நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

நீங்க செய்வது தப்புங்க தமிழரே!

சொன்னா கேளுங்க

சுயமரி யாதை வேணுங்க – பெரியார்

சொன்னதையுங் கொஞ்சம்

சிந்திச்சிதான் பாருங்க! தமிழரே….

நீங்க செய்த தெய்வத்துக்கு

நீங்க பூசை செய்யத் தடுப்பவ னாருங்க? – கொஞ்சம்

நீங்க நெனைச்சிப் பாருங்க – தடுப்பாணை

நீங்களே உங்க வீட்டுக் கழைப்பது தப்புங்க!

பள்ளுப் பறைய னென்றாக்கிப்

பிறப்பிலே ஊனத்தை செய்தவ னாருங்க? – கொஞ்சம்

உண்மை உணர்ந்திடப் பாருங்க – அந்த

உலுத்தனை நீங்களே சாமிஎன் றழைப்பது தப்புங்க!

ஆரிய வேதத்தை மதமென்றே

அருந்தமிழ் நெறியைக் கெடுத்தவ னாருங்க? – கொஞ்சம்

ஆர யோசித்துப் பாருங்க – ஆரிய

அயோக் கியனை விட்டு வைப்பதே தப்புங்க!

எங்கிருந்தோ வந்தே நம்மிடம்

இரந்து தின்று கிடந்தவ  னாருங்க? – கொஞ்சம்

நீங்களே எண்ணிப் பாருங்க – அந்த

நன்றி கேடனைக் கும்பிட்டுக் கூனுவது தப்புங்க!

தமிழையும் மண்ணையும் கெடுத்தும்

தானே மேலோன் என்பவ  னாருங்க? – கொஞ்சம்

சுரணையோ டெண்ணிப் பாருங்க – பார்ப்பான்

சூழ்ச்சிக்கு ஆட்பட்டு அடிமை யாவது தப்புங்க!

உலகத் தமிழருக் கெதிலுமே

துன்பம் நேர்ந்திடக் காரணம்  யாருங்க? – கொஞ்சம்

உளமாறச் சிந்திச்சிப் பாருங்க – பார்ப்பானை

உங்களை ஆள விட்டது உங்களின் தப்புங்க!

– அற்புதன்

பெரியார் முழக்கம் 03102013 இதழ்

You may also like...