கழகத் தொடக்கநாளில் ஜாதியை ஒழிக்க உறுதியேற்பு!
சென்னை:திராவிடர் விடுதலைக் கழகத்தின் 13ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில் 12.08.2024 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்விற்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை வகித்து, கழகக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் தோழர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கழக மாநில – மாவட்ட – பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் திரளாகக் கலந்துக் கொண்டனர். கோவை:திராவிடர் விடுதலைக் கழகத்தின் 13ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு சூலூர் தமிழ்ச்செல்வி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கழக மாநகரத் தலைவர் நிர்மல் குமார் உறுதிமொழி வாசிக்க கழகத் தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் கழகம் கடந்துவந்த பயணத்தையும், எதிர்காலப் பணிகள்...
