பெரியசாமி பெரும்பிரிவு

தூத்துக்குடி தோழர் கெ.கெ.ஏ. பெரியசாமி அவர்களின் திடீர் மரணத்தைக் கேட்டு திடுக்குற்றோம். காலஞ் சென்ற தோழர் பெரியசாமி அவர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு எண்ணற்ற தொண்டு புரிந்தவர்; உண்மை உழைப்பாளி; ஏழைகளின் நண்பன்; சமதர்ம உணர்ச்சியுடையவர்; சமூக சீர்திருத்தத்தில் அளவு கடந்த பற்றுடையவர். இத்தகைய உயர் குணங்களும் ஓயா உழைப்பும், தேயா ஊக்கமும் உடைய தோழர் பெரியசாமி அவர்கள் அகால மரணத்தைக் குறித்து மிகவும் வருந்துவதோடு அன்னார் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த அநுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

குடி அரசு – இரங்கல் செய்தி – 31.10.1937

You may also like...