தூத்துக்குடியில் நாத்திகம் இராமசாமி நினைவு நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரில் நாத்திகம் பி. இராமசாமி  4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும், பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமும் 24.9.13 செவ்வாய் மாலை 6 மணியளவில் சீரணி அரங்கில் நடைபெற்றது.

ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் பா. முருகேசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, துணைத் தலைவர் வே.பால்ராசு, நெல்லை மண்டலச் செயலர் கோ..குமார், ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் சண்முகவேல், நீதித் துறை சு.. சங்கர் ஆகியோர் உரைக்குப் பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றினார். ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரா. உதயகுமார் நன்றியுரையாற்றினார்.

மாவட்டச் செயலர் . மதன், பொருளாளர் இரவி சங்கர், தூத்துக்குடி மாநகர செயலர் பால். அறிவழகன் மற்றும் ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாத்திகம் இராமசாமி மகன்கள் காமராஜ், ஜவகர், சுபாஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேல ஆழ்வார்தோப்பிலுள்ள நாத்திகம் இராமசாமி நினைவிடத்திற்குச் சென்று மலர் மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

பெரியார் முழக்கம் 17102013 இதழ்

 

You may also like...