பேரன்பும் பெருங்கோபமும்
தங்கர்பச்சான் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘பேரன்பும் பெரும்கோபமும்’ திரைப்படம் ஜாதி பெருசா? சாமி பெருசா? என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. மிகுந்த ஆழமான கேள்வியும் கூட இது. உண்மையில் சாமியை விட ஜாதிதான் பெரிது. அதைத்தான் இப்படம் பேசுகிறது. இதற்கு படம் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் கரு வழக்கத்தில் இருக்கும் முத்தாலம்மன் கதை. முத்தாலம்மன் தென்மாவட்டம் முழுவதும் வழிபடக்கூடிய தெய்வமாகும். முத்தாலம்மன் உயர்குடி ஜாதியைச் சேர்ந்தவள். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்து ஊரை விட்டு ஓடிவிடுகிறாள். வெளியூரில் திருமணம் முடித்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவள் வாழும் இடம் தெரிந்து சக்கரையாக பேசி ஊருக்கு அழைத்து வருகிறார்கள். ஊர்க்காரர்களின் பேச்சை நம்பி வந்த முத்தாலம்மன் கணவன் குழந்தைகளோடு சேர்த்து படுகொலை செய்யப்படுகிறாள். இன்னும் அந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்ட திருவிழாக்களின் போது படுகளம் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் விரதமிருந்து படுகளத்தில் கழுகுமரம் ஏறுவதும், செத்தவர்கள் போல படுத்து கிடக்க, அந்த...
