கிருஷ்ணகிரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் 30.06.2024 அன்று நடைபெற்றது.
மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது.
கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார், மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார், கெலமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் சிறப்புரையாற்றினார்..
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய சமூக மாற்றங்களை பட்டியலிட்டு நிறைவுரையாற்றினார்.
செந்தில் நன்றி கூற பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்

You may also like...