பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்
கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவையொட்டி இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கம், கவியரங்கம், கலை நிகழ்ச்சி, பேரணி மற்றும் பொது மாநாட்டை (26–04–2025) தொடங்கி வைத்து, விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தொடக்க உரையாற்றினார். இம்மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் பேசியதாவது:– “அண்ணன் சுபவீ அவர்கள் இந்த மாநாட்டிலே நீ கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டபோது… எத்தனையோ பெருமைகள் நமக்கு கிடைக்கலாம், தேர்தலிலே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கலாம், நம் உழைப்பை அங்கீகரித்து நாம் சார்ந்திருக்கும் இயக்கங்கள் நமக்கு பொறுப்புகள் அளிக்கலாம். ஆனால் இதையெல்லாம் விட பெருமையாக நான் நினைப்பது, தலைவர் கலைஞர் அவர்கள் என்னைப் பற்றி மேடையிலே குறிப்பிட்டுச் சொன்னார்கள். எங்கள் வீட்டில் எல்லாரும் திமுக என்றால் என் மகள் கனிமொழி திராவிடர் கழகத்தைச்...
