நாத்திகர் பேரணி முழக்கங்கள்

செப்.1 அன்று நடந்த சென்னை நாத்திகர்  பேரணியில் எழுப்பிய முழக்கங்கள்.

நம்பாதீங்க! நம்பாதீங்க!

சாமியார்  கூட்டத்தை நம்பாதீங்க!

நாட்டு நடப்ப பாருங்க!

ஏமாத்துறான் பாருங்க!

நம்பி வந்த பெண்களை

கெடுக்கிறானுக பாருங்க!

ஏமாத்துறதைப் பாருங்க!

ஜெயிலுக்குள்ளே பெயில் கேட்டு

கம்பி எண்ணுறான் பாருங்க!

நம்பாதீங்க! நம்பாதீங்க!

சோதிடத்தை நம்பாதீங்க!

நல்ல நேரம் பார்த்து

சோதிடத்தை பார்த்து

நடத்தி வச்ச கல்லாணம்

ரத்து கேட்குது பாருங்க!

பொய்யுங்க! பொய்யுங்க!

சோதிடம் எல்லாம்  பொய்யுங்க!

நல்ல நேரம் கெட்ட நேரம்

நல்லவனுக்கு வேணாங்க!

ராகு காலம், எமகண்டம்

எந்த நாட்டில் இருக்குங்க!

பொய்யப்பா! பொய்யப்பா!

வாஸ்து சாஸ்திரம் பொய்யப்பா!

புயலடிச்சி பூகம்பம் வந்தா

வாஸ்து வீடு இடியாதா?

வங்கிக் கடன் கட்டாட்டி

வாஸ்து வீடு ஏலம் போகாதா?

தமிழக அரசே! தமிழக அரசே!

தடை செய்! தடை செய்!

மூடநம்பிக்கைகளை தடை செய்!

சட்டமியற்று சட்டமியற்று!

மூடதனத்தை ஒழித்திடவே!

சட்டம் இயற்று! சட்டம் இயற்று!

வீரவணக்கம்! வீரவணக்கம்!

துப்பாக்கிக் குண்டுக்கு பலியான

தபோல்கருக்கு வீரவணக்கம்!

எல்லாம் கடவுள் சக்தி என்றால்

நோய் கொடுத்தது யாருங்க?

எல்லாம் கடவுள் சக்தி என்றால்

வறுமையை தந்தது யாருங்க?

எல்லாம் கடவுள் சக்தி என்றால்

குற்றங்கள் பெருகுவது ஏனுங்க?

எல்லாம் கடவுள் சக்தி என்றால்

பொருளாதார நெருக்கடி ஏனுங்க?

எல்லாம் கடவுள் சக்தி என்றால்

கோயிலுக்கு பூட்டு  ஏனுங்க?

எல்லாம் கடவுள் சக்தி என்றால்

உண்டியல் திருட்டு  ஏனுங்க?

எல்லாம் கடவுள் சக்தி என்றால்

சாமி சிலை திருட்டு  ஏனுங்க?

எல்லாம் கடவுள் சக்தி என்றால்

மதத்துக்குள் சண்டை  ஏனுங்க?

எல்லாம் கடவுள் சக்தி என்றால்

சாதி சண்டை  ஏனுங்க?

உரிமை உண்டு! உரிமை உண்டு!

எங்களுக்கு உரிமை உண்டு!

பகுத்தறிவை பரப்பிடவே

எங்களுக்கு உரிமை உண்டு!

 

பெரியார் முழக்கம் 12092013 இதழ்

You may also like...