தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை விருத்தாசலத்தில் ஜாதி மத வெறி சக்திகள் தாக்க முயன்றதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலைக் கண்டித்து சென்னையில் கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பார்ப்பனிய சக்திகள், சில ஜாதி வெறியர்களை சேர்த்துக் கொண்டு மிரட்டிப் பார்க்க வேண்டாம்.

பெரியார் இயக்கங்கள் பல்வேறு பெயரில் இயங்கினாலும் பெரியார்  கொள்கை பரப்புதலுக்கு தடை என்று வந்தால் அதை சந்திக்க களமிறங்கும். இதை பார்ப்பன சக்திகள் புரிந்து கொள்ளட்டும்!

பெரியார் முழக்கம் 10102013 இதழ்

You may also like...