் பார்த்த நினைவில்லை. மூன்று பெண் சடலங்கள் வினோத் என்பவர் தனது குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சார்ந்த...

தலையங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

தலையங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

2011ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட்டிருக்க வேண்டியது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வேண்டுமென்றே தாமதித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. கொரோனாவைக் காரணம்காட்டி தள்ளிப்போடப்பட்டு, அதுவே தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறுமனே மக்கள் தொகையை அறிந்துகொள்வதற்கான கணக்கெடுப்பு அல்ல. சமூக – பொருளாதார தரவுகள் அதற்குள் அடங்கியுள்ளது. அதைவைத்துதான் கொள்கை முடிவுகள், பொருளாதாரத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும். அரசு நிர்வாகத்திற்கும் அத்தியாவசியத் தேவை. அதுமட்டுமின்றி, கல்வி- வேலைவாய்ப்பில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய, இடஒதுக்கீட்டைச் செழுமைப்படுத்தவும் ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிக அவசியமானது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதி வாரியான கணக்கெடுப்பு விவரங்களும் எடுக்கப்பட்டபோதிலும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள், கோரிக்கைகளும் மிகப்பெரிய அளவில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்குரிய தீர்வுகளைக் காண, ஜாதி...

யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா பின்னணி!

யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா பின்னணி!

ஒன்றிய பாஜக அரசின் சிந்தனையில் உருவானதுதான் தேசிய தேர்வு முகமை. வெறும் ஒரு குடியிருப்போர் நலச்சங்கம் போல சொசைட்டியாகப் பதிவு செய்யப்பட இந்த முகமை நீட், ஜேஇஇ என முக்கியமான பல தேர்வுகளை நடத்துகிறது. அதில் பலப்பல மோசடிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என பல வகையான மோசடிகள் அம்பலமாகி நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து தினமும் பல மோசடி நபர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணி இடங்களை நிரப்புவதற்கான ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்திலும் (யுபிஎஸ்சி) பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரான யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவரது ராஜினாமா பின்னணி குறித்து பல பரபரப்பு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன....

தலையங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

தலையங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

2011ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட்டிருக்க வேண்டியது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வேண்டுமென்றே தாமதித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. கொரோனாவைக் காரணம்காட்டி தள்ளிப்போடப்பட்டு, அதுவே தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறுமனே மக்கள் தொகையை அறிந்துகொள்வதற்கான கணக்கெடுப்பு அல்ல. சமூக – பொருளாதார தரவுகள் அதற்குள் அடங்கியுள்ளது. அதைவைத்துதான் கொள்கை முடிவுகள், பொருளாதாரத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும். அரசு நிர்வாகத்திற்கும் அத்தியாவசியத் தேவை. அதுமட்டுமின்றி, கல்வி- வேலைவாய்ப்பில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய, இடஒதுக்கீட்டைச் செழுமைப்படுத்தவும் ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிக அவசியமானது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதி வாரியான கணக்கெடுப்பு விவரங்களும் எடுக்கப்பட்டபோதிலும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள், கோரிக்கைகளும் மிகப்பெரிய அளவில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்குரிய தீர்வுகளைக் காண, ஜாதி...

பகவத்கீதை பெண்களைத் துப்பாக்கி ஏந்த அனுமதிக்கிறதா?

பகவத்கீதை பெண்களைத் துப்பாக்கி ஏந்த அனுமதிக்கிறதா?

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். பெண் ஒருவர் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்றிருப்பது நாட்டிற்கும் பெண் இனத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இதை நாம் பாராட்டி வரவேற்கிறோம். ஆனால், தனது வெற்றிக்கு காரணம் பகவத் கீதை தான், நான் பகவத்கீதையை ஆழமாகப் படித்தேன். பலனை எதிர்பார்க்காதே கடமையை செய்! உன்னுடைய தலைவிதி உன் கையில் இல்லை. இலக்கு நோக்கி முன்னேறிச் செல் என்ற இந்த மூன்று கருத்துக்களும் தான் என்னை ஊக்கப்படுத்தியது. எனவே பகவத்கீதை தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார். ஒலிம்பிக்கில் பகவத்கீதைக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததை போல ஊடகங்கள் இதை கொண்டாடி வருகின்றனர். இந்த கருத்து நியாயம் தானா என்பது குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பகவத் கீதை எப்போது உருவானது. புத்த மதம் செல்வாக்குமிக்கதாக திகழ்ந்த காலத்தில் அதனுடைய சாக்கிய தத்துவம் மக்களால்...

பல்லடத்தில் குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்; கழகத் தலைவர் சிறப்புரை

பல்லடத்தில் குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்; கழகத் தலைவர் சிறப்புரை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 29.07.2024 திங்கள்கிழமை மாலை 5.00 மணிக்கு பல்லடம் NGR சாலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.வி.க. பல்லடம் நகர அமைப்பாளர் மு.கோவிந்தராசு தலைமை தாங்கினார். செம்பருதி வரவேற்புரை யாற்றினார். கழகத் தோழர்கள் பழனிச்சாமி, அஜித், கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினரின் பகுத்தறிவு பாடல்கள் பாடப்பட்டன. தோழர் அனுப்பட்டி சீனி.செந்தேவன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன், கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், கழகப் பொருளாளர் துரைசாமி, திமுக பல்லடம் நகரப் பொருளாளர் குட்டி பழனிச்சாமி ஆகியோர் உரையாற்றினர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் குடிஅரசு இதழின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பரமசிவம், இந்தியக்...

அப்பட்டமான மதவெறி!

அப்பட்டமான மதவெறி!

ஒவ்வொரு ஆண்டும் சிவபக்தர்கள் டெல்லியில் இருந்து ஜூலை மாதத்தில் முதல் உத்தரப்பிரதேசம் வழியாக உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் இந்தப் பயணத்தை கான்வார் யாத்திரை என்று அழைக்கிறார்கள். இந்த பக்தர்கள் வசதிக்காக அவர்கள் செல்லும் வழியில் பலர் தற்காலிக உணவு மையம் அமைப்பது வழக்கம். இந்த முறை அப்படி உணவு கூடம் அமைப்பவர்கள் தங்கள் உரிமையாளரின் பெயர், முகவரி, செல்போன் ஆகியவற்றை கடைகளில் நன்றாக தெரியும்படி, கடை போர்டுகளில் எழுத வேண்டும் என்று உபி மாநிலம் முசாபர்நகர் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். பயணம் செல்லும் வழியில் இசுலாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதனால் இயல்பாகவே இசுலாமியர்களின் கடைகளோ அல்லது, கடைகளில் பணிபுரிபவர்கள் இசுலாமியர்களாகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம். சிவபக்தர்கள் அத்தகைய கடைகளை தவிர்க்க வேண்டும் என்கிற உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட நோக்கத்தோடு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்தன. அகிலேஷ் யாதவ், மாயாவதி...

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!

நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது தோல்வியை பரிசாகக் கொடுத்த தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் பாஜக கொண்டிருக்கிற கோபத்தை தெள்ளத்தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது 2024 – 25 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை. ஜூலை 23ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், ஒரு வார்த்தை கூட தமிழ் என்றோ, தமிழ்நாடு என்றோ இடம்பெறவில்லை. மாறாக, ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரை உருவாக்க ரூ.15,000 கோடி, கோப்பர்த்தியில் தொழில் முனையம் என ஆந்திராவுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அதேபோல பீகாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் ஆட்சியை கவிழாமல் இருபுறமும் தாங்கிப் பிடிக்க, சந்திரபாபுவுக்கும், நிதிஷ் குமாருக்கும் தரப்பட்ட முக்கியத்துவமே தவிர, அம்மாநில மக்களின் நலன் மீது கொண்ட அக்கறை அல்ல இது என்பது தெளிவாகிறது. உண்மையில் மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்திருந்தால் கலவரத்தால்...

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நங்கவள்ளி நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.07.2024 அன்று நங்கவள்ளியில் உள்ள அ.செ.சந்திரசேகரன் இல்லத்தில் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமையில் நடைபெற்றது. சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் அ.அண்ணாதுரை, சேலம் (மே) மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, மே.கா.கிட்டு, கொளத்தூர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இயக்க வளர்ச்சி குறித்தும், புதிய தோழர்களை இயக்கத்திற்கு சேர்ப்பது, சந்தா சேர்ப்பு மற்றும் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் பிரபாகரன், அ.செ.சந்திரசேகரன், அருள்குமார், ரமேஷ், ரவிக்குமார், பேரறிவாளன் ஆகியோர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

கழகத் தோழர் இளவரசனுக்கு பாராட்டு விழா

கழகத் தோழர் இளவரசனுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் வட சென்னை கழகத் தோழர் இளவரசனுக்கு பாராட்டு விழாவானது 19.07.2024 அன்று சேத்துப்பட்டு சமூக நலக் கூடத்தில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது.. நிகழ்விற்கு சிகாமணி, தனசேகர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். கழகத் தோழர் அருள்தாஸ் பெரியார் – அம்பேத்கர் பாடல்களை பாடினார். இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், விசிக மையச் சென்னை (கி) மாவட்டச் செயலாளர் பி.சாரநாத், விசிக மையச் சென்னை (வ) மாவட்டச் செயலாளர் இளங்கோ, மக்கள் அதிகாரம் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பா.இராஜன்...

பார்ப்பனர்கள் பாஜகவை கொண்டாடுவது ஏன்? – சாவித்திரி கண்ணன்

பார்ப்பனர்கள் பாஜகவை கொண்டாடுவது ஏன்? – சாவித்திரி கண்ணன்

”சாதியால் தான் நாடு பின்னடைந்துவிட்டது…, சாதியே கிடையாது..” என பாஜக தலைவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள்! ஆனால், அக் கட்சிக்குள்ளும், ஆட்சி நிர்வாக கட்டமைப்பிலும் பார்ப்பனர்களின் முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது! பார்ப்பனர்கள் ஏன் பாஜகவை கொண்டாடுகிறார்கள்..? எனப் பார்ப்போம்; நமது பிரதமர் மோடியோ, ”நாட்டில் இரண்டே சாதிகள் தான் உள்ளனர். ஒன்று ஏழைகள் மற்றொன்று நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்க பங்களிப்பவர்கள்” என்கிறார்! அதாவது இரண்டாவது தரப்பினர் வசதியானவர்கள் என்பதைத் தவிர்த்து நாட்டை வறுமையில் இருந்து மீட்க பங்களிப்பவர்கள் என்பதன் மூலம் ஏழைகளை நாட்டிற்கு பங்களிக்காதவர்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார்! உண்மையில் தங்கள் உழைப்பின் மூலம் நாட்டின் அனைத்து நிர்மாணத் தளங்களையும் அவர்களே கட்டி எழுப்பி அதிகம் பங்களித்த போதிலும், ஏழ்மையில் வைக்கப்பட்டுள்ளனர்! இப்படி எல்லாம் பேசும் பிரதமர் தான், ”நான் மிகவும் பிற்பட்ட சமூகத்தில் இருந்து பிரதமராகி உள்ளேன்” என்றும் சொல்லி உள்ளார். ”தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்வாக்கான சாதி...

ஆம்ஸ்ட்ராங் வீட்டில் கழகத் தலைவர்

ஆம்ஸ்ட்ராங் வீட்டில் கழகத் தலைவர்

அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சமூக விரோதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, 20.07.2024 அன்று காலை 10:30 மணியளவில் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொண்டார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் 25.07.2024 இதழ்

அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு கழகம் கண்டனம்!

அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு கழகம் கண்டனம்!

தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்துகொண்டு திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடியே இராமன் தான் என்று பேசியுள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுகிற சமத்துவம் – சமூகநீதிக் கொள்கையை அன்றைக்கே பேசியவர் இராமன். எனவே இராமன் தான் திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடியாக திகழ்கிறார் என்று பேசியுள்ளார். இந்த பேச்சு மிகவும் அதிர்ச்சிகரமான, திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தங்களையே சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மிகவும் அபத்தமான மனுவாத சிந்தனைகளை விதைக்கக் கூடிய ஒரு பார்ப்பன உரை என்றுதான் இவரது பேச்சைக் குறிப்பிட வேண்டும். திராவிட மாடல் ஆட்சிக்கும் இராமாயணத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஆரியத்தை எதிர்த்து தான் திராவிடமே வந்தது. ஆரியம் கொண்டாடுகிற காவியங்களில் ஒன்று இராமாயணம். அதனால் தான் இந்துத்துவா சக்திகள் இராமனை தேசிய நாயகனாக மாற்றத் துடிக்கிறார்கள். இந்துத்துவா, பார்ப்பனிய சக்திகளுக்கு இராமன் தேசிய நாயகன். ஆனால் திராவிட...

தலையங்கம் – மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட அனுமதியோம்!

தலையங்கம் – மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட அனுமதியோம்!

அரசியலமைப்பின் முகப்புரையில் இடம்பெற்றிருக்கும் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லுக்கு வேக வேகமாக முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. “இந்த நாடு இந்துக்களின் நாடு! இந்துக்களின் இராஷ்டிரமாக இருக்க வேண்டும்” என்ற சிந்தனையை சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சிகளில் ஒன்றிய அரசு பணியாளர்கள் பங்கேற்கலாம் என அனுமதி வழங்கியிருக்கிறது ஒன்றிய அரசு. காந்தியடிகள் படுகொலையை ஒட்டி விதிக்கப்பட்ட தடையை சுமார் 58 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கியிருக்கிறது ஒன்றிய அரசு. சில நாட்களுக்கு முன்பு, ஜார்க்கண்ட் மாநிலம் விஷ்ணுபூரில் தொண்டர்களிடையே பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “சூப்பர் மேன் ஆசையோடு சிலர் நிற்பதில்லை. தேவர்கள், கடவுள்கள் ஆகவும் விரும்புகிறார்கள்” என்று மோடியை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருந்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கியிருக்கிறார். இந்தத் தடையை நீக்கியதன் பின்னணியில் பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இந்த நாட்டில் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, பாலியல் சமத்துவம்...

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு கண்டனம்

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு கண்டனம்

சேலம் பெரியார் பல்கலைக் கழக தொழிலாளர்கள் 77 பேருக்கு கருத்துக்கேட்பாணை‌ வழங்கிய துணைவேந்தர் மற்றும் பதிவாளர் (பொ) விஸ்வநாதமூர்த்திக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்! உத்தரவை உடனே திரும்பப் பெற வலியுறுத்தல்! இதுகுறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை : சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், அரசு இருமுறை அறிவுறுத்தியும் பதிவாளர் மீது பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காதத் துணைவேந்தரைக் கண்டித்து ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து தொடர் போராட்டங்களைப் பணி நேரத்திற்கு முன்பும் பின்பும் மாணவர்களின் கல்வியைப் பாதிக்காத வண்ணம் அறவழியில் நடத்தின. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத துணை வேந்தர் போராட்டம் நடத்திய 77 பேரையும் மிரட்டும் வகையில் காரணக் கேட்பு கடிதம் அனுப்பி உள்ளார். இது போராட்டங்கள் நடத்துவதை ஒடுக்கும் செயலாகும். காரணக் கேட்புக் கடிதம் கொடுத்த பதிவாளர் யார் எனில், பதிவாளர் பதவிக்குத்...

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுக! சென்னையில் கூடிய தலைமைக்குழுவில் முடிவு

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுக! சென்னையில் கூடிய தலைமைக்குழுவில் முடிவு

கழகத் தலைமைக்குழு கூட்டம் 19.07.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தலைமைக்குழு கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலைமைக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் கருத்துக்களை, ஆலோசனைகளை குழுவின் முன்பு வைத்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. • ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டு அரசு தனியாக “ஜாதி ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டம்” ஒன்றை நிறைவேற்றுவது அவசியம் என்று தலைமைக்குழு கருதுகிறது. இதனை தமிழ்நாட்டு அரசிற்கு கோரிக்கையாக வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. • பள்ளி கல்லூரிகளில் ஜாதி, மதப் பாகுபாடுகளைக் களையவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் அரசுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க...

அழகேந்திரன் ஆணவப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அழகேந்திரன் ஆணவப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர் அழகேந்திரன் ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் ஒன்றை இயற்றக் கோரியும் 15.07.2024 அன்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார். மாவட்டக் கழக காப்பாளர் தளபதி முன்னிலை வகித்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாநகரத் கழகத் தலைவர் பாலு, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் பெரியார் முத்து, தேனி மாவட்ட அமைப்பாளர் தேனி ராயன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சந்துரு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், ஆதித்தமிழர் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்டோர் பேசினார்கள். நிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் கண்டன...

“கொள்கைக் களமான கோவை!”

“கொள்கைக் களமான கோவை!”

கோவை மாநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 14.07.2024 அன்று கோவை ஆர்.எஸ்புரம், தடாகம் ரோட்டிலுள்ள திருமூர்த்தி லேஅவுட்டில் ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இதற்கு கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமை தாங்கினார். பயிலரங்கின் நோக்கம் குறித்து மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் விளக்கிக் கூறி வரவேற்புரையாற்றினார். பயிலரங்கைத் தொடங்கி வைத்து கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினார். தோழர்கள் அறிமுகத்திற்கு பின் “பார்ப்பனரல்லாதாரின் வளர்ச்சிக்கு வித்திட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” என்ற தலைப்பில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வகுப்புரிமை வரலாற்றையும் பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதார் உரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராக திராவிடர் இயக்கம் செய்த பணிகளையும், உரிமைகளைக் கற்றுக்கொடுத்த தலைவர் களின் உறுதித் தன்மையையும் விரிவாக எடுத்துக் கூறினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பெரியாரியலாளர் சிற்பி இராசன் “மந்திரமல்ல தந்திரமே!” அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். சாமியார்களின் மோசடிகளையும் மக்களின் மூடநம்பிக்கைகளையும் விளக்கினார். அறிவியல்...

அம்பலமாகும் பி.எம்.கேர்ஸ் மோசடிகள்

அம்பலமாகும் பி.எம்.கேர்ஸ் மோசடிகள்

கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது கடந்த 2021ம் ஆண்டு மே 29ம் தேதி சிறுவர்களுக்கான பிஎம் கேர்ஸ் நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக 2020ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் 2023ம் ஆண்டு மே 5ம் தேதி வரை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தத்தெடுப்போர் அல்லது பாதுகாவலர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் 51சதவீத மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 613 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 9331 மனுக்கள் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 32 மாநிலங்களில் 558 மாவட்டங்களில் இருந்து 4532 விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 4781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 18 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரியவந்துள்ளது....

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தை தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரைக் கொள்ளி வைக்கச் செய்தோம் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம உரிமை பெற, கல்வியே அடிப்படை’ என்று முழங்கிய பெரியார், பாலின பேதம் கடக்க வலியுறுத்திய கொள்கைகள், முன்னெடுப்புகள் பற்பல. அதையடுத்து, ஆணுக்கு இணையாக அனைத்திலும் தங்களின் உரிமைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர், பெண்கள். என்றாலும், இன்றளவும் அவர்களால் அதிகம் பங்கு இயலாத ஒன்றாக இருந்து வருவது… வாழ்வின் வழியனுப்பலுக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள்தான். இன்றும் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் அதில் புழங்குகிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் செய்தால் என்ன?’ என்ற கேள்வியே உரக்க எழுப்பப்படவில்லை. இத்தகைய சமூகச் சூழலில்தான் அதி முக்கியத்துவம் பெறுகிறது, கொளத்தூரில் பெண்கள் குழு ஒன்று செய்து வரும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைமுறை. சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில், பெரியாரின்...

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு

ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தை தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரைக் கொள்ளி வைக்கச் செய்தோம் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம உரிமை பெற, கல்வியே அடிப்படை’ என்று முழங்கிய பெரியார், பாலின பேதம் கடக்க வலியுறுத்திய கொள்கைகள், முன்னெடுப்புகள் பற்பல. அதையடுத்து, ஆணுக்கு இணையாக அனைத்திலும் தங்களின் உரிமைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர், பெண்கள். என்றாலும், இன்றளவும் அவர்களால் அதிகம் பங்கு இயலாத ஒன்றாக இருந்து வருவது… வாழ்வின் வழியனுப்பலுக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள்தான். இன்றும் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் அதில் புழங்குகிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் செய்தால் என்ன?’ என்ற கேள்வியே உரக்க எழுப்பப்படவில்லை. இத்தகைய சமூகச் சூழலில்தான் அதி முக்கியத்துவம் பெறுகிறது, கொளத்தூரில் பெண்கள் குழு ஒன்று செய்து வரும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைமுறை. சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில், பெரியாரின்...

பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் ஒன்றிய அரசு!

பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் ஒன்றிய அரசு!

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்துக்கு அனுப்பப்படும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வருகிறது. இதனால் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ல் பிரதமர் மோடியால் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது. இதற்கு 60% நிதிச்சுமையை ஒன்றிய அரசும், 40% மாநில அரசுகளும் ஏற்க வேண்டும். ஒன்றிய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது. இதன்மூலம் 14,500 பள்ளிகளில் சுமார் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக...

தலையங்கம் – தனியார்துறை இடஒதுக்கீடு அவசியம்!

தலையங்கம் – தனியார்துறை இடஒதுக்கீடு அவசியம்!

ஜவகர்லால் நேருவின் ஆட்சிக்காலம் தொடங்கி மன்மோகன் சிங் ஆட்சிக்காலம் வரையில் இந்தியாவில் 188 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நரேந்திர மோடி பிரதமரான பிறகு ஒரு பொதுத்துறை நிறுவனம் கூட புதிதாக உருவாக்கப்படவில்லை. அதற்கு மாறாக, பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக கூறுபோட்டு விற்கப்பட்டு வருகின்றன. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை விற்று, 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமென்று 2 ஆண்டுகளுக்கு முன்பு இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline). தற்போது மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலம் தொடங்கிய ஒருசில மாதங்களிலேயே தனியார்மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கப்படவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். 2023-2024ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 19,000 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருக்கிறது பாரத் பெட்ரோலியம். “வணிகம் செய்வது ஆட்சியாளர்களின் வேலையல்ல, அரசை நிர்வகிப்பது...

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்திற்கு என்றென்றும் துணைநின்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு ஜூலை 11-ஆம் தேதி தொடங்கியுள்ளது. திராவிட மாடலின் அடித்தளமான ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டில் உறுதியோடு இருந்த குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டை நினைவுகூர்ந்து அவருடைய மானுடப் பணிகளை போற்ற வேண்டியது திராவிட இயக்கத்தின் கடமை. குன்றக்குடி அடிகளார் குறித்து 2018ஆம் ஆண்டு நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை அவருடைய நூற்றாண்டின் தொடக்கதில் பகிர்கிறது புரட்சிப் பெரியார் பெரியார் முழக்கம். கடவுள் – மத மறுப்புகளைக் கடுமையாகப் பேசிய பெரியார், போராட்ட வடிவங்களிலும் கடுமையான அணுகுமுறைகளையே பின்பற்றினார். பார்ப்பனியத்தில் ஊறிப் போய் நிற்கும் மக்களுக்கு இத்தகைய ‘அறுவை சிகிச்சை’ முறையே தேவை என்று கருதினார் பெரியார். ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை முரண் பாடுகளுக்கிடையே உரையாடல்களைத் தொடங்கி விவாதங்களுக்கு வழி திறந்து விட்டதுதான் பெரியார் இயக்கம், மாற்றுக் கருத்தாளர்களை எதிரிகளாக்கி வன்முறைக்கு தூபம் போட்டது இல்லை. இன்று எச். ராஜாக்களும்,...

இளம்பிள்ளையில் கலந்தாய்வு கூட்டம்

இளம்பிள்ளையில் கலந்தாய்வு கூட்டம்

இளம்பிள்ளை நகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 08.07.2024 அன்று இளம்பிள்ளையில் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் கடையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் முன்னிலையிலும் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் 05.07.2024 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இளம்பிள்ளை நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி இளம்பிள்ளையில் பொதுக் கூட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சேலம் (கி) மாவட்டச் செயலாளர் டேவிட், மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம், நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் (கி) மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ், சௌந்தரராஜன், தனசேகர், கோபி, திவ்யா, தமிழ்மணி, தமிழ், கவியரசு, சேகர்,...

கிருஷ்ணகிரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் 30.06.2024 அன்று நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார், மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார், கெலமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் சிறப்புரையாற்றினார்.. நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய சமூக மாற்றங்களை பட்டியலிட்டு நிறைவுரையாற்றினார். செந்தில் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது. பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

கடத்தூரில் குடிஅரசு நூற்றாண்டு விழா

கடத்தூரில் குடிஅரசு நூற்றாண்டு விழா

கடத்தூர் புதூரில் குடிஅரசு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் – கொடியேற்றம் – இல்லத் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் புதூரில் குடி அரசு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 06.07.2024 சனிக் கிழமை மாலை 6.00 மணிக்கு மடத்துகுளம் ஒன்றியக் கழகத் தோழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. தொடக்கமாக காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பகுதி வாழ் பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியை கவனித்தனர். பொதுக்கூட்டத்திற்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் வரவேற்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சிவானந்தம், கழகத் தோழர்கள் சரவணன், இலக்கியா, சங்கீதா, செல்வி, ஆரியமாலா, சிந்தனை செல்வி, தாரணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, விசிக மாவட்ட செயலாளர் சதீசு, திராவிடத் தமிழர் கட்சி கொள்கை பரப்புச்...

வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பங்கு – மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் விவரிக்கிறார் (2)

வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பங்கு – மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் விவரிக்கிறார் (2)

23.06.2024 அன்று கொளத்தூரில் நடைபெற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் 77வது பிறந்தநாள் விழாவில் மூத்த பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் ஆற்றிய வாழ்த்துரை. கடந்த இதழின் தொடர்ச்சி… காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரைக்கும் இருவரும் பேசினார்கள். அந்த பேச்சில் ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக எதுவும் இல்லை. முழுக்க முழுக்க உக்கம்பருத்திக்காடு, செங்கப்பாடி என சுற்றுவட்டார ஊர்களைப் பற்றியே பேசினார்கள். கடைசியாக மணி அண்ணன், ராஜ்குமாரை எப்போது வெளியில் விடுவீர்கள் என்று வீரப்பனை பார்த்து கேட்டார். நீங்கள் வேண்டுமானால் இப்போதே கூட்டிச் செல்லுங்கள் என்றார் வீரப்பன். அப்போது அண்ணன், வேண்டாம் நான் வந்ததே யாருக்கும் தெரியாது. தமிழ் (சிவசுப்பிரமணியம்) வரச் சொன்னார் என்று வந்தேன். நாம் சந்திச்சதுக்கு அடையாளமாக ஆடியோ கேசட் மட்டும் பேசி பதிவு செய்து கொடுங்கள் என்று மணி அண்ணன் கேட்டுக்கொண்டார். கேசட்டை வாங்கிக் கொண்டு அண்ணன் புறப்பட்டார். கொளத்தூர் மணியின் அணுகுமுறை வீரப்பனின் இந்த...

பாபாக்களுக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

பாபாக்களுக்கு ஆதரவு பெருகுவது ஏன்?

இந்தியாவில் பாபாக்கள், கடவுள் அவதாரங்கள் பெருகி வருவதற்கான காரணம் என்ன? Times Of India நாளேடு (ஜூலை7) ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளது. பெரும்பாலான பாபாக்கள் சமூகத்தில் விளிம்புநிலையில் இருந்தே வருகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் போலே பாபாவின் பேச்சைக் கேட்க வந்தவர்களில் பெரும்பாலும் தலித் மக்கள். அதில் பெண்களே அதிகம். பாபாவோ ஜாதவ் என்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்று தன்னை கடவுள் அவதாரமாக அறிவித்துக் கொண்டவர். அதே நேரத்தில் பொருளாதாரத்தில் வலுவாக உள்ள மேல்தட்டு மக்களும் அவருக்கு சீடர்களாக இருக்கிறார்கள். தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பாபாக்களை நோக்கி வருவதற்கான காரணம் ஜாதியக் கட்டமைப்பு தான் என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். சமூகவியல் பேராசிரியரான கல்யாணி இது குறித்து கூறுகையில்:- ஜாதிய சமூகத்தில் பல்வேறு தடைகளையும், சுமைகளையும் விளிம்புநிலை மக்கள் சுமக்கிறார்கள். பாபாவின் சீடர்களாக மாறும்போது இந்த தடைகளில் இருந்து விலகி நிற்க முடிகிறது. ‘தேவி...

தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

தலையங்கம் – மது மட்டும்தான் போதையா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் ஜூன் மாத இறுதியில் நடைபெற்றது. கள்ளச்சாராயம் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சட்டத்திற்குப் புறம்பாக காய்ச்சப்படுவதும், அதனால் அவ்வப்போது இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையே, சாராய வியாபாரிகளுடன் திரைமறைவு உடன்படிக்கைகளை செய்துகொண்டு வருமானம் ஈட்டும் வேலையில் ஈடுபடுகிறது என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. எனவே காவல்துறை நியாயமாக செயல்பட்டாலே கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை பெரும்பாலும் தடுத்துவிட முடியும். ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக மதுவை ஒழிக்க வேண்டுமென்று பேசுவதோ, அதுகுறித்த கோரிக்கைகளை எழுப்புவதோ அவசியமற்றது. இருப்பினும் அரசியலுக்காக இதுபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஒருவேளை மதுவை ஒழிப்பதுதான் கள்ளச்சாராய மரணங்களை தடுப்பதற்கான ஒரே தீர்வு என்று கூறுவார்களேயானால், மது மட்டுமே போதை இல்லை. ஆன்மீகம் அதைவிட மிகப்பெரிய போதையாக இந்த நாட்டில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. குறிப்பாக ஜூலை இரண்டாம்...

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் ஒரு நபர் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு!

ஒன்றிய பாஜக அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற் கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்ய நாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடை முறையில் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை ‘பாரதிய நியாய சன்ஹிதா – 2023’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023’ மற்றும் ‘பாரதிய சாக்ஷியா சட்டம் – 2023’ என மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் வெடித்த போராட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ள...

நேரில் மரியாதை

நேரில் மரியாதை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலுக்கு கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. இதில் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்