திராவிட மாடல் ஆட்சியும் ஆல்பர்ட்டா மாகாணமும்!

கனடாவில் நடந்து முடிந்த தேர்தலில் நான்காவது முறையாக லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனடாவில் கூட்டாட்சி அரசியல் அமைப்பு என்ற நடைமுறை இருக்கிறது. ஆல்பர்ட்டா என்ற மாநிலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி தான் மக்கள் செல்வாக்கோடு ஆட்சியில் இருக்கிறது.

கனடா கூட்டாட்சி ஆட்சியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று ஆல்பர்ட்டா மாநில ஆட்சி குற்றம் சாட்சி வருகிறது. அதிக வரி செலுத்தும் மாநிலமாகவும், வளர்ச்சி திட்டங்களில் முதலிடம் பெற்ற மாநிலம் ஆல்பர்ட்டா தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து மாநில மக்களும் மாநில ஆட்சியும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

கன்சர் வேட்டிவ் வெற்றி பெற்ற அடுத்த நாளே ஆல்பர்ட்டா சட்டமன்றம் கூடி மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது. கனடா கூட்டாட்சி அமைப்பிலிருந்து ஆல்பர்ட்டா தனியாக பிரிந்து செல்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது. ஆல்பர்டடா மாநில பிரிமியர் ஸ்மித் மார்கார்னி இவ்வாறு கூறியுள்ளார்: ஆல்பர்ட்டா மக்கள் பெருமைமிக்க கனடியர்கள் நாங்கள் இந்த நாடு ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கவே விரும்புகிறோம். எங்கள் தொழில்கள் அச்சுறுத்தப்படுவதையும், எங்கள் நிலங்கள் பறிக்கப்படுவதையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். வெற்று வார்த்தைகள் எங்களுக்குத் தேவையில்லை அர்த்தமுள்ள செயல்பாடுகளே தேவை என்று அவர் அறிவித்துள்ளார். தொடர்ந்து ஆல்பர்ட்டா மக்களை அடுத்த கட்ட போராட்டங்களை நோக்கி நகர்த்துவதற்கு தயார் செய்ய மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய ஆட்சிக்கு எதிராக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் உரிமைப் போராட்டம் தான், ஆல்பர்ட்டா மக்களுக்கான‌ உரிமைப் போராட்டத்தினை அந்த மாநிலமும் நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட மாநில சுயாட்சியை திராவிட மாடல் ஆட்சி கோருகிறது. ஆல்பர்ட்டாவும் அதேபோல் தங்கள் மாநிலத்தில் வாக்கெடுப்பு நடத்தி கனடாவோடு இணைந்து இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற கோரிக்கையை சட்டத்தின் வாயிலாக எழுப்பி இருக்கிறது.
பெரியார் முழக்கம் 08052025இதழ்

You may also like...