Author: authorppk

கழகத்திற்கு புதிய மின்னஞ்சல்

  கழகத்தின் சார்பில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளைக் கழகங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், அறிவிப்புகள் மற்றும் பிற செய்திகள் ஆகியவற்றை செய்திகளாக கழகத் தலைமைக்கு எளிமையாக அனுப்ப தோழர்களின் வசதிக்காக ஒரு புதிய  மின்னஞ்சல் முகவரி  உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகள் அனுப்பும் பொழுது நிகழ்வுகளின் புகைப்படங்கள், நாள், நேரம், கலந்து கொண்ட அமைப்புகள், கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் ஆகிய விபரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். கழகத்தின் செயல்பாடுகளை கழக இதழான பெரியார் முழக்கம்,கழக இணையம், கழக சமூக வலைத் தளங்கள் வாயிலாக மக்கள் மன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல தாங்கள் அனுப்பும் செய்தி பெரிதும் உதவும். ஆதலால்  கழக சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தவறாமல் பதிவு செய்வதும் நிகழ்வின் ஓர் அங்கமே எனவே கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தவறாமல் செய்திகளை அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். newsdvk@gmail.com – திராவிடர் விடுதலைக்...

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

27.12.2017 காலை கோவை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற் பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பெரியார் இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத்தோழர்கள் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

கோவையில், நூல் வெளியீட்டு விழா

கோவையில், நூல் வெளியீட்டு விழா

“இருட்டினில் வாழும் வெளிச்சங்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு 27.12.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் கோவை  அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது.  த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் நூலை வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணிநூலை பெற்றுக்கொண்டார்.  தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

இயற்கை வளங்களை சுரண்டும் கும்பலுக்கு எதிராகவும் மக்களை பேரழிவுக்கு உள்ளாக்கும் அணுமின்சாரம், மீத்தேன் போன்ற திட்டங்களையும் எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் போராளி முகிலன் தொடர்ந்து காவல்துறையால் குறி வைத்து சித்திரவதைக்கும் முறைகேடான கைதுக்கும் உள்ளாகி வருகிறார். ஆனாலும், அவரது கொள்கை உறுதியை இந்த அடக்குமுறைகள் சித்திரவதைகள் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மக்கள் உரிமைக்காகப் போராடும் போராளிகளை காவல்துறையும் அரசும் எவ்வளவு மூர்க்கமாக ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்த புரட்சிப் பெரியார் முழக்கம் முகிலனின் இந்த கடிதத்தை வெளியிடுகிறது. போராளி முகிலன் ஒரு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முகிலன். சிறையிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) சிறை அதிகாரி வழியாக அனுப்பிய கடிதம் இது: “நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் இயற்கை வளங்கள் வரைமுறையற்று சூறையாடப்படுவதை எதிர்த்தும், தமிழகத்தின் தற்சார்பை பாதுகாக்கவும், மக்களின் கருத்துகளுக்கு எதிராக வளர்ச்சி...

சேகர் குப்தாவின் துணிச்சலான கட்டுரை ஊழலிலும் பார்ப்பனருக்கு ஒரு நீதி; ‘தலித் சூத்திரருக்கு’ வேறு நீதி

சேகர் குப்தாவின் துணிச்சலான கட்டுரை ஊழலிலும் பார்ப்பனருக்கு ஒரு நீதி; ‘தலித் சூத்திரருக்கு’ வேறு நீதி

‘பார்ப்பனர்’ ஊழலுக்கும் – ‘சூத்திரம் பஞ்சமர்’ ஊழலுக்கும் வேறுபாடு உண்டு. மனு சாஸ்திரம் கட்டளையிடுவதுபோல ‘பிராமண ஊழலு’க்கு பரிசும், சூத்திர ஊழலுக்கு தண்டனையும் காத்திருக்கிறது. இங்கே வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் ஆசிரியர் சேகர் குப்தா பல்வேறு ஆங்கில ஊடகங்களில் கட்டுரை எழுதி வரும் பிரபலமான மூத்த பத்திரிகையாளர். ஊழலுக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பை மிக்க துணிச்சலோடு அம்பலப் படுத்தியிருக்கார் சேகர் குப்தா. அரசியலில் ஊழல்களுக்கும் சாதிகளுக்கும் என்ன தொடர்பு? ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் சாதியோ, சமூகமோ நேரடித் தொடர்பில் உள்ளனவா? சாதிப் படிநிலையில் கீழே செல்லச் செல்ல ஊழல் வழக்குகளில் பிடிபடுவதும், தண்டிக்கப் படுவதும் அதிகமாகிறதா? சில உண்மைகளை ஆராய்வோம். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ. ராசா 15 மாதங்களுக்கு சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தார். 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளார். அவர் தலித். இதே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்...

கீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில் – தியாகு –

கீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில் – தியாகு –

கீழ்வெண்மணி படுகொலையின்போதுபெரியார் அமைதி காத்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்து தியாகு தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு: கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா? இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார். கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்’ சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியால...

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

ஈரோட்டில் டிசம்பர் 16 ஆம் தேதி கூடிய தலைமைக் குழு தீர்மானங்களை செயல்படுத்த உடனடியாக களமிறங்கினர். நாமக்கல் ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில்  மாணவர்கள் சந்திப்பு, திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 31.12.2017 அன்று காலை 11:30 மணிக்கு தொடங் கியது. நிகழ்வில், ராசிபுரம், மல்லசமுத்திரம், பவானி, திருச்செங்கோடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மனோஜ் தலைமை வகிக்க, தோழர்கள் வே.ஜீவிதா மற்றும் நித்யா முன்னிலை வகிக்க மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. மாணவர்களிடையே, நீட், தமிழ்நாடு தேர்வாணையத்தின் தமிழர் விரோத போக்கு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்ட புதிய மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். கலந்துரையாடலுக்குப் பின்,  சமூக வலைதளங்களில் மாணவர்கள் பிரச்சனைகளை பரப்புதல், கல்லூரி நுழைவாயிலில் காலை நேரங்களில் (வாய்ப்பைப் பொறுத்து) துண்டறிக்கைகளை கொடுத்தல், துறை சார்ந்த மாணவர்களின் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு துண்டறிக்கைகளை...

வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  கழகக் கட்டமைப்புக்கு 1 இலட்சம் நன்கொடை

வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் கழகக் கட்டமைப்புக்கு 1 இலட்சம் நன்கொடை

  சேலத்தில் நடந்த கழக செயலவைக் கூட்டத்தில் கழகக் கட்டமைப்பு நிதிக்காக வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் ரூபாய் ஓர் இலட்சம் நன்கொடையை கழகத் தலைவரிடம் பலத்த கரவொலிக் கிடையே வழங்கினார்.

தொடர் வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படமா?

தொடர் வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படமா?

இந்தியாவை மதசார்பற்ற நாடு என இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே கூறப்பட் டுள்ளது. ஆனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக அரசு அலுவலகங்களை ஆக்கி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது 1992ஆம் ஆண்டில் மத்திய அரசில் வீற்றிருந்த காங்கிரஸ் ஆட்சியில், நாடாளுமன்ற குழு சமூக கலவரங்களைப் பற்றி ஆய்ந்து, அரசு அலுவலகங்களிலும், இடங்களிலும் குறிப்பிட்ட மத சின்னங்களை வரைவதும், கருத்துக்களை பொறிப்பதும், மத வழிபாடுகள் நடத்துவதுமே முதன்மைக் காரணமாக அமைகிறது என சுட்டிக்காட்டியதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் உள்துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் அவ்வாறான செயல்பாடுகளைத் தடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் கண்டிப்பான சுற்றறிக்கையை அனுப்பியது ஆனால் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்தில் அரசு அனுமதித்துள்ள டாக்டர் அம்பேத்கர் படத்தை அகற்றிவிட்டு, சங்கராச்சாரி படத்தை வரைந்த சட்ட விரோத நடவடிக்கையை மாற்றி, மீண்டும் அம்பேத்கர் படத்தை பழையபடி வைத்த காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள்...

சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவுகள்

மாணவர்களிடையே விழிப்புணர்வு இயக்கம் சமூக நீதி மறுக்கப்பட்டு, கல்வி வேலை வாய்ப்புகளை இழந்து, இருண்ட எதிர்காலம் நோக்கிச் செல்லும் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஊட்டி, அவர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தயார் செய்யும் பரப்புரை இயக்கங்களைத் தொடங்க சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவு செய்தது. கல்லூரிகள் மாணவர் விடுதிகளில் இந்த ஆபத்துகளை ஆதாரங்களோடு விளக்கும் வெளியீடு, துண்டறிக்கைகளை தயார் செய்து, மாணவர்களிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இந்த செயல் திட்டத்துக்கு கழகப் பொறுப் பாளர்கள் முழுமையாக அனைத்து உதவிகளை யும் வழங்குவது எனவும் தலைமைக்குழு முடிவு செய்தது. 29122017 வெள்ளியன்று, சேலம் விஜய ராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப் பட்டத் தீர்மானங்கள். சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர் காலத்தையே...

541 பெண் போராளிகளின் அறைகூவல்

அக்டோபர் 07ஆம் தேதி சென்னையில் பெரம்பூர் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் நிற்கும் பெண் போராளிகளை இணைத்து மாபெரும் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறது. மிகக் குறிப்பிடத்தக்க சிறப்புடன் நடந்த இந்த மேடையில் “பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தை சார்ந்த போராடுகிற நெடுவாசல், கதிராமங்கலம் மக்களின் போராட்டத்தை ஆதரித்து துண்டறிக்கை கொடுத்தார் என்பதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி, எப்போதும் மக்கள் போராட்டத்தில் நிற்கும் மக்கள் மன்றத்தை சார்ந்த மகேசு, ஜாதி வெறிக்கு அன்பு காதலனை பறிகொடுத்த உடுமலை கவுசல்யா, கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, எழுத்தாளர் ஜெயராணி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தினுடைய பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி என்று பெண்கள் ஒரே மேடையில் இணைந்து, ஜாதி சங்கங்களை புறக்கணித்து சுயஜாதி மறுப்பாளராக இருங்கள் என்று அறைகூவல் கொடுத்தார்கள்”. ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் அந்த நிகழ்வுக்கு திரண்டிருந்தார்கள். ஜாதி ஒழிப்புக் களத்தில் இளைஞர்கள் இறங்கிவிட்டார்கள்....

இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில் 17 இடங்களில் கொடியேற்று விழா மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. 22.9.2013 அன்று காலை 9.30 மணிக்கு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செல்லப்பன், மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் சுகுணா, ஈரோடு நகரத் தலைவர் திருமுருகன், செயலாளர் சிவானந்தம், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வராசு, குமார், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், லோகநாதபுரம் மோகன், கிருஷ்ணன், வெங்கட், கலைமதி, பள்ளிபாளையம் ரமேஷ், புகைப்படக் கலைஞர் எழில் ஆகியோர் உள்பட 74 தோழர்கள் இந்நிகழ்வில் பங்குக் கொண்டனர். ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங்கோவன், சென்னை வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். பெரியார் சிலையிலிருந்து தோழர்கள் ஊர்வலமாக இரு சக்கர...

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் மக்கள் விழா எடுக்கிறார்கள். ஆனால் காந்திக்கும் ராஜாஜிக்கும் அரசுகள் தான் விழா எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறிய தோழர் நீலவேந்தன், திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி அடையாளமற்ற அமைப்பாக செயல்படுவதைப் பாராட்டினார். செப்.17 அன்று மந்தைவெளி சந்தைப் பகுதியில் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில், வீரமரணமடைந்த தோழர் நீலவேந்தன் ஆற்றிய உரை: மனித குலத்தை பிரித்த மதத்தை அழிக்கப் பிறந்த வீரர், மனுதர்ம தத்துவத்தில் நெருப்பு வைத்த சூரர், வர்ண ஜாதி நெறி திரை கிழித்த மேதை, வரலாறு நமக்கு அளித்த புரட்சிக்கானப் பாதை புரட்சியாளர் அம்பேத்கரையும், தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றும் சுயநல பூமியில், தன்னைக் கூட சுத்தம் செய்யாமல் பூமியை சுத்தம் செய்ய புறப்பட்ட ஈரோட்டுக் கிழவன் தந்தை பெரியாரையும், உள்ளே கனன்றுகொண்டிருக்கிற சூடான பூமியின் குளிர்ச்சியான மேலோட்டில் கடைசி இரண்டு மனிதர்கள் வாழுகிற வரை அவர்களுக்கிடையிலான சமூக, அரசியல், பொருளாதார...

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே! சொன்னா கேளுங்க சுயமரி யாதை வேணுங்க – பெரியார் சொன்னதையுங் கொஞ்சம் சிந்திச்சிதான் பாருங்க! தமிழரே…. நீங்க செய்த தெய்வத்துக்கு நீங்க பூசை செய்யத் தடுப்பவ னாருங்க? – கொஞ்சம் நீங்க நெனைச்சிப் பாருங்க – தடுப்பாணை நீங்களே உங்க வீட்டுக் கழைப்பது தப்புங்க! பள்ளுப் பறைய னென்றாக்கிப் பிறப்பிலே ஊனத்தை செய்தவ னாருங்க? – கொஞ்சம் உண்மை உணர்ந்திடப் பாருங்க – அந்த உலுத்தனை நீங்களே சாமிஎன் றழைப்பது தப்புங்க! ஆரிய வேதத்தை மதமென்றே அருந்தமிழ் நெறியைக் கெடுத்தவ னாருங்க? – கொஞ்சம் ஆர யோசித்துப் பாருங்க – ஆரிய அயோக் கியனை விட்டு வைப்பதே தப்புங்க! எங்கிருந்தோ வந்தே நம்மிடம் இரந்து தின்று கிடந்தவ  னாருங்க? – கொஞ்சம் நீங்களே எண்ணிப் பாருங்க – அந்த நன்றி கேடனைக் கும்பிட்டுக் கூனுவது தப்புங்க! தமிழையும் மண்ணையும் கெடுத்தும் தானே மேலோன் என்பவ  னாருங்க?...

மோடி கூட்டத்துக்காக 10000 பர்தா

மோடி கூட்டத்துக்காக 10000 பர்தா

மத்தியப் பிரதேசம், போபாலில் நடைபெறும் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்துக்காக முஸ்லீம் பெண்கள் அணியும்  10,000 பர்தாக்கள் தைக்கப்பட் டுள்ளன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்தார். “பர்தாக்களை தைத்த டெய்லர் ரூ.44.60 லட்சத் துக்கு ரசீது கொடுத்துள்ளார். இதில் ரூ.42 லட்சத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் செலுத்தியுள்ளது” என்றார். டெய்லர் அளித்த கட்டண ரசீதையும் செய்தி யாளர்களிடம் அவர் காண் பித்தார். இதனிடையே காங் கிரசின் குற்றச் சாட்டை  மறுத்துள்ளார் மத்தியப் பிரதேச பா.ஜ.க. மூத்த தலைவர் தீபக் விஜய் வர்ஜியா. மோடிக்கு கருப்புக்கொடி: திருச்சியில் கழகத்தினர் கைது 26.9.2013 அன்று திருச் சிக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு எதி ராக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார் பாக காலை 11.30 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கிய சாமி தலைமையில் கருப்புக் கொடி...

மேட்டூரில் வாகன பேரணி; பறை முழக்கம்

மேட்டூரில் வாகன பேரணி; பறை முழக்கம்

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக இரு சக்கர வாகன பேரணி மற்றும் கொடியேற்று விழா நிகழ்வுகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு குஞ் சாண் டியூரிலுள்ள சமத்துவ புரத்தில் பெரியார் சிலைக்கு மண்டல செயலாளர் அ.சக்தி வேல் மாலை அணி வித்தார். மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறைமுழக்கத்துடன் பேரணி ஆரம்பமானது. ஜஸ்டின்ராஜ் தொடக்கவுரையாற்றினார். சமத்துவபுரத்திலிருந்து இரு சக்கர வாகன பேரணி மல்லிகுந்தத்தை நோக்கிச் சென்றது. மல்லிகுந்தத்தில் தம்புசாமி கழகக் கொடியேற்றி இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். தோழர்கள் அனைவருக்கும் சிறப்பான காலை உணவை மல்லிகுந்தம் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேச்சேரி பேருந்து நிலையத்தில் சூரி கொடியை ஏற்றி வைத்தார். கே.ஆர்.வி. ஸ்பின்னிங் மில்லில் அருள், நங்கவள்ளியில் இந்திரா, பனங்காட்டூரில் செந்தில் கழகக் கொடிகளை ஏற்றினர். குஞ்சாண்டியூரில் தியாகி திலீபன் வாகன நிறுத்தக உரிமையாளர் அருள் அனைவருக்கும் கேக் வழங்கினார். ஆர்.சி. பிளாஸ்டிக்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம்; சில நேரங்களில் நீதிமன்றங்களும் தவறு செய்கின்றன. தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் பதவி பறிபோகும் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தவறை, இப்போது நாம் சரி செய்கிறோம்.   – சட்ட அமைச்சர் கபில்சிபல் இப்போது நீங்கள் செய்த தவறை ராகுல் காந்தி சரி செய்துள்ளார். ராகுல் செய்த தவறுக்காக சோனியா, மன்மோகனை சரி செய்து வருகிறார். அட போங்கப்பா, நீங்களும் உங்க தத்துவமும்! முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காந்தி சிலைக்கு மரியாதை  செலுத்த வரும் பொது மக்களை தடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.  – செய்தி காந்தி என்பவரும் ஒரு முக்கிய பிரமுகர் தான் என்பதை காவல்துறைக்கு புரியும்படி நன்றாக எடுத்துச் சொல்லி யிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது. பரவாயில்லை, விடுங்கள். ஒரு மாத காலத்துக்குள் இந்தியாவிலிருந்து சுமார் 1350 தகவல்களை அமெரிக்கா திருடியுள்ளது.          – செய்தி இந்தத் தகவலையும் தகவல் உரிமை...

ஜாதி ஒழிப்புப் போராளி நீலவேந்தன் வீரமரணம்

ஜாதி ஒழிப்புப் போராளி நீலவேந்தன் வீரமரணம்

ஜாதி ஒழிப்புப் போராளியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கையில் உறுதி மிக்கவரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேடைகளிலும் தோழர்களிடத்தும் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டிருந்த வருமான தோழர் நீலவேந்தன், அருந்ததியருக்கு 6 விழுக்காடு உள் ஒதுக்கீடு கோரி திருப்பூர் பார்க் சாலையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே தீ வைத்து, எரித்துக் கொண்டு உயிரா யுதமானார். 26.9.2013 அதிகாலை 2 மணி யளவில் திருப்பூரில் இந்த கோர சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. ‘தீக்குளிப்பு’ என்ற ‘உயிரிழப்பு’ சமூகப் போராளிகளுக்கு உகந்தது அல்ல என்பது நமது உறுதியான கருத்து. மேடைகளில் பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகளை அற்புதமாக பேசக் கூடிய ஒரு வலிமையான பேச்சாளரை செயல் வீரரை நாம் இழந்திருக்கிறோம். செய்தி அறிந்தவுடன் கழகப் பொரு ளாளர் இரத்தினசாமி, அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், பல்லடம் மண்டல அமைப்புச் செயலாளர்  விஜயன், வெளியீட்டுச் செயலாளர் தமிழ்ச் செல்வி, மேட்டூர் மண்டல அமைப்புச் செயலாளர் சக்திவேல், மற்றும் கோவை திருப்பூர் சேலம்...

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

மதச் சார்பற்ற நாட்டில் மத நிகழ்வுகளுக்கு அரசு அலுவலகங்களில் இடமிருக்கக் கூடாது. ஆனால், அரசு அலுவலகங்களிலும் குறிப்பாக காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டக் கூடாது என்று அண்ணா முதல்வரானவுடன் தி.மு.க. ஆட்சியில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணைகள் மீறப்பட்டு, கடவுள் படங்கள், பூஜைகள் நடந்து வருகின்றன. பல்வேறு மதத்தினரும், மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் பணியாற்றும் அலுவலகங்கள், கோயில்களாகவோ பஜனை மடங்களாகவோ மாற்றப்படக் கூடாது. இந்த நிகழ்வுகள் மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. போன்ற கட்சிகளின் பரப்புரைக்கு மறைமுக வழியமைக்கும் ஆபத்தும் அடங்கியுள்ளன. எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் கொண்டாட் டத்தை நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி,அக்டோபர் 7 ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.   – தலைமைக் கழகம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் பெரியார் 135 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 17.9.2013 காலை 9.30 மணி அளவில் பெரியார் சிலைக்கு பால்துரை மாலை அணிவித்தார். பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர கழகச் செயலாளர் பால். அறிவழகன், செல்லத்துரை மற்றும் ஏராளமான கழகத்தினரும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு முழக்கமிட்டனர். வடக்கு கோட்டையன் தோப்பில் கழகக் கொடியை பிரபாகரன் ஏற்றினார். ஏராளமான தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். முக்காணியில் திருவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளர் தே.சந்தனராசு கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்

பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழனிச்சாமி, சரோஜா ஆகியோரின் தாயார் கு. பாவாயம்மாள் 4.10.2013 அன்று முதிர்ந்த வயதில் முடிவெய்தினார். அவரது சொந்த கிராமமான உக்கம்பருத்திக்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. செய்தியறிந்து தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் நண்பர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ, சட்டமன்ற உறுப்பினர்கள் உ. தனியரசு, எஸ் .ஆர். பார்த்திபன் (தே.மு.தி.க.), தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுச் செயலாளர் வை.காவேரி, கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பாமரன், காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள்  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், வெளியீட்டு செயலாளர் சூலூர் தமிழ்ச் செல்வி, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், செயலாளர்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

7.10.2013 அன்று அரசு அலுவலகங்களில் மத வழிபாடுகளை தடை அமுல்படுத்தக் கோரி காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பு காலை 11 மணிக்கு கழகம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் நா.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்களித்த பொறுப்பாளர்கள் இனியன், நேரு தாஸ் , பால முரளி, அன்ரூஸ் , பாலகிருஷ்ணன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 40 தோழர்கள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் வெள்ளமடை நாகராசு உரையாற்றினார். வெண்பா முதலாம் ஆண்டு பிறந்த நாள் கோவை மாநகர மாவட்டக் கழகத் தலைவர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம்–கிரிஜா இணையர் மகள் வெண்பாவின் முதலாமாண்டு பிறந்த நாள் (7.10.2013 அன்று) மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க.வும் இணைந்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது. தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும். போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க. தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கழக மாவட்ட அமைப்பாளர் காளிதாசு, ம.தி.மு.க. மன்னை ஒன்றிய செயலாளர் சேரன் குளம் செந்தில்குமார், தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூரில்...

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை விருத்தாசலத்தில் ஜாதி மத வெறி சக்திகள் தாக்க முயன்றதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலைக் கண்டித்து சென்னையில் கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பார்ப்பனிய சக்திகள், சில ஜாதி வெறியர்களை சேர்த்துக் கொண்டு மிரட்டிப் பார்க்க வேண்டாம். பெரியார் இயக்கங்கள் பல்வேறு பெயரில் இயங்கினாலும் பெரியார்  கொள்கை பரப்புதலுக்கு தடை என்று வந்தால் அதை சந்திக்க களமிறங்கும். இதை பார்ப்பன சக்திகள் புரிந்து கொள்ளட்டும்! பெரியார் முழக்கம் 10102013 இதழ்

கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (செப்.22) மராட்டியத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுப் போராளி தபோல்கர் நினைவாக  பேராசிரியர் வசந்த் நடராசன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். மனித சமுதாய வரலாற்றைப் படித்தால் மற்ற எந்த காரணத்தையும்விட மதத்தின் பேரால் நடந்த போர்களே அதிகம் என்பதைப் பார்க்க முடிகிறது. சரியாகச் சொன்னால், எந்ததெந்தக் காலகட்டங்களில் மதமும் அதன் மீதான கொள்கைப் பிடிவாதமும் தீவிரமாகக் கோலோச்சினவோ அந்தக் கால கட்டங்களில்தான் மனிதர்கள் மீது மிகக் குரூரமான சித்திரவதைகளும் நடைபெற்றன. உதாரணமாக, கத்தோலிக்க சர்ச்சோடு உடன்படாதவர்களைக் கொடுமைப்படுத்திய ஸ் பானிய விசாரணைகள் நடைபெற்ற காலத்தைக் கூறலாம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கி வளர்ந்த நாசிசம் இரண்டாம் உலகப் போரில் போய் முடிந்தது. இப்போது ‘இஸ் லாமிய தீவிரவாதம்’ தலை தூக்கியிருப்பது, சிலர் குறிப்பிடுவதுபோல் வெவ் வேறு கலாச்சாரங்களுக்கு இடையே நடக்கும் மோதல் அல்ல. இஸ் லாம் மதத்துக்கும், கிறிஸ் துவ மதத்துக்கும் இடையிலான மோதல்தான். அதன்...

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடியில் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்திட கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 13.9.2013 அன்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஆதி தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். நெல்லை மண்டலச் செயலாளர் கோ.அ.குமார், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விளக்கவுரையாற்றினர். மாவட்டச் செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகரத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பால். அறிவழகன் மற்றும் பல தோழர்களும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டனர். நாகர்கோயிலில் 13.9.2013 அன்று கழக சார்பில் கோயிலில் முடங்கிடும் தங்கத்தைப் பொருளாதார சீர்கேட்டை தடுப்பதற்குப் பயன்படுத்தக் கோரி நாகர்கோயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் வழக்குரைஞர் வே.சதா...

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

22.9.2013 அன்று உடுமலை மடத்துக்குளம் வட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா, கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப் பிரச்சாரமாக நடைபெற்றது. விழாவிற்கு கழகச் செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையேற்றும், தமிழ்நாடு அறிவியல் மன்ற திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர் இரா. மோகன் முன்னிலையேற்றும் நடத்தி வைத்தனர். முதலில் பெதப்பம்பட்டியில் காலை 10 மணிக்கு கு.கவிதா கொடியேற்றினார். தொடர்ந்து நால்ரோட்டில் உடுமலை வட்ட அமைப்பாளர் ப. குணசேகரன், உடுமலை குட்டைத் திடலில் பெரியார் பிஞ்சு சு.ம. தேனிலா, சுடரொளி, உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், மடத்துக்குளம் நால் ரோட்டில் சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் முகில்ராசு, கடத்தூர் புதூரில் தமிழ்நாடு அறிவியல் மன்ற கோவை மாவட்ட பொறுப்பாளர் விஜயராகவன், கடத்தூரில் சு. துரைசாமி, காரத்தொழுவில் மாவட்டச் செயலர் அகிலன், கணியூரில் தம்பி பிரபா ஆகியோர் கொடி யேற்றினர். மாலை 3 மணிக்கு...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மதுரை மாநகராட்சி மரணச் சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இது குறித்து மேயர், ஆணையரிடம் அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார்.            – செய்தி விளக்கம் அளிப்பதற்கு முன்பு, மேயரும் ஆணையரும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ்களை கையோடு எடுத்து வரச் சொல்லுங்கள்; கவனம்! நாட்டிலுள்ள ஏழைகள் நாணயமானவர்கள்; நம்பத் தகுந்தவர்கள்.        – ப. சிதம்பரம் ஆகவே நாணயமானவர்களை அதிகரிக்கச் செய்வோம்! அவர்கள் எண்ணிக்கை பெருகு வதற்கு நம்பத் தகுந்த ‘பட்ஜெட்’ போடுவோம்! இந்து கோயில்களை உண்மையான பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.                                                – இல. கணேசன் “இவர் உண்மையான பக்தர்தான்” என்று எந்தக் கடவுளாவது நற்சான்றிதழ் தர முன் வந்தால் பரிசீலிக்கலாம். காந்தியடிகள் சிலைக்கு இலவச மின்சாரம் அளிக்க விதிகளில் இடமில்லை.  – சேலம் மின்சார வாரியம் அறிவிப்பு நியாயம் தானே? காந்திக்கு என்ன ஓட்டா இருக்குது? எனக்கு இந்தி தெரியாது. ஆனால், திருச்சியில் மோடி பேசிய விதமும்...

தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழ்நாட்டில் பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கூட்டணி உருவாக காய் நகர்த்தி வரும் காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், மோடியை நியாயப்படுத்தி, ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் எழுதிய கட்டுரைக்கு மறுப்புரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ஜீ.வி.’க்கு எழுதிய மறுப்பு இது. 9.10.2013 அன்று ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கதர் ஆடையில் காவிக் கறை எதற்கு?’ என்ற தலைப்பில் அந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறு சிறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அக்கட்டுரையின் முழுமையான வடிவத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. இந்தியாவில் அடுத்து அமையப் போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்று மலரப் போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராக இல்லை. தேர்தல் வழியாக மட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இல்லை. ஆனால், “இந்தியாவின்...

தமிழினப் போராளி நாமக்கல் நா.ப. இராமசாமி நினைவேந்தல் கூட்டம்

தமிழினப் போராளி நாமக்கல் நா.ப. இராமசாமி நினைவேந்தல் கூட்டம்

10.10.2013 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நாமக்கல் சுப்புலட்சுமி மகாலில் (23.9.2013 அன்று மறைந்த) தமிழினப் போராளி நா.ப.இராமசாமி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிலம்பொலி சு. செல்லப்பன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நா.ப. இராமசாமி படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெ. மணியரசன், வழக்கறிஞர் இரத்தினம், முன்னாள் அமைச்சர் காந்தி செல்வன், எழுத்தாளர் வேலுச்சாமி, கன. குறிஞ்சி, நிலவன், கி.வெ. பொன்னையன், பரமத்தி சண்முகம் உள்பட பலர் நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக நா.ப.இராமசாமி மகன் இரா. அன்பழகன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 17102013 இதழ்

மன்னையில் திலீபன் நினைவு நாள் கருத்தரங்கு

மன்னையில் திலீபன் நினைவு நாள் கருத்தரங்கு

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சரசுவதி பேசினார். பெரியார் 135 ஆவது பிறந்த நாள் மற்றும் தியாக மறவன் திலீபன் 26 ஆவது நினைவேந்தல் கருத்தரங்கம் கழகத்தின் சார்பில் மன்னார்குடி அம்பேத்கர் அரங்கத்தில் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது. தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இளையராஜா, நாகை மாவட்ட செயலாளர் மகேசு, தஞ்சை மாவட்ட செயலாளர் பாரி, எழுத்தாளர் பசு. கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில் பெரியாரின் படத்தினை கருக்கல் பத்திரிகை ஆசிரியர் அம்ராபாண்டியன், திலீபன் படத்தினை தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினர். இனப்படுகொலை போர் குற்றம் மனித...

தூத்துக்குடியில் நாத்திகம் இராமசாமி நினைவு நாள் கூட்டம்

தூத்துக்குடியில் நாத்திகம் இராமசாமி நினைவு நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரில் நாத்திகம் பி. இராமசாமி  4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும், பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமும் 24.9.13 செவ்வாய் மாலை 6 மணியளவில் சீரணி அரங்கில் நடைபெற்றது. ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் பா. முருகேசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, துணைத் தலைவர் வே.பால்ராசு, நெல்லை மண்டலச் செயலர் கோ.ஆ.குமார், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் சண்முகவேல், நீதித் துறை சு.க. சங்கர் ஆகியோர் உரைக்குப் பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றினார். ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரா. உதயகுமார் நன்றியுரையாற்றினார். மாவட்டச் செயலர் க. மதன், பொருளாளர் இரவி சங்கர், தூத்துக்குடி மாநகர செயலர் பால். அறிவழகன் மற்றும் ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாத்திகம் இராமசாமி மகன்கள் காமராஜ், ஜவகர், சுபாஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்....

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதை நிறுத்தக் கோரி சென்னையில் அக். 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்: ஒரு மதச் சார்பற்ற நாட்டில் அரசு அமைப்புகள் மத அடையாளங்கள் இன்றி இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். எந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் மதச் சடங்குகளை தடைப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. அதில் அடங்கியுள்ள மூடநம்பிக்கைகளை சமுதாய இழிவை கருத்துகளாக முன் வைக்கிறோம். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் உரிமை. அரசு நிறுவனங்கள் பல்வேறு மதநம்பிக்கை யாளர்களுக்கும், கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானது. அதில் ஒரு மதம் தொடர்பான சடங்குகளை நடத்துவது எப்படி நியாயமாகும்? இந்த கேள்வியை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளே கேட்டிருக்கின்றன. தாழையூத்து...

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சின்ன தம்பி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் நீல கிருஷ்ணபாபு வரவேற்புரை யாற்றினார். பேராசிரியர்கள் திருநீலகண்டன், முனைவர் சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா.சந்தானம்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ‘பெரியார் ஒரு சகாப்தம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சிவகுருநாதன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் நீலகிருஷ்ணபாபு, முருகன், ஜெயபால், ரந்தீர்குமார், முத்துலெட்சுமி, மனோன்மணி, சிவகுருநாதன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். பெரியார் முழக்கம் 17102013 இதழ்

காமன்வெல்த் : சில தகவல்கள்

காமன்வெல்த் : சில தகவல்கள்

இனப்படுகொலை நடத்திய இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கருத்து அழுத்தம் பெற்றுவரும் நிலையில் ‘காமன்வெல்த்’ பற்றிய சில தகவல்கள்: பிரிட்டிஷ் காலனியின் கீழ் இருந்த நாடுகள் உருவாக்கிக் கொண்ட அமைப்பே ‘காமன் வெல்த்’. இதில் உறுப்பு நாடுகள் விரும்பி தாமாகவே இணையலாம். விருப்பமில்லா விட்டால் விலகிக் கொள்ளலாம். 1972 ஆம் ஆண்டு பங்களாதேஷ் நாட்டுக்கு ஏற்பு வழங்கியதை எதிர்த்து பாகிஸ் தான் காமன்வெல்த்திலிருந்து விலகி மீண்டும் 1989 இல் இணைந்தது. மனித உரிமை மீறல்கள் மற்றும் திட்டமிட்ட முறைகேடான ஆட்சி நடத்திய குற்றச்சாட்டு களின் கீழ் 2002 ஆம் ஆண்டில் ஜிம்பாவே தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டது. அதற்காக 2003 ஆம் ஆண்டில் அந்த நாடு தன்னை விலக்கிக் கொண்டது. அதேபோல் ஜாம்பியா நாடு 2013 அக்டோபரில் காமன்வெல்த்திலிருந்து விலகிக் கொண்டது. காமன்வெல்த்துக்கு உறுப்பு நாடுகளை நீக்கி வைக்கும் உரிமை இல்லை. ஆனால், தீவிரப் பங்கெடுப்பிலிருந்து நாடுகளை...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

சில அனுபவங்கள் காரணமாக பில்லி, சூன்யம் இருந்தாலும் இருக்கலாம் என்ற எண்ணத்துக்கு நான் வந்துள்ளேன்.      – ‘துக்ளக்’கில் சோ விடாதீங்க… அவ்வளவும் பா.ஜ.க.வுக்கு விழக் கூடிய ஓட்டுகள்; உடனே வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்க…. தவறாக மரண தண்டனைகளை வழங்கி யுள்ளதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண் டிருக்கிறது. – ‘தினமணி’யில் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அதனால் என்ன? ஒரு அரசியல் சட்ட அமர்வை நியமித்து, தவறாக மரண தண்டனை வழங்கவும், பிறகு அதை தவறு என்று அறிவிக்கவும் உரிமை உண்டு என்று தீர்ப்பு எழுதிவிட்டால் ‘போதும்’! திருப்பதி ‘ஏழுமலை’யான் தனது இரண்டா வது திருமணத்துக்கு “குபேரனி”டம் கடன் வாங்கினார். அதற்கு செலுத்த வேண்டிய வட்டியைத்தான் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக இப்போதும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். -’தினத்தந்தி’ கட்டுரை. ப. சிதம்பரம் சார்! இந்த குபேரன் கடனை தள்ளுபடி செய்து, திருப்பதி உண்டியல் வசூலை உடனே நிறுத்துங்க… அம்பானிக்கு எல்லாம் கடன்...

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்கள் – காவல்நிலையங்களில் ஆயுத பூஜைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் களமிறங்கியது. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மயிலாடு துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவோடு சரசுவதி பூஜை கொண்டாட்டம் விழாவாக நடத்தப்பட்டதை எதிர்த்து களமிறங்கிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேட்டுப் பாளையத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கிய தோழர்கள் மீது பா.ஜ.க. ஆர்.எஸ் .எஸ் . காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டம் உருவானது. கழகத்தினர் மீது காவல்துறை பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. செய்தி விவரம். மயிலாடுதுறையில்: மயிலாடுதுறையில் கழகத் தோழர்கள் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்தவோ, கடவுள் படங்கள் வைப்பதோ கூடாது என்ற அரசு ஆணை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அனைத்து அலுவலகங்களுக்கும் காவல்நிலையங்களுக்கும் மாவட்ட தலைவர் மகாலிங்கம்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து இரங்கல்

கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து இரங்கல்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி அவர்களின் தாயார் கு.பாவாயம்மாள் 4.10.2013 அன்று முடிவெய்தியதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், தோழர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தனர். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (ம.தி.மு.க.), விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு முத்துசாமி, ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் இரா. அதியமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோபி. வெங்கிடு (தி.மு.க.), பனமரத்துப்பட்டி இராசேந்திரன் (தி.மு.க.), மேச்சேரி காமராஜ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி பேராசிரியர் திருநீலகண்டன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் சுந்தரராஜன் முதலானோர் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 23102013 இதழ்

தங்கப் புதையல்: சில கேள்விகள்

தங்கப் புதையல்: சில கேள்விகள்

உ.பி. மாநிலம் உள்ளாவ் பகுதியில் 1857 இல் சிற்றரசர் ராஜாராவ் ராம் பச்சன் – 1000 டன் தங்கத்தைப் “புதைத்த”போது 31 கிராம் தங்கத்தின் விலை 20 டாலர். ரூபாய்க்கும் அதே மதிப்புதான். ஒரு குறுநிலப் பகுதியின் சிற்றரசர் இந்த விலையில் ஆயிரம் டன் தங்கத்தை எப்படி வைத்திருந்தார்? அப்படியே வைத்திருந்தாலும் அவ்வளவு பெரும் தொகை அவரிடம் இருந்திருக்குமா? அப்படியே நிதி வசதி இருந்தாலும் அவ்வளவு பெரிய அளவில் தங்கத்தை அவரால் எங்கிருந்து பெற முடிந்தது? நாட்டின் வரலாற்று தொன்மங்களை தேடிக் கண்டுபிடித்து ஆய்வு நடத்த வேண்டிய தொல்பொருள் துறை, மூடநம்பிக்கைகளுக்கு துணை போகலாமா? பெரியார் முழக்கம் 23102013 இதழ்  

பா.ஜ.க. மாறிவிட்டதா?

பா.ஜ.க. மாறிவிட்டதா?

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர் வர்ணாஸ்ரம வெறியில் ஊறிப் போன முரளி மனோகர் ஜோஜி. அவர் பத்திரிகையாளர்களிடையே தங்களின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசத்துக்கு இடமில்லை என்று கூறியிருக்கிறார். அயோத்தியில் ராமன் கோயிலைக் கட்டுவது; இஸ் லாம், கிறிஸ் தவர்களுக்கான மதச் சட்டங்களை ஒழித்து பொதுவான சிவில் சட்டத்தை உருவாக்குவது; காஷ்மீருக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமையான 370 ஆவது பிரிவை ரத்து செய்வது – இந்த மூன்று கொள்கைகளும் தேர்தல் அறிக்கையில் நிச்சயமாக இடம் பெறும் என்று கூறிவிட்டார். அதேபோல், பசு பாதுகாப்பு, கங்கை நீரை தூய்மையாக்கும் திட்டம், சேது சமுத்திரத் திட்டததைக் கைவிடுவது என்பதிலும், சமரசத்துக்கு இடமில்லை என்கிறார். உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களை ஏமாற்ற மோடி, இராமன் கோயில் பிரச்சினையை பேசாமல் தவிர்த்தாலும் ஜோஷி உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.                                                                                        – இரா பெரியார் முழக்கம் 23102013 இதழ்

இந்து ‘தாலிபான்கள்’

இந்து ‘தாலிபான்கள்’

‘தாலிபான்’ பயங்கரவாதம் இஸ் லாமியர் களிடையே இருப்பதுபோல் இந்து ஜாதி வெறியர் களிடமும் இருக்கிறது. அரியானாவில் ‘ஜாட்’ சமூகத் தினர் நடத்தும் ஜாதிப் பஞ்சாயத்துகள் ‘தாலி பான்கள்’ போலவே செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. காதலித்து திருமணம் செய்தாலோ ஒரே கோத்திரத்தில் காதலித்தாலோ பெற்ற மகளையே கொலை  செய்துவிட வேண்டும் என்று உத்தரவு போடுகிறது இந்த ‘ஜாட்’கள் நடத்தும் ஜாதி பஞ்சாயத்து. 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் ஆடை களையே அணிய வேண்டும்; சக மாணவர்களிடம் பேசக் கூடாது; அலைபேசி வைத்துக் கொள்ளக் கூடாது; ஒரே வாகனத்தில் பயணம் செய்யக் கூடாது என்றெல்லாம் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளனர். நகரத்துக்கு படிக்கச் செல்லும் இளம் பெண்கள் அங்கே நவீன உடைகளை அணியாமல் இருக்கிறார்களா? ஆண் நண்பர்களுடன் பழகாமல் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உளவுப் பிரிவையும் அமைத்துள்ளார்களாம். தங்களுக்கு தாங்களே சட்டங்களையும் தண்டனைகளையும் உருவாக்கிக் கொண்டு திரியும் இந்த ஜாதி வெறியர்களிடம் சட்டம்...

‘கணித மேதை’யின் கதை

‘கணித மேதை’யின் கதை

‘கணித மேதை’ என்று அழைக்கப்படும் ராமானுஜம் (அய்யங்கார்) வரலாற்றைப் படமாக எடுத்து வருகிறார், பெரியார் படத்தை இயக்கிய ஞான. ராஜசேகரன். இந்திய சமூகம், சிறந்த அறிவாளிகளை அங்கீகரிப்பது  இல்லை என்பதே இந்தப் படத்தின் மய்யமான கருத்து என்றும், வேதகாலத்திலிருந்தே இதுதான் நிலை என்றும்  அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிற்காலத்தில் கணிதத்தில் மேதையாக விளங்கிய இராமானுஜம், ‘இன்டர்மீடியட்’ படிப்பில் தோல்வி அடைந்தவர் என்பது, ஒரு முக்கிய செய்தி. மதிப்பெண் – ஒருவருடைய அறிவாற்றலுக்கான மதிப்பீடு இல்லை என்பதற்கு இவரே ஒரு உதாரணம் தான்! குடும்பத்துக்குப் பயந்து வீட்டைவிட்டு ஓடி விட்டார். அவரது தந்தை 1905 ஆம் ஆண்டு மகனைக் காணவில்லை என்று ‘இந்து’ ஏட்டில் படத்துடன் விளம்பரம் செய்து மகனைக் கண்டுபிடித்தார். ஜி.எச்.ஹார்டி என்ற வெளிநாட்டுக்காரர்தான் – இராமானுஜத்தின் அறிவைக் கண்டறிந்து, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்தார். சென்னை திரும்பிய இராமானுஜர், இறுதி காலத்தில் அவரது பார்ப்பன...

அர்ச்சகர்களுக்கு தேர்வு

அர்ச்சகர்களுக்கு தேர்வு

அர்ச்சகர்கள் – பிறவியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதற்கான தகுதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்  உச்சநீதிமன்றம் வரை போகிறார்கள். ஆனால், கேரளாவில் அர்ச்சகர் நியமனம் அப்படி அல்ல. அங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகி விட்டார்கள். ‘கேரள தேவஸ் வம் போர்டு’ என்ற மாநில அரசின் கோயில் நிர்வாக அமைப்பு அர்ச்சகர்களாக பணிபுரிவோருக்கு பூஜை சடங்கு ‘தாந்திரீகம்’ மந்திரம் ஒதுதல் போன்ற சடங்குகளுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தி, பிறகு தேர்வு நடத்த முடிவு செய்தது. ஏற்கனவே அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பயிற்சியில் சேராமலேயே தேர்வு எழுதலாம் என்றாலும், அவர்கள் திறமையை சோதிக்க நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது இரண்டு பேர் மட்டுமே சரியான விடை தந்தார்கள். 95 பேருக்கு அர்ச்சகருக்குரிய பயிற்சி இல்லை. எனவே அவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுத வேண்டும் என்று தேவஸ் வம் போர்டு அறிவித்துள்ளது. தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக...

சோதிடத்தை நம்பும் அரசியல்வாதிகள்

சோதிடத்தை நம்பும் அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளை சோதிடம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றை மத்திய அரசின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற என்.ஆர்.கிருஷ்ணன், ‘இந்து’ ஆங்கில ஏட்டில் (அக்.6) எழுதியுள்ளார். பெயர்களை குறிப்பிடாமல் பல சுவையான சம்பவங்களை அவர் பதிவு செய்துள்ளார். 1980 ஆம் ஆண்டில் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் முதல்வர் அமைச்சர் களோடு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பதற்கு சோதிடர்களைக் கலந்து ஆலோசித்தார். நாள், நேரம் குறித்து அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப் பட்டன. காலை 10 மணிக்கு பதவி ஏற்க வேண்டும். பதவி ஏற்கும் நாளில் சோதிடர்கள் முதல்வரை அணுகி 10.02க்கு முதல்வர் பதவி ஏற்காவிட்டால், 5 ஆண்டுகாலம் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறவே, எல்லா நிகழ்ச்சிநிரல்களும் அவசரமாக மாற்றியமைக்கப்பட்டு, சோதிடர்கள் குறித்த சரியான நேரத்தில் முதல்வர் பதவி ஏற்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் டெல்லிக்கு பறந்து போய் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த நாள்...

‘அரிதிலும் அரிதான’ வழக்கு: புதிய பார்வை

‘அரிதிலும் அரிதான’ வழக்கு: புதிய பார்வை

சுஷில் சர்மா – டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது. தனது மனைவியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி தந்தூரி ரொட்டி சுடும் அடுப்பு நெருப்பில் போட்டு எரித்தார் என்பது குற்றச்சாட்டு. அரிதினும் அரிதான வழக்கில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்கலாம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கொடூரமான கொலைகள் தான் அரிதிலும் அரிதாக கருதப்பட வேண்டும் என்று இதற்கு தவறாக பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளி திருந்தி வாழவே முடியாது என்ற உறுதியான முடிவுக்கு வரும் நிலைக்கு குற்றம் புரிந்தால் மட்டுமே அரிதிலும் அரிதான வழக்கு என்ற முடிவுக்கு வர முடியும் என்ற கருத்தை சுஷில் சர்மா வழக்கில் இப்போது உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி யிருக்கிறது. இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சுஷில் சர்மா, எதிர்காலத்தில் திருந்தி வாழவே மாட்டார் என்பதற்கான சான்றுகளை அரசு தரப்பு...

மத ஆய்வரங்கில் கொளத்தூர் மணி உரை: அறிவியலுக்கு எதிராக நிற்கும் மதங்கள்!

மத ஆய்வரங்கில் கொளத்தூர் மணி உரை: அறிவியலுக்கு எதிராக நிற்கும் மதங்கள்!

மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் அறிவியலுக்கு எதிராகவே அனைத்து மதங்களும் இருக்கின்றன என்றார், கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி. இந்தியா புனித தோமா வழித் தமிழ்க் கிறிஸ் துவ நாடே – எவ்வாறு? என்ற தலைப்பில் மூன்று நாள் ஆய்வரங்கம் நடைபெற்றது. மகாபலிபுரம் அரசினர் சிற்பக் கல்லூரி அருகிலுள்ள Scripture Union Centre இல் நடைபெற்ற இந்த ஆய்வரங்கின் முதல் நாளான 27.08.2013 செவ்வாய் கிழமை அன்று காலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்க உரையாற்றினார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் பேராசிரியர் முனைவர் க. இராமசாமி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் ஆய்வு கருத்துரை வழங்கி, மறுப்புக் கேள்விகளுக்கான பதில் அளித்தார். ஆய்வரங்க முடிவின் தீர்ப்பினை வழங்குவதற்கு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையின் சுருக்கம்: சமயம் தொடர்பான இந்த ஆய்வரங்கில், சமயத்...

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்று, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப் பேச வேண்டுமே தவிர, அதைப் புறக்கணிப்பது சரியாகாது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற பாடம்; சமாதானப்படுத்தல்’ என்ற விசாரணை ஆணையம் – ஆண்டுகள் ஓடியும் எந்த விசாரணையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 13 ஆவது சட்டத்திருத்தத்தில் மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலஉரிமை மற்றும் காவல்துறையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளையும் நீதிமன்றம் வழியாக இலங்கை அரசு பறித்துக் கொண்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் முறியடிக்கப்பட்டுவிட்டது. சிங்களர்களின் இன வெறியை திருப்திப்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆட்சியிடம் இனியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது? வடக்கு மாகாணத்தின் முதல்வராக தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட விக்னேசுவரன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கூறும்போது, தமிழகத்தில் மட்டும் ஈழ ஆதரவாளர்கள்...

தோழர் தமிழருவி மணியனுக்கு கொளத்தூர் மணி விளக்கம்

தோழர் தமிழருவி மணியனுக்கு கொளத்தூர் மணி விளக்கம்

ஆர்.எஸ் .எஸ் . கருத்துகள் சமூகத்தைச் சீர்குலைத்துவிடும். தோழர் தமிழருவி மணியனுக்கு இரண்டாவது முறையாக பதிலளித்து, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய கட்டுரை. ஜூ.வி.யில் சில திருத்தங்களுடன் வெளி வந்துள்ளது. கட்டுரையின் முழு வடிவம் இங்கே வெளியிடப்படுகிறது. ‘நம்மிடம் கேட்பதற்கு சில நியாயமான சந்தேகங்கள் உண்டு’ என்று அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுத்திருக்கிறார் தமிழருவி மணியன். தேர்தல் களத்தில் மூன்றாவது அணிக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது என்பதே அவரது ஆவேசமான கேள்விகள். இது நம்மிடம் தொடுக்கப்பட வேண்டிய கேள்விகள் அல்ல என்பதே நமது பணிவான பதில். நாம் மூன்றாவது அணிக்கான அமைப்பாளராக நம்மை நியமித்துக் கொள்ள வில்லை. எது முதல் அணி, எது இரண்டாவது அணி என்பதும் நமக்குத் தெரியாது. பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஆர்.எஸ் .எஸ் . நேரடியாக களமிறக்கியிருக்கும் மோடிக்கு – தமிழகத்தில் ஆதரவுத் தளத்தை வலிமைப்படுத்தும் முயற்சிகள் தந்த கவலைதான் – தமிழருவி மணியனுக்கு எதிர்...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

உ.பி.யில் பழங்கால கோட்டையின் கீழ், 1000 டன் தங்கம் புதைத்திருப்பதாக தனது கனவில் கிடைத்த செய்தியை ஒரு சாமியார் மத்திய அமைச்சரிடம் கூற, உடனே தொல்பொருள் துறை புதையலைத் தேடி தோண்டி வருகிறது. – செய்தி நல்ல சேதி. ஆனாலும், அமைச்சரிடம் சாமியார் நேரில் வந்து சொன்னாரா? அல்லது சாமியார் சொல்வதுபோல் அமைச்சர் கனவு கண்டாரா என்பதை உறுதி கொள்ளுங்கள். வாக்கு வங்கி அரசியலை ஒரேயடியாக குழி தோண்டிப் புதைக்க வேண்டும். – கான்பூரில் மோடி அப்படி எல்லாம் செய்யாதீங்க. அப்புறம் எவராவது கனவு கண்டு பூமிக்கடியில் வாக்குகள் புதைந்து கிடக்கிறது என்றால், அதிகாரிகள் குழிதோண்ட ஆரம்பித்து விடுவார்கள். கான்பூரில் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடை வா°துப்படி சோதிடர்கள் ஆலோசனை பெற்று அமைக்கப்பட்டது. – செய்தி ஒலி பெருக்கி, மின் விளக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் வா°து உண்டா? அரசின் பொதுத் துறை நிறுவனத்துக்கு மட்டுமே ஒரிசா நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க வேண்டும் என்று...

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் திறப்பு: தமிழர் வரலாற்றில் திருப்புமுனை நிகழ்ச்சி

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் திறப்பு: தமிழர் வரலாற்றில் திருப்புமுனை நிகழ்ச்சி

திறப்பு நிகழ்ச்சி : 8.11.13 வெள்ளி மாலை 5 மணி – தஞ்சாவூர் 9, 10.11.2013 சனி, ஞாயிறு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கருத்தரங்குகள் – இசையரங்குகள் தமிழகத் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், உலகத் தமிழர்கள், திரையுலகக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். உலகத் தமிழர் பேரமைப்பு அழைக்கிறது! தமிழர்களே திரண்டு வருக! பெரியார் முழக்கம் 30102013 இதழ்