ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சின்ன தம்பி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் நீல கிருஷ்ணபாபு வரவேற்புரை யாற்றினார். பேராசிரியர்கள் திருநீலகண்டன், முனைவர் சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா.சந்தானம்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ‘பெரியார் ஒரு சகாப்தம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சிவகுருநாதன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் நீலகிருஷ்ணபாபு, முருகன், ஜெயபால், ரந்தீர்குமார், முத்துலெட்சுமி, மனோன்மணி, சிவகுருநாதன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

பெரியார் முழக்கம் 17102013 இதழ்

You may also like...