Category: பெரியார் முழக்கம்

“ஆகமத்தீண்டாமையை” வலியுறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

“ஆகமத்தீண்டாமையை” வலியுறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலித் சமூகத்தைச் சார்ந்த கவாய் பதவி ஏற்ற அடுத்த நாளிலே உச்சநீதிமன்றம் ஆகம தீண்டாமையை நியாயப்படுத்தி இருக்கிறது. ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்தத் தீர்ப்பை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வரவேற்று இருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைக்கு எதிரான இந்தத் தீர்ப்பை எப்படி வரவேற்கிறார்? இந்த கோரிக்கையின் நோக்கம் அர்ச்சகர் பதவிகளுக்கானது அல்ல, மாறாக ஆகமக் கோயில்களில் சூத்திரர்கள் அர்ச்சர்களாகக் கூடாது என்ற இழிவுக்கு எதிரான போராட்டம். ஒருமுறை கலைஞர் சட்ட மன்றத்தில் “கர்ப்பகிரகத்துக்கு பாதுகாப்பு தேவை தான், ஆனால் அது வர்ணாசிரம பாதுகாப்பாக இருக்கக் கூடாது” என்று காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்தார் கலைஞர் கருத்துக்கு எதிராகவே அமைச்சர் பேசுகிறார். அரசியல் சட்டம் தலைமை நீதிபதியாக ஒரு தலித் வர முடியும் என்று கூறுகிறது. ஆனால் ஆகமங்களோ பிராமணர்களைத் தவிர பிற ஜாதியினர்...

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்! இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மேச்சேரியில் 20.04.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.தாமோதரன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மகிழவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிறைவுரையாக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் கருத்துரையாற்றினார். இறுதியாக சேலம்...

சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

28/04/2025 திங்கள் மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் செம்பராம்பட்டு ஊரில் கழக மு.சரத்குமார் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் மற்றும் மயிலாடுதுறை மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்ட நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார். மு.நாகராஜ், வீ.முருகன், தே.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமல்ல தந்திரமே என்ற சாமியார்களின் மோசடியையும், சோதிடம் போன்ற புரட்டுகளையும், மூடநம்பிக்கையால் மக்கள் எவ்வளவு ஏமாறுகிறார்கள் என்று தன்னுடைய அறிவியல் விளக்க கலைநிகழ்ச்சி மூலம் விளக்கினார். தொடக்க உரை செ.வே.ராஜேஷ் நிகழ்த்தினார். கழக மாவட்ட தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ. இளையரசன், தபெதிக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் செ. பிரபு, மக்கள் அதிகார கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஆ.இராமலிங்கம், CPI இவிதொச, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் க.முருகேசன், அறிவியல் மன்ற தலைவர்...

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சு தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 03.05.2025 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திராவிடம் – பெரியார் யாருக்கு எதிரி? என்ற தலைப்பில் கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சுயமரியாதைச் சுடரொளி கூ.சு.ரா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குறும்பை. அரு. மாசிலாமணி தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஒன்றிய தி.வி.க. செயலாளர் செட்டியூர் சேர்மத்துரை திப்பணம்பட்டி தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட தி.வி.க. செயலாளர் பொ.பெ.சு.அன்பரசு வரவேற்புரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினர். அவர் தனது உரையில் இந்தியா எனும் மதச் சார்ப்பற்ற நாட்டை ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு RSS ன் கொள்கையான சனாதனக் கொள்கையை இந்தியாவின் சட்டமாக்கிட இந்தியாவை வேத காலத்திற்கு கொண்டு சென்று வேறுபாடு நிறைந்த ஜாதி வேற்றுமை கூடிய நாடாக மாற்றத் துடிக்கிறார்கள்....

ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஜாதி ஒழிப்புதான்!

ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஜாதி ஒழிப்புதான்!

கடவுள் ஜாதி மதத்தைக் கடுமையாக எதிர்த்த புரட்சிக் கவிஞருக்கு தமிழ்நாடு முதல்வர் அரசு விழா அறிவித்ததோடு காலனி என்ற சொல்லும் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைப் பார்வையாகவே இதைக் கருத வேண்டும். இதே போல் நீதிக் கட்சி ஆட்சி ஆணைகளில் குறிப்பிடப்பட்டு வந்த “பஞ்சமன், பறையன்” என்ற வார்த்தைகளை நீக்கி ஆதிதிராவிடர் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தெருக்களில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க ஆணையிட்டார். இதிலும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள், `காலனி’ என்ற பெயரை நீக்கி விட்டால் ஜாதி ஒழிந்து விடுமா? என்று கேட்கிறார்கள். தனது பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை பெரியார் ஒழித்தார் ஜாதிப் பெயரை போட வேண்டாம் என்ற ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தது. இப்போது ஜாதிச் சங்க தலைவர்கள் கூட தங்கள் பெயருக்குப் பின்னால்...

திராவிட  மாடல் ஆட்சியும் ஆல்பர்ட்டா மாகாணமும்!

திராவிட மாடல் ஆட்சியும் ஆல்பர்ட்டா மாகாணமும்!

கனடாவில் நடந்து முடிந்த தேர்தலில் நான்காவது முறையாக லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனடாவில் கூட்டாட்சி அரசியல் அமைப்பு என்ற நடைமுறை இருக்கிறது. ஆல்பர்ட்டா என்ற மாநிலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி தான் மக்கள் செல்வாக்கோடு ஆட்சியில் இருக்கிறது. கனடா கூட்டாட்சி ஆட்சியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று ஆல்பர்ட்டா மாநில ஆட்சி குற்றம் சாட்சி வருகிறது. அதிக வரி செலுத்தும் மாநிலமாகவும், வளர்ச்சி திட்டங்களில் முதலிடம் பெற்ற மாநிலம் ஆல்பர்ட்டா தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து மாநில மக்களும் மாநில ஆட்சியும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கன்சர் வேட்டிவ் வெற்றி பெற்ற அடுத்த நாளே ஆல்பர்ட்டா சட்டமன்றம் கூடி மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது. கனடா கூட்டாட்சி அமைப்பிலிருந்து ஆல்பர்ட்டா தனியாக பிரிந்து செல்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது. ஆல்பர்டடா மாநில பிரிமியர் ஸ்மித் மார்கார்னி இவ்வாறு கூறியுள்ளார்: ஆல்பர்ட்டா மக்கள் பெருமைமிக்க கனடியர்கள் நாங்கள்...

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்குமா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்குமா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய‌ அமைச்சரவை ஏன் திடீர் முடிவுக்கு வந்தது? இதற்குப் பின்னால் பீகார் சட்டமன்றத் தேர்தல் எனும் கட்சி அரசியல் அடங்கி இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைக் குறிவைப்பதே இந்த திடீர் அறிவிப்பின் நோக்கம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த சமூகநீதி கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒருமித்த குரலாக இந்த கோரிக்கை உருவாகியுள்ளது. ஒன்றிய‌ பாஜக ஆட்சி இதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி கடுமையாக எதிர்த்துப் பேசினார். ஜாதி கணக்கீடு கேட்பவர்கள் பிரிவினைவாதிகள் என்றும் `அர்பன் நக்சல்கள்’ என்றும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி கணக்கெடுப்புகள் எடுக்கும் திட்டம்...

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

தோழர்‌ பத்ரி நாராயணன் நினைவு நாளில்”கற்போம்! களம் காண்போம்!” என்ற தலைப்பில் 30/04/25 அன்று சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில், கழக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் ப.அருண் தலைமையில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை கழக இளைஞரணி தோழர்கள் நேர்த்தியாக செய்திருந்தனர். பயிற்சி பெற்ற 55 பேரில் 15 க்கு மேற்பட்டவர்கள்‌ பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்க வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களின் படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கழகத்தலைவர் தனது தொடக்க உரையில் சுயமரியாதை இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் உள்ள பண்பு ரீதியான வேறுபாடுகளை சுட்டிக்காட்டி இயக்க வரலாறுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவையை வற்புறுத்தினார். நிறைவுரை ஆற்றிய விடுதலை இராசேந்திரன் கழகத் தோழர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமான விடையளித்தார். கருத்துரையாற்றிய அனைவருக்கும் கழக வெளியீடுகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. “கொள்கை தரும் இன்ப வாழ்வு!” எனும் தலைப்பில் மாவட்டச்...

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

ஒன்றிய ஆட்சியின் தேர்வு நிறுவனம் நடத்தும் கெடுபிடிகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது 2021-க்குப் பிறகு 2025 இல் முதல் முறையாக மிக மோசமான அளவுக்கு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த 25 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுத முன் வந்துள்ளனர். ● நீட் நுழைவுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 42 பேர், மூன்று ஆண்டு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. ● எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்தது. ● இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து...

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வணக்கம்,வருகிற நாள் 24.05.25 சனிக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக பெண்களே தலைமையேற்று முழுமையாக நடத்தும் “நாத்திகர் விழா “நடைபெற உள்ளது. “நாத்திகர் விழா”வின் முதல் நிகழ்வாக முக்கிய நிகழ்வாக மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், 1. முதுகில் அலகு குத்தி கார் இழுப்பது 2. முதுகில் அலகு குத்தி தொங்கும் பறவைக் காவடி 3. தீச்சட்டி ஏந்துதல் 4. ஆணிப் படுக்கையில் படுத்து வருவது 5. அரிவாளின் மீது ஏறி நிற்பது 6. கன்னத்தில் அலகு குத்துவது 7. கன்னத்தில் முதுகில் எலுமிச்சம்பழம் குத்துவது 8. நாக்கில் சூடத்தை எரிய விடுவது 9. நெருப்பை கக்குவது 10. சுருள் வீச்சு 11. தீப்பந்தம் சுற்றுதல் 12. சிலம்பம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கீழ்காணும் அலைபேசி எண்ணில் முன்கூட்டியே பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். “மூடநம்பிக்கைகளை...

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் இல்லம்‌ சென்று ஆ.ராசா நலம்‌ விசாரித்தார்.

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் இல்லம்‌ சென்று ஆ.ராசா நலம்‌ விசாரித்தார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் இல்லத்துக்கு சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் நலம் விசாரித்தார். உடன் திமுக பொறுப்பாளர்கள் ரோட்ஜ், முனுசாமி தொண்டாமுத்தூர் ரவி, சி.ஆர் இராமச்சந்திரன், அருண், அறிவரசு மற்றும் கழக தோழர்கள் பலர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 08052025இதழ்

கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!

கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!

03.05.2025 அன்று கோவை சின்னியம்பாளையத்தில் பெரியார் உணர்வார்கள் ஏன் வேண்டும் திராவிட மாடல் ஆட்சி! என்ற தலைப்பில் பொதுக்கூட்டத்தை நடத்தினர். கூட்டத்திற்கு சிவா மொபைல்ஸ் சிவா தலைமை தாங்கினார். சூலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார். கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். நிறைவாக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சிபிஐ(எம்) மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குமார், தி.மு.க. மருத்துவரணி பெரியார் செல்வி, அ.பா.சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, தி.மு.க. மகளிரணி ஜெயலலிதா, திருப்பூர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் விஷ்ணு நன்றி கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் கோவை திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுக்கூட்டம் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வை வழக்கறிஞர் சரவணக்குமார் ஒருங்கிணைத்தார். இனியன் கழக தலைவர் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்....

நூற்றாண்டு காணும் பெரியார் பேரொளி திருவாரூர் தங்கராசு

நூற்றாண்டு காணும் பெரியார் பேரொளி திருவாரூர் தங்கராசு

சுயமரியாதை சுடரொளி திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு கூட்டத்தை நிமிர்வோம் வாசகர் வட்டம் கழக தலைமை அலுவலகத்தில் 9-5-25 அன்று நடத்தியது. திருவாரூர் தங்கராசு இயக்கத்தின் பரப்புரையளராக பெரியார் கொள்கைகளை வாழ்நாள்‌ முழுவதும் கொண்டு சென்றார். 1927-ல் பிறந்த அவர் 1947-லிருந்து 1973 வரை திராவிடர் கழகத்தில் முதன்மை இயக்கப் பேச்சாளராக இருந்தார். ஒவ்வொரு திராவிடர் கழகத்தின் குடும்பத்தினருடன் அவர் நெருக்கமாக இருந்தவர். 1957 நடந்த சட்ட எரிப்பு போராட்டத்தின்‌ போது தமிழ்நாடு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட கழகத் தோழர்களை பெரியார் நேரில் சென்று சந்தித்தார். அப்போது திருவாரூர் தங்கராசு அவர்களை பெரியார் உடன் அழைத்து சென்றார். கலைஞர் எழுதி நடிகர்வேள்‌ எம்.ஆர் ராதா‌ நடித்த தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் திருவாரூர் தங்கராசு. நடிகர்வேள் எம்.ஆர்.ராதா நடித்து நாட்டையே அதிரச் செய்த ராமயாணம் நாடகத்துக்கு கதை வசனம் எழுதியவர் இவர் தான். நடிகர்வேள்‌ நடிப்பில் இவர் எழுதிய ரத்த கண்ணீர் நாடகம்...

இணையத்தை ஆக்கிரமித்த ஏ.ஐ. பெரியார்!

இணையத்தை ஆக்கிரமித்த ஏ.ஐ. பெரியார்!

சட்டகத்தில் அடங்காத பெரியாரின் படம் ஒன்று, `The Man who does not fit into frames’ என்ற குறிப்போடு புகழ்பெற்றது. அதன் அர்த்தமும் ஆழமானது. எந்தப் புதிய தொழில்நுட்பம் றிமுகம் ஆனாலும், அதை பெரியார் எப்படி அணுகுவார் என்பது பேசுபொருளாக ருக்கும். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. மறைந்து அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கருத்தியலாகவும், விவாதமாகவும் இருக்கும் பெரியார், இப்போது அழகியலாக `டிரெண்டிற்கு’ வந்திருக்கிறார். ஏ.ஐ.-யில் உருவாக்கப்பட்ட பெரியார் படங்கள் பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. புரட்சியாளர் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸோடு அமர்ந்து பேசுவது போலவும், மடிக்கணினி பயன்படுத்துவது போலவும், அம்பேத்கரை அமர த்து பெரியார் `புல்லட்’ ஓட்டிச் செல்வது போலவும், பள்ளிச் சிறுமியை அழைத்துச் செல்வதுபோலவும், பட்டம் வாங்கிய இளம்பெண்கள் பெரியாரைத் தூக்கிச் சுமந்து கொண்டாடுவது போலவும் என விதவிதமான பெரியார் படங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு சமூக ஊடக உலகில்...

விகடனின் ஜாதி ஒழிப்பு நாடகம்!-

விகடனின் ஜாதி ஒழிப்பு நாடகம்!-

விஜய் தொலைக்காட்சி நடத்திய ‘நீயா நானா நிகழ்ச்சியில்’ போடி நாயக்கனூரைச் சேர்ந்த ஒரு தலித் மாணவி ‘காலனி’ என்ற சொல் எப்படி காயப்படுத்துகிறது என்ற வேதனையை உருக்கமுடன் பேசினார். அடுத்த இரண்டு நாட்களில், தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் இனி அரசு பதிவேடுகளில் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த வாரம் வெளிவந்துள்ள ஆனந்த விகடன் வார ஏடு வார்த்தையை நீக்கி விட்டால் மட்டும் ஜாதி தீண்டாமை ஒழிந்து விடுமா? என்று தமிழ்நாடு அரசை கடுமையாக் கண்டித்து தலையங்கம் தீட்டி இருக்கிறது. ஜாதி ஒழிப்புக் களத்தில் குறியீட்டு ஒழிப்புகளும் ஒரு தேவைதான்; ஜாதி ஒழிப்புக்கு மந்திரக்கோல் எதுவும் கிடையாது.பல்வேறு களங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற வேண்டும். ஜாதி தீண்டாமைகளை முற்றிலும் ஒழித்து விடாமல் இப்படி பெயரை மட்டும் மாற்றுவது சரியா என்று கேட்கும் கேள்விகளில் திமுக எதிர்ப்பு என்ற உள்நோக்கத்தைத் தவிர கொள்கை பார்வை ஏதும் இருப்பதாக நமக்கு...

அமித்ஷாவின் பார்ப்பனியம்

அமித்ஷாவின் பார்ப்பனியம்

இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதமே என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் பேசி இருக்கிறார். ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 சமஸ்கிருத்துக்கு மட்டுமே அழுத்தத்தையும் முன்னுரிமையும் தருகிறது. வணிகம், வானவியல், தத்துவம் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுடன் சமஸ்கிருத தொடர்புகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜகவினர் இதில் இந்தி இல்லை என்று வாதிட்டனர். தாய்மொழி தான் வலியுறுத்தப்படுகிறது என்றும் இதற்காக மோடி இந்தி குறித்த சொற்றொடர்களை நீக்கி விட்டார் என்றும் பேசினார்கள். நடைமுறையில் மும்மொழி திட்டம் என்பது இந்தி திணிப்புக்கே வழிவகுக்கும் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அமித்ஷாவின் இந்த பேச்சு மும்மொழி திட்டம் பார்ப்பனியத்தை வலியுறுத்துவதே என்பதை உறுதிப்படுத்துகிறது. அமித்ஷா மொழி அறிஞர் அல்ல. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே தாய்மொழி என்பதற்கு அவர் எந்த வித சான்றுகளையும் முன்வைக்கவில்லை. உண்மையில் அமித் ஷாவின்...

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மே18 அன்று திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர இசை திருவிழா கன்னிகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்து இருந்தார். துயர மிகுந்த இந்த நாளில் இவ்வாறான கொண்டாட்டத்தை நடத்துவது இன உணர்வுமிக்க தமிழர்களின் உணர்வுகளைப் பதறவைக்கும் ஒன்றாகும். அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை இதனை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமாறு முதற்கட்டமாக கனிவுடன் கோருகிறோம் என்று குறிப்பிட்டுருந்தார். அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்‌ நாசர்‌ இதில் தலையிட்டு நிகழ்ச்சியை தள்ளி வைக்க முயற்சிகளை எடுத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தகவலை திரு நாசர் கழக தலைவருக்கு கடிதமாக எழுதியுள்ளார். இன‌முரசு சத்தியராஜ் இந்த கடிதத்தை கழக தலைவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கையில்: ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கழகத்...

கழகத் தலைவருக்கு சீர் விருது

கழகத் தலைவருக்கு சீர் விருது

சீர் வாசகர் வட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு 2025 ஆண்டுக்கான‌ சமூக போராளி விருது வழங்குகிறது. விருது தொகை ரூ. 1,00,000 இது தொடர்பாக சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் போராட்ட களங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர் என்று பாராட்டி உள்ளது.வாசகர் வட்டத்தின்‌ அறிக்கை: சாதி ஒழிப்பு, சமூகநீதி, பாலின சமத்துவம், பகுத்தறிவுப் பரப்புரை, சுரண்டல் எதிர்ப்பு என மானுட விடுதலைக்கான அனைத்துத் தளங்களிலும் போராட்டக் களங்களிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர். இட ஒதுக்கீட்டு வரலாறு, விடுதலை வேட்கை, தமிழர் பண்பாடு, பெரியாரும் தனித்தமிழ்நாடும், பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தமிழர், தமிழ்நாடு நலன்சார்ந்த போராட்டங்களுக்காக எண்ணற்ற முறை சிறை சென்றவர். சட்டத்தை விட நியாயமே மேலானது என்பதை உரத்துச் சொல்பவர். தன் பேச்சையும் மூச்சையும்...

வடகாட்டில் கொடூரமான ஜாதி வெறித் தாக்குதல்!-கழகத் தோழர்கள் கள ஆய்வு

வடகாட்டில் கொடூரமான ஜாதி வெறித் தாக்குதல்!-கழகத் தோழர்கள் கள ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமத்தில் அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ‘அண்ணா கைப்பந்துக் கழகம்’ என்ற பெயரில் விளையாட்டுத் திடல் அமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில், மேற்படி இடத்தில் தலித் மக்கள் பொங்கல் விழா நடத்துவதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முயற்சித்த போது, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, மேற்படி இடம் பட்டியல் இன மக்களுக்குச் சொந்தமானது என்ற தீர்ப்பைப் பெற்றுள்ளனர். அண்ணா கைப்பந்து கழகத்தினர் மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட் களுக்கு முன்பாக மேற்படி அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக தலித் மக்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அப்போது பிற சமூகத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், எந்தக் குற்றமும் செய்யாத பட்டியலின...

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

கோவை: சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135-வது பிறந்தநாளில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நவீன் அவர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் டெம்போ சிவா, திவிக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், திவிக கோவை மாநகரச் செயலாளர் வெங்கட், திவிக கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் மதிவாணன், தமிழ்ப்புலிகள் தோழர்கள் தம்பி செந்தில், கோவை குமார், ராமகிருஷ்ணன், திவிக தோழர்கள் ஸ்டாலின், மாதவன், நிலவழகன், ராமகிருஷ்ணன், கீர்த்தீகா, அபிலேஸ் பாண்டியன் மற்றும் மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதியாக ரத்தினபுரி பகுதி திவிக பொறுப்பாளர்...

களப்பணியில் கழகத் தோழர்கள்

களப்பணியில் கழகத் தோழர்கள்

18.03.25: புலியூர், தரங்கம்பட்டியில் “பெரியார் இன்னும் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. பரப்புரையின் போது கரூர் மாவட்ட எல்லையில் நொய்யல் பகுதியில் கரூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் குடியரசு கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், பரப்புரைப் பயணத் தோழர்களுக்கு குடிநீர், பிஸ்கட் வழங்கி வழியனுப்பி வைத்தனர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி மற்றும் பயணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். 19.03.25: மணப்பாறை காமராஜர் சிலை, இலுப்பூர், அன்னவாசல் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றன. 20.03.25: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் 4-ரோடு, ஆலங்குடி, விராலிமலை, வடகாடு, கைகாட்டி பகுதிகளில் மக்கள் பேராதரவோடு பரப்புரைக் கூட்டங்கள் சிறப்புடன் நடைபெற்றன. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சொர்ண குமார், விசிக வழக்கறிஞர் அம்பேத்கர் வளவன், சிபிஜ முருகன் கலந்து கொண்டு உரையாற்றினர்....

வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ராஜ் பவன், வெல்கம் ஹோட்டல்களை முற்றுகையிட்டதாக தொடரப்பட்ட வழக்கு, எஸ்.வி.சேகர் வீட்டை முற்றுகையிட்ட வழக்கு, பெரியார் சிலையை உடைப்போம் என ஹெச்.ராஜா கூறியதற்காக சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் எதிர்வினையாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு, இலங்கை தமிழர் விவகாரத்தில் புத்த மட முற்றுகை வழக்கு என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த பல முக்கிய வழக்குகளில் இருந்து கழகத் தோழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் கழகத் தோழர்கள் சார்பாக ஆஜராகி விடுதலை பெற்றுத் தந்த வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, இளமாறன், ஜான் ஆகியோருக்கு பாராட்டு விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகத்தினர் மீதான வழக்குகளை திறம்பட நடத்திய வழக்கறிஞர்களை பாராட்டிப் புத்தகங்களை வழங்கினார்....

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

கோயம்­புத்­தூர் மாவட்­டம், ஆர்.எஸ்.புரத்­தில் உள்ள மாந­க­ராட்சி கலை­ய­ரங்­கத்­தில் திரா­விட இயக்­கத் தமி­ழர் பேரவை சார்­பில் சுய­ம­ரி­யாதை இயக்க நூற்­றாண்டு விழா­வை­யொட்டி இரண்டு நாட்­கள் நடை­பெ­றும் கருத்­த­ரங்­கம், கவி­ய­ரங்­கம், கலை நிகழ்ச்சி, பேரணி மற்­றும் பொது மாநாட்டை (26–04–2025) தொடங்கி வைத்து, விழா­வில் திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழு தலை­வரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் தொடக்க உரை­யாற்­றி­னார். இம்மாநாட்­டில் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்கள் பேசி­ய­தா­வது:– “அண்­ணன் சுபவீ அவர்­கள் இந்த மாநாட்­டிலே நீ கலந்­து­கொள்ள வேண்­டும் என்று கேட்­ட­போது… எத்­த­னையோ பெரு­மை­கள் நமக்கு கிடைக்­க­லாம், தேர்­த­லிலே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்­க­லாம், நம் உழைப்பை அங்­கீ­க­ரித்து நாம் சார்ந்­தி­ருக்­கும் இயக்­கங்­கள் நமக்கு பொறுப்­பு­கள் அளிக்­க­லாம். ஆனால் இதை­யெல்­லாம் விட பெரு­மை­யாக நான் நினைப்­பது, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் என்­னைப் பற்றி மேடை­யிலே குறிப்­பிட்­டுச் சொன்­னார்­கள். எங்­கள் வீட்­டில் எல்­லா­ரும் திமுக என்­றால் என் மகள் கனி­மொழி திரா­வி­டர் கழ­கத்­தைச்...

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

கோயம்­புத்­தூர் மாவட்­டம், ஆர்.எஸ்.புரத்­தில் உள்ள மாந­க­ராட்சி கலை­ய­ரங்­கத்­தில் திரா­விட இயக்­கத் தமி­ழர் பேரவை சார்­பில் சுய­ம­ரி­யாதை இயக்க நூற்­றாண்டு விழா­வை­யொட்டி இரண்டு நாட்­கள் நடை­பெ­றும் கருத்­த­ரங்­கம், கவி­ய­ரங்­கம், கலை நிகழ்ச்சி, பேரணி மற்­றும் பொது மாநாட்டை (26–04–2025) தொடங்கி வைத்து, விழா­வில் திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழு தலை­வரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் தொடக்க உரை­யாற்­றி­னார். இம்மாநாட்­டில் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்கள் பேசி­ய­தா­வது:– “அண்­ணன் சுபவீ அவர்­கள் இந்த மாநாட்­டிலே நீ கலந்­து­கொள்ள வேண்­டும் என்று கேட்­ட­போது… எத்­த­னையோ பெரு­மை­கள் நமக்கு கிடைக்­க­லாம், தேர்­த­லிலே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்­க­லாம், நம் உழைப்பை அங்­கீ­க­ரித்து நாம் சார்ந்­தி­ருக்­கும் இயக்­கங்­கள் நமக்கு பொறுப்­பு­கள் அளிக்­க­லாம். ஆனால் இதை­யெல்­லாம் விட பெரு­மை­யாக நான் நினைப்­பது, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் என்­னைப் பற்றி மேடை­யிலே குறிப்­பிட்­டுச் சொன்­னார்­கள். எங்­கள் வீட்­டில் எல்­லா­ரும் திமுக என்­றால் என் மகள் கனி­மொழி திரா­வி­டர் கழ­கத்­தைச்...

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. நீதிமன்ற அவமதிப்புச் சின்னமாக இங்கேயே இருக்கட்டும். உச்ச நீதிமன்றம் ஆளுநரின் மீது இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளது. சட்ட விரோதமாக முறைகேடாக செயல்பட்டுள்ளார் என்பது ஒன்று anti constitunal and erroneous, நல்ல எண்ணம் கொண்டவராக நடந்து கொள்ளவில்லை என்பது இரண்டு. The conduct exhibited on part of the Governor, as it clearly appears from the events that have transpired even during the course of the present litigation, has been lacking in bonafides. There have been clear instances where the Governor has failed in showing due deference and respect to the judgments and directions of this Court. In...

பெரியார் இயக்கத் தொண்டர்களைப் போல் உலக வரலாற்றில் எவரும் இல்லை- -உதயநிதி ஸ்டாலின்

பெரியார் இயக்கத் தொண்டர்களைப் போல் உலக வரலாற்றில் எவரும் இல்லை- -உதயநிதி ஸ்டாலின்

கோவையில் ஏப்ரல் 29-ல் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி பேசியதாவது: தந்தை பெரி­யா­ரைப் போல தன் கொள்கைக்காக உழைத்த தலை­வர் உலக வர­லாற்­றி­லேயே எங்கு தேடி­னா­லும் கிடைக்க மாட்­டார். பெரி­யார் இறந்து 51 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. ஆனால், தமிழ்­நாட்­டின் அர­சி­யலை இன்­றும் அவர்­தான் தீர்­மா­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் என்­றால், அது­தான் பெரி­யா­ரின் சிறப்பு. இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், இன்­றைக்கு உங்­க­ளின் அழைப்பை ஏற்று வந்து இருக்­கி­றேன். தி.மு.க–வின் இளைஞர் அணிச் செய­லா­ள­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது பெரு­மை­தான். நீங்­கள் எல்­லோ­ரும் சொன்­ன­தைப்­போல் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது­வும் பெரு­மை­தான். தமிழ்­நாட்­டின் துணை முத­ல­மைச்­ச­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது­வும் பெரு­மை­தான். ஆனால், அவை எல்­லா­வற்­றை­யும்­விட மிகப் பெரு­மை­யாக நான் கரு­து­வது என்­ன­வென்­றால் உண்­மை­யான பெரி­யா­ரின் கொள்­கைப் பேர­னாக இந்த மாநாட்­டிற்கு வந்­தி­ருக்­கி­றேன். அத­னால்­தான் பெரி­யா­ரின் தொண்­டர்­கள் மத்­தி­யில் பேசும்­பொ­ழுது எனக்கு தனி வித­மான...

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு எனும் முழக்கத்தோடு.. 25.04.2025 வெள்ளி மாலை 4.00 மணியளவில் சேலம் ரயில் நிலையத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார். கழக மாநில வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ராவண பிரபு, CPML மக்கள் விடுதலை ப.செல்வகுமார், உழைப்போர் இயக்கம் கண்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கலந்து கொண்டவர்கள்: அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், தலைமைக் குழு...

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

கோவை: காஞ்சி விஜயேந்திர சங்கராச்சாரி அரசியல் சட்டத்திற்கு எதிராக இன ஒதுக்கல் பேசியதைக் கண்டித்து கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு, கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் இரவிக்குமார், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் இளவேனில், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், Cpi ml ரெட் ஸ்டார் இனியவன், மக்கள் அதிகாரம் கணேஷ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிக்குமார் மற்றும் தோழமை அமைப்பினரும், திராவிடர் விடுதலைக் கழக மாநகரச் செயலாளர் வெங்கட், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாதவன், சதீஷ், ஸ்டாலின் ராஜா, மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், கௌதம், கதிரவன் கலந்து கொண்டனர். நாமக்கல்: குமாரபாளையம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாலை...

போலித் தமிழ்தேசியர்களுக்கு மறுப்பு! புரட்சிக் கவிஞர் ‘திராவிட’ எதிர்ப்பாளரா?

போலித் தமிழ்தேசியர்களுக்கு மறுப்பு! புரட்சிக் கவிஞர் ‘திராவிட’ எதிர்ப்பாளரா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியார் மறுத்து திராவிடம் பேசினார் என்று “விலை போகும் தமிழ்த்தேசியங்கள்” பிதற்றி வருகின்றன. அந்த புரட்டுக்களை மறுத்து மறைந்த திராவிட இயக்கப் பெருங்கவி தமிழேந்தி ‘பாசறை முரசு’ இதழுக்கு எழுதிய கட்டுரை புரட்சிக் கவிஞர் நினைவு நாளையொட்டி வெளியிடப்படுகிறது. “திராவிடர்’ என்ற சொல் இந்தியர் என்ற சொல்லுக்கு எதிரான பொருளிலும் அமைந்தது. மேலும் “பார்ப்பனர் அல்லாதார்’ என்ற சொல்லைப் புறந்தள்ளிய பெரியார், “நம்மைக் குறிக்கப் பார்ப்பனர் அல்லாதோர் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக் கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நாம் ஏன் அல்லதோர் ஆக வேண்டும்?” என்று விளக்கம் தந்தார். பின் நாட்களில் “திராவிடம்’ என்பதும் “தமிழகம்’ என்பதும் ஒன்றே என்று பெரியார் அரசியல் நிலைப்பாடு எடுத்தார். பெரியாரின் கருத்துக்கு இசைவாகவே ‘திராவிடம்’ என்பதும் ‘தமிழகம்’ என்பதும் ஒன்றே எனப் பாவேந்தர் பாட்டிசைத்தார். மன்னும் தமிழே திராவிடம் என்று திரிந்த தென்றால் மறுப்பவர் இல்லை திருத்தமிழம் எனும்...

சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

“அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களைக் குறிக்கும் கயிறுகள், டீ-சர்ட்டுகளை அணிய தடைவிதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும். கிருஷ்ணகிரி மாவட்டம் சொப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் வீரப்பன் உருவம் மற்றும் ஒரு அரசியல் கட்சியை அடையாளப்படுத்தும் டீ-சர்ட்டுகளையும் அணிந்து திரைப்படப் பாடலுக்கு நடனமாடி உள்ளனர். பெற்றோர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறிச் செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அரசு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. அந்த விழாக்கள் இலக்கியம் மற்றும் பண்பாடுகளைப் போற்றும் விதமாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக சாதியைப் பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் இடம் பெறக்கூடாது...

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா? என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில், மூடநம்பிக்கை மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. எனவே, சட்டம் கொண்டு வர முடியாது என்று பதில் அளித்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் பகுத்தறிவும் அறிவியலும் பாடத்திட்டத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.இந்திய அரசியல் சட்டம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலில் இருக்கிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது பேராசிரியர் நன்னன் தலைமையில் ‘மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். ‘பகுத்தறிவு கலை இலக்கிய மன்றம்’ திமுகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு ஏற்கெனவே ராமன் சமூக நீதியின் சின்னம் என்று பேசிய அமைச்சர் ரகுபதி இப்போது மூடநம்பிக்கைகளை...

உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!

உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் புலே. இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தது படக்குழு. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியம், படத்தின் பல காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து உரையாடல்களை நீக்க வலியுறுத்தியுள்ளது. இதனால் திரைப்படம் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குத் திரையிடத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மையமாக, படத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்டார்கள், ‘மஹர், மாங், பேஷ்வா என சாதிப் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது. மூன்றாயிரம் ஆண்டுகள் அடிமைத்தனம் என்றெல்லாம் குறிப்பிடக்கூடாது’ எனப் பல இடங்களில் உரையாடல்களை நீக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்கள். படத்தின், முன்னோட்டக் காட்சிகளில் பார்ப்பன ஒடுக்குமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், திரைப்பட வாரியத்தின் இந்தப் போக்கு குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் “இந்த சாதிய, இன வெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார். “எது அவர்களைத் தொந்தரவு...

மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ‘போப் பிரான்சிஸ்’!

மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ‘போப் பிரான்சிஸ்’!

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் நீண்ட மருத்துவப் போராட்டத்திற்கு பிறகு விடைபெற்றுக்கொண்டார். நம்மை பொறுத்தவரை மதங்கள் மனித சமூகத்துக்கு கேடு விளைவிப்பவைதான். மனித சமூகத்தில் சுரண்டலுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் கலவரங்களுக்கும் ஊற்றுக் கண்களாகவே மதங்கள் இருக்கின்றன. கடவுளை விட மதங்கள்தான்‌ ஆபத்தானவை என்று பெரியார் கூறினார். அனைத்துக் கடவுளும் ஒன்றுதான்‌ என்பதை மதவாதிகள் ஏற்றுக்கொள்ளவார்கள். அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மதத்தின் பெயரால் சிந்தப்பட்ட குருதிகளை வரலாறுகள் உணர்த்திக்கொண்டு இருக்கின்றன. ஆனாலும் மதங்களின் நாடுகள் உலக வரைபடத்தில் இருக்கவே செய்கின்றன. காலத்தின் மாற்றங்களை கருத்தில்கொள்ள மறுத்து பிடிவாதம் காட்டும் மதக் கருத்தியல்வாதிகள் நிறைந்த உலகில் போப் பிரான்சிஸ் சீர்த்திருத்தங்களுக்கு முகம் கொடுத்து இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 2019-ல் ஐக்கிய அரபு அமீரகம் சென்று, கத்தோலிக்க-இஸ்லாமிய உறவுகளை வலுப்படுத்தினார். ‘திருச்சபை ஏழைகளுக்கானது’ என்ற கொள்கையை வலியுறுத்தி, உலகளாவிய ஏழ்மை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்....

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

பெரியார் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய பார்ப்பனக் கைக்கூலிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி, பார்ப்பன சங்கராச்சாரிகளின் பார்ப்பன முகமூடியைக் கிழித்துக் காட்டியது. பெரியார் மீது கைவைத்தால் சங்கரச்சாரிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் களம் இறங்கியது. குறிப்பாக சங்கரமடம் உள்ள காஞ்சிபுரத்தில் 21.04.2025 மாலை 5 மணியளவில் பேருந்து நிலையம் அருகே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனி பேருந்தில் காஞ்சிபுரம் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். காஞ்சி விஜயேந்திரன் கடந்த ஜனவரி 19 அன்று பெங்களூரில் ‘பிராமணர்கள்’ மாநாட்டில் இந்து சமூகத்தில் சூத்திர, பஞ்சமர்களிடம் இருந்து பிராமணர்கள் விலகி தங்களது மேலாண்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற இன ஒதுக்கல் கருத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசி இருந்தார். சூத்திர, பஞ்சமர்கள் அடிமைப்பட்டவர்கள் என்ற மனுதர்மம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு உயிரூட்டுவதே அவரது பேச்சின்...

மகளிர் ஒன்று கூடல்!

மகளிர் ஒன்று கூடல்!

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம் 30.03.2025 ஞாயிறு காலை 11.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை ஏற்காடு JP ரெசிடென்சில் சிறப்பாக நடைபெற்றது. கடவுள் மறுப்பு வாசகம் திருப்பூர் யாழினி கூற கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் சுதா தலைமை வகித்தார். சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் திவ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்களும் தோழர்களிடையே கருத்துரையாற்றினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு குடும்பங்களில் கடைபிடிக்கப்படும் மூடநம்பிக்கையால் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு வளர்கிறது, பெண்கல்வியால் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தோழர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இறுதியாக சேலம்...

பள்ளிபாளையம் தோழர்கள் மீதான வழக்குகளும் ரத்து!

பள்ளிபாளையம் தோழர்கள் மீதான வழக்குகளும் ரத்து!

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த மனிதத் தன்மையற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்றைய அதிமுக அரசு தோழர்கள் மீது பொய் வழக்குகளை போட்டது. அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி விஜேந்திரனை கண்டித்து கொடும்பாவி எரிப்புப் போராட்டம் பள்ளிபாளையத்தில் நடத்தப்பட்டது. திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரண்டு வழக்குகளிலும் கழகத் தோழர்கள் சரவணன், முத்துப்பாண்டி, கோபி, தியாகு, அஜ்மீர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர் குமாரபாளையம் வழக்கறிஞர் கார்த்தி அவர்கள் சிறப்பாக வாதாடி தோழர்களை விடுவித்தார். பெரியார் முழக்கம் 17042025இதழ்

பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?  தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!

பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்? தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!

சென்னை: 18/3/25 செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், உத்திரமேரூர் பேருந்து நிலையம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம், செய்யாறு – ஆரணி கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கருத்துரையாற்றிய தோழர்கள்: இரா. உமாபதி, ரவிபாரதி, சுகுமார், ம.கி. எட்வின் பிரபாகரன், காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு), அருண் கோமதி, திலகவதி (மக்கள் அதிகாரம்) ஆகியோர். பொன்ராஜ் – வீரமணி – கார்மேகம் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அமீன் (தமுமுக), அ.வெ.முரளி (திக), ஆதித்ய கரிகாலன் ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆதித்ய கரிகாலன் தங்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். சுகுமாறன், குமார், சூர்யா, கோபி, இரண்யா, வீரா, அசோக், முரளி, அருண் கோமதி, அருண் (இளைஞரணி) ஆகியோர் கலந்து கொண்டனர். 19/3/25 மதுராந்தகம் பேருந்து நிலையம், சோத்துப்பாக்கம் சந்திப்பு, திண்டிவனம் காந்தி சிலை, மயிலம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சென்னை அணியின் தெருமுனைக்...

“இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே”

“இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே”

அம்பேத்கரை உரையாற்ற அழைத்திருந்த ஜாத் பட்தோடக் மண்டல் அமைப்பில் 1920-ஆம் ஆண்டுகளில் துணைத் தலைவராக இருந்தவர் பெரியார். அப்போதும் பெரியாரை ‘நாத்திகர்’, ‘இந்து விரோதி’.’பார்ப்பன எதிர்ப்பாளர்’ என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் பெரியார் துணைத் தலைவர் பதவியில் நீட்டிக்கப்பட்டவில்லை. அதே அமைப்புதான் 1936-இல் அம்பேத்கரை ஜாதி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை ஏற்க அழைத்து, அவரது உரையை மாற்றியமைக்க வற்புறுத்தி அம்பேத்கர் மறுத்த நிலையில் மாநாட்டையே நிறுத்தியது. குடிஅரசில் பதிவுசெய்த அம்பேத்கர் உரையை ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற தலைப்பில் 4 அணா விலையில் நூலாக வெளியிட்டார் பெரியார். அம்பேத்கரின் உரை குறித்து காந்தியும் தனது ‘அரிஜன்’ நாளேட்டில் விமர்சித்து எழுதினார். அம்பேத்கர் எழுப்பிய வாதங்களுக்கு எந்த பதிலும் கூறாத காந்தி. “ஒரு மதத்தை அதன் மோசமான உதாரணங்களைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. அது உருவாக்கிய மிகச் சிறந்த உதாரணங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும்” என்பதே காந்தியாரின் பதிலாக இருந்தது....

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிவாளம்!

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிவாளம்!

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அரசியலமைப்புத் தலைவராக பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளின்படியே நடக்க வேண்டும். அவர்களுக்கென்று தனி அதிகாரம் உள்ளதாகக் கருதக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் 415 பக்க தீர்ப்பில், ஆளுநர்களின் எதேச்சதிகாரப் போக்கிற்குக் கடிவாளம் போடும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தீர்ப்பின் நகல் அனைத்து மாநில உயர்நீதிமன்றங்கள், ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கும் சில முக்கிய அறிவுரைகள் இத்தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புப் பிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களை பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு காலதாமதம் ஏற்பட்டால் அந்த மசோதா கொண்டு வந்ததன் நோக்கம் நீர்த்துபோகிவிடும். பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவர் தேவையில்லாமல் காலதாமதம் செய்யக்கூடாது. எனவே, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை...

“குரியன் ஜோசப்” குழு காலத்தின் தேவை!

“குரியன் ஜோசப்” குழு காலத்தின் தேவை!

ஒன்றிய பாஜக ஆட்சி இந்திய அரசியல் அமைப்புக்குள் செயல்படும் மாநிலங்களின் அடையாளங்களை சிதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. உரிமைகளை பறிப்பதற்கான முறைகேடான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. இந்து ராஷ்டிரம் உருவாக்க மாநிலங்களின் மொழி மற்றும் கலாச்சாரங்கள் அவர்களுக்கு பெரும் தடையாக வந்து நிற்கின்றன. தமிழ்நாடு அரசு குறிவைத்து நசுக்கப்படுகிறது. இந்து ராஷ்டிராவை திராவிட மாடல் முற்றாக எதிர்த்து நிற்பதே இதற்குக் காரணம். ஆளுநர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு தந்த நெருக்கடிகளை சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார் தமிழ்நாடு முதல்வர். இது மாநிலங்களின் வரலாற்றில் நிலைப்பெற்று நிற்கும் சாதனை. இதைத் தொடர்ந்து ஒன்றிய ஆட்சியின் உரிமை பறிப்பு அடாவடிகளை எதிர்கொள்ள முன்னாள் உச்சநீதிமன்றம் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒன்றிய ஆட்சி சட்டத்தை எப்படி முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்பது குறித்தும் மாநில உரிமைகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளையும் இந்தக்...

சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன்  கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!

சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன் கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!

சென்னை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, 14-04-25 காலை 9:30 மணியளவில், அடையார் அம்பேத்கர் மணி மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 10:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் மயிலாப்பூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது… மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். தென்சென்னை காலை 8 மணிக்கு, சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு, தோழர்கள் மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்துமதச் சாயம் பூசும் அவதூறுகளுக்கு மறுப்பு” நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வை திவிக தென்சென்னை மாவட்ட...

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

சேலம்: 18/03/2025 வீரகனூர் பேருந்து நிலையம், பெரம்பலூர் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைகணபதி, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் சுதாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை தாமோதரன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை...

சட்டங்களே வேண்டாம்; சாஸ்திரங்களே போதும்! – காஞ்சி சங்கராச்சாரியின் நச்சுக் கருத்துக்கள்(2)

சட்டங்களே வேண்டாம்; சாஸ்திரங்களே போதும்! – காஞ்சி சங்கராச்சாரியின் நச்சுக் கருத்துக்கள்(2)

“பெண்களுக்கு சொத்துரிமை கூடாது” பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினால் ஸ்த்ரி தர்மமே பாழாகிவிடும்அதற்கு வர இருந்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னவர் காஞ்சி சீனியர் சங்கராச்சாரி. நாடாளுமன்றத்தில் நேரு பெண்களுக்கு சொத்துரிமை தரும் மசோதாவை கொண்டு வந்த போது அதை தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகளில் ஈடுப்பட்டவர்‌ சங்கராச்சாரி. இது குறித்து அக்னி கோத்திரம்” ராமானுஜ தாத்தாச்சாரியார் இந்து மதம் எங்கே போகிறது? நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “இதப்பார்த்தீரா.. ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயிடுவா. அபாண்டமா, அபச்சாரமா போயிடும்” -என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகாபெரியவர். நான் சிரித்தபடி பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான். ஸ்வாமி… என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்! -இந்த பதிலைக் கேட்டதும். “அசட்டுத்தனமா...

சென்னையில் மார்க்ஸ் சிலை!

சென்னையில் மார்க்ஸ் சிலை!

தமிழ்நாட்டில் காரல் மார்க்ஸ் சிலை திறக்கப்படும் என்று திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார் சோவியத் சோஷலிச ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு புரட்சிகளை உறுதியாக அடக்கியவர் ஸ்டாலின், பெரியார் இயக்கம் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவை உறுதியாக ஆதரித்தது அதன் நினைவாகத்தான் கலைஞர் தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார் சோவியத் பயணம் மேற்கொண்ட பெரியார், ஸ்டாலின் பங்கேற்ற மே தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலகட்டத்தில் தான் ஸ்டாலின் அதிபர் பதவிக்கு வந்தார் எதிர் புரட்சிகளை முறியடித்து சோவியத்தில் சோசியலிசத்தை உறுதிப்படுத்திய ஸ்டாலின் பெயரை த் தாங்கி நிற்கும் உலகின் ஒரே முதல்வர் திராவிட ஆட்சியின் முதல்வர் தான் : காரல் மார்க்சின் சிலையை திறந்து வைக்கும் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது மிகச் சிறப்பு; மிகப் பொருத்தம். – விடுதலை இராசேந்திரன் பெரியார் முழக்கம் 10042025இதழ்

வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. அவற்றினால் எட்டப்பட்ட பலன்கள் என்னவென்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சி, 9.69% என அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட 8% வளர்ச்சி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆய்வறிக்கையில் உத்தேசிக்கப்பட்ட 9.3% வளர்ச்சி ஆகியவற்றை விடவும் அதிகமான வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு எட்டியிராத அதிகபட்ச வளர்ச்சி என்பது மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை இந்த ஆண்டு பதிவு செய்திருப்பது தமிழ்நாடுதான். குறிப்பாக சேவைகள் துறை 12.7%, இரண்டாம் நிலை துறைகள் 9% வளர்ச்சி கண்டுள்ளன. ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க...

வீழ்த்தப்பட்டது ரவி அல்ல, அமித்ஷா!

வீழ்த்தப்பட்டது ரவி அல்ல, அமித்ஷா!

மாநில அரசை விருப்பம் போல கலைத்து விளையாடிய ஒன்றிய அரசுக்கு, 1994-இல் `எஸ்.ஆர்.பொம்மை வழக்கு’ கடிவாளம் போட்டதைப் போல, ஆளுநர்களின் எதேச்சிகாரப் போக்குக்குக் கடிவாளம் போடும் தீர்ப்பை தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு போராடி வென்றிருக்கிறது. பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க. அரசு தொடர்ந்த வழக்கில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை, மாநில அரசைப் பின்பற்றித்தான் ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாகச் செயல்படக்கூடாது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார்” என்று தீர்ப்பிலேயே கண்டித்துள்ளது. மேலும், “அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது”...

ம.பி.யில்  பார்ப்பனரின் ‘இன ஒதுக்கல்’ சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

ம.பி.யில் பார்ப்பனரின் ‘இன ஒதுக்கல்’ சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

சனாதன இந்துக்களுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனி கிராமம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அனுமார் கோயில் பார்ப்பன அர்ச்சகர். 1000 சனாதன இந்துக்கள் இந்த கிராமத்தில் குடியேறுகிறார்கள். சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த கிராமத்தில் நுழைய தடை விதிக்கப்படும். அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்த தனிக் குடியிருப்புக்கு மாநில பாஜக ஆட்சி பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்துக்கள் மட்டும் வாழும் முதல் கிராமம் ம.பி. பாகேஷ்வர் அனுமர் கோயில் சார்பில் அமைகிறது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் கன்ஞ் மாவட்டத்தின் சத்தர்பூரில் உள்ளது கதா கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ‘பாகேஷ்வர் தாம்’ எனும் அனுமர் கோயில் உள்ளது. இதன் தலைமை அர்ச்சகர் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, பாகேஷ்வர் தாம் ஜன் சேவா சமிதி என்ற சமூக நல அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் கோயிலுக்கு அருகில் உள்ள பரந்த பகுதியில் ஒரு இந்து கிராமத்தை உருவாக்க இதற்காக...

“சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை வேண்டும்     தமிழ்நாடு முதல்வருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை !”

“சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை வேண்டும் தமிழ்நாடு முதல்வருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை !”

இது குறித்து கழகத் தலைவர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பின் வழியாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன என்பது குறித்தும், ஒப்புதல் வழங்குவதற்கான கால வரையறை குறித்தும் இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்தத் தீர்ப்பினால் மும்மொழிக் கொள்கை ஆனாலும், நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை ஆனாலும் வழிகாட்டி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, அதன் செயல்திறன் மிக்க முதலமைச்சர் இந்த வகையிலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக ஒன்றிய ஆளுங்கட்சி ஆளாத மாநிலங்களுக்கு ஒரு புதிய தெம்பினை ஊட்டி இருக்கிறார். அதற்காக நாம் தமிழ்நாடு முதலமைச்சரை மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறோம். மேலும் இந்தத் தீர்ப்பு ஒப்புதல் வழங்கிய சட்ட த்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதல்வரே ஆகிவிடுகிறார்...

மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –

மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –

“பார்ப்பன‌ உயர் ஜாதி சுரண்டலுக்கு வழிவகுக்கும் ஜாதி அமைப்பு. இதுகுறித்து நான் ஆழமாக ஆராய்ந்தேன். இந்த நாட்டில் பார்ப்பன உயர் ஜாதியில் பிறக்காத ஏனையோர் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கின்றனர்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பாட்னாவில் நடந்த ‘அரசியல் சட்டத்தை காப்போம்’ மாநாட்டில் ராகுல் காந்தி பேசினார். மூன்றாவது முறையாக பீகார் வந்துள்ளார் ராகுல் காந்தி, “காந்தியடிகள் உண்மையின் சோதனை நூலை எழுதினார். மோடி பொய்களின் சோதனையை எழுதிக் கொண்டிருக்கிறார்” என்று கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாகத் தாக்கினார். மேலும் அவர் பேசியதாவது: அரசியல் சட்டம் சாவர்க்கரின் சிந்தனை அல்ல; மாபெரும் தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனையைக் கொண்டது. இப்போது நடக்கும் ஆட்சி பார்ப்பன உயர்ஜாதி நலனுக்காகவே நடக்கிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிறப்படுத்தப்பட்ட மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்த நாட்டில் நீங்கள் பார்ப்பனராகவோ,‌‌ உயர் ஜாதியினராகவோ பிறக்காவிட்டால் இரண்டாம்...

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

விழுப்புரம்: 17/03/2025 (திங்கள்) கீழ்பெண்ணாத்தூர் கலைஞர் பேருந்து நிலையம், கடலாடிகுளம் பேருந்து நிலையம், செஞ்சி பேருந்து நிலையம், அப்பம்பட்டு மசூதி அருகில் நடைபெற்றது. காலை உணவு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் பொன்.சுப்ரமணி வழங்கினார். நம் பிரச்சார பயணத்தின் தலைப்பான பெரியார் ஏன் எதிரிகளை பதறவைக்கிறார் என்ற செய்தியை அவர்களின் சிந்தனைப் பலகையில் 17/3/2025 அன்றைய செய்தியாக எழுதி வரவேற்றனர், மேலும் ராமநாதன்,கோதண்டராமன், ஆதிமூலம், தமிழ் மக்கள் கட்சியை சார்ந்த முகிலன் அம்பேத்கர் மக்கள் கட்சி விழுப்புரம் மாவட்ட செயலாளர் சு.மழைமேனி பாண்டியன், பகுத்தறிவு கழகத்தை சார்ந்த துரை.திருநாவுக்கரசு, பேராசிரியர். ஜாக்குலின், வி.சி.க. விழுப்புரம் மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், திராவிடர் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கோபண்ணா, பேராசிரியர் நந்தகுமார், தமுமுக அலிஜான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் செயலாளர் ராசநாயகம், க.ராமர், பூ.ஆ இளையரசன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர்...