இந்து ‘தாலிபான்கள்’

‘தாலிபான்’ பயங்கரவாதம் இஸ் லாமியர் களிடையே இருப்பதுபோல் இந்து ஜாதி வெறியர் களிடமும் இருக்கிறது. அரியானாவில் ‘ஜாட்’ சமூகத் தினர் நடத்தும் ஜாதிப் பஞ்சாயத்துகள் ‘தாலி பான்கள்’ போலவே செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. காதலித்து திருமணம் செய்தாலோ ஒரே கோத்திரத்தில் காதலித்தாலோ பெற்ற மகளையே கொலை  செய்துவிட வேண்டும் என்று உத்தரவு போடுகிறது இந்த ‘ஜாட்’கள் நடத்தும் ஜாதி பஞ்சாயத்து. 10 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் ஆடை களையே அணிய வேண்டும்; சக மாணவர்களிடம் பேசக் கூடாது; அலைபேசி வைத்துக் கொள்ளக் கூடாது; ஒரே வாகனத்தில் பயணம் செய்யக் கூடாது என்றெல்லாம் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளனர். நகரத்துக்கு படிக்கச் செல்லும் இளம் பெண்கள் அங்கே நவீன உடைகளை அணியாமல் இருக்கிறார்களா? ஆண் நண்பர்களுடன் பழகாமல் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க உளவுப் பிரிவையும் அமைத்துள்ளார்களாம். தங்களுக்கு தாங்களே சட்டங்களையும் தண்டனைகளையும் உருவாக்கிக் கொண்டு திரியும் இந்த ஜாதி வெறியர்களிடம் சட்டம் நெருங்கவே பயப்படுகிறது. இஸ் லாமிய ‘தாலிபான்கள்’ போலவே இந்து தாலிபான்களும் இருக்கிறார்கள். நாட்டை சட்டம் ஆட்சி செய்கிறதா? ஜாதி வெறிக் குழுக்கள் ஆட்சி செய்கிறதா?

பெரியார் முழக்கம் 23102013 இதழ்

You may also like...