Category: பெரியார் முழக்கம் 2013

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

ட           திருநாவலூர் காவல் நிலைய போலீஸ்காரர் ரமேஷ் பாபு, தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சேகுவேரா படத்தை ஒட்டி வைத்ததற்காக காவல் நிலைய ஆய்வாளரால் தண்டிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டார்.          – செய்தி சேகுவேரா படத்துக்கு பதிலாக இவர் ஏதாவது கடவுள் படத்தை ஒட்டியிருந்தால் எந்த நடவடிக்கையும் வந்திருக்காது. அந்தக் கடவுள் படத்தை அகற்றச் சொன்ன ஆய்வாளர் மீது தான் நடவடிக்கை பாய்ந்திருக்கும். இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற நாடாம்! ட           சமூக சீர்திருத்தமும் அறிவியல் விழிப்புணர்வும் சமூகத் தில் நடந்தால் தான் மராட்டியத்தில் நிறைவேற்றப் பட்ட மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் வெற்றி பெற முடியும்.                – ‘இந்து’ ஏடு தலையங்கம் மிக்க மகிழ்ச்சி. இதே கருத்தை தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரங்களுக்கு அரசு தடை போடும்போது ‘இந்து’ ஏடு எழுதாமல் மவுனம் காப்பது தான் நமது பகுத்தறிவுக்கு புலப்படாமல் இருக்கிறது! ட           தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான...

விடுமுறை நாளில் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நடத்திய விசாரணை

விடுமுறை நாளில் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நடத்திய விசாரணை

பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பும் உரிமை, நாத்திகர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு உண்டு என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கைக்கு எதிரான பேரணி சமூகப் பதட்டத்தையும் மத மோதல்களையும் உருவாக்கும் என்று அரசு முன் வைத்த வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. திராவிடர் விடுதலைக் கழகம் செப்டம்பர் முதல் தேதி மாலை மயிலை அம்பேத்கர் பாலத்திலிருந்து வி.எம். சாலை வரை நாத்திகர் விழாவையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்த காவல்துறையிடம் கேட்டது. மாநகர காவல்துறை ஆணையர் மறுத்து விட்டார். கழக சார்பில் தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.கே. சசீதரன் முன் ஆகஸ்டு 30 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. கழக சார்பில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வாதாடினார். அரசியல் சட்டத்தில் ஒரு குடிமகனுக்கு அடிப்படை கடமையாக அறிவியல் மனப் பான்மையை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை எடுத்துக்...

தலையங்கம் கோயிலில் முடங்கும்  ‘கல் முதலாளி’களின் தங்கம்!

தலையங்கம் கோயிலில் முடங்கும் ‘கல் முதலாளி’களின் தங்கம்!

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரிகட்டுவதற்கு கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற கருத்தை முன் வைப்பதற்கே பலரும் அஞ்சுகிறார்கள். பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணக்கார ‘கல் முதலாளி’களின் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தில் கை வைத்தால் பார்ப்பன ஆதிக்கத்தில் கை வைத்ததாகவே பார்ப்பனர்கள் மிரட்டுகிறார்கள். பெட்ரோலியப் பொருட்களுக்கும் தங்கத்துக்கும் இறக்குமதி செய்ய பெருமளவில் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் நிலையில் டாலர் பற்றாக்குறையை சமாளிக்க கோயில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை முன் வைக்கப்படுகிறது. முடங்கிக் கிடக்கும் தங்க நகைகளை ரிசர்வ் வங்கி வாங்கி, தங்கக் கட்டிகளாக உருக்கி, இருப்பில் வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த யோசனை. உலகிலேயே அதிகமான தங்கக் கட்டிகளை வைத்துள்ள நாடு அமெரிக்கா. இரண்டாவது இந்தியா. அமெரிக்காவின் தங்கம் அரசுக் காப்பகத்தில் அரசு சொத்தாக உள்ளது....

தலைநகரில் மாநாடு போல் நடந்த நாத்திகர் விழா தடை தகர்த்து பேரணி வெற்றி நடை

தலைநகரில் மாநாடு போல் நடந்த நாத்திகர் விழா தடை தகர்த்து பேரணி வெற்றி நடை

திராவிடர் விடுதலை கழக நாத்திகர் விழா- மூடநம்பிக்கை எதிர்ப்புப் பேரணி எழுச்சியோடு பறை இசை முழங்க, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிலிருந்து செப். 1, மாலை 4.30 மணியளவில் பகுத்தறிவு முழக்கங்களுடன் புறப் பட்டது. கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தின சாமி தலைமையேற்க, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேரணியின் நோக்கத்தை செய்தியாளர்களிடம் விளக்கினார். “பகுத்தறிவுப் பரப்புரை நடத்துவதற்கும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்துவதற்கும் சட்டப்படியே உரிமை உண்டு என்பதை நிலை நாட்டி நடத்தப்படுகிறது  இப்பேரணி. மராட்டிய அரசு கொண்டு வந்ததைப்போல தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியும், நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கோயிலில் குவிந்து கிடக்கும் தங்கத்தை அரசு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்தப் பேரணி நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார். 500க்கும் மேற்பட்ட பெண், ஆண், இளைஞர்கள்  பகுத்தறிவு...

நாத்திகர் பேரணி முழக்கங்கள்

நாத்திகர் பேரணி முழக்கங்கள்

செப்.1 அன்று நடந்த சென்னை நாத்திகர்  பேரணியில் எழுப்பிய முழக்கங்கள். நம்பாதீங்க! நம்பாதீங்க! சாமியார்  கூட்டத்தை நம்பாதீங்க! நாட்டு நடப்ப பாருங்க! ஏமாத்துறான் பாருங்க! நம்பி வந்த பெண்களை கெடுக்கிறானுக பாருங்க! ஏமாத்துறதைப் பாருங்க! ஜெயிலுக்குள்ளே பெயில் கேட்டு கம்பி எண்ணுறான் பாருங்க! நம்பாதீங்க! நம்பாதீங்க! சோதிடத்தை நம்பாதீங்க! நல்ல நேரம் பார்த்து சோதிடத்தை பார்த்து நடத்தி வச்ச கல்லாணம் ரத்து கேட்குது பாருங்க! பொய்யுங்க! பொய்யுங்க! சோதிடம் எல்லாம்  பொய்யுங்க! நல்ல நேரம் கெட்ட நேரம் நல்லவனுக்கு வேணாங்க! ராகு காலம், எமகண்டம் எந்த நாட்டில் இருக்குங்க! பொய்யப்பா! பொய்யப்பா! வாஸ்து சாஸ்திரம் பொய்யப்பா! புயலடிச்சி பூகம்பம் வந்தா வாஸ்து வீடு இடியாதா? வங்கிக் கடன் கட்டாட்டி வாஸ்து வீடு ஏலம் போகாதா? தமிழக அரசே! தமிழக அரசே! தடை செய்! தடை செய்! மூடநம்பிக்கைகளை தடை செய்! சட்டமியற்று சட்டமியற்று! மூடதனத்தை ஒழித்திடவே! சட்டம் இயற்று! சட்டம் இயற்று!...

இந்து அறநிலையத் துறையின் அடாவடி உத்தரவு

இந்து அறநிலையத் துறையின் அடாவடி உத்தரவு

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாம்.  அதன்படி இனி வரும் காலங்களில் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்கள், கோயிலை சுற்றி யுள்ள வளாகத்தில் நாத்திகர்களுக்கும், இந்து சமய வளர்ச்சிக்கு தொடர்பில்லாத கொள்கை உடையவர்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது என்றும், மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங்களுக்கும் இது பொருந்தும் என்றும், கோயில் மண்ட பங்கள், பக்தி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறதாம். வேதத்தை எதிர்ப்பவர்கள்தான் நாத்தி கர்களே தவிர, கடவுளை எதிர்ப்பவர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார், இறந்து போன மூத்த காஞ்சி சங்கராச்சாரி. சார் வாகம், சமணம் என்கிற கடவுள் மறுப்பு சிந்தனைகளும் இந்து மரபில் இருந்திருக் கிறது. வேதத்தை யும் வடமொழியையும் மறுத்த மறைமலையடிகள் போன்ற சைவர்களும் சங்கராச்சாரி கூற்றுப்படி நாத்திகர்கள் தான். அதேபோல் ‘இந்து’க்களில் பெரும் பாலோர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள். பல கிராமக்...

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலையங்கம் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு எழுதியுள்ள தலையங்கத்தின் தமிழாக்கம்: பகுத்தறிவு கொள்கைகளுக்காக மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கம் நடத்திய நரேந்திர தபோல்கர், மதத் தீவிரவாதி களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்த இரண்டு வாரங் களுக்குள்ளேயே அசாம் மாநிலத்தில் கோச்ராஜ்கர் மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் அக்கிராம மக்கள் பேய், பில்லி சூன்யம் வைத்ததாக சந்தேகித்து இரண்டு பேரை கொலை செய்து விட்டனர். தபோல்கர் சுட்டுக் கொல்லப் பட்டதால், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வரும் கட்டா யத்துக்கு மகாராஷ்டிர அரசு உள்ளானது. அதுபோலவே அசாம் முதல்வர் தருண் கோகோயும் பேய்-பில்லி சூன்யத்தை குற்றமாக்கும் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக உறுதியளித்துள்ளார். ஆனாலும், இதுபோன்ற குற்றம் அசாம் மாநிலத்தில் மட்டும் நிகழவில்லை. சமு தாயத்தில் பரவியுள்ள இந்த மூடநம்பிக்கை நோயை ஒழிக்க, மாநில அரசுகளுடன் ஆலோசித்து மத்திய அரசே, ஒரு மாதிரி சட்டத்தை தயாரிக்க வேண்டும். ‘பேய் பில்லி சூன்யம்’ வைத்தவர்கள் என்று முத்திரை குத்தி,...

தலையங்கம் ரிசர்வ் வங்கி கடிதமும்  பார்ப்பன அலறலும்!

தலையங்கம் ரிசர்வ் வங்கி கடிதமும் பார்ப்பன அலறலும்!

கேரளத்திலுள்ள குருவாயூர் கிருஷ்ணன், பத்மநாபசாமி உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான தங்கம் முடங்கிக் கிடக்கிறது. நாட்டின் அன்னிய செலாவணிக்கு பதிலாக தங்கத்தின் கையிருப்பைக் காட்டினால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீறும் வாய்ப்புகள் உண்டு என்ற நிலையில் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கியின் கணக்கில்  கொண்டு வர முடியும். அந்தத் தங்கத்தை ஒரு சில வருடங்களில் மீண்டும் கோயிலுக்கு எடுத்துக் கொள்ளவும் முடியும். ஆனாலும், நாட்டின் பொருளாதாரத்தைவிட கோயில்களில் ‘கடவுள்களிடம்’ முடங்கிக் கிடக்கும் தங்கத்தில் கை வைக்கக் கூடாது என்று பார்ப்பன சக்திகள் அலறுகின்றன. அண்மையில் இந்தியன் ரிசர்வ் வங்கி கேரளாவிலுள்ள கோயில்களில் தங்கத்தின் இருப்பு குறித்த விவரத்தைக் கேட்டு கடிதம் எழுதியது. உடனே பார்ப்பன அமைப்புகள் அலறத் தொடங்கிவிட்டன. ஒரு கடிதம் எழுதி விவரங்களைக் கேட்கும் உரிமைகூட இல்லை என்கிறார்கள்.  கடிதத்துக்கு பதிலே எழுதக் கூடாது என்று குருவாயூர் கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தை சில இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளதாம். திருவாங்கூர் தேவஸ்தானமும்,...

செப். 17 – தமிழினத்தின்  மான மீட்பு நாள்!

செப். 17 – தமிழினத்தின் மான மீட்பு நாள்!

நாடாளுமன்றத்துக்கே போகாமல் அரசியல் சட்டத்தை முதன்முதலாக திருத்த வைத்து, கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தந்த தலைவர் – பெரியார் 10 வயது பார்ப்பன சிறுவன் – 60 வயது, 70 வயது பார்ப்பனரல்லாத மக்களை ‘அவன்’, ‘இவன்’, ‘அவள்-இவள்’ என்று நாக் கூசாமல் அழைத்து வந்த அவமானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் – பெரியார் தமிழ்நாட்டில் ஜாதி சங்கத் தலைவர்கள்கூட பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதில்லை. வேறு மாநிலங்களில் ஜாதி ஒழிப்புப் பேசும் புரட்சி இயக்கங்களின் தலைவர்கள் பெயரில் இன்னும் ஜாதி ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரைப் போடுவதையே வழக்கமாக்கியிருந்த தமிழகத்தில் ஜாதிப் பெயரை வெட்டி எறிய வைத்தது – பெரியார் பார்ப்பான் மந்திரம் ஓதி, பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தி வந்த புரோகித திருமணத்துக்கு மாற்றாக சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி அதை சட்டமாக்கச் செய்தவர் – பெரியார் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எழுத்து...

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க கோயில் தங்கத்தைப் பயன்படுத்துக! செப்.13 இல் கழகம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க கோயில் தங்கத்தைப் பயன்படுத்துக! செப்.13 இல் கழகம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்

திவாலாகிக் கொண்டிருக்கும் இந்தியாவின் பொருளாதார சீர்கேடுகளைக் கண்டித்தும் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி யும் திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டங்களை செப்.13 ஆம் தேதி நடத்துகிறது. இது குறித்து கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கை: நோயைப் பரப்பியவர்களே, இப்போது நோய்க்கு சிகிச்சை தேடுகிறார்கள்! உலகமயமாக்கல் – புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டு வந்தது யார்? நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச நாடுகளின் நிலைக்கு உயர்த்தப் போகிறோம் என்று ‘டமாரம்’ அடித்தது யார்? காங்கிரஸ் ஆட்சிதான். ஆமாம்; ஆமாம்; நாங்களும் அதைத்தான் ஆதரிக்கிறோம் என்று பின் தொடர்ந்ததும் பா.ஜ.க. ஆட்சிதான்! என்ன நடந்தது? உள்நாட்டு தொழில் வளர்ச்சி முடங்கியது. விவசாயம் நசிந்துப் போனது. பெட்ரோல், டீசல் விலை – வாரந்தோறும் ராக்கெட் வேகத்தில் எகிறுகிறது. அரசுத் துறை நிறுவனங்கள் நலிந்தன. அடி மாட்டு விலைக்கு பங்குகள் விற்கப்படுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவச்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

பிரதமர் ஆகும் கனவு எனக்கில்லை என்று கூறிய மோடி –  பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ளார்.            – செய்தி பிரதமர் வேட்பாளராகும் கனவாவது நிறைவேறட்டுமே என்ற நல்ல நோக்கம் தான். வினாயகன் சிலைகளை ஊர்வலமாக எந்தப் பகுதி முதலில் எடுத்துச் செல்வது என்பதில் தாம்பரம், பல்லாவரம் பகுதி ஊர்வலக் குழுக்களுக்கு இடையே மோதல்; இரண்டு பேருக்கு கத்திக் குத்து. – செய்தி ஓகோ, ஜாதி-மோதல், மத-மோதல் களைக் கடந்து இந்துவும்-இந்துவும் மோதலா? ஓம் வினாயக நம!  குருவாயூர் கிருஷ்ணன் கோயிலிலுள்ள தங்க நகை இருப்புக் குறித்து அரசுக்கு தகவல்  தெரிவிக்க வேண்டிய அவசிய மில்லை.                      – தேவஸ்வம் போர்டு அறிவிப்பு அப்படியா? நகை திருட்டுப் போனால் போலீசில் தகவல் கொடுக்காமல் நேரடியாக போலீஸ் மோப்ப நாய்க்கு அழைப்பு விடுவீர்களோ?  குஜராத்தில் – வினாயகர் சிலைகளை கரைப்பதற்காக லாரிகளில் ஏற்றிச் சென்றபோது...

கொள்கைகளை நிர்ணயிப்பவர்களே ‘அவாள்’ தான்! பார்ப்பன அதிகார வர்க்கம் வலிமை பெறுகிறது பயணத் தொடக்க விழாவில் விடுதலை இராசேந்திரன் உரை

கொள்கைகளை நிர்ணயிப்பவர்களே ‘அவாள்’ தான்! பார்ப்பன அதிகார வர்க்கம் வலிமை பெறுகிறது பயணத் தொடக்க விழாவில் விடுதலை இராசேந்திரன் உரை

மக்கள் பிரதிகளின் அதிகாரங்கள் குறைக்கப் பட்டு பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கம் கொள்கைகளை நிர்ணயித்து அமுல்படுத்தி வருகிறது என்று மயிலாடுதுறையில் ஜூலை 24 அன்று சுயமரியாதை சமதர்மப் பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். அவரது உரை: சுயமரியாதை, அந்த சொற்களுக்குள் அடங்கி இருக்கிற பொருள் ஒரு சமூகம், அந்த சமூகத்தில் வாழ்கின்ற மனிதன் தன்மானம் உள்ள மனிதனாக, சுயமரியாதை உள்ள மனிதனாக, வாழ்ந்தால் அவன் ஒரு மனிதன் என்பதற்கான அடையாளம். அந்த சுயமரியாதை அடையாளத்தை இந்த சமூகத்திற்கு குறிப்பாக இந்த பார்ப்பனர் அல்லாத சமூகத்திற்கு மீட்டு தருவதற்காக வந்த இயக்கம் தான் பெரியார் இயக்கம்.  1932ம் ஆண்டு பெரியார் தன்னுடைய சுயமரியாதை கொள்கைகளோடு சமதர்ம கொள்கை களையும், இணைத்து சுயமரியாதை சமதர்மத் திட்டம் என்கிற ஒரு திட்டத்தை ஈரோடு நகரத்திலே வகுத்தார்கள். அதாவது சுயமரியாதை கொள்கை களோடு பொதுவுடமை கொள்கைகளையும், இணைக்கின்ற சமூக அரசியல்...

வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம்: கழகத்தினர் கைது

வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம்: கழகத்தினர் கைது

15.9.2013 ஞாயிறு அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சுற்றுச் சூழலை நதி நீரை மாசுபடுத்தும், இரசாயன வினாயகன் சிலை ஊர்வலங்களை தடை செய், கோயிலில் இருக்க வேண்டிய சிலையை வீதிகளில் அனுமதிக்காதே, தமிழகத்தை மதக்கலவர பூமியாக்காதே என்ற முழக்கங்களுடன் வினாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் காவல் நிலையம் அருகில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட பொருப்பாளர்கள் பா.ஜான், வேழவேந்தன், ஆ.வேலு, ஏசுகுமார், தட்சணாமூர்த்தி, சுனில், அருள்தாசு, காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் டேவிட் பெரியார், தினேஷ், சேகர், திருவல்லிக்கேணி பொருப்பாளர்கள் பிரகாசு, அருண், செந்தில், விழுப்புரம் அய்யனார், தமிழ்ச் செல்வி, ஜெயந்தி, அம்பிகா, புனிதா, உஷா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி திருவல்லிக்கேணி சமுக நலக்...

கோயிலில் முடங்கிடும் தங்கம்: நாட்டின் சொத்தா? பார்ப்பனர் சொத்தா? திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

கோயிலில் முடங்கிடும் தங்கம்: நாட்டின் சொத்தா? பார்ப்பனர் சொத்தா? திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்

“கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்; உள்நாட்டு தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஈரோட்டில் கைது ஈரோடு மாவட்டத்தில் தலைமை தபால் அலுவலகம் முன்பு 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங் கோவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி ஏற்கனவே காவல்துறையினரிடம் கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. ஈரோட்டில் விநாயகன் சதுர்த்தி ஊர்வலம் முடிந்த பின் பரிசீலிப்பதாக காவல்துறையினர் கூறி யிருந்தனர். ஆனால், விநாயகன் ஊர்வலம் முடிந்த பின்பும் காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “கோவில்...

துர்கா பூஜை கொண்டாட்டம்: கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம்

துர்கா பூஜை கொண்டாட்டம்: கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம்

துர்கா பூஜைகளை நடத்தும்  அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் சாலைகளை ஆக்கிரமித்து பந்தல்களைப்போட்டு ‘குண்டர்’களைப்போல் செயல்படுகிறார்கள் என்று கல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப். 17 ஆம் தேதி பாலியல் தொழிலாளர்களான பெண்களின் அமைப்பான ‘தர்பார் சமன்வே மகிளா கமிட்டி’ துர்கா பூஜை நடத்துவதற்கு கல்கத்தா காவல்துறை போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சானிப் சட்டர்ஜி துர்கா பூஜைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார். அப்போது சாலையின் குறுக்கே பெரிய பந்தல்களைப் போட்டு பூஜைகள் நடத்தும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவது ஏன்? அமைச்சர்கள் குண்டர்களைப்போல் செயல் படுகிறார்கள் என்று குறிப்பிட்டதோடு இத்தகைய துர்கா பூஜை கொண்டாட்டங்கள் போக்குவரத்துகளுக்கு இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட  வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.   பெரியார் முழக்கம் 26092013 இதழ்

தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிவதை பெரியார் எதிர்த்தாரா? திரிபுவாதங்களுக்கு மறுப்பு: பெரியாரே விளக்குகிறார்

தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிவதை பெரியார் எதிர்த்தாரா? திரிபுவாதங்களுக்கு மறுப்பு: பெரியாரே விளக்குகிறார்

தாழ்த்தப்பட்ட பெண்கள் இரவிக்கை அணிவதையே பெரியார் எதிர்த்ததாக உண்மைக்கு மாறான ஒரு செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.  பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இந்த செய்தியை பரப்பியபோது, அதை மறுத்து பெரியார் ஆற்றிய உரை ‘விடுதலை’ 15.12.1968 இல் இடம் பெற்றுள்ளது. உரை விவரம்: இன்றைய தினம் பெருமை மிக்க மேயர் (வேலூர் நாராயணன்) அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி யடைகின்றேன். இன்று காலை இருமலுக்காக டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர் மருந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டேன். சாயந்திரம் திடீரென்று கைகால் எல்லாம் நடுக்கமேற்பட்டது. மார்பு துடிப்பு 150க்கு வந்துவிட்டது. சாதாரணமாக 72-75 தான் இருக்க வேண்டும். கைகால் விரல்கள் மடக்கினால் வலிக்க ஆரம்பித்தது. உடனே டாக்டரிடம் சென்று காண்பித்தேன். அவர் காலையில் கொடுத்த மருந்தீன் ரீ-ஆக்ஷன் தான் அது வேறொன்றுமில்லை. உங்களுக்கு வயது அதிக மானதால் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். வேறொன்றுமில்லை என்று...

தலையங்கம் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

தலையங்கம் வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள்

25ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தில் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டணி. ஓய்வு பெற்ற இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சி.வி. விக்னேசுவரன் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். ராஜபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7 இடங்களையும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றி யுள்ளன. இது இலங்கையை ஆளும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக தமிழர்கள் வழங்கிய தீர்ப்பு என்பதில் இரண்டு வித கருத்துகளுக்கு இடமில்லை; போருக்குப் பிறகு ராஜபக்சே தமிழர் பகுதியில் மேற்கொண்ட ‘புனரமைப்பு’ நட வடிக்கைகளை ஊதிப் பெருக்கியும் அரசு செயல்பாடுகளால் தமிழர்கள் ராஜபக்சே ஆட்சியின் மீது கொண்டிருந்த வெறுப்பு குறைந்துவிட்டது என்றும் திட்டமிட்டு சில பார்ப்பன ஏடுகள் பரப்பிய கருத்துகள் உண்மையல்ல என்பதையும் இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த மாற்றம் தமிழர் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டு வரப் போவதும் இல்லை...

பொருளாதார நெருக்கடிக்கு கோயில் தங்கத்தை பயன்படுத்துக: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடிக்கு கோயில் தங்கத்தை பயன்படுத்துக: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 17.9.2013 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் கோவில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை எடுத்து நாட்டின் பொருளா தாரத்தை சரி செய்யக் கோரி திருப்பூர் ரயில் நிலையம் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மண்டல அமைப்புச் செயலாளர் விஜயன், செயலவைத் தலைவர் சு. துரைசாமி, மாவட்ட செயலாளர் க.அகிலன், மாநகர செய லாளர் ஜீவா நகர் குமார், மாநகர அமைப்பாளர் நீதி ராசன், மாநகரத் தலைவர் சண்முகம், முகில்ராசு, உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், உடுமலை ஒன்றிய அமைப்பாளர் குணசேகரன், மணிகண்டன், நகுலன், பிரசாத், மதுரை மணிகண்டன், தமிழ்நாடு மாணவர் கழகம் ராஜா, பாண்டித்துரை, சௌந்தர், விக்னேஷ், கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். முன்னதாக பெரியாரின் 135 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்னதாக இந்நிகழ்வுக்கு...

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்துகிறார் பகுத்தறிவுப் பரப்புரையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்துகிறார் பகுத்தறிவுப் பரப்புரையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை

மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு நீதிமன்றங் களே துணை போவதை சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ். சந்துரு, பகுத்தறிவுப் பரப்புரை செய்வோரை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ‘தி இந்து’ (செப். 22) தமிழ் நாளிதழில் இது குறித்து அவர் எழுதியது: மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இயக்கம் நடத்திய தபோல்கரின் படுகொலை அறிவியல் பூர்வமாக சிந்திப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடெங்கும் மூடர் கூடங்கள் உருவாவதை தடுக்க சட்டங்கள் வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. மராட்டியத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வோரை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை அரசே தண்டித்த வரலாறுகளும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந் தில் மக்கள் பெருக்கத்துக்கு எதிராக குடும்பக் கட்டுப்பாட்டை அன்னிபெசன்ட் அம்மையார் வலியுறுத்தினார். அவர் கிறிஸ்துவ மதத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி சிறையில் அடைத்தனர். 1925 இல் டார்வினின் பரிணாம...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

 ‘வினாயகன்’ சிலை பால் குடிப்பதாக புரளி. கோயில்களில் பக்தர்கள் கூட்டம். – செய்தி பால் குடித்த வினாயகன், சிறுநீர் கழித்தானா? தீண்டாமையில்லாத கிராமமாக பொள்ளாச்சி வட்டத்திலுள்ள சிங்கா நல்லூரை தமிழக அரசு தேர்வு செய்து பரிசு வழங்குகிறது. – செய்தி எப்படியோ தீண்டாமை இல்லாத ஒரு கிராமத்தை அரும்பாடுபட்டு கண்டு பிடித்து விட்டீர்களே! மகத்தான சாதனை போங்க! மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கு எல்லாம் சட்டங்களைக் கொண்டு வர முடியாது.          – ‘துக்ளக்’ சோ அப்போ, மூடநம்பிக்கைகளைப் பாது காப்பதற்கு சட்டம் கொண்டு வரலாமா? மயிலாடுதுறை – மயூரநாதசாமி கோயில் கோபுரத்தில் தங்கக் கலசம் திருட்டு; போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப் பட்டது.          – செய்தி கவனம்! மோப்ப நாய் மாமிசம் சாப்பிடாத ‘சைவ’மாகவும், ‘அக்மார்க்’ இந்துவாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத் துறை அனுமதிக்காது. வினாயகன் சிலை வைப்பதில் தகராறு; கோவையில் சிவசேனை நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விசுவ இந்து பரிஷத்தினர்...

இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில் 17 இடங்களில் கொடியேற்று விழா மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. 22.9.2013 அன்று காலை 9.30 மணிக்கு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செல்லப்பன், மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் சுகுணா, ஈரோடு நகரத் தலைவர் திருமுருகன், செயலாளர் சிவானந்தம், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வராசு, குமார், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், லோகநாதபுரம் மோகன், கிருஷ்ணன், வெங்கட், கலைமதி, பள்ளிபாளையம் ரமேஷ், புகைப்படக் கலைஞர் எழில் ஆகியோர் உள்பட 74 தோழர்கள் இந்நிகழ்வில் பங்குக் கொண்டனர். ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங்கோவன், சென்னை வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். பெரியார் சிலையிலிருந்து தோழர்கள் ஊர்வலமாக இரு சக்கர...

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் மக்கள் விழா எடுக்கிறார்கள். ஆனால் காந்திக்கும் ராஜாஜிக்கும் அரசுகள் தான் விழா எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறிய தோழர் நீலவேந்தன், திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி அடையாளமற்ற அமைப்பாக செயல்படுவதைப் பாராட்டினார். செப்.17 அன்று மந்தைவெளி சந்தைப் பகுதியில் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில், வீரமரணமடைந்த தோழர் நீலவேந்தன் ஆற்றிய உரை: மனித குலத்தை பிரித்த மதத்தை அழிக்கப் பிறந்த வீரர், மனுதர்ம தத்துவத்தில் நெருப்பு வைத்த சூரர், வர்ண ஜாதி நெறி திரை கிழித்த மேதை, வரலாறு நமக்கு அளித்த புரட்சிக்கானப் பாதை புரட்சியாளர் அம்பேத்கரையும், தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றும் சுயநல பூமியில், தன்னைக் கூட சுத்தம் செய்யாமல் பூமியை சுத்தம் செய்ய புறப்பட்ட ஈரோட்டுக் கிழவன் தந்தை பெரியாரையும், உள்ளே கனன்றுகொண்டிருக்கிற சூடான பூமியின் குளிர்ச்சியான மேலோட்டில் கடைசி இரண்டு மனிதர்கள் வாழுகிற வரை அவர்களுக்கிடையிலான சமூக, அரசியல், பொருளாதார...

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே! சொன்னா கேளுங்க சுயமரி யாதை வேணுங்க – பெரியார் சொன்னதையுங் கொஞ்சம் சிந்திச்சிதான் பாருங்க! தமிழரே…. நீங்க செய்த தெய்வத்துக்கு நீங்க பூசை செய்யத் தடுப்பவ னாருங்க? – கொஞ்சம் நீங்க நெனைச்சிப் பாருங்க – தடுப்பாணை நீங்களே உங்க வீட்டுக் கழைப்பது தப்புங்க! பள்ளுப் பறைய னென்றாக்கிப் பிறப்பிலே ஊனத்தை செய்தவ னாருங்க? – கொஞ்சம் உண்மை உணர்ந்திடப் பாருங்க – அந்த உலுத்தனை நீங்களே சாமிஎன் றழைப்பது தப்புங்க! ஆரிய வேதத்தை மதமென்றே அருந்தமிழ் நெறியைக் கெடுத்தவ னாருங்க? – கொஞ்சம் ஆர யோசித்துப் பாருங்க – ஆரிய அயோக் கியனை விட்டு வைப்பதே தப்புங்க! எங்கிருந்தோ வந்தே நம்மிடம் இரந்து தின்று கிடந்தவ  னாருங்க? – கொஞ்சம் நீங்களே எண்ணிப் பாருங்க – அந்த நன்றி கேடனைக் கும்பிட்டுக் கூனுவது தப்புங்க! தமிழையும் மண்ணையும் கெடுத்தும் தானே மேலோன் என்பவ  னாருங்க?...

மோடி கூட்டத்துக்காக 10000 பர்தா

மோடி கூட்டத்துக்காக 10000 பர்தா

மத்தியப் பிரதேசம், போபாலில் நடைபெறும் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்துக்காக முஸ்லீம் பெண்கள் அணியும்  10,000 பர்தாக்கள் தைக்கப்பட் டுள்ளன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்தார். “பர்தாக்களை தைத்த டெய்லர் ரூ.44.60 லட்சத் துக்கு ரசீது கொடுத்துள்ளார். இதில் ரூ.42 லட்சத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் செலுத்தியுள்ளது” என்றார். டெய்லர் அளித்த கட்டண ரசீதையும் செய்தி யாளர்களிடம் அவர் காண் பித்தார். இதனிடையே காங் கிரசின் குற்றச் சாட்டை  மறுத்துள்ளார் மத்தியப் பிரதேச பா.ஜ.க. மூத்த தலைவர் தீபக் விஜய் வர்ஜியா. மோடிக்கு கருப்புக்கொடி: திருச்சியில் கழகத்தினர் கைது 26.9.2013 அன்று திருச் சிக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு எதி ராக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார் பாக காலை 11.30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கிய சாமி தலைமையில் கருப்புக் கொடி...

மேட்டூரில் வாகன பேரணி; பறை முழக்கம்

மேட்டூரில் வாகன பேரணி; பறை முழக்கம்

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக இரு சக்கர வாகன பேரணி மற்றும் கொடியேற்று விழா நிகழ்வுகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு குஞ் சாண் டியூரிலுள்ள சமத்துவ புரத்தில் பெரியார் சிலைக்கு மண்டல செயலாளர் அ.சக்தி வேல் மாலை அணி வித்தார். மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறைமுழக்கத்துடன் பேரணி ஆரம்பமானது. ஜஸ்டின்ராஜ் தொடக்கவுரையாற்றினார். சமத்துவபுரத்திலிருந்து இரு சக்கர வாகன பேரணி மல்லிகுந்தத்தை நோக்கிச் சென்றது. மல்லிகுந்தத்தில் தம்புசாமி கழகக் கொடியேற்றி இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். தோழர்கள் அனைவருக்கும் சிறப்பான காலை உணவை மல்லிகுந்தம் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேச்சேரி பேருந்து நிலையத்தில் சூரி கொடியை ஏற்றி வைத்தார். கே.ஆர்.வி. ஸ்பின்னிங் மில்லில் அருள், நங்கவள்ளியில் இந்திரா, பனங்காட்டூரில் செந்தில் கழகக் கொடிகளை ஏற்றினர். குஞ்சாண்டியூரில் தியாகி திலீபன் வாகன நிறுத்தக உரிமையாளர் அருள் அனைவருக்கும் கேக் வழங்கினார். ஆர்.சி. பிளாஸ்டிக்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம்; சில நேரங்களில் நீதிமன்றங்களும் தவறு செய்கின்றன. தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பதவி பறிபோகும் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தவறை, இப்போது நாம் சரி செய்கிறோம்.   – சட்ட அமைச்சர் கபில்சிபல் இப்போது நீங்கள் செய்த தவறை ராகுல் காந்தி சரி செய்துள்ளார். ராகுல் செய்த தவறுக்காக சோனியா, மன்மோகனை சரி செய்து வருகிறார். அட போங்கப்பா, நீங்களும் உங்க தத்துவமும்! முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காந்தி சிலைக்கு மரியாதை  செலுத்த வரும் பொது மக்களை தடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.  – செய்தி காந்தி என்பவரும் ஒரு முக்கிய பிரமுகர் தான் என்பதை காவல்துறைக்கு புரியும்படி நன்றாக எடுத்துச் சொல்லி யிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது. பரவாயில்லை, விடுங்கள். ஒரு மாத காலத்துக்குள் இந்தியாவிலிருந்து சுமார் 1350 தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது.          – செய்தி இந்தத் தகவலையும் தகவல் உரிமை...

ஜாதி ஒழிப்புப் போராளி நீலவேந்தன் வீரமரணம்

ஜாதி ஒழிப்புப் போராளி நீலவேந்தன் வீரமரணம்

ஜாதி ஒழிப்புப் போராளியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கையில் உறுதி மிக்கவரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேடைகளிலும் தோழர்களிடத்தும் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டிருந்த வருமான தோழர் நீலவேந்தன், அருந்ததியருக்கு 6 விழுக்காடு உள் ஒதுக்கீடு கோரி திருப்பூர் பார்க் சாலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே தீ வைத்து, எரித்துக் கொண்டு உயிரா யுதமானார். 26.9.2013 அதிகாலை 2 மணி யளவில் திருப்பூரில் இந்த கோர சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. ‘தீக்குளிப்பு’ என்ற ‘உயிரிழப்பு’ சமூகப் போராளிகளுக்கு உகந்தது அல்ல என்பது நமது உறுதியான கருத்து. மேடைகளில் பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகளை அற்புதமாக பேசக் கூடிய ஒரு வலிமையான பேச்சாளரை செயல் வீரரை நாம் இழந்திருக்கிறோம். செய்தி அறிந்தவுடன் கழகப் பொரு ளாளர் இரத்தினசாமி, அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், பல்லடம் மண்டல அமைப்புச் செயலாளர்  விஜயன், வெளியீட்டுச் செயலாளர் தமிழ்ச் செல்வி, மேட்டூர் மண்டல அமைப்புச் செயலாளர் சக்திவேல், மற்றும் கோவை திருப்பூர் சேலம்...

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

மதச் சார்பற்ற நாட்டில் மத நிகழ்வுகளுக்கு அரசு அலுவலகங்களில் இடமிருக்கக் கூடாது. ஆனால், அரசு அலுவலகங்களிலும் குறிப்பாக காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டக் கூடாது என்று அண்ணா முதல்வரானவுடன் தி.மு.க. ஆட்சியில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணைகள் மீறப்பட்டு, கடவுள் படங்கள், பூஜைகள் நடந்து வருகின்றன. பல்வேறு மதத்தினரும், மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் பணியாற்றும் அலுவலகங்கள், கோயில்களாகவோ பஜனை மடங்களாகவோ மாற்றப்படக் கூடாது. இந்த நிகழ்வுகள் மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. போன்ற கட்சிகளின் பரப்புரைக்கு மறைமுக வழியமைக்கும் ஆபத்தும் அடங்கியுள்ளன. எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் கொண்டாட் டத்தை நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி,அக்டோபர் 7 ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.   – தலைமைக் கழகம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் பெரியார் 135 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 17.9.2013 காலை 9.30 மணி அளவில் பெரியார் சிலைக்கு பால்துரை மாலை அணிவித்தார். பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர கழகச் செயலாளர் பால். அறிவழகன், செல்லத்துரை மற்றும் ஏராளமான கழகத்தினரும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு முழக்கமிட்டனர். வடக்கு கோட்டையன் தோப்பில் கழகக் கொடியை பிரபாகரன் ஏற்றினார். ஏராளமான தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். முக்காணியில் திருவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளர் தே.சந்தனராசு கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்

பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழனிச்சாமி, சரோஜா ஆகியோரின் தாயார் கு. பாவாயம்மாள் 4.10.2013 அன்று முதிர்ந்த வயதில் முடிவெய்தினார். அவரது சொந்த கிராமமான உக்கம்பருத்திக்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. செய்தியறிந்து தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் நண்பர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ, சட்டமன்ற உறுப்பினர்கள் உ. தனியரசு, எஸ் .ஆர். பார்த்திபன் (தே.மு.தி.க.), தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுச் செயலாளர் வை.காவேரி, கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பாமரன், காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள்  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், வெளியீட்டு செயலாளர் சூலூர் தமிழ்ச் செல்வி, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், செயலாளர்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

7.10.2013 அன்று அரசு அலுவலகங்களில் மத வழிபாடுகளை தடை அமுல்படுத்தக் கோரி காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பு காலை 11 மணிக்கு கழகம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் நா.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்களித்த பொறுப்பாளர்கள் இனியன், நேரு தாஸ் , பால முரளி, அன்ரூஸ் , பாலகிருஷ்ணன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 40 தோழர்கள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் வெள்ளமடை நாகராசு உரையாற்றினார். வெண்பா முதலாம் ஆண்டு பிறந்த நாள் கோவை மாநகர மாவட்டக் கழகத் தலைவர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம்–கிரிஜா இணையர் மகள் வெண்பாவின் முதலாமாண்டு பிறந்த நாள் (7.10.2013 அன்று) மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க.வும் இணைந்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது. தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும். போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க. தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கழக மாவட்ட அமைப்பாளர் காளிதாசு, ம.தி.மு.க. மன்னை ஒன்றிய செயலாளர் சேரன் குளம் செந்தில்குமார், தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூரில்...

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை விருத்தாசலத்தில் ஜாதி மத வெறி சக்திகள் தாக்க முயன்றதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலைக் கண்டித்து சென்னையில் கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பார்ப்பனிய சக்திகள், சில ஜாதி வெறியர்களை சேர்த்துக் கொண்டு மிரட்டிப் பார்க்க வேண்டாம். பெரியார் இயக்கங்கள் பல்வேறு பெயரில் இயங்கினாலும் பெரியார்  கொள்கை பரப்புதலுக்கு தடை என்று வந்தால் அதை சந்திக்க களமிறங்கும். இதை பார்ப்பன சக்திகள் புரிந்து கொள்ளட்டும்! பெரியார் முழக்கம் 10102013 இதழ்

கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (செப்.22) மராட்டியத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுப் போராளி தபோல்கர் நினைவாக  பேராசிரியர் வசந்த் நடராசன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். மனித சமுதாய வரலாற்றைப் படித்தால் மற்ற எந்த காரணத்தையும்விட மதத்தின் பேரால் நடந்த போர்களே அதிகம் என்பதைப் பார்க்க முடிகிறது. சரியாகச் சொன்னால், எந்ததெந்தக் காலகட்டங்களில் மதமும் அதன் மீதான கொள்கைப் பிடிவாதமும் தீவிரமாகக் கோலோச்சினவோ அந்தக் கால கட்டங்களில்தான் மனிதர்கள் மீது மிகக் குரூரமான சித்திரவதைகளும் நடைபெற்றன. உதாரணமாக, கத்தோலிக்க சர்ச்சோடு உடன்படாதவர்களைக் கொடுமைப்படுத்திய ஸ் பானிய விசாரணைகள் நடைபெற்ற காலத்தைக் கூறலாம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கி வளர்ந்த நாசிசம் இரண்டாம் உலகப் போரில் போய் முடிந்தது. இப்போது ‘இஸ் லாமிய தீவிரவாதம்’ தலை தூக்கியிருப்பது, சிலர் குறிப்பிடுவதுபோல் வெவ் வேறு கலாச்சாரங்களுக்கு இடையே நடக்கும் மோதல் அல்ல. இஸ் லாம் மதத்துக்கும், கிறிஸ் துவ மதத்துக்கும் இடையிலான மோதல்தான். அதன்...

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடியில் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்திட கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 13.9.2013 அன்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஆதி தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். நெல்லை மண்டலச் செயலாளர் கோ.அ.குமார், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விளக்கவுரையாற்றினர். மாவட்டச் செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகரத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பால். அறிவழகன் மற்றும் பல தோழர்களும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டனர். நாகர்கோயிலில் 13.9.2013 அன்று கழக சார்பில் கோயிலில் முடங்கிடும் தங்கத்தைப் பொருளாதார சீர்கேட்டை தடுப்பதற்குப் பயன்படுத்தக் கோரி நாகர்கோயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் வழக்குரைஞர் வே.சதா...

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

22.9.2013 அன்று உடுமலை மடத்துக்குளம் வட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா, கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப் பிரச்சாரமாக நடைபெற்றது. விழாவிற்கு கழகச் செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையேற்றும், தமிழ்நாடு அறிவியல் மன்ற திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர் இரா. மோகன் முன்னிலையேற்றும் நடத்தி வைத்தனர். முதலில் பெதப்பம்பட்டியில் காலை 10 மணிக்கு கு.கவிதா கொடியேற்றினார். தொடர்ந்து நால்ரோட்டில் உடுமலை வட்ட அமைப்பாளர் ப. குணசேகரன், உடுமலை குட்டைத் திடலில் பெரியார் பிஞ்சு சு.ம. தேனிலா, சுடரொளி, உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், மடத்துக்குளம் நால் ரோட்டில் சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் முகில்ராசு, கடத்தூர் புதூரில் தமிழ்நாடு அறிவியல் மன்ற கோவை மாவட்ட பொறுப்பாளர் விஜயராகவன், கடத்தூரில் சு. துரைசாமி, காரத்தொழுவில் மாவட்டச் செயலர் அகிலன், கணியூரில் தம்பி பிரபா ஆகியோர் கொடி யேற்றினர். மாலை 3 மணிக்கு...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மதுரை மாநகராட்சி மரணச் சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இது குறித்து மேயர், ஆணையரிடம் அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார்.            – செய்தி விளக்கம் அளிப்பதற்கு முன்பு, மேயரும் ஆணையரும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ்களை கையோடு எடுத்து வரச் சொல்லுங்கள்; கவனம்! நாட்டிலுள்ள ஏழைகள் நாணயமானவர்கள்; நம்பத் தகுந்தவர்கள்.        – ப. சிதம்பரம் ஆகவே நாணயமானவர்களை அதிகரிக்கச் செய்வோம்! அவர்கள் எண்ணிக்கை பெருகு வதற்கு நம்பத் தகுந்த ‘பட்ஜெட்’ போடுவோம்! இந்து கோயில்களை உண்மையான பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.                                                – இல. கணேசன் “இவர் உண்மையான பக்தர்தான்” என்று எந்தக் கடவுளாவது நற்சான்றிதழ் தர முன் வந்தால் பரிசீலிக்கலாம். காந்தியடிகள் சிலைக்கு இலவச மின்சாரம் அளிக்க விதிகளில் இடமில்லை.  – சேலம் மின்சார வாரியம் அறிவிப்பு நியாயம் தானே? காந்திக்கு என்ன ஓட்டா இருக்குது? எனக்கு இந்தி தெரியாது. ஆனால், திருச்சியில் மோடி பேசிய விதமும்...

தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழ்நாட்டில் பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கூட்டணி உருவாக காய் நகர்த்தி வரும் காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், மோடியை நியாயப்படுத்தி, ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் எழுதிய கட்டுரைக்கு மறுப்புரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ஜீ.வி.’க்கு எழுதிய மறுப்பு இது. 9.10.2013 அன்று ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கதர் ஆடையில் காவிக் கறை எதற்கு?’ என்ற தலைப்பில் அந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறு சிறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அக்கட்டுரையின் முழுமையான வடிவத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. இந்தியாவில் அடுத்து அமையப் போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்று மலரப் போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராக இல்லை. தேர்தல் வழியாக மட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இல்லை. ஆனால், “இந்தியாவின்...

தமிழினப் போராளி நாமக்கல் நா.ப. இராமசாமி நினைவேந்தல் கூட்டம்

தமிழினப் போராளி நாமக்கல் நா.ப. இராமசாமி நினைவேந்தல் கூட்டம்

10.10.2013 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நாமக்கல் சுப்புலட்சுமி மகாலில் (23.9.2013 அன்று மறைந்த) தமிழினப் போராளி நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிலம்பொலி சு. செல்லப்பன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நா.ப. இராமசாமி படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெ. மணியரசன், வழக்கறிஞர் இரத்தினம், முன்னாள் அமைச்சர் காந்தி செல்வன், எழுத்தாளர் வேலுச்சாமி, கன. குறிஞ்சி, நிலவன், கி.வெ. பொன்னையன், பரமத்தி சண்முகம் உள்பட பலர் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக நா.ப.இராமசாமி மகன் இரா. அன்பழகன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 17102013 இதழ்

மன்னையில் திலீபன் நினைவு நாள் கருத்தரங்கு

மன்னையில் திலீபன் நினைவு நாள் கருத்தரங்கு

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சரசுவதி பேசினார். பெரியார் 135 ஆவது பிறந்த நாள் மற்றும் தியாக மறவன் திலீபன் 26 ஆவது நினைவேந்தல் கருத்தரங்கம் கழகத்தின் சார்பில் மன்னார்குடி அம்பேத்கர் அரங்கத்தில் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது. தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இளையராஜா, நாகை மாவட்ட செயலாளர் மகேசு, தஞ்சை மாவட்ட செயலாளர் பாரி, எழுத்தாளர் பசு. கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில் பெரியாரின் படத்தினை கருக்கல் பத்திரிகை ஆசிரியர் அம்ராபாண்டியன், திலீபன் படத்தினை தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினர். இனப்படுகொலை போர் குற்றம் மனித...

தூத்துக்குடியில் நாத்திகம் இராமசாமி நினைவு நாள் கூட்டம்

தூத்துக்குடியில் நாத்திகம் இராமசாமி நினைவு நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரில் நாத்திகம் பி. இராமசாமி  4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும், பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமும் 24.9.13 செவ்வாய் மாலை 6 மணியளவில் சீரணி அரங்கில் நடைபெற்றது. ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் பா. முருகேசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, துணைத் தலைவர் வே.பால்ராசு, நெல்லை மண்டலச் செயலர் கோ.ஆ.குமார், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் சண்முகவேல், நீதித் துறை சு.க. சங்கர் ஆகியோர் உரைக்குப் பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றினார். ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரா. உதயகுமார் நன்றியுரையாற்றினார். மாவட்டச் செயலர் க. மதன், பொருளாளர் இரவி சங்கர், தூத்துக்குடி மாநகர செயலர் பால். அறிவழகன் மற்றும் ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாத்திகம் இராமசாமி மகன்கள் காமராஜ், ஜவகர், சுபாஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்....

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதை நிறுத்தக் கோரி சென்னையில் அக். 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்: ஒரு மதச் சார்பற்ற நாட்டில் அரசு அமைப்புகள் மத அடையாளங்கள் இன்றி இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். எந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் மதச் சடங்குகளை தடைப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. அதில் அடங்கியுள்ள மூடநம்பிக்கைகளை சமுதாய இழிவை கருத்துகளாக முன் வைக்கிறோம். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் உரிமை. அரசு நிறுவனங்கள் பல்வேறு மதநம்பிக்கை யாளர்களுக்கும், கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானது. அதில் ஒரு மதம் தொடர்பான சடங்குகளை நடத்துவது எப்படி நியாயமாகும்? இந்த கேள்வியை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளே கேட்டிருக்கின்றன. தாழையூத்து...

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சின்ன தம்பி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் நீல கிருஷ்ணபாபு வரவேற்புரை யாற்றினார். பேராசிரியர்கள் திருநீலகண்டன், முனைவர் சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா.சந்தானம்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ‘பெரியார் ஒரு சகாப்தம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சிவகுருநாதன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் நீலகிருஷ்ணபாபு, முருகன், ஜெயபால், ரந்தீர்குமார், முத்துலெட்சுமி, மனோன்மணி, சிவகுருநாதன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். பெரியார் முழக்கம் 17102013 இதழ்

காமன்வெல்த் : சில தகவல்கள்

காமன்வெல்த் : சில தகவல்கள்

இனப்படுகொலை நடத்திய இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கருத்து அழுத்தம் பெற்றுவரும் நிலையில் ‘காமன்வெல்த்’ பற்றிய சில தகவல்கள்: பிரிட்டிஷ் காலனியின் கீழ் இருந்த நாடுகள் உருவாக்கிக் கொண்ட அமைப்பே ‘காமன் வெல்த்’. இதில் உறுப்பு நாடுகள் விரும்பி தாமாகவே இணையலாம். விருப்பமில்லா விட்டால் விலகிக் கொள்ளலாம். 1972 ஆம் ஆண்டு பங்களாதேஷ் நாட்டுக்கு ஏற்பு வழங்கியதை எதிர்த்து பாகிஸ் தான் காமன்வெல்த்திலிருந்து விலகி மீண்டும் 1989 இல் இணைந்தது. மனித உரிமை மீறல்கள் மற்றும் திட்டமிட்ட முறைகேடான ஆட்சி நடத்திய குற்றச்சாட்டு களின் கீழ் 2002 ஆம் ஆண்டில் ஜிம்பாவே தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டது. அதற்காக 2003 ஆம் ஆண்டில் அந்த நாடு தன்னை விலக்கிக் கொண்டது. அதேபோல் ஜாம்பியா நாடு 2013 அக்டோபரில் காமன்வெல்த்திலிருந்து விலகிக் கொண்டது. காமன்வெல்த்துக்கு உறுப்பு நாடுகளை நீக்கி வைக்கும் உரிமை இல்லை. ஆனால், தீவிரப் பங்கெடுப்பிலிருந்து நாடுகளை...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

சில அனுபவங்கள் காரணமாக பில்லி, சூன்யம் இருந்தாலும் இருக்கலாம் என்ற எண்ணத்துக்கு நான் வந்துள்ளேன்.      – ‘துக்ளக்’கில் சோ விடாதீங்க… அவ்வளவும் பா.ஜ.க.வுக்கு விழக் கூடிய ஓட்டுகள்; உடனே வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்க…. தவறாக மரண தண்டனைகளை வழங்கி யுள்ளதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண் டிருக்கிறது. – ‘தினமணி’யில் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அதனால் என்ன? ஒரு அரசியல் சட்ட அமர்வை நியமித்து, தவறாக மரண தண்டனை வழங்கவும், பிறகு அதை தவறு என்று அறிவிக்கவும் உரிமை உண்டு என்று தீர்ப்பு எழுதிவிட்டால் ‘போதும்’! திருப்பதி ‘ஏழுமலை’யான் தனது இரண்டா வது திருமணத்துக்கு “குபேரனி”டம் கடன் வாங்கினார். அதற்கு செலுத்த வேண்டிய வட்டியைத்தான் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக இப்போதும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். -’தினத்தந்தி’ கட்டுரை. ப. சிதம்பரம் சார்! இந்த குபேரன் கடனை தள்ளுபடி செய்து, திருப்பதி உண்டியல் வசூலை உடனே நிறுத்துங்க… அம்பானிக்கு எல்லாம் கடன்...

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்கள் – காவல்நிலையங்களில் ஆயுத பூஜைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் களமிறங்கியது. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மயிலாடு துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவோடு சரசுவதி பூஜை கொண்டாட்டம் விழாவாக நடத்தப்பட்டதை எதிர்த்து களமிறங்கிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேட்டுப் பாளையத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கிய தோழர்கள் மீது பா.ஜ.க. ஆர்.எஸ் .எஸ் . காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டம் உருவானது. கழகத்தினர் மீது காவல்துறை பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. செய்தி விவரம். மயிலாடுதுறையில்: மயிலாடுதுறையில் கழகத் தோழர்கள் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்தவோ, கடவுள் படங்கள் வைப்பதோ கூடாது என்ற அரசு ஆணை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அனைத்து அலுவலகங்களுக்கும் காவல்நிலையங்களுக்கும் மாவட்ட தலைவர் மகாலிங்கம்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து இரங்கல்

கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து இரங்கல்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி அவர்களின் தாயார் கு.பாவாயம்மாள் 4.10.2013 அன்று முடிவெய்தியதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், தோழர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தனர். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (ம.தி.மு.க.), விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு முத்துசாமி, ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் இரா. அதியமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோபி. வெங்கிடு (தி.மு.க.), பனமரத்துப்பட்டி இராசேந்திரன் (தி.மு.க.), மேச்சேரி காமராஜ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி பேராசிரியர் திருநீலகண்டன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் சுந்தரராஜன் முதலானோர் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 23102013 இதழ்

தங்கப் புதையல்: சில கேள்விகள்

தங்கப் புதையல்: சில கேள்விகள்

உ.பி. மாநிலம் உள்ளாவ் பகுதியில் 1857 இல் சிற்றரசர் ராஜாராவ் ராம் பச்சன் – 1000 டன் தங்கத்தைப் “புதைத்த”போது 31 கிராம் தங்கத்தின் விலை 20 டாலர். ரூபாய்க்கும் அதே மதிப்புதான். ஒரு குறுநிலப் பகுதியின் சிற்றரசர் இந்த விலையில் ஆயிரம் டன் தங்கத்தை எப்படி வைத்திருந்தார்? அப்படியே வைத்திருந்தாலும் அவ்வளவு பெரும் தொகை அவரிடம் இருந்திருக்குமா? அப்படியே நிதி வசதி இருந்தாலும் அவ்வளவு பெரிய அளவில் தங்கத்தை அவரால் எங்கிருந்து பெற முடிந்தது? நாட்டின் வரலாற்று தொன்மங்களை தேடிக் கண்டுபிடித்து ஆய்வு நடத்த வேண்டிய தொல்பொருள் துறை, மூடநம்பிக்கைகளுக்கு துணை போகலாமா? பெரியார் முழக்கம் 23102013 இதழ்  

பா.ஜ.க. மாறிவிட்டதா?

பா.ஜ.க. மாறிவிட்டதா?

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர் வர்ணாஸ்ரம வெறியில் ஊறிப் போன முரளி மனோகர் ஜோஜி. அவர் பத்திரிகையாளர்களிடையே தங்களின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசத்துக்கு இடமில்லை என்று கூறியிருக்கிறார். அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்டுவது; இஸ் லாம், கிறிஸ் தவர்களுக்கான மதச் சட்டங்களை ஒழித்து பொதுவான சிவில் சட்டத்தை உருவாக்குவது; காஷ்மீருக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமையான 370 ஆவது பிரிவை ரத்து செய்வது – இந்த மூன்று கொள்கைகளும் தேர்தல் அறிக்கையில் நிச்சயமாக இடம் பெறும் என்று கூறிவிட்டார். அதேபோல், பசு பாதுகாப்பு, கங்கை நீரை தூய்மையாக்கும் திட்டம், சேது சமுத்திரத் திட்டததைக் கைவிடுவது என்பதிலும், சமரசத்துக்கு இடமில்லை என்கிறார். உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களை ஏமாற்ற மோடி, இராமன் கோயில் பிரச்சினையை பேசாமல் தவிர்த்தாலும் ஜோஷி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.                                                                                        – இரா பெரியார் முழக்கம் 23102013 இதழ்

இந்து ‘தாலிபான்கள்’

இந்து ‘தாலிபான்கள்’

‘தாலிபான்’ பயங்கரவாதம் இஸ் லாமியர் களிடையே இருப்பதுபோல் இந்து ஜாதி வெறியர் களிடமும் இருக்கிறது. அரியானாவில் ‘ஜாட்’ சமூகத் தினர் நடத்தும் ஜாதிப் பஞ்சாயத்துகள் ‘தாலி பான்கள்’ போலவே செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. காதலித்து திருமணம் செய்தாலோ ஒரே கோத்திரத்தில் காதலித்தாலோ பெற்ற மகளையே கொலை  செய்துவிட வேண்டும் என்று உத்தரவு போடுகிறது இந்த ‘ஜாட்’கள் நடத்தும் ஜாதி பஞ்சாயத்து. 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் ஆடை களையே அணிய வேண்டும்; சக மாணவர்களிடம் பேசக் கூடாது; அலைபேசி வைத்துக் கொள்ளக் கூடாது; ஒரே வாகனத்தில் பயணம் செய்யக் கூடாது என்றெல்லாம் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளனர். நகரத்துக்கு படிக்கச் செல்லும் இளம் பெண்கள் அங்கே நவீன உடைகளை அணியாமல் இருக்கிறார்களா? ஆண் நண்பர்களுடன் பழகாமல் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உளவுப் பிரிவையும் அமைத்துள்ளார்களாம். தங்களுக்கு தாங்களே சட்டங்களையும் தண்டனைகளையும் உருவாக்கிக் கொண்டு திரியும் இந்த ஜாதி வெறியர்களிடம் சட்டம்...