கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நங்கவள்ளி கிளைக் கழக சார்பில் எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 26.07.2023 அன்று மாலை 5 மணியளவில் தானாபதியூர் பகுதியில் காவல் துறை அனுமதியுடன் நடைபெற்ற போது, திட்டமிட்டு தெருமுனைக் கூட்டத்தை தடுத்து நிறுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட இந்து முன்னணியினர் மீது கழக தோழர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாத காலம் ஆகியும், வழக்கு பதிவு செய்யாத நங்கவள்ளி காவல் துறையை கண்டித்து. 24.08.2023 (வியாழன்) மாலை 4 மணிக்கு நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூர்யகுமார், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் இராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, கழக தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், கழக தலைமைக் குழு உறுப்பினர் RS சக்திவேல், வனவாசி நகர செயலாளர் உமாசங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிரைவுறையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நங்கவள்ளி, வனவாசி, மேட்டூர், மேட்டூர் RS, கொளத்தூர், காவலாண்டியூர், இளம்பிள்ளை, ஏற்காடு, கருப்பூர், கே.ஆர்.தோப்பூர், குரங்குசாவடி, மூலப்பாதை, சேலம் மாநகரம், ஆத்தூர் ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து கழக தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரியார்முழக்கம் 31082023

You may also like...