கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட பரப்புரைக் கூட்டமானது மார்ச் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
மார்ச் 14ஆம் தேதி மூரார்பாளையம், கள்ளக்குறிச்சி மந்தைவெளி, சின்ன சேலம் பேருந்து நிலையம், நைனார்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் கா.மதியழகன் தலைமை தாங்கினார். இதில் மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர் ராமலிங்கம், சின்ன சேலம் விசிக ஒன்றியச் பொருளாளர் மைக்கேல், அஜித், வழக்கறிஞர் ஆனந்த், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க. ராமர், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சாக்ரடீசு, விசிக தலித் சந்திரன் தபெதிக மாவட்டச் செயலாளர் செ.பிரபு ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.
இரண்டாவது நாளாக 16.3.2024 அன்று மு.நாகராஜ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. புதுப்பட்டு பேருந்து நிலையம், சங்கராபுரம், வாணாபுரம் பகண்டை கூட்டுச்சாலை, கடுவனூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை, இரா. கார்மேகம், மு நாகராஜ், மா.குமார், ரா.ஜீவா, திருவண்ணாமலை மாவட்ட கழக ஒருங்கிணைப்பாளர் இரா. வீரமணி, ஏ. ஜெயப்பிரகாஷ் பரமநத்தம் ராவணன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மதுரை : மதுரை மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட பரப்புரைக் கூட்டமானது மார்ச் 11,12,13 ஆகிய தேதிகளில் மதுரை டி.எம்.கோர்ட், மேலப் பொன்னகரம், பெத்தானியபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இதில் திராவிட முன்னேற்றக் கழகம், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் தேசக் குடியரசு இயக்கம், மக்கள் சட்ட உரிமை இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தின் பாராட்டி பெத்தானியபுரம் ஆட்டோ ஓட்டுநர்கள் கழக செயல்வீரர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். மேலப் பொன்னகரத்தில் நடைபெற்ற கூட்டத்தை கவனித்த பொதுமக்கள் கழகத் தோழர்களுக்கு தேனீர் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைக்கல் மேடு, மணிக்கூண்டு, உடையம்பட்டி, நரசிங்கபுரம், முல்லைவாடி, ராஜேந்திரா பேக்கரி உள்ளிட்ட ஆறு இடங்களில் பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 வரை நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பெரியார் விழுதுகள் ரிஷிவிந்தன் – அரவிந்தன் ஆகியோரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் மகேந்திரன் – கணபதி குழுவின் அரசியல் நையாண்டி நடைபெற்றது.
செல்வராஜ், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் : நாச்சியார்கோயில் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நாச்சியார் கோயில் வடக்கு வீதியில் 14.3.3024 வியாழன் மாலை 6 மணியளவில் குடந்தை ஒன்றிய அமைப்பாளர் சா.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது, சோலை மாரியப்பன் வரவேற்புரையாற்றினார்.
தஞ்சை மாவட்டச் செயலாளர் கு. பாரி, மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம், குடந்தை திராவிடர் கழக மாநகரத் தலைவர் வழக்குரைஞர் ரமேசு ஆகியோர் கருத்துரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து கழக பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.
நிறைவாக திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் மா. கரிகாலன் நன்றி கூறினார். இதில் திவிக ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் க. சொ. சிவசுப்பிரமணியன், மனிதநேய மக்கள் கட்சிப் பொறுப்பாளர் இராஜ் முகமது, மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சாத்தையன், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் வீர.கோவிந்தராஜன், அரங்க. இராசா, வே. குணசேகரன், அ. சங்கர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 21032024 இதழ்

You may also like...