கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

சென்னை : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரைக் கூட்டங்கள் வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, சைதாப்பேட்டை கங்கையம்மன் கோயில் தெரு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல், மங்களாபுரம், ஓட்டேரி அஞ்சு லைட், ஜாயின்ட் அலுவலகம், அயன்புரம் உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 24 வரை நடைபெற்றது.

உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி மற்றும் ஈரோடு பேரன்புவின் ராப் இசை பாடல்களுடன் ஒவ்வொரு கூட்டமும் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, பெரியார் நம்பி, மக்கள் அதிகாரம் காமராஜ், துணைவேந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

மேற்கண்ட கூட்டங்களை வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, ஏசு குமார், ராஜன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

திண்டுக்கல் : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட பரப்புரை இயக்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேடசந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட  நவாமரத்துப்பட்டி, சுள்ளெறும்பு, சாலையூர், சீத்தமரத்துப்பட்டி, சேனங்கோட்டை, விருதலைப்பட்டி, காசி பாளையம், கூம்பூரி, அலகாபுரி, விட்டல்நாயக்கன்பட்டி, வடமதுரை, தென்னம்பட்டி, எரியோட்டி, வேடசந்தூர் பேருந்து நிலையம், வேடசந்தூர் ஆத்துமேடு, திண்டுக்கல் மாநகருக்குட்பட்ட S.T. JOSEPH Hospital, தலைமை அஞ்சலகம், ரவுண்டு ரோடு, திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 21 தொடங்கி பிப்ரவரி 24 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.

 

அனைத்துக் கூட்டங்களிலும் சர்வாதிகாரி மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக சர்வாதிகாரம் வீழ்த்துவோம் என்கிற பாடலை தோழர் பெரியார், கபாலி இருவரும் விளக்கி பாடினார்கள்.

மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, முனைவர். உஷாராணி, ஆயக்குடி பேரூர் அமைப்பாளர் சங்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட இணையதள பொறுப்பாளர் ராஜா, தமிழ்நாடு மாணவர் கழக ஆயுதன் ஆகியோர் மோடி ஆட்சியில் பறிபோகும் மாநில உரிமைகள் – சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினர்.

பயணத்தில் தேனி ராயன், நத்தம் குமார், தங்கமுத்து, சுரேகா, மீனாலட்சுமி, சூர்யா, லோகேஷ், அலெக்ஸ், இளம்பரிதி, ஆரியா, லல்லு பிரசாத், சந்தோஷ் துர்க்கைராஜ், குமார், ஜெயசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சேலம் : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரைக் கூட்டம் 24.02.2024 அன்று சின்னப்பம்பட்டி, மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை பேருந்து நிறுத்தம், சித்தர்கோவில் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

இளம்பிள்ளை கோபி – திவ்யா ஆகியோரின் “சர்வாதிகாரம் வீழ்த்துவோம்” என்ற பரப்புரைப் பாடலுடன் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார், இளம்பிள்ளை கோபி வரவேற்புரையாற்றினார், இளம்பிள்ளை நகரத் தலைவர் ரமேஷ், தமிழ்மணி, அசோக், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், தமிழ்நாடு மாணவர் கழக வழக்கறிஞர் செல்வகுமார், ஏற்காடு நித்யஸ்ரீ, இளம்பிள்ளை திவ்யா ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி கருத்துரையாற்றினர்.

நிறைவாக சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை நன்றி கூறினார். கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், இளம்பிள்ளை பகுதி அசோக், ரமேஷ், தங்கதுரை, முத்துமாணிக்கம், திவ்யா, கோபி, சேகர், கவியரசு, நங்கவள்ளி பகுதி கிருஷ்ணன், பிரபாகரன், மேட்டூர் முத்துராஜ், ஏற்காடு பெருமாள், தேவா, செல்வமூர்த்தி, நித்யஸ்ரீ, ஜாஸ்மின்ஸ்ரீ, தமிழ்நாடு மாணவர் கழக செல்வா, பார்த்திபன், காவேரி, செல்வம், தமிழ்மணி, நிலா, தமிழ், நிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 29022024

You may also like...