Category: குடி அரசு 1937

இரு மசோதாக்கள்  யார் வகுப்புவாதிகள்?

இரு மசோதாக்கள் யார் வகுப்புவாதிகள்?

  முன்னேற்றத்துக்கு யார் முட்டுக்கட்டை! பார்ப்பனீயத்தின் விளைவு இந்தியாவில் இன்று இரண்டு வகுப்பார்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சிறிது கூட விவகாரமே இருக்காது என்று கருதுகிறோம். அதாவது ஒன்று : பெண் மக்கள். இரண்டு : தீண்டப்படாத மக்கள் என்பவர்கள். இவ்விரு கூட்டத்தாரும் கல்வியில் 100க்கு ஒருவர் இருவர் கூட படித்தவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லத்தக்கதாகத்தான் இருக்கிறார்கள். செல்வத்திலோ பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. ஏனெனில் சட்டப்படியே பெண்களது வாழ்க்கை என்பது ஆண்களுக்கு அடிமை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். பெண்கள் கற்று இருப்பதும் சொத்து வைத்திருப்பதும் மிக அருமையாகத்தான் இருக்கும். அதுபோலவே தீண்டப்படாதவர்கள் என்கின்றவர்கள் நிலையும் சமுதாய ஒழுங்குப்படியே மனிதத்தன்மை அற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் பிறவித் தொழிலாளிகள், செல்வம் சேர்க்க சந்தர்ப்பமும், சமசுதந்திரமும் இல்லாதவர்கள். சட்ட நிர்பந்தத்தினாலல்லாது படிக்கவோ அரசியல் ஸ்தானம் பெறவோ முடியாதவர்கள். இப்படிப்பட்ட இரு சமூகத்தாரையும் பற்றி அரசாங்கம் கவனித்ததல்லாமல் இதுவரை எந்த ஜனத்...

  சுயமரியாதை இயக்கத் தத்துவம்  கடவுள் மத ஆபாசங்கள்

 சுயமரியாதை இயக்கத் தத்துவம் கடவுள் மத ஆபாசங்கள்

  தோழர்களே! இந்த நாமக்கல் கொஞ்சகாலமாகவே காங்கரஸ் கோட்டை என்று சொல்லப்படுவதாகும். எனினும் நமது சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலர் இங்கு எப்படியோ ஒரு மகாநாடு கூட்டிவிட்டார்கள். நாங்கள் வரும் போது உண்மையிலேயே சற்று பயத்துடனேயே வந்தோம். சு.ம. மகாநாடு அவ்வளவு திருப்திகரமாய் நடக்காது என்றும், காங்கரசின் காலித்தனத்திற்கு முகம் கொடுக்க வேண்டி வருமென்றும் உள்ளூர் பொது ஜனங்கள் ஆதரவு சரியாய் இருக்காதென்றும் கருதினோம். ஆனால் இங்கு வந்த பிறகு எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும்படியான நிலையில் இம்மகாநாடு நடந்திருக்கிறது. எங்களுக்கு நீங்கள் அளித்த ஆடம்பரமான வரவேற்பும் காட்டிய உற்சாகமும், அன்பும் உண்மையிலேயே எங்களை நாங்களே பாராட்டிக் கொள்ளும் மாதிரியாக ஏற்படுத்தி விட்டது. கண்டறியா அருங்குணம் தவிரவும் எனது பொது வாழ்வில் காங்கரசுகாரரிடம் இவ்வளவு நாளும் கண்டறியாத ஒரு அருங்குணத்தைப் பார்த்ததில் நிஜமாகவே நான் மெய்மறக்கும்படி மயக்கம் ஏற்பட்டு விட்டது. என்னவெனில் எங்கள் கூட்டங்களுக்கு காங்கரஸ்காரர்கள் போகக் கூடாது என்றும், போனாலும்...

இன்னுமா சந்தேகம்?

இன்னுமா சந்தேகம்?

காங்கரசுக்காரர்கள் மக்கள் கல்விக்கு குழிதோண்டி விட்டார்கள் ~cmatter காங்கரஸ்காரர்கள் பதவி ஏற்றது முதல் கொண்டு பாமர மக்களின் கல்வியில் கெட்ட எண்ணம் வைத்து அதை ஒழிப்பதில் மிக்க கவனமாய் வேலை செய்து வருகிறார்கள் என்பது நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வருகிறது. ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி ஏற்பட வேண்டியதே முக்கியமாகும். இந்தியாவானது இன்று அரசியல், சமூக இயல், சுயமரியாதை லட்சியம், சுதந்தர உணர்ச்சி முதலிய துறைகளில் கொண்டிருக்கும் ஆர்வத்திற்கும் அடைந்திருக்கும் நிலைமைக்கும் அது இதுவரை பெற்றிருக்கும் கல்வியே முக்கிய காரணமாகும். அதிலும் பிரிட்டிஷார் ஆட்சி ஏற்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்துவந்த கல்வியைப்பற்றி யார் எவ்வளவு குறை சொன்னாலும் இந்திய மக்கள் யாவரும் தங்களை தாங்களே மக்கள் என்று கருதும் படிப்பாகவும்...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

  அகவிலை – தவச விலை அக்ஷராப்பியாசம் – எழுத்துப் பயிற்சி அடி வண்டல் – நீர் ஒதுக்கிவிட்ட மண் அடிமாய்ந்து – அறவே ஒழிந்து அத்தியந்த – மிகவும் அநுகுணம் – ஏற்ப உள்ளது அந்தகாரம் – இருள், அறியாமை அநித்தியம் – நிலையாமை, நிலையற்றது, பொய் அபயஸ்தம் – அடைக்கலம் அபிமானித்தது – ஆதரித்தது அபீஷ்டம் – மிகு விருப்பம் அமிதமாக – அளவில்லாமல் அயனம் – பிறப்பு, வரலாறு அரிவரி கணக்கு – நெடுங்கணக்கு (அரிச்சுவடி) அனந்தம் – பயனற்றது, எல்லையில்லாதது அனாதரவு – உதவியின்மை ஆக்கினை – கட்டளை ஆக்கினை – கட்டளை, ஆணை ஆயுள் பரியந்தம் – ஆயுள்வரை, ஆயுள் முழுதும் ஆவலாதி – அவதூறு, குறை கூறுதல் ஆவலாதி – குறை கூறுகை, அவதூறு ஆஸ்பதம் – இடம், பற்றுக்கோடு இச்சகம் – நேரில் புகழ்தல் உபாதானம் – அரிசிப் பிச்சை உருப்படுத்தி...

காங்கரசும் – அரசியலும்

காங்கரசும் – அரசியலும்

தோழர்களே! நான் இது வரை சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? அது ஏன் ஆரம்பிக்கப்பட்டது? மதம் கடவுள் சமூகம் சம்பந்தமாக அதன் கருத்து என்ன? என்பது பற்றியும் அதைப்பற்றி எதிரிகள் செய்யும் விஷமப்பிரசாரத்துக்கு சமாதானமும் சொன்னேன். இனி காங்கரசின் அரசியல் தன்மையைப்பற்றி சிறிது பேசுகிறேன். காங்கரசின் அரசியல் கொள்கைப்படி சுயமரியாதைக்காரர்கள் தேசத் துரோகிகள் என்றும் தேசத்தை அந்நியருக்குக் காட்டிக் கொடுக்கும் நபர்கள் என்றும் மற்றும் பலவாறாக காங்கரஸ் கூலிகளும், காலிகளும் கூப்பாடு போடுகிறார்கள். ஆதலால் அவர்கள் வண்டவாளம் வெளிப்படுத்த வேண்டியதாகிறது. காங்கரஸ் வண்டவாளம் ஆனால் சில காங்கரஸ்காரர்கள் என்பவர்கள் சுயமரியாதைக்காரர்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால் சுயராஜ்யம் பெற்ற பிறகே சுயமரியாதை அடைய முடியும் என்கிறார்கள். சுயமரியாதைக்காரர்கள் காங்கரசைப்பற்றி சொல்லுவது என்னவென்றால் அது ஒரு பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனம் என்றும் சமுதாயத்துறையில் மதிப்பும் செல்வாக்கும் இழந்த பார்ப்பனர்கள் அரசியல் வேஷம் போட்டு பாமர மக்களை ஏய்க்க ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும், அதனால்...

மனுதர்ம ஆட்சி தாண்டவம்  கள் ஒழிப்பு சூழ்ச்சி கல்வி நாசத்துக்கே

மனுதர்ம ஆட்சி தாண்டவம் கள் ஒழிப்பு சூழ்ச்சி கல்வி நாசத்துக்கே

  காங்கரஸ் அரசியல் சுதந்தரத்துக்கு ஆக பாடுபடுகிறது என்று பேர் வைத்துக்கொண்டு பார்ப்பன ஆதிக்க மனு ஆட்சியை புதுப்பிக்க பாடுபடுகின்றது என்பதை பல பிரத்தியக்ஷ அனுபவ ஆதாரங்களுடன் எத்தனையோ தடவை வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். அப்படி இருந்தும் பார்ப்பனரல்லாத மக்களில் சிலர் தெரிந்தோ தெரியாமலோ காங்கரசை அரசியல் சபை என்றும் அது அரசியல் விடுதலைக்கு பாடுபடுகிறது என்றும் பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறார்கள். பாமர மக்களில் பலரும் அதை நம்பி ஏமாந்து போகிறார்கள். காங்கரசின் சூழ்ச்சியைப்பற்றி இந்தியா முழுவதிலும் கிளர்ச்சி நடந்து வருகிற இந்தக்காலத்திலேயே காங்கரசின் பேரால் எவ்வளவு தைரியமாக மேலும் மேலும் சூழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பதை பொது ஜனங்கள் அறிய வேண்டும் என்பதற்கு ஆகவே மேலும் சில புதிய சூழ்ச்சிக்கொடுமைகளை எடுத்துக் காட்டுகின்றோம். காங்கரஸ் பார்ப்பன சூழ்ச்சியின் முக்கிய கருத்து நாம் மேலே குறிப்பிட்டது போல் வருணாச்சிரம மனு ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அதற்கு – முக்கியமாக செய்யப்பட...

ரிப்பன் மண்டபத்து மகான்கள்

ரிப்பன் மண்டபத்து மகான்கள்

சென்னை கார்ப்பரேஷன் மாளிகைக்கு ரிப்பன் மண்டபம் என்று பெயர்! நல்ல பிரம்மாண்டமான அழகிய வெள்ளைக் கட்டிடம்! அதிலே “கவுன்சிலர்களாக” இருக்கும் மகான்களில் முக்கால் வாசிப்பேர் காங்கரஸ்காரர்கள். அந்த மகான்களுக்குத் தலைவர் சத்தியமூர்த்தி. அவருடைய கீர்த்தி கண்டோர் கைகொட்டி நகைக்கும்படி இருக்கிறது. “தினமணி”க்கு ஸ்பெஷல் வேலை, மூர்த்தியின் கீர்த்தியை நாடறியச் செய்வதுதான். இந்த மகான்களில் 3 பேருக்கு “ஊழல்” மெடல் கொடுத்தாகி விட்டது. “திரிசங்கு சுவர்க்கத்திலே” பாபம் திண்டாடுகிறார்கள். ஒரு அம்மையார், ஓடோடிப் போய்விட்டார்! நாணமோ, பயமோ, கஷ்டமோ, கசப்போ யாரறிவார்! மற்றொரு மகான் தோழர் பக்தவத்சலமோ முடுக்கிக்கொண்டு போய்விட்டார். மற்றொரு மகான் தோழர் சக்கரை செட்டியார், காங்கரசின் “தாக்கீதை” சட்டை செய்யாது ஜம்மென்று வாழ்ந்து வருகிறார். கட்சித் தலைவரோ, பந்து மித்திரர்களுக்கு வேலைவாங்கிக் கொடுப்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து வருகிறார். இந்த மகான்களின் நிர்வாகத்தையோ, “இந்து” பத்திரிகையும் கேலி செய்கிறது. அவ்வளவு மோசம். உத்தியோக நியமனத்தில் பார்ப்பனீயம் தாண்டவமாடுகிறது. சலூன்காரர்களுக்கு புதிய...

புதுநகரம் முஸ்லீம் லீக்  ஆண்டுவிழாக் கொண்டாட்டம்  தற்கால அரசியல் நிலை விளக்கம்  அல்லாதார் முன்னேற்றத்திற்கு யோசனை

புதுநகரம் முஸ்லீம் லீக் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் தற்கால அரசியல் நிலை விளக்கம் அல்லாதார் முன்னேற்றத்திற்கு யோசனை

    தலைவரவர்களே! தோழர்களே!! இன்று கூட்டியிருக்கும் இவ்வளவு பெரிய கூட்டம் இந்த நடு ஜாமம் 11-மணி நேரத்தில் நடைபெறுவதை நான் மேல் நாட்டில் பார்த்திருப்பதை தவிர கீழ் நாடுகளில் பார்த்ததில்லை. ஆனால் காங்கரஸ், சு.ம.மகாநாடுகளிலும் உற்சவங்களிலும் நாடகம், சினிமா தெருக்கூத்து ஆகியவைகளிலும் அதிலும் அபூர்வமாகவே பார்த்திருப்பேன். அதுவும் சமீபத்தில் 4, 5 வருஷங்களில் கண்டதாக ஞாபகமில்லை. இப்போது கொஞ்சகாலமாக அதுவும் காங்கரஸ் மக்களை ஏமாற்றுவதில் வெற்றி பெற்று அரசாங்கத்தினிடம் சரணாகதி அடைந்து அரசியல் பதவிகளை அடைந்தது முதல் நாட்டில் இந்தியா முழுவதிலும் முஸ்லீம்களது விழிப்பு அதிகமாகக் காணப்படுவதுடன் எங்கும் ஒரு வித கிளர்ச்சி நடந்து கொண்டு வருகிறது. காங்கரஸ் பேயாட்டம் ஏனெனில் காங்கரஸ்காரர்கள் வெற்றி பெற்றுவிட்டபின் தங்கள் வெற்றியின் காரணத்தை உணர்ந்து வெட்கப்படாமலும், சரணாகதி அடைந்ததைப்பற்றி அவமானப்பட்டு தலையை மறைத்துக் கொள்ளாமலும் வெற்றி போதையில் முஸ்லீம் லீக்கையும், ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதை இயக்கத்தையும் கொன்று 5000கஜ ஆழத்தில் புதைத்து விட்டதாக...

மந்திரிகள் செயலும் செல்வாக்கும்

மந்திரிகள் செயலும் செல்வாக்கும்

“நவசக்தி” டிசம்பர் 10-ந் தேதி தலையங்கத்தில் மந்திரிமாருக்கு சிபார்சு பேசும் தோரணையில் வழக்கம் போல் வெண்டைக்காய் சட்டினி மாதிரி வழவழ வென்று தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரியாமல் 2 கலம் எழுதி கடைசியில் மந்திரிகளுக்கு தேசபக்தர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வேண்டுகோளில் மந்திரிமார் பதவி ஏற்ற காலம் முன் போல் அல்ல வென்றும் இப்போது ஒருவித மாகாண சுய ஆட்சி கிடைத்துள்ளது என்றும், “அதை திறம்பட நடத்தி பூரண சுயாட்சி பெற முயலுதல் வேண்டும்” என்றும் எழுதி இருக்கிறது. மற்றும் மந்திரிகள் பதவி ஏற்று ஆட்சியை வயப்படுத்தி “அரையாண்டுகளுக்குள் பலவித திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்கள்” என்று எழுதிவிட்டு அங்ஙனம் நிகழ்த்திய திருவிளையாடல்களை குறிப்பிடும் முறையில், அரசியல் கைதிகள் விடுதலை. தொழிலாளர்கள் குறை களைதல். கள்ளரக்கனை வீழ்த்தல். கதருக்கு ஆக்கந்தேடல். நீலன் சிலையகற்றல். முதலியன நிகழ்த்தி உள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறது. மற்றும் குறைகளை எடுத்துச்சொல்லும் முறையில் (இதை காங்கரசார் குறை எழுதியதாக கருதாமல் இருக்க...

காங்கரஸ் தலைவர்கள் திண்டாட்டம்

காங்கரஸ் தலைவர்கள் திண்டாட்டம்

நாகூர், பட்டுக்கோட்டை, துறையூர், திருவாரூர் முதலிய இடங்களில் காங்கரஸ் தலைவர்கள் பட்டபாட்டை வேறிடத்து வெளிவரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். பொதுக் கூட்டங்களில் பேச முன் வருபவர்கள், யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராகவே இருக்க வேண்டும். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோரின் கடமையாகும். மேலும் காங்கரஸே இந்தியாவின் ஏகபிரதிநிதி ஸ்தாபனம் எனப் பெருமையடித்துக்கொள்ளும் காங்கரஸ்வாலாக்கள் காங்கரஸ்காரர் கேள்விகளுக்குத் தான் பதில் சொல்வோம், ஏனையோர் கேள்விகளை லôயம் செய்ய மாட்டோம் எனக் கூறுவது பேடித்தன மட்டுமல்ல போக்கிரித்தனமுமாகும். தோழர் ஈ.வெ.ராமசாமி செல்லுமிடங்களில் எல்லாம் “யார் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். பதில் சொல்ல தயார்” என முதலில் பீடிகை போட்டுக் கொண்டே பேசுகிறார். கேள்வி கேட்பவர்களுக்கு – அவர்கள் எக்கட்சியார் என கவனிக்காமல் – ஆணித்தரமாக பதிலளிக்கிறார். கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சுவதுமில்லை. கேள்விகள் கேட்கப்படுமோ எனத் துடைநடுங்குவதுமில்லை. துறையூர், கரூர், திருச்சி முதலிய இடங்களில் நடைபெற்ற...

காந்தியின் விரோதி ஒருவர் “ஒழிந்தார்”

காந்தியின் விரோதி ஒருவர் “ஒழிந்தார்”

காந்தியின் விரோதி ஒருவர் “ஒழிந்தார்”. அவர்யார் என்றால் மகான் ஜகதீச சந்திரபோஸ். விஞ்ஞானமே மக்களின் விரோதி என்றும் அது மாத்திரமல்ல கடவுளின் விரோதி என்றும் கருதுவதும் சொல்லுவதும் காந்தியார் மாத்திரமல்ல உண்மையில் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் வேத நம்பிக்கைக்காரர்கள் என்பவர்களுக்கு தர்மகர்த்தாக்களான பலரது அபிப்பிராயமாகும். 19, 20வது நூற்றாண்டில்தான் விஞ்ஞான நிபுணர்கள் உயிருடன் இருக்க கடவுளும் மதமும் கடவுள் மதபக்தர்களும் இடம் கொடுப்பவர்கள் ஆனார்கள். இதற்கு முன்பெல்லாம் கொளுத்தப்படுவார்கள் – சித்திரவதை செய்யப்படுவார்கள். இது இப்படி இருக்க, விஞ்ஞான நிபுணர்கள் இந்தியர்களில் ஒருவர்கூட சமீபகாலம் வரை இல்லை என்கின்ற பெயர் ஏற்பட உதவி செய்தவர்களும் இந்த இந்திய கடவுள் மதவாதிகளே யாவார்கள். ஏனெனில் விஞ்ஞான சக்தியை மக்கள் மதித்தால் அதில் நிபுணர்கள் தோன்ற முன் வருவார்கள். அப்படிக்கில்லாமல் அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் படும் பாடுபடும்படி ஏற்பட்டால் யார் தான் முன்வரக்கூடும்? ஏதோ மேல்நாட்டின் சகவாசத்தாலும், ஐரோப்பிய ஆட்சி நன்மையாலும் விஞ்ஞானம் ஒரு அளவுக்கு ஆவது...

காங்கரசின் நாசகாலம்

காங்கரசின் நாசகாலம்

  கொஞ்ச நேரத்தில் சாகப்போகும் காயலா பிரயாணிக்கு ஒருவித ஜன்னிவந்தால் 10 பேர்பிடித்து அமுக்கினாலும் திமிறிக்கொண்டு கை, கால்களை உதறும்படியான பலம் ஏற்படுவதை நாம் பிரத்தியக்ஷத்தில் காணுகிறோம். அந்தப் பலம் என்பது வியாதியின் கூறும் சாவுகுறியுமே ஆகுமே அல்லாமல் அப்பலத்தினால் அப்பிணியாளிக்கு உயிர் வாழ சவுகரியமோ வேறு யாதொரு காரியமும் செய்ய சாத்தியமோ ஏற்பட்டு விடாது என்பதும் நாமெல்லோரும் அறிந்ததேயாகும். அது போலவே காங்கரசுக்கு இன்று சாவுக்குறி ஜன்னி ஏற்பட்டு விட்டது. அந்த ஜன்னிக்கு யாருடைய பேச்சும் அபிப்பிராயமும் மறுப்பும் சிறிதும் லôயம் இல்லாமல் இருக்கிறது இயற்கைதானே. அதற்குக் காரணம் அது பார்ப்பன ஆதிக்கத்தில் பட்டுவிட்டதாலும் பார்ப்பனரல்லாதார்களில் நிபந்தனை அற்ற அடிமைகளாகப் பார்த்து தனக்கு சகாவாக தெரிந்தெடுத்துக் கொண்டதாலும் இப்பொழுது சாகிறவனுக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம் என்பது போல் காணப்படுகிறது. தமிழ் மக்கள் இதற்காக பயந்துவிட வேண்டிய அவசியமில்லை. வெகு சீக்கிரத்தில் பார்ப்பன ஆதிக்கமும் காங்கரசும் மணல் வீடு சரிவதுபோல் சரிந்து...

இஸ்லாத்தில் உயர்வு தாழ்வில்லை  வகுப்பு நீதிக்கு வழிகாட்டியவர்கள் முஸ்லீம்களே

இஸ்லாத்தில் உயர்வு தாழ்வில்லை வகுப்பு நீதிக்கு வழிகாட்டியவர்கள் முஸ்லீம்களே

    முஸ்லீமும் ஜஸ்டிஸ் சு.ம.வும் ஒன்றுபட வேண்டும் ஹிந்திக்கு என்ன அவசியம்? அன்புள்ள தோழர்களே! வட ஆற்காடு ஜில்லா 2 வது சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்த சந்தர்ப்பத்தில் தாங்கள் என்னை அன்புடன் வரவழைத்து தங்கள் லீக்கின் சார்பாக வரவேற்புப் பத்திரமளித்து கவுரவித்ததிற்கு மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இதுவரை என்னுடைய இந்த 20 வருஷ பொதுவாழ்வில் காங்கரஸ், சுயமரியாதை, பொதுஉடமை, சமதர்மம், ஜஸ்டிஸ், முதலிய இயக்கங்களாலும் மற்றும் பலவித சீர்திருத்த சங்கங்களாலும், முஸ்லீம்கள் சங்கங்களாலும் இந்தியா, கொளும்பு, மலாய், ஐரோப்பா, ரஷ்யா முதலிய தேசங்களிலுள்ள பலவித சங்கங்களாலும் சுமார் ஆயிரக்கணக்கான வரவேற்புப்பத்திரங்கள் பெற்றிருந்தாலும் இந்திய முஸ்லீம் லீக்கில் பெறும் உபசாரப்பத்திர மென்பதில் இதுவே முதலாவதாகும். உண்மையிலேயே இவ்வரவேற்புப் பத்திரத்தினால் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் இவ்வரவேற்புப் பத்திரத்தில் என்னைப்பற்றி குறிப்பிட்டிருக்கும் புகழ்ச்சிகள் முழுவதையும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்றாலும் இதிலிருந்து நான் முஸ்லீம் சமூக நம்பிக்கைக்கு பாத்திரமாயிருக்கிறேன்...

ஆபத்து! ஆபத்து!!  கல்விக்கு ஆபத்து!!!

ஆபத்து! ஆபத்து!! கல்விக்கு ஆபத்து!!!

  காங்கரசின் சுயராஜ்யமென்பதற்கோ பூரண விடுதலை என்பதற்கோ அருத்தம் ராமராஜ்யம் என்றும் சுயராஜ்யம் கிடைத்துவிட்டது என்றால் ராமராஜ்யக் கொள்கைப்படியே ஆட்சி நடைபெறும்படி செய்வதுதான் என்றும் காங்கரசில் நாலணா மெம்பராகக்கூட இல்லாத காங்கரஸ் சர்வாதிகாரியான காந்தியார் முதல் காங்கரசின் பேரால் ஏதேச்சாதிகாரம் செலுத்தும் கனம் சி.ஆர். ஆச்சாரியார் முதலிய சகல பார்ப்பனர்களும் சொல்லி வருவது யாவருமே அறிந்ததாகும். அந்த ராமராஜ்யக் கொள்கையினிடத்தில் மக்களுக்கு மரியாதையும் பெருமையும் ஆசையும் வருவதற்கு ஆக ராமாயணத்தை ஆரிய முறைப்படி படிப்பதற்கு ஆக ஹிந்தியை படிக்கும்படி குழந்தைகளை கட்டாயப்படுத்துவதும் அதை ஆக்ஷேபித்து தமிழ் மக்கள் கிளர்ச்சி செய்து வருவதும் வாசகர்கள் உணர்ந்ததேயாகும். பொதுவாக ராமராஜ்யம் என்றால் மனுதர்ம ஆட்சி என்பதும், மனுதர்ம ஆட்சி என்பது வருணாச்சிரம ஆட்சி என்பதும், நாம் சொல்லாமலே வாசகர்கள் அறிந்த விஷயமாகும். தோழர் காந்தியார் அவர்களும் அநேக தடவைகளில் தான் ஒரு பரிசுத்த வருணாச்சிரமவாதி என்றும் வருணாச்சிரம ஆட்சியை ஏற்படுத்தவே சுயராஜ்யம் கோருகிறேன் என்றும்...

என்ன செய்யப் போகிறீர்கள்?

என்ன செய்யப் போகிறீர்கள்?

பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் இடையறாது பாடுபட்டு வரும் “விடுதலை” தினசரியை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? தேசத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பார்ப்பனர் செய்து வரும் சூழ்ச்சியையும், அக்கிரமங்களையும் அச்சமின்றி வெளியாக்கி வரும் “விடுதலை”யை ஆதரிக்கப்போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப்போகிறீர்கள்? இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு முஸ்லீம்களை அடிமையாக்கச் செய்யும் காங்கரஸ்காரர்களின் சூழ்ச்சிகளை வெட்ட வெளிச்சமாக்கி வரும் “விடுதலை”யை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? தீண்டாமையை ஒழிக்கப் போகிறோம் என்று கூறி தீண்டாதார் முன்னேற்றத்தை தடுக்க செய்யும் அக்கிரமங்களை அஞ்சாது வெளியாக்கும் “விடுதலை”யை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? பார்ப்பனரல்லாத முஸ்லீம், ஆதிதிராவிட தோழர்களே! என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் மற்றவர்களைப் போல் அரசியலில் முன்னேற்றமடைய வேண்டுமானால் உங்களுக்காகப் பாடுபடும் “விடுதலை”யை ஒவ்வொருவரும் வாங்கிப் படியுங்கள். அதற்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள். “விடுதலை”...

ஜஸ்டிஸ் கொள்கையை அசைக்க முடியாது  காங்கிரஸ் ஆட்சி மைனர் திருவிளையாடல்  பேச்சொன்று செய்கை யொன்றா?

ஜஸ்டிஸ் கொள்கையை அசைக்க முடியாது காங்கிரஸ் ஆட்சி மைனர் திருவிளையாடல் பேச்சொன்று செய்கை யொன்றா?

  தலைவரவர்களே! தோழர்களே! இன்று நீங்கள் ஒரு அதிசயத்தைப் பார்க்கிறீர்கள். என்னவென்றால் தோழர் சத்தியமூர்த்தியாராலும், கனம் ராஜகோபாலாச்சாரியாராலும் அவர்களது கூலிகளாலும் ஐநூறு கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டு விட்ட தாகச் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியானது கிறிஸ்து நாதர் உயிர்த் தெழுந்த கதைபோல் உயிர்த்தெழுந்து இன்று உங்கள் முன்னால் நிற்கிறது. நிற்கிறது மாத்திரமல்லாமல் அக்கட்சி புதைக்கப்பட்டதாகச் சொல்லப் பட்டபின் புதைக்குழியிலிருந்து கொண்டே செய்த அற்புதங்களைப் பற்றியும் பேசப்போகிறது. ~subhead எனது சொந்தக் கட்சி சுயமரியாதையே ~shend அதாவது நான் தோல்வி அடைந்து முறியடிக்கப்பட்ட ஒரு கட்சி என்பதைச் சேர்ந்தவன் என்றும் கொன்று புதைக்கப்பட்டு அடியோடு ஒழிக்கப் பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிற கட்சியை சேர்ந்தவன் என்றும் சொல்லிக்கொள்ள சிறிதும் வெட்கப்படவில்லை. எனக்கு சொந்தக் கட்சி சுயமரியாதைக் கட்சியேயாகும். சு.ம. இயக்கத்தின் நன்மைக்காக என்று ஜஸ்டிஸ் கட்சியை சார்ந்திருக்கிறவன் என்றாலும் ஜஸ்டிஸ் கட்சியின் நன்மை “தீமை” என்பனவற்றின் எவ்வித பொறுப்புகளிலிருந்தும் நான் தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை. தோழர் காந்தியார்...

காங்கரசின்  ராணுவ ஆட்சி

காங்கரசின்  ராணுவ ஆட்சி

காங்கரஸ் என்பது பார்ப்பனர்களின் ஸ்தாபனம் என்றும், அதில் உள்ள பார்ப்பனரல்லாதார் சுதந்தரமற்ற அடிமைகள் என்றும், பார்ப்பனர் காங்கரசில் சர்வாதிகார கொடுங்கோன்மை ஆட்சி நடத்துகிறார்கள் என்றும் சுயமரியாதையும், சுதந்தர புத்தியும் உள்ளவனுக்கு காங்கரசில் இடமில்லையென்றும் அதனாலேயே நாம் காங்கரசை விட்டு வெளியேறி காங்கரசின் சூழ்ச்சிகளையும், கேடுகளையும் வெளியாக்கி வருகிறோம் என்றும் பலதடவை எழுதிவந்திருக்கிறோம். பேசியும் வந்திருக்கிறோம். இதை நமதருமை பார்ப்பனரல்லாத தோழர்கள் சிலர் நம்பாமலும் சிலர் அறிந்தும், தங்கள் சுயநலப் பதவிக்கும், வயிறு வளர்ப்புக்கும் ஆக அறியாதவர்கள் போல் நடந்து கொண்டும் இருப்பதல்லாமல் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகவும், கையாள்களாகவும் இருந்துகொண்டு பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்துக்கு தொல்லை விளைவித்து வருகிறார்கள். படிப்பினை ~shend ஆனால் காலப்போக்கில் நாளாக நாளாக நாம் சொல்லுவது வெட்ட வெளிச்சம் போல நிஜமாகி பல காங்கரஸ் பார்ப்பனரல்லாதார் புத்தி பெற்று வருகிறார்கள். இந்த புத்தி கற்பிப்பானது மற்றும் சில அறியாத பார்ப்பனரல்லாதாருக்கும் சுயநலத்துக்கு ஆக சமூகத்தை காட்டிக்கொடுத்தாவது வயிறு வளர்க்கலாம், பதவி பெறலாம்...

சென்னையில் வகுப்பு வாதம்

சென்னையில் வகுப்பு வாதம்

சென்னை கார்ப்பரேஷனில் காங்கரஸ் மெம்பர்களுக்குள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு வாதம் முற்றிவிட்டது. தோழர் சிவசைலம் பிள்ளையை கல்வி அதிகாரி நியமனத்தின் பயனாய் காங்கரஸ் பத்திரிகைகளில் தினமும் இச் சேதிகள் வருகின்றன. தோழர் சிவசைலம் பிள்ளை நியமனத்தை சர்க்காரார் நிராகரித்து விடவேண்டுமென்று ஒரு கட்சியும் அதை அங்கீகரிக்க வேண்டுமென்று ஒரு கட்சியும் விண்ணப்பம் அனுப்பி இருப்பதாய்த் தெரிகிறது. நிராகரிக்க முயற்சிப்பவர்கள் பெரிதும் பார்ப்பனர்களாகவும் அங்கீகரிக்க முயற்சிப்பவர்கள் எல்லோரும் பார்ப்பனரல்லாதாராகவும் இருந்து வருகிறார்களாம். தோழர்கள் சாமி வெங்கடாசலம், ஆதிகேசவ நாயக்கர், வினாயக முதலியார் முதலிய பார்ப்பனரல்லாத காங்கரஸ் வாதிகள் நியமனத்தை ஆதரித்து மந்திரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். குடி அரசு – செய்தி விமர்சனம் – 07.11.1937

நரிமன் கதி

நரிமன் கதி

பம்பாய் வீரர் தோழர் நரிமனை படேல் – காந்தி கம்பெனியார் உயிரோடு சமாதி வைத்து விட்டார்கள். எதற்காக? 1934 வருட எலக்ஷனில் அவர் காங்கரசுக்கு துரோகம் செய்ததாய் சாட்டப்பட்ட ஒரு குற்றத்துக்காக. ஆனால் 1934 தேர்தலில் காங்கரசுக்கு துரோகம் செய்த நரிமன் அதே வருஷத்தில் பம்பாயில் நடைபெற்ற காங்கரஸ் மகாநாட்டுக்கு வரவேற்புக் கழகத் தலைவராக இருந்திருக்கிறார். அப்பால் பம்பாய் மாகாண காங்கரஸ் கமிட்டிக்குத் தலைவராகவும், பார்லிமெண்டரி கமிட்டிக்குத் தலைவராகவும், பம்பாய் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சென்ற வருஷம் நடைபெற்ற மாகாண அசம்பிளித் தேர்தலில் பம்பாய் நகரத் தொகுதிக்கு காங்கரஸ் அபேட்சகராக நிறுத்தப்பெற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். 1934 தேர்தல் துரோகம் இந்தப் பதவிகளையெல்லாம் தோழர் நரிமன் பெறுவதற்குக் குறுக்கே நிற்கவில்லை. 1937-ல் காங்கரஸ் கட்சித் தலைவராகி பம்பாய் மாகாண மந்திரி ஆக தோழர் நரிமனுக்குத் தருணம் கிடைத்த போதுதான் அவரது 1934 – வருஷ துரோகம் அகில இந்திய பார்லிமெண்டரி போர்டு தலைவர் சர்தார்...

அய்யர் அய்யங்கார் சம்பாஷணை

அய்யர் அய்யங்கார் சம்பாஷணை

– சித்திரபுத்திரன் ராமானுஜம் அய்யங்கார்:- டேய் சுப்பராயா! ஏண்டா ஆச்சாரியாரை சும்மா எப்போது பார்த்தாலும் வைத வண்ணமாய் இருக்கிறாய்? சுப்பராய அய்யர்:- அடபோடா ராமானுஜம்! ஆச்சாரியார் மந்திரியாய் வந்தால் என்னமோ சாதித்துப்போடுவார் என்று கருதி நாங்கள் எல்லாம் என்னபாடு பட்டோம். எங்கள் பொம்மனாட்டிகளை எல்லாம் கூட எலக்ஷன் பிரசாரத்துக்கும் போலிங்டேஷனுக்கும் அழைச்சுண்டு போனோம். கடசியா எல்லாம் குட்டிச்சுவராக்கி விட்டாரே. ரா:- என்னடா குட்டிச்சுவரு? சு:- என்ன குட்டிச்சுவரா? வந்து வராததுக்கு முன்னே இந்த ஆச்சாரியாரை என்ன அவசரம் கொண்டுபோரது. “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி” என்ற மாதிரி ஹிந்தி எழவைக் கொண்டுவந்து குறுக்கே போட்டு நாட்டைப் பாழ்படுத்திவிட்டாரே! எங்கே பார்த்தாலும் பழையபடியே “பார்ப்பான் சூழ்ச்சி, பார்ப்பான் சூழ்ச்சி” என்ற சப்தம் காதைத் தொளைக்கிறதே. ரா:- போடா, அதற்கெல்லாமா பயப்படுவது? சமயம் கிடைத்த போது நன்னா அழுந்த சாதிச்சிட வேண்டாமா? ஹிந்தி என்றால் கிள்ளுக் கீரைன்னா நினைச்சூட்டே? அதை ஒருவன்...

கடன் வாய்தா மசோதா

கடன் வாய்தா மசோதா

சென்னை மாகாணத்தைப் பொன்னுலகமாக்கப் போகும் சரணாகதி முதன் மந்திரி ராஜகோபாலாச்சாரியார் சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு செய்துவிட்டார். அதற்கு எத்தனையோ பேர் எத்தனையோவித ஆட்சேபனைகள் கூறியும் ஒப்புக்கொள்ள முடியாதென்று ஆச்சாரியார் பிடிவாதமாக மறுத்தார். அடுத்தாப்போல் விவசாயிகள் கடன் வாய்தா மசோதா வரப்போவதாக பெரிய விளம்பரம் செய்யப்பட்டது. மசோதா நகலும் சர்க்கார் கஜெட்டில் பிரசுமாயிற்று. அது ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்யாதென்றும் பணக்கார மிராசுதார்களுக்கே உதவி செய்யுமென்றும் கடன் வாயிதா மசோதா சட்டமாகிறதாயிருந்தால் எல்லாருக்கும் உதவி செய்யக் கூடியதாயிருக்க வேண்டுமென்றும் நாம் எழுதியிருந்தோம். ஆனால் தென்னாட்டிலுள்ள பார்ப்பன வக்கீல்கள் எல்லாம் கடன் வாய்தா மசோதாவை எதிர்க்கிறார்கள். அந்த மசோதா சட்டமானால் வழக்குகள் ஒழிந்துவிடுமாம். கோர்ட்டுகள் மூடப்பட்டுவிடுமாம். கோர்ட்கள் மூடப்பட்டால் வக்கீல்களுக்கு பிழைப்பேது? வக்கீல்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்கள் காங்கரஸ் பக்தர்கள். தேர்தல் காலங்களில் காங்கரஸ் சார்பாக பிரசாரம் செய்யக்கூடியவர்கள்; சீர்திருத்தங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடுகிறவர்கள். ஆகவே அவர்களுடைய எதிர்ப்பை ஆச்சாரியார் லôயம் செய்யும்படி நேர்ந்து கடன்...

எது பொய்?

எது பொய்?

“நவசக்தி”க்கு மானம் போகிறதாம் நவம்பர் 5ந் தேதி “நவசக்தி” பத்திரிகை “மானம் போகிறதே” என்று தலைப்புக் கொடுத்து ஒரு உப தலையங்கம் எழுதி இருக்கிறது. அதில் “இந்து” பத்திரிகையில் அர்கோவிந்து என்பவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை எடுத்துப் போட்டு அழுகின்றது. அந்தக் கட்டுரைப் பகுதியில் கிறிஸ்தவப் பாதிரியான லாண்டே என்பவர் தென் இந்தியாவுக்கு வந்துபோன பிறகு “பரிசுத்த இந்தியா” என்ற பெயர் கொடுத்து ஒரு புத்தகம் எழுதி இருப்பதாயும் பின்னர் அப்புத்தக விஷயங்கள் சினிமாப்படமாக எடுக்கப்பட்டு அப்படம் இன்று ஐரோப்பாவில் பிரான்ஸ் முதலிய இடங்களில் காட்டப்படுவதாகவும் இனி அது அமெரிக்காவுக்கும் போகுமென்றும் எழுதப்பட்டிருக்கிறதாம். அப்புத்தகத்தில் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் விஷயம். “இந்தியாவில் வகுப்புவாத பூசல் தாண்டவமாடுகிறது. இந்தியர்களில் ஆதிதிராவிடர் என்கின்ற வகுப்பார் மிருகங்களிலும் கேவலமாக மதிக்கப் படுகிறார்கள். ஒரு பக்கிரி (பிச்சைக்காரன்) அரை நிர்வாணத்தோடு தெருவில் விழுந்து புரளுகிறான். மற்றொருவன் உடம்பெல்லாம் அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து ஆடுகிறான். ஒரு...

கார்ப்பரேஷனில் பார்ப்பனத் தொல்லை

கார்ப்பரேஷனில் பார்ப்பனத் தொல்லை

~cmatter பார்ப்பனர்கள் சென்னை கார்ப்பரேஷனைக் கைப்பற்றி அதை ஒரு முழு அக்கிரகாரமாக்குவதற்கு ஆகவென்றே காங்கரசின் பேரால் “லஞ்ச ராஜ்யத்தையும் கண்ட்றாக்ட் ராஜ்யத்தையும் வகுப்புவாதத்தையும் ஒழிக்க வேண்டும்” என்றும் ஜஸ்டிஸ் கட்சி அடியோடு இம் மூன்றிலும் மூழ்கிக்கிடக் கின்றதென்றும் ஜஸ்டிஸ் கட்சியை ஆயிரம் கெஜ ஆழத்தில் புதைத்து விட்டு ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்றிவிட்டால் தர்ம ராஜ்யம் ஸ்தாபிக்கப் பட்டுவிடும் என்றும் பேசி பார்ப்பனரல்லாத கூலிகளை விட்டே பிரசாரமும் செய்து ஒரு பெரிய அளவுக்கு ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்றினார்கள் என்பதும் மற்றும் அரசியல் ஆதிக்கத்தையும் அதே முறையில் கைப்பற்றினார்கள் என்பதும் யாவரும் அறிந்ததாகும். பிறகு நடந்தது என்ன என்று பார்ப்போமானால் ஜஸ்டிஸ் கட்சியில் கூட இல்லாத அளவுக்கு வகுப்புவாதம் ஸ்தல ஸ்தாபனங்களிலும் அரசியல் ஸ்தானங்களிலும் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டதுடன் லஞ்சப் பேயும், கண்ட்றாக்டு ராஜ்யமும், காங்கரஸ்காரர்கள் 100-க்கு 90 – பங்கு ஆதிக்கமுடைய ஸ்தல ஸ்தாபனங்களிலும் அரசியலிலும் தாண்டவமாட ஆரம்பித்து விட்டதாக காங்கரஸ்காரர்களே ஒப்பாரி இட்டு...

ஜவஹர்லாலும் சமஷ்டியும்

ஜவஹர்லாலும் சமஷ்டியும்

  கல்கத்தாவில் வெத்திவேட்டு வீரரான தோழர் பண்டித ஜவஹர்லால் தலைமையில் கூடிய காங்கரஸ் காரியக் கமிட்டியில் “சமஷ்டித் திட்டத்தை சாத்தியமான எல்லா வழிகளிலும் எதிர்ப்பதென்றும், தேசம் தனது அபிப் பிராயத்தை அறிவித்திருந்தும் இத்திட்டத்தை ஆரம்பிக்க முயல்வது இந்திய மகாஜனங்களை அறை கூவியழைப்பதாக இருக்கிறதென்றும் எனவே அதைத் தடுக்க வேண்டிய மாகாண ஸ்தல காங்கரஸ் கமிட்டிகளும், மாகாண மந்திரிகளும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்றொரு காங்கரஸ் தலைவரான தோழர் சத்தியமூர்த்தியாரோ “சமஷ்டித் திட்டமானது எந்தவிதமான கெடுதியுடையதானாலும் அதை ஏற்று நடத்தவேண்டும்” என்று கூறுகிறார். இதில் யாருடைய வார்த்தை நிறைவேறுமென்றால் தோழர் சத்தியமூர்த்தியார் வார்த்தை தான் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் முன்பு பதவி ஏற்புப் பிரச்சினை வந்தபோது தோழர் ஜவஹர்லால் அவர்கள் “என் உயிர் போகும்வரை பதவி ஏற்பதை எதிர்த்தே தீர்வேன்” என்றார். ஆனால் தோழர் சத்தியமூர்த்தியாரோ “என் உயிர் போகும் வரை பதவி ஏற்க வேண்டும் என்று...

பெரியசாமி பெரும்பிரிவு

பெரியசாமி பெரும்பிரிவு

தூத்துக்குடி தோழர் கெ.கெ.ஏ. பெரியசாமி அவர்களின் திடீர் மரணத்தைக் கேட்டு திடுக்குற்றோம். காலஞ் சென்ற தோழர் பெரியசாமி அவர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு எண்ணற்ற தொண்டு புரிந்தவர்; உண்மை உழைப்பாளி; ஏழைகளின் நண்பன்; சமதர்ம உணர்ச்சியுடையவர்; சமூக சீர்திருத்தத்தில் அளவு கடந்த பற்றுடையவர். இத்தகைய உயர் குணங்களும் ஓயா உழைப்பும், தேயா ஊக்கமும் உடைய தோழர் பெரியசாமி அவர்கள் அகால மரணத்தைக் குறித்து மிகவும் வருந்துவதோடு அன்னார் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த அநுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். குடி அரசு – இரங்கல் செய்தி – 31.10.1937

தமிழர்களும் தீபாவளியும்

தமிழர்களும் தீபாவளியும்

தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து “தேவர்கள் அசுரனைக்” கொன்றதாகவும் அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும் அதற்கு ஆக மக்கள் அந்த கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும். சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வட நாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப் படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லு வதுண்டு. இதற்கு காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்ன வென்றால் அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழி நிலைக்கும் தமிழர்களின் முட்டாள் தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம். அதாவது இரண்யாக்ஷன் என்னும்...

காந்தீயத்தின் தந்திரம்

காந்தீயத்தின் தந்திரம்

ஒரு காரியம் ஆகவேண்டுமானால் எத்தகைய இழிவான செய்கை யையும் செய்ய ஆரியர்கள் புராணத்தில் இடம் கொடுத்து இருப்பது புராணமதக்காரர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமேயாகும். எவ்வளவு பித்தலாட்டம் வேண்டுமானாலும் செய்ய இடங்கொடுக்கும் அம்மதத்தில். உதாரணமாக பெண்களைவிட்டு மயக்கியும், பொய் சொல்லியும் பொய் வேஷங்கள் மாய் மாலங்கள் செய்தும், நீலிக்கண்ணீர் விட்டும் மக்களை ஏமாற்றி இருப்பதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும் இன்று அரசியலில் செல்வாக்குப் பெற்றிருக்கும் இம்மாதிரியான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றம், வஞ்சகம் ஆகியவைகளுக்கு புராணங்களை விட இன்று காந்தீயமே பிறப்பிடமாக ஆகிவிட்டது. காந்தியார் சாதாரண முறையில் – நாணையத்தில் நியாயவாதத்தில் வெற்றி பெற முடியாத – சாதித்துக் கொள்ள முடியாத காரியங்களுக்கெல்லாம் சிறிதும் யோக்கியப் பொறுப்பை லôயம் செய்யாமல் வெறும் தந்திரத்திலேயே காரியங்களை சாதித்துக் கொண்டு வருகிறார். உதாரணமாக ஒரு தரம் காந்தியாரின் ஆசிரமத்திலேயே சில ஒழுக்க ஈனமான காரியங்கள் நடந்துவிட்டதை மறைக்க “6 நாள் பட்டினி விரதம்” என்னும் பேரால்...

காங்கரஸ் செய்யும் பரிசுத்தம்

காங்கரஸ் செய்யும் பரிசுத்தம்

  ஸ்தல ஸ்தாபனங்களாகிய ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி முதலியவை களிலும் ஐக்கிய நாணய சங்கங்கள் முதலியவைகளிலும் அரசியல் கட்சி வேற்றுமையோ, மற்றும் வேறு கட்சி வேற்றுமையோ தலைகாட்டும்படி செய்யக்கூடாது என்றும் கட்சி விஷயங்கள் புகுந்தால் நிர்வாகம் நடு நிலை நீதியற்றும் நாணயமற்றும் நடக்க வேண்டியதாக ஆகிவிடும் என்றும் சுமார் 20 வருஷ காலமாகவே எடுத்துச் சொல்லி வருகிறோம். நாம் சொல்லி வருவதை மெய்ப்பிக்க அடிக்கடி ஏராளமான ஆதாரங்கள் ஏற்பட்டு வந்தும் காங்கரஸ் கட்சி தலைவர்கள் என்பவர்கள் சிறிதும் யோக்கியப் பொறுப் பில்லாமல் ஸ்தல ஸ்தாபன தேர்தல்களிலும் நிர்வாகங்களிலும் கட்சியைப் புகுத்தி நிர்வாகத்தின் நேர்மையையும் நாணயத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள். என்றைய தினம் காங்கரஸ்காரர்கள் காலிகளுடைய உதவி யையும் கூலிகளுடைய உதவியையும் அக்கிரமம், அயோக்கியத்தனம் ஆகியவற்றின் தன்மையையும் கை முதலாகக் கொண்டு ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அன்று முதலே எவ்வளவு தான் யோக்கியமும், நாணயமும் உள்ளவர்கள் ஸ்தல ஸ்தாபனத்திற்குள் நுழைந்தாலும் 100க்கு...

பொழுது போக்கு

பொழுது போக்கு

இன்று காங்கரஸ் மந்திரி பதவி வகிப்பதானது காங்கரசுக்கு வெற்றி என்றால் இது ராட்டினத்தால் கிடைத்த வெற்றியா? காந்தியின் சரணா கதியினால் கிடைத்த “வெற்றியா”? * * * காங்கரஸ் மந்திரி பதவி ஏற்பது பிரிட்டிஷாருக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக்கொடுத்ததற்கு ஒப்பாகும் என்று சொன்ன ஜவஹர்லால் “மந்திரிகளைக் குறை கூறாதீர்கள்” என்று சொல்வது அடிமை முறிச்சீட்டுக்கு மேலொப்பம் போட்ட அடிமையாக ஆகி விட்டதாக அர்த்தமாகவில்லையா? * * * கனம் ஆச்சாரியார் தான் ஒரு ஜனநாயகவாதி என்கிறார், ஆனால் அவர் சொல்வதை யாராவது ஆக்ஷேபித்தால் “உங்களுக்கு ஒன்றும் தெரியாது வேண்டுமானால் அடுத்த தடவை எனக்கு ஓட்டு கொடுக்காதீர்கள்” என்று சொல்லுகிறார். ஆகவே ஜனநாயகத்துக்கு அருத்தம் ஆச்சாரியாரை கேட்டு அகராதியை திருத்திக்கொள்ள வேண்டியது தான். * * * “அப்துல் கலாம் அசாத்தின் நடவடிக்கை சரியோ தப்போ அது வேறு விஷயம். இந்துக்கள் காங்கரசில் முஸ்லிம் சம்மந்தமான விஷயங் களில் ஒரு முஸ்லீமுக்கு சர்வாதிகாரம்...

மது விலக்கின் சூழ்ச்சி

மது விலக்கின் சூழ்ச்சி

காங்கரஸ் மந்திரிகள் மது விலக்கில் முனைந்துவிட்டார்கள் என்றும் சேலம் ஜில்லாவை விட்டு அறவே “கள்ளரக்கன்” விரட்டப் பட்டு விட்டான் என்றும் பாமர மக்கள் நம்பும்படி மாயப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதைப் பாமர மக்களும் சில அறிவாளிகள் என்பவர்களும் நம்பி வருகிறார்கள். கள் ஒரு நாளும் இந்தியாவை விட்டு அதிலும் தென்னாட்டை விட்டு ஒழியப் போவதில்லையென்பதை கல்லின்மேல் எழுதி வைத்துக் கொள்ளும்படி வாசகர்களுக்குத் “தீர்க்க தரிசனம்” கூறுவோம். ஆனால் கள் ஒழிக்கும் சாக்கை வைத்துக்கொண்டு பார்ப்பன ராஜ்யமானது பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியில் மண்ணைப்போட்டு அவர்களைப் பழையபடி காட்டுமிராண்டிகளாகவும் பார்ப்பாரின் வைப்பாட்டி மக்களாகவும் ஆக்கப் போகிறது என்பதை இப்போதே பார்ப்பனரல்லாத மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். நம்மைப் பொறுத்தவரையில் கள், சாராயம் முதலிய எவ்வகை மதுவையும் கையில் தொட்டதுகூடக் கிடையாது. மலம் சாப்பிடுவதை விட மதுவருந்துவதை கேவலமாய்க் கருதி வருகிறோம். ராமரசம், பூரணாதி, மன்மத சிந்தாமணி முதலிய போதை தரும் லேகியம்கூட கையில் தொட்டது...

காந்தி புத்தி

காந்தி புத்தி

“முஸ்லீம்கள் மைனாரட்டியாய் இருந்தாலும் காங்கரசில் சேர்ந்து மெஜாரட்டியாகி காங்கரசைக் கைப்பற்றி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளலாமல்லவா” என்று தோழர் காந்தியார் ஜனாப் சையத் பஷீர் அகம்மது கடிதத்துக்கு பதில் எழுதி இருக்கிறார். தோழர் காந்தியாருக்கு பகுத்தறிவு இருக்குமானால் அல்லது நேர்மையாய் எழுதும் குணத்தைக் கைக்கொண்டிருப்பாரானால் இப்படி எழுதி இருக்க மாட்டார். ஏனெனில், மைனாரட்டி சமூகமாய் இருக்கும் முஸ்லீம்கள் காங்கரசில் எப்படி மெஜாரிட்டியாகக் கூடும்? ஏராளமாக முஸ்லீம்கள் காங்கரசில் சேர்ந்தால் மெஜாரிட்டி ஆகிவிடும் என்று சொல்லப்படுமானால் எல்லா இந்துக்களும் அந்த சமயத்தில் களைபிடுங்கவா போய் விடுவார்கள்? முஸ்லீம்கள் ஏராளமாய் காங்கரசில் சேர நினைக்கும்போதே இந்துக்கள் ஏராளமாக காங்கரசில் சேர எண்ணிவிட்டால் முஸ்லீம்கள் கதி என்ன ஆவது? சட்டசபையில் இந்துக்கள் அதிகமாய் இருக்கும் காரணத்தினால் முஸ்லீம் மதத்துக்கு விரோதம் என்று சொல்லி காரணம் காட்ட எழுந்ததற்கே ஒரு முஸ்லீமின் கதி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. இத்தனைக்கும் முஸ்லீம் ஒருவர் மந்திரியாயும்...

முஸ்லீம் லீக்கும் முஸ்லீம்களும்

முஸ்லீம் லீக்கும் முஸ்லீம்களும்

தலைவரவர்களே! தோழர்களே! இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதையும் இதில் பேச சந்தர்ப்பம் பெற்றதையும் உண்மையிலேயே ஒரு பெருமையாய் கருதுகிறேன். முஸ்லீம்லீக்கும் முஸ்லீம்களும் என்னும் விஷயமாய் பேசுவேன் என்று தலைவரவர்கள் சொன்னார். உங்களுக்குத் தெரியாத விஷயம் நான் ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை. ஆனாலும் என் அபிப்பிராயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். முஸ்லீம்லீக் என்பது முஸ்லீம் சமூக நன்மைக்கு மாத்திரம் ஏற்பட்டது என்று நான் கருதுவதில்லை. முஸ்லீம் லீக்கானது இந்திய மக்களில் அரசியல், கல்வி முதலிய துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எல்லாவற்றினுடையவும் நன்மைக்கு ஏற்பட்டதென்றே நான் கருதுகிறேன். முஸ்லீம்களுக்குள் கொஞ்சமாவது கட்டுப்பாடும் ஒற்றுமையும் சுயமரியாதை உணர்ச்சியும் இருப்பதால்தான் முஸ்லீம்கள் லீக் என்கின்ற ஒரு ஸ்தாபனம் இதுவரை உயிருடன் இருந்து வருகிறது. மற்றபடி தென்னாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத சமூகம் போல் கட்டுப்பாடும் சமூக கவலையும் சுயமரியாதையும் இல்லாமல் சுயநலத்துக்கு எதுவும் செய்து எதிரியை தஞ்சமடைந்து வயிறு வளர்த்து காலம் கழித்து வரும் சமூகமாய் இருந்தால் முஸ்லீம்களின் கதி...

பாரதி ஆராய்ச்சி

பாரதி ஆராய்ச்சி

அறிவாளியா? இயற்கைவாத கவியா? அவர் ஒரு புராண பண்டிதரே நம் தமிழ் நாட்டில் சமீபத்தில் பாரதியின் தினத்தைப் பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்பொழுது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலை போட்டுத் தூபதீப நைவேத்தியங் கூடச் சிலர் செய்தார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குப் பார்ப்பனரின் சூழ்ச்சி பிரசாரமும் பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள் நம்பிக்கையுமே காரணமென்றும் மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் இதைப் படித்த பின்பாவது தாங்கள் அக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதின் அறியாமையை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளுவார்களாக. பாரதிக்குக் கவி இயற்றவல்ல அறிவு சிறிது உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும்படியான மேதாவித்தன்மை எதுவும் அவரிடம் இருந்ததென்றோ, அவர் உயர்ந்த ஞானமும் ஒழுக்கமு முள்ளவரென்றோ, இன்னும் சிலர் விளம்பரஞ் செய்கிறபடி எந்த விதத்திலும், சமீப...

“விகடன்” விஷமம்

“விகடன்” விஷமம்

17.10.37ந் தேதி “விகட”னின் தலையங்கத்தில் “வாழிய செந்தமிழ்” என்னும் தலைப்பில் ஒரு வியாசம் காணப்படுகிறது. அதில் ஹிந்தியை முதல், இரண்டாவது, மூன்றாவது பாரம் வரைக்கும் வைக்கப் போகிறபடியால் அதற்கு மேல் சமஸ்கிருதம் இஷ்டபாடமாக வைக்கலாம் என்றும், இங்கிலீஷைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும், சீநிவாச சாஸ்திரியார் ஒருவரேதான் இங்கிலீஷ்காரரைப் போல பேசத் தெரிந்தவர் என்றும், ஆதலால் இங்கிலீஷ் அப்படி பேசத்தெரிய முயற்சி செய்வது பயன்படாது என்றும், இங்கிலீஷையும் தமிழிலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும், தமிழ் கற்றுக்கொடுக்க தோழர் உ.வே. சாமிநாதய்யர்தான் தகுதியானவரென்றும் அவர்தான் தற்கால கொள்கையை தமிழில் புகுத்தாமல் நூலிலுள்ள இன்பத்தை மாத்திரம் நுகரும்படி செய்வார் என்றும், சமஸ்கிருதமே உலகத்து நாகரீகத்துக்கு எல்லாம் அடிப்படையான பாஷை என்றும், அதை படிக்க பள்ளிக்கூடங்களில் வசதியும் தூண்டுதலும் வேண்டுமென்றும், டாக்டர் சுப்பராயன் கல்வி மந்திரியாய் இருந்து இதை உணர்ந்து இருப்பது பாக்கியம் என்றும் மற்றும் பல விஷயங்களும் “வாழிய செந்தமிழ்” என்னும் தலைப்பில் இருக்கின்றன....

சோற்றுக்கில்லாதார் பிரசாரம்

சோற்றுக்கில்லாதார் பிரசாரம்

காங்கரஸ் பிரசாரகர்கள் – தொண்டர்கள் – ஜெயிலுக்குப்போன தியாகிகள் – பாரதமாதாவின் அருந்தவப் புதல்வர்கள் என்கின்ற கூட்டத்தில் பெரும்பான்மையோர் தங்கள் வாழ்கைக்கு வேறு வழியில்லாமலும் வயிற்றுப்பிழைப்புக்குக்கூட யோக்கியமான பிழைப்பு இல்லாமலும் திருட்டு, பித்தலாட்டம், கூட்டிவிடும் தொழில் முதலியவைகளைவிட தேசீய வாழ்க்கை சுலபமானதென்று கருதி சிலரும் அவைகளையும் செய்து பார்த்துவிட்டு அதைவிட தேசீயம் சுலபமென்று கருதிய சிலரும் ஆக பலரும் தேசீயத்தில் வந்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று இதற்கு முன் பல தடவை ஆதார பூர்வமாக எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். நாளது வரை இது முழுதும் தவறு என்று யாராலும் ஆக்ஷேபிக்கப் படவில்லை. ஆனால் சிலர் இக்கூற்று தங்களை மாத்திரமே நேராய் குறிப்பிடுவதாய் இருக்கிறதே என்று கருதிக்கொண்டு நம் மீது பாய்ந்திருக்கிறார்கள். சிலர் காலிகளை நம்மீது உசுப்படுத்தி விடுவதற்கு ஆக இதை ஒரு சாதனமாய்க் கொண்டு “உத்தமமான தேச பக்தர்களை, தேசிய வீரர்களை, உண்மைத் தியாகிகளை “குடி அரசு” வயிற்றுச் சோற்றுக்கு மார்க்கமற்றவர்கள் என்று...

காங்கரஸ்வாதிகள் மதுபானம் செய்வதுண்டா?

காங்கரஸ்வாதிகள் மதுபானம் செய்வதுண்டா?

– ஓர் சந்தேகி நமது சென்னை மாகாணத்தில் காங்கரஸ் மந்திரிகள், இவர்கள் காரியதரிசிகள், சட்டசபை (மேல்சபை கீழ்சபை) மெம்பர்கள், தலைவர்கள், உபதலைவர்கள், காங்கரஸ்கமிட்டித் தலைவர்கள், உபதலைவர்கள், காரியதரிசிகள், மெம்பர்கள், கதர் போர்டு நிர்வாகஸ்தர்கள், ஊழியர்கள், சாய நெசவு நூல் நூற்கும் வேலைக்காரர்கள், மது விலக்குப் பிரசாரகர்கள், கதர் பிரசாரகர்கள், ஹிந்தி பிரசாரகர்கள், ஹரிஜன ஊழியர்கள், நாலணா காங்கரஸ் மெம்பர்கள், மற்றும் பிரபல வட நாட்டு – தென்னாட்டுத் தலைவர்கள், தேசீயப் பத்திரிகை ஆசிரியர்கள் ஆகிய இவர்களில் உள்நாட்டுக் கள், சாராயம், வெளிநாட்டு பிராந்தி, பீர், உஸ்கி மதுவகைகள் உபயோகப்படுத்தாமல் பதிவிரதைகளாயிருப்பவர்கள் எத்தனை பேர்கள்? மதுபான வகைகள் அவசியம் உபயோகிக்காமலிருக்க முடியாது. அதுதான் என் உயிர். அதில்லாமல் நான் உயிர்வாழ முடியாது என்று மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் குடிப்பவர்கள் – மது வகைகளை உபயோகப் படுத்துகிறவர்கள் எத்தனை பேர்கள்? இவைகளை புள்ளி விபரங்களுடன் பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் தெரிந்து வெளியிடுவாரா? குடி அரசு...

தமிழர்கட்கு “அறிவிலிகள்” பட்டம்

தமிழர்கட்கு “அறிவிலிகள்” பட்டம்

“ஆனந்த விகடன்” ஆசிரியர் நற்சாட்சிப் பத்திரம் – ஊர் வம்பு சேலம் ஜில்லாவில் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய பிரதம மந்திரி ஆச்சாரியாருடன் “ஆனந்த விகடன்” ஆசிரியர் தோழர் ரா.கிருஷ்ணமூர்த்தியும் அழைக்கப்பட்டிருந்தாராம். ஓமலூர் பொதுக்கூட்டத்தில் பிரதம மந்திரி ஆச்சாரியார் ஹிந்தியை எதிர்ப்பவர்கட்குப் புத்தியில்லை. அவர்கள் எல்லோரும் அறிவிலிகள் என்று பேசினாராம். அதே கூட்டத்தில் பிரதம மந்திரி ஆச்சாரியார் பேசிய பிறகு “ஆனந்த விகடன்” ஆசிரியர் தோழர் ரா.கிருஷ்ணமூர்த்தியும் காங்கரஸ் மந்திரிகளின் ஆட்சி முறையைப் புகழ்ந்து புகழ்மாலை பாடிவிட்டு ஹிந்தியைப்பற்றி பேச ஆரம்பித்து, தமிழர் கட்கு ஒரு நற்சாட்சிப் பத்திரம் வழங்கியிருக்கின்றார். பிரதம மந்திரி ஆச்சாரியாரின் ஆணவமும் அகம்பாவமும் நிறைந்த சர்வாதிகாரப் பேச்சைப் பின்பற்றியே “ஆனந்தவிகடன்” ஆசிரியரும் வாய்க்கொழுப்பாகப் பேசத் துணிந்துவிட்டார். தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதரையே கடிக்கத் தொடங்கிய கதையை மெய்ப்பிக்கின்றார் “ஆனந்த விகடன்” ஆசிரியர். “தினமணி” அக்டோபர் 6-ந் தேதி பத்திரிகையில் 4-ம்...

சமஷ்டி (அல்லது) பிடரேஷன்

சமஷ்டி (அல்லது) பிடரேஷன்

மாகாண அரசியலுக்கு என்று புதிய சீர்திருத்தச் சட்டம் ஏற்பட்டது போலவே இந்தியாவொட்டுக்கும் சேர்ந்த பொது நிர்வாக விஷயங்கள் சில என்று பிரித்து அவைகளுக்காக சமஷ்டி என்று சொல்லப்படும் பிடரல் கவர்ன்மெண்டுக்கு அரசியல் சீர்திருத்தச் சட்டம் ஒன்று சீக்கிரத்தில் வெளியாகப் போகிறது என்பது உறுதி அந்த பிடரல் கவர்ன்மெண்ட் சீர்திருத்த சட்டத்தை இந்தியாவின் நாணையமான அரசியல்வாதிகள் ஆக்ஷேபிப் பதில்லை. ஏதோ சில திருத்தங்கள் மாத்திரம் சொல்வதாகத் தெரிகிறது. ஆனால் நமது பித்தலாட்ட அரசியல்வாதிகளான காங்கரஸ்காரர்கள் இருக்கிறார்களே அவர்கள் மாத்திரம் தங்கள் வழக்கப்படி “சமஷ்டியை நசுக்கி அழித்து ஒழித்து விடுவோம்” என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏனென்றால் காங்கரஸ்காரர்களுக்கும் நாணையத்துக்கும் யோக்கியப் பொறுப்புக்கும் வெகு தூரமல்லவா? ஏனெனில் அவர்கள் அறிவாளிகளைப் பார்த்தோ அறிவாளிகளை மனதில் வைத்தோ பேசுகிறவர்கள் அல்ல. மந்திரத்தினால் புதையல் எடுத்துக் கொடுக்கிறவனைப் போல் முட்டாள் ஜனங்களையும் மடையர்களையும் எப்படி ஏய்க்கலாம் என்பதிலும் காசு கொடுத்து காலிகளை நியமித்து எப்படி அறிவற்ற ஜனங்களை ஏமாற்றலாம்...

வகுப்பு வாதமும்  “ஆனந்த விகட”னும்

வகுப்பு வாதமும்  “ஆனந்த விகட”னும்

எங்கும் வகுப்பு வாதம் ஒரு ஆட்டு இடையனை அவன் எஜமான் தனது ஆடுகள் பட்டியை விட்டு வெளியே போவதை எண்ணி விட்டு எண்ணின கணக்கை வந்து சொல்லும்படி உத்திரவு செய்தான். அந்த இடையன் அதேமாதிரி பட்டியின் கடவைத் திறந்து ஆடுகளை வெளியில் விரட்டி ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினான். எண்ணுகையில் “முதல் முதலில் ஒன்று, அப்புறம் ஒன்று, மறுபடியும் ஒன்று, அதற்குள் குறுக்கே பாய்ந்து ஒன்று, தாண்டிக் குதித்து ஒன்று, மத்தியில் முட்டிக்கொண்டு போனது ஒன்று, அப்புறம் எல்லாம் புலுபுலு” என்று எஜமானிடம் வந்து கணக்கு சொன்னான். அதுபோல் “ஜாதி மத வகுப்புபேதமில்லாமல் பரிசுத்த வருணாச்சிரமதர்ம ராமராஜ்ய ஆட்சி” நடந்துவந்த இந்தியாவில் இமயமலை முதல் கன்னியாகுமரி வரை தெற்கு வடக்காகவும் பம்பாய் சிந்து முதல் வங்காளம் பர்மா வரை கிழக்கு மேற்காகவும் இந்தியா முழுவதிலும் இன்று புலு புலு என்று வகுப்பு வாதம் தாண்டவமாடுகின்றது. ~subhead உரிமை கேட்பது வகுப்பு வாதமா? ~shend...

சட்டசபை நாடகம்

சட்டசபை நாடகம்

  சரணாகதி மந்திரிகளின் சட்டசபை நாடகம் ஒன்று முடிந்து விட்டது. நடந்தது என்ன என்று பார்ப்போமானால், தேசியக் கொடி சட்டசபை மண்டபத்தில் பறக்க விடப்படவில்லை. காங்கரஸ் கொடியை தேசியக் கொடி என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று கவர்னர் நிராகரித்து விட்டதைப்பற்றி காங்கரஸ்காரர்கள் மூச்சுப் பேச்சு காட்டவில்லை. ஆனால் வேறு என்ன காரியம் செய்தார்கள் என்றால் சட்ட சபையில் வந்தேமாதரப் பாட்டு பாடினார்கள். ஏன் சர்க்காரிடம் காங்கரஸ் ஜபம் சாயவில்லை? சரணாகதி அடைந்து ஏற்ற மந்திரி பதவி ஆனதால் சர்க்கார் சம்மந்தமான காரியங்களில் வால்தனம் காட்டினால் பிரிட்டிஷ் கத்தரிக் கோல் வாலைக் கத்திரித்துவிடும் ஆதலால் சர்க்காரிடம் வாலை அடக்கிக் கொண்டு மற்ற “சகோதர” மக்களிடம் மாத்திரம் வாலைக் காட்ட முடிந்தது. வந்தேமாதரம் வந்தேமாதரப் பாட்டானது வகுப்பு துவேஷமும் வகுப்புக் குரோதமும் வகுப்புப் போருமான பிரார்த்தனைப்பாட்டு. உதாரணமாக ஆரியர் வேதம் எப்படி “கருப்பர்களைக்” கொல்லவேண்டும், “கருப்பர்களை” அழிக்கவேண்டும், “கருப்பர்களை” பட்டினி போட்டு வதைக்க வேண்டும்,...

இந்தியா ஒரு நேஷனா?

இந்தியா ஒரு நேஷனா?

இந்தியாவுக்குப் பொதுபாஷை இருந்ததா? ஹிந்தி புகுத்தல் அரசியல் சூழ்ச்சியே இந்தியா பல மதம் பல வகுப்புடைய நாடு தலைவரவர்களே! தோழர்களே! ஹிந்தியை நம் நாட்டில் பொது பாஷை ஆக்கப்பட வேண்டுமென் பவர்கள் அதற்கு ஆதாரமாக சொல்லி வரும் காரணங்கள் என்ன என்பதை நான் முதலில் குறிப்பிட்டு விட்டு அவற்றிற்கு சமாதானம் சொல்லி பிறகு அதன் கர்த்தாக்களின் உள் எண்ணத்தையும் அதனால் நமக்கு நேரக்கூடிய கெடுதியையும் எனக்குப் பட்டவரை எடுத்துச் சொல்லுகிறேன். ஹிந்தி பொது பாஷையாகவும் பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பாடமாகவும் வைக்கப்பட வேண்டியது அவசியம் என்று இப்போது எனக்கு முன் பேசிய இருவர்களுக்கு உள்ள சுதந்தரம் எனக்கும் உண்டு என்கின்ற முறையிலேயே நான் பேசுகிறேன். முதலில் பேசிய தோழர் கே.பி. பிள்ளை அவர்கள் “ஹிந்தி அரசியலில் பட்டதல்ல வென்றும் அரசியல் பேச்சு இந்த விவாதத்தில் கலக்க வேண்டியதில்லை” என்றும் பேசிவிட்டு உடனேயே, “நமக்கு சுயராஜ்யம் வேண்டும், அதற்கு ஒரு பொது பாஷை...

காங்கரஸ் மத ஆதிக்கத்துக்கா? அரசியல் ஆதிக்கத்துக்கா?

காங்கரஸ் மத ஆதிக்கத்துக்கா? அரசியல் ஆதிக்கத்துக்கா?

  அந்நியர்களை இந்தியாவிலிருந்து விரட்டி அடித்து விடுகிறோம் என்று வீரம் பேசி மக்களை ஏய்த்து அதிகாரப் பதவி பெற்ற மற்றொரு அந்நியராகிய பார்ப்பனர் அரசியல் ஆதிக்கம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்கு சரணாகதி அடைந்து பார்ப்பன மத ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ளுவது தான் என்பதை கொஞ்சமும் நெஞ்சும் குடலும் அஞ்சாமல் தைரியமாய் காட்டிக்கொண்டு வருகிறார்கள். எவ்வித அதிருப்தியையும் எதிர்ப்பையும் லôயம் செய்யாமல் பொது ஜன அபிப்பிராயத்தை சிறிதும் மதிக்காமல் மாகாண கவர்னரும் சர்க்கார் பெரிய அதிகாரிகளும் பெரிதும் முறையே தம் கைவசத்திலும் தம் இனத்தார் களாகவும் இருக்கிறார்கள் என்கின்ற ஆணவத்தில் “அப்படித்தான் செய்வேன்” “என் இஷ்டம்” “பேசாதே” “உட்கார்” என்கின்ற இராணுவ அதிகார ஆணவத்தில் காரியத்தை நடத்துகிறார்கள். இன்று நம் சட்டசபையில் இருக்கும் பார்ப்பனரல்லாத அங்கத்தினர்கள் சொரணை இழந்து சுதந்தரமிழந்து மானம் கெட்டு “வார்த்ததை வாரம்மா வள்ளித்தாயே” என்று சிறிதும் உயிரற்ற நடைப்பிணம் போல் இருந்து கொண்டு ஆரிய ஆட்சிச் சூழ்ச்சிக்கு ஆதரவாய்...

தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கமிட்டிக் கூட்டம்

தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கமிட்டிக் கூட்டம்

பாரிஸ்டர் ராமசாமியை கவிழ்க்கச் சூழ்ச்சி தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சி மெம்பரான பாரிஸ்டர் தோழர் எஸ்.வி. ராமசாமி அவர்கள் தற்கால அக்ரகார மந்திரி சபையைக் கண்டித்து “விடுதலை” பத்திரிகையில் எழுதியதற்காகத் தமிழ் மாகாண காங்கரஸ் கமிட்டியார் தோழர் ராமசாமி அவர்கள் காங்கரசின் பேரால் 3 வருடங்களுக்கு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று உத்திரவிட்டார்கள். அதை ஒட்டித் தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சியைச் சேர்ந்த பார்ப்பனர்கள் தோழர் ராமசாமிக்கு அழைப்பு அனுப்பாமலேயே சென்ற 31-8-37ந் தேதி ஒரு கூட்டம் கூடி தோழர் ராமசாமி அவர்களை ஜில்லா போர்டு அங்கத்தினர் பதவியை ராஜிநாமா செய்யும்படி கேட்டுக்கொள்வதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதைக்கண்ட தோழர் ராமசாமி அவர்கள் தனக்கு அழைப்பு அனுப்பாமலேயே கூட்டம் கூடி தன்னை ஜில்லா போர்டு மெம்பர் பதவியை ராஜிநாமா செய்யும் படி கேட்பது ஞாயமல்லவென்று ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சி கமிட்டித் தலைவரிடம் கூறினார். þ கமிட்டித்...

ஆராய்ச்சி விளக்கம்

ஆராய்ச்சி விளக்கம்

    ஏழை என்பவன் யார்? தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக் கூட்டத்தார் களுக்குதான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர். முதலாளிகள் என்பவர்கள் யார்? சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள். ~subhead கீழ் ஜாதியார்கள் யார்? ~shend ஏவலாள்கள் அதாவது எவ்வித கூலியோ சம்பளமோ பேசாமல் இட்டவேலையை செய்துவிட்டு கொடுத்த கூலியைப் பெற்றுக்கொண்டு கிடைத்ததற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள். ~subhead மேல் ஜாதியார் என்பவர்கள் யார்? ~shend தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் என்பவைகளை மாத்திரம் செய்து கொண்டு கூடுமானவரை சரீரத்தால் செய்யும் கடினமான வேலைகளை செய்யாது தப்பித்துக் கொள்பவர்கள். ~subhead குடியானவர்கள்...

வரி குறைப்பு எங்கே?

வரி குறைப்பு எங்கே?

புரோகிதக் கூட்டத்தார் தேசாபிமானம் என்னும் போர்வையைப் போர்த்துக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றி பதவியடைவதற்குச் செய்த சூழ்ச்சிகளில் பெரியது சகல துறைகளிலும் வரிகளைக் குறைத்து விடுவதாகக் கூப்பாடு போட்டு மக்களை ஏமாற்றினதாகும். இந்தக் கூப்பாடுகள் நடக்கும் போதே இவை முழுப் புரட்டென்றும் மொத்தத்தில் ஒரு தம்பிடி வரிகூடக் குறைக்க இவர்களால் முடியாதென்றும் இவர்கள் மேலும் மேலும் வரிபோடத் தான் போகிறார்கள் என்றும் நாம் அடிக்கடி சொல்லிவந்தோம். அதுபோலவே இன்றைக்கு புரோகித ஆட்சி ஏற்பட்டு இந்த 2, 3 மாத இடையில் எவ்வளவோ காரியம் செய்துவிட்டதாகப் பறை அடித்தும் அவசரப்பட்டுச் செய்வதாக யாரும் ஆத்திரப் படக்கூடாது என்று பொது மக்களுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டு இஷ்டப்படிக்கெல்லாம் ஆடிக் குதித்துக்கொண்டும் அகங்காரமாகவும் ஆணவமாகவும் பேசிக் கொண்டும் திரிகிற இந்தப் புரோகிதக் கூட்ட ஆட்சியானது வரி விஷயத்தில் ஏதாவது காரியம் செய்திருக்கிறதாவென்று பார்த்தால் அந்த விஷயத்தில் ஒரு காசுகூடக் குறைக்கவில்லை என்பதோடு இன்னமும் எந்தெந்தத் துறையில் புது...

பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம்

பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம்

தோழர் ஈ.வெ. ராமசாமி, ஈ.வெ. கிருஷ்ணசாமி மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தினர்கள், உண்மை நண்பர்கள் ஆகியவர்கள் பார்ப்பனீயத்துக்கு எதிரிகளே தவிர, தங்கள் செல்வம், உழைப்பு, ஊக்கம் உணர்ச்சி ஆகியவை களைப் பார்ப்பனீயத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தி பார்ப்பனீயத்தை ஒழித்து அதன் மூலம் மக்களுக்கு பகுத்தறிவையும் சுயமரியாதை உணர்ச்சியையும் உண்டாக்க வேண்டும் என்று பாடுபடுகிறார்களே ஒழிய இன்று தனிப்பட்ட எந்தப் பார்ப்பனரிடமும் விரோதமோ குரோதமோ கொண்டு எந்த தனிப்பட்ட பார்ப்பனரின் எவ்வித காரியத்திலும் பிரவேசித்து எவ்வித இடையூறோ இடஞ்சலோ செய்ததில்லை. மற்றும் அநேக பார்ப்பனர்களுக்கு தனிப்பட்ட முறையில் உத்தியோக முதலிய சிபார்சுகளும் செய்து சராசரி சமூக வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட இயற்கையின் பரஸ்பர உதவி முதலிய காரியங்கள் வகுப்பு உணர்ச்சி இல்லாமல் மனித உணர்ச்சி கொண்டு கூடுமான அளவு உதவியே வருகிறார்கள். தனிப்பட்ட மனிதர்களிடத்தில் காட்டும் மரியாதை, அன்பு முதலிய காரியங்களில் சிறிதும் பிறழாமல் எப்பொழுதும் போலவே நடந்து வருகிறார்கள். ஆனால்...

“தேசீய கீத”ப் புரளி

“தேசீய கீத”ப் புரளி

ஆகஸ்டு 31ந் தேதி கூடிய சென்னை அசம்பிளி – கெளன்சில் கூட்டு சம்மேளனத்தில் “வந்தேமாதர” தேசீய கீதம் பாடியபோது இரண்டு முஸ்லீம் மெம்பர்கள் எழுந்து நிற்கவில்லையென்று தெரிய வருகிறது. காங்கரஸ்காரரான ஹிந்துக்கள் வந்தேமாதர கீதத்தை தேசீய கீதமென்றோ தேசீய ஞான சங்கீர்த்தனமென்றோ கூறிக்கொள்ளலாம். ஆனால் இதர கட்சி மெம்பர்களும் இதர சமூக மெம்பர்களும் அதை காங்கரஸ் கீதம் என்றே மதிப்பார்கள். முக்கியமாக முஸ்லீம்கள் வந்தேமாதர கீதத்தை அறவே வெறுக்கிறார்கள். எனவே “வந்தே மாதர” கீதம் பாடியபோது உட்கார்ந்திருந்த அந்த இரண்டு முஸ்லீம்களையும் குறை கூறுவதற்கில்லை. வந்தேமாதர கீதம் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்த மடம்” என்ற நாவலில் முதன் முதல் வெளிவந்தது. முஸ்லீம் சமூகத்தை அழிப்பதே “ஆனந்த மடத்தின்” நோக்கம். 168- வருஷங்களுக்கு முன் இருந்து வந்த இந்திய நிலைமையப் பற்றியே “ஆனந்த மடம்” எழுதப்பட்டிருக்கிறது. கதாநாயகனான பவாநந்தன் வங்காள முஸ்லீம் ஆட்சியை கவிழ்க்க எண்ணிப் படை திரட்டுகிறான். அவன்...

சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா?  – III

சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா?  – III

கதர் மோசம் சென்ற வாரமும் அதற்கு முந்தின வாரமும் இன்றைய சரணாகதி பார்ப்பன ஆதிக்க மந்திரி கூட்டம் நாட்டின் விடுதலைக்கு ஆக ஏற்பட்டதல்ல வென்றும் இந்நாட்டு பழந்தமிழ் மக்களை புராணகாலக் கதைகள் போல் மிருகங்களாக ஆக்கி ஆரிய ஆதிக்கத்தை நிலை நிறுத்தி ஆரியர்களுக்கு தமிழ் மக்கள் என்றென்றும் அடிமையாயிருக்கச் செய்யும் சூழ்ச்சிக்கு ஆக ஏற்பட்ட கூட்டம் என்றும் அதற்கு ஆக இப்போது பார்ப்பன ஆதிக்க மந்திரிகள் ஆட்சி செய்துவரும் மோசமான காரியங்கள் மூன்று என்றும் அவற்றில் முதலாவதாக தமிழ் பாஷை, தமிழ் கலை, தமிழ் பழக்க வழக்கம், தமிழ் சுதந்தர உணர்ச்சி, தமிழ் மக்களுக்கு ஆரியர்கள் ஆதி முதல் செய்து கொண்டு வந்த கொடுமைகள் ஆகியவைகளை மறக்கடித்து ஆரிய உயர்வையும், மற்றவர்களின் தாழ்வையும், அடிமைத்தனத்தையும் புகுத்தும் மறைவான சமஸ்கிருதமான ஹிந்திபாஷையை தமிழர்களின் இளங்குழந்தைகள் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அநீதியைப் பற்றியும் இரண்டாவதாக தேர்தல்களில் எப்படி பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளுமே வெற்றிபெறக்கூடும் என்பதற்கு...

திருச்சியில் சுயமரியாதைக் கூட்டம்  காங்கிரஸ் காலிகள் விஷமம்  காலிகள் விஷமத்துக்கு போலீஸ் உடந்தை

திருச்சியில் சுயமரியாதைக் கூட்டம் காங்கிரஸ் காலிகள் விஷமம் காலிகள் விஷமத்துக்கு போலீஸ் உடந்தை

  தலைவர் அவர்களே! தோழர்களே!! இக்கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளும் காலித்தனத்தைப் பாருங்கள். காங்கரஸ் மந்திரிசபை ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் நமக்கு பேச்சு சுதந்தரம் எப்படியிருக்கிறது. கலவரம் செய்வதும் காலித்தனம் செய்வதும் காங்கரஸ்காரர்கட்கு மட்டும் சொந்தமல்ல; காப்பி ரைட்டல்ல. கட்சி அபிப்பிராய பேதங்கட்காக ஒருவர் கூட்டத்தை ஒருவர் கலைத்து விடுவது, கலவரம் செய்வது என்றால் அது இந்நாட்டில் எக்கட்சியாரும் இனி பொதுக் கூட்டங்கள் அமைதியாக நடத்தமுடியாது. கலகத்திற்கு நாங்கள் பயப்படவில்லை. அடிதடிக்கும் நாங்கள் அஞ்சவில்லை. வீண் கூச்சல் போட்டு எங்களை மிரட்டிவிட எண்ணுவது அறியாமையாகும். இந்தக் கூலிகளின் – காலிகளின் கூப்பாட்டுக்குப் பயந்தால் நாங்கள் எங்கள் வேலைகளை எப்படி செய்ய முடியும்? பார்ப்பன ஆதிக்கத்தையும் காங்கரஸ் பித்தலாட்டங்களையும் எப்பாடு பட்டாவது ஒழிக்கவேண்டு மென்பதுதான் எங்கள் வேலையாகும். இதற்காக எங்கள் உயிரையும் கொடுப்போம். இதற்காக எத்தனை கலவரங்கள், கூச்சல்கள், எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் நாங்கள் வரவேற்கத் தயாராக யிருக்கின்றோம். பொது மக்கள் காங்கரஸ்காரர்கள் காலித்தனங்களையும்,...

ஓலம்! ஓலம்!! ஓலம்!!! ஓ தமிழனே! தமிழ் அன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள். ஆரியக் கொடுமையில் இருந்து தன்னை விடுவித்துவிடும்படி ஓலமிட்டுக் கெஞ்சுகிறாள். தாய்நன்றி கொன்ற மகனும், தாய்ப் பணிக் கடமை கொன்ற மகனும் மனிதனாவானா? குடி அரசு – வேண்டுகோள் – 29.08.1937