“ஆகமத்தீண்டாமையை” வலியுறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலித் சமூகத்தைச் சார்ந்த கவாய் பதவி ஏற்ற அடுத்த நாளிலே உச்சநீதிமன்றம் ஆகம தீண்டாமையை நியாயப்படுத்தி இருக்கிறது. ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்தத் தீர்ப்பை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வரவேற்று இருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைக்கு எதிரான இந்தத் தீர்ப்பை எப்படி வரவேற்கிறார்? இந்த கோரிக்கையின் நோக்கம் அர்ச்சகர் பதவிகளுக்கானது அல்ல, மாறாக ஆகமக் கோயில்களில் சூத்திரர்கள் அர்ச்சர்களாகக் கூடாது என்ற இழிவுக்கு எதிரான போராட்டம். ஒருமுறை கலைஞர் சட்ட மன்றத்தில் “கர்ப்பகிரகத்துக்கு பாதுகாப்பு தேவை தான், ஆனால் அது வர்ணாசிரம பாதுகாப்பாக இருக்கக் கூடாது” என்று காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்தார் கலைஞர் கருத்துக்கு எதிராகவே அமைச்சர் பேசுகிறார். அரசியல் சட்டம் தலைமை நீதிபதியாக ஒரு தலித் வர முடியும் என்று கூறுகிறது. ஆனால் ஆகமங்களோ பிராமணர்களைத் தவிர பிற ஜாதியினர்...
