காஞ்சி விஜயேந்திரனின் ‘இன ஒதுக்கல்’ APARTHEID!
பெங்களூரில் மூவாயிரம் பார்ப்பனர்கள் திரண்ட ‘கர்நாடக பிராமண மகா சபாவில்’ (19/01/2025) பேசிய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி ‘பிராமண வெறியை’ தூண்டி விட்டு இருக்கிறார். அவர் இந்து மதம் பற்றிப் பேசவில்லை; வேதமதம் பற்றி பேசியிருக்கிறார். வேத மதம்தான் சனாதனம் என்றும் ‘பிரமாணிசம்’ மட்டுமே வேத மதத்தைக் காப்பாற்றும் என்பதால் ‘பிராமணர்கள்’ ஒன்றுபட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். ‘பிராமணர்கள்’ தங்கள் பிறவி அடையாளங்களை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகளையும் பட்டியலிட்டுள்ளார். “1. ஒவ்வொரு நாளும் தங்களுக்கு உரிய வேத சடங்குகளை வீட்டில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். 2. பிராமணர்கள் வெளிநாடு போகக்கூடாது. (கடல் தாண்டுவது குற்றம் என்று சாஸ்திரம் கூறுகிறது). இங்கேயே தங்கி சனாதன கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும். 3. ‘பிராமணர்கள்’ மட்டுமே குடியிருக்கும் ‘அக்கிரகாரங்களை’ உருவாக்க வேண்டும். சுமார் 100 பிராமணர்கள் வசிக்கக் கூடிய தனிக் குடியிருப்புகள்(gated communities)...
