புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆத்தூர் 14042017
புரட்சியாளர் அண்ணல் Dr.அம்பேத்கர் அவர்களின் 126 வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தோழர்.மகேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் பெரியார் – அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது… பின்பு அதனை தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டம் புதியதாக தொடங்கப்பட்டது….படிப்பகத்தை(வாசகர் வட்டம்) பெரியாரின் தொண்டர், பேராசிரியர் தோழர் முருகேசன் அவர்களும், பேராசிரியர் தோழர் அம்பேத்கர் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தனர்….மேலும் அண்ணலின் பிறந்த நாளை சிறப்பிக்கும் படி அனைத்து தோழர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது… செய்தி திவிக ஆத்தூர்.