சென்னையில் வகுப்பு வாதம்

சென்னை கார்ப்பரேஷனில் காங்கரஸ் மெம்பர்களுக்குள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு வாதம் முற்றிவிட்டது. தோழர் சிவசைலம் பிள்ளையை கல்வி அதிகாரி நியமனத்தின் பயனாய் காங்கரஸ் பத்திரிகைகளில் தினமும் இச் சேதிகள் வருகின்றன.

தோழர் சிவசைலம் பிள்ளை நியமனத்தை சர்க்காரார் நிராகரித்து விடவேண்டுமென்று ஒரு கட்சியும் அதை அங்கீகரிக்க வேண்டுமென்று ஒரு கட்சியும் விண்ணப்பம் அனுப்பி இருப்பதாய்த் தெரிகிறது.

நிராகரிக்க முயற்சிப்பவர்கள் பெரிதும் பார்ப்பனர்களாகவும் அங்கீகரிக்க முயற்சிப்பவர்கள் எல்லோரும் பார்ப்பனரல்லாதாராகவும் இருந்து வருகிறார்களாம்.

தோழர்கள் சாமி வெங்கடாசலம், ஆதிகேசவ நாயக்கர், வினாயக முதலியார் முதலிய பார்ப்பனரல்லாத காங்கரஸ் வாதிகள் நியமனத்தை ஆதரித்து மந்திரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

குடி அரசு – செய்தி விமர்சனம் – 07.11.1937

You may also like...