Author: admin

எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலையை உடைக்கச் சொன்ன பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி 8.3.2018 அன்று மாலை 5 மணிக்கு மேட்டூர் பெரியார்  பேருந்து நிலையத் தில் மேட்டூர் நகர கழக ஒருங் கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவை இளவரசன் வரவேற்புரை யாற்ற மாவட்டத் தலைவர் சூரியக் குமார் தலைமை தாங்கினார். சு.கிருட் டிணசாமி (தி.மு.க.), எஸ்.பி.ராஜா (நகர அவைத் தலைவர் தி.மு.க.), வைகோ முருகன் (நகர செயலாளர் ம.தி.மு.க.), பாலு, தினேசு (நகர பொறுப்பாளர் நாம் தமிழர் கட்சி), ராசு குமார் (மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), சிவக்குமார் (மேட்டூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் வி.சி.க.), மெய்யழகன் (மாவட்டச் செயலாளர் வி.சி.க), கருப்பண்ணன் (மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி), அ. சக்திவேல் (கழக மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இ. கோவிந்தராசு (கழக மாவட்டச் செயலாளர்) ஆகியோர்...

மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூர் நகர கழகத்தின் சார்பில் 13.3.2018 மாலை 5.30 மணிக்கு மேட்டூர் சதுரங்காடியில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஓ. சுதா வரவேற்புரையாற்றினார். காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் பறை முழக்கத்தோடு பெரியார், அம்பேத்கர் பாடல்களும், சமூக இழிவு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாடல்களும் பாடினர். மு. கீதா தலைமையுரையாற்றினார். ‘சொத்து உரிமையில் பெண்கள்’ என்ற தலைப் பில் அனிதா, ‘விளம்பரத் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில் ப. இனியா, ‘பெரியார் காண விரும்பிய விடுதலைப் பெண்’ என்ற தலைப்பில் கெ. ரூபா, ‘அலுவலகம் செல்லும் பெண்களின் நிலை’ என்ற தலைப்பில் இரண்யா உரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையாற்றினர். இந்திராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை காயத்திரி, சரசுவதி தொகுத்து வழங்கினர்.  கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளி லிருந்தும் பொது மக்களும் தோழர் களும் பெருமளவில் வந்திருந்து அறிவு விளக்கம் பெற்றனர். இந்நிகழ்வு...

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

மாவட்ட வாரியாக நடந்து வந்த பெரியாரிய பெண்கள் சந்திப்பு 1.4.2018 அன்று கோவையில் நடந்தது. தோழர்களை உருவாக்குவதற்கும், உருவான தோழர்களை களப்பணியாளர்களாக தயாராவதற்காக வும் இந்த சந்திப்புகள் நடந்து வருகின்றன. கோவையில் இரத்தினசபாபதிபுரத்தில் (ஆர்.எஸ்.புரம்) பெரியார் பெருந்தொண்டர் கஸ்தூரியார் படிப்பகத்தில் அவருடைய மகன் தேவேந்திரன் சந்திப்பு நிகழ்வை நடத்த மகிழ்வுடன் அனுமதி அளித்தார். பெரியார் பிஞ்சு தமிழினி கடவுள் மறுப்பு சொல்லி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். சந்திப்பில் பல்வேறு தலைப்புகளில் தோழர்கள் பேசினர். ‘மதங்கள் பெண்களுக்கு எதிரானவை ஏன்?’ என்ற தலைப்பில் ஆனைமலை வினோதினி, ‘பெரியாரியக்கத்தின் பெண் தளபதிகள் பற்றிய நினைவுகள்’ என்ற தலைப்பில் கோபி மணிமொழி, ‘திராவிடர் இயக்கத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை’ என்ற தலைப்பில் பவானிசாகர் கோமதி ஆகியோர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். ஒவ்வொருவர் கருத்திற்குமிடையேயும் விவாதங்கள் நடந்தன. இறுதியாக தோழர்களின் சந்தேகங்களுக்கும் மக்களிடையே உறவினர்களிடையே சந்திக்கும் சவால்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் சிவகாமி...

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு: ஈரோட்டில் தெருமுனைக் கூட்டம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு: ஈரோட்டில் தெருமுனைக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக ஈரோடு சி.எம்.  நகரில் 1 .4. 2018 ஞாயிறன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் ஸ்டெர்லைட் ஆலை , நியூட்ரினோத் திட்டம் வழியாக மோடி பயங்கரவாத அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதையும் மக்களிடையே தெளிவுபடுத்தும் தெருமுனைக் கூட்டம்  நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு சி.எம். நகர் பிரபு தலைமையேற்க யாழ் எழிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். மணிமேகலை, வீரா கார்த்தியைத் தொடர்ந்து தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அரங்கம்பாளையம் கிருஷ்ணன், சித்தோடு கமலக்கண்ணன், சென்னிமலை செல்வராஜ், சௌந்தர், சத்தியராஜ், கோபி தங்கம் போன்றோர் பங்கேற்க மாவட்டப் பொருளாளர் பெ.கிருஷ்ணமூர்த்தியின் நன்றியுரையோடு கூட்டம் சிறப்புடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 05042018 இதழ்

மக்கள் இயக்கங்களை  முடக்கப் போகிறார்களாம்!

மக்கள் இயக்கங்களை முடக்கப் போகிறார்களாம்!

தேர்தல் அரசியலில் ஈடுபடாத மக்கள் விடுதலைக்கு மக்களோடு மக்களாக இணைந்து செயல்படும் இயக்கங்களைக் குறி வைக்கிறது – நடுவண் ஆட்சி. தமிர்நாட்டில் 11 இயக்கங்களைத் தடை செய்வது குறித்து பரிசீலிக்கிறார்களாம். அவர்களைப் பற்றிய தகவல்களை உளவுத் துறை சேகரித்து வருகிறதாம். ‘தமிழ் இந்து’ நாளேடு இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து சுற்றுச் சூழலை – மண் வளத்தைப் பாழக்கி வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். பார்ப்பனர்களின்  அதிகாரக் கட்டுப்பாட்டில் செயல்படும் ஓ.என்.ஜி. நிறுவனம் ஆபத்தான திட்டங்களை அதிகாரத் திமிரோடு மக்களிடம் திணிக்கிறது. மீத்தேன், ஹைடிரோ கார்பன், ஸ்டெர்லைட், அணுமின் நிலையம் என்று பல்வேறு பெயர்களில் திணிக்கப்படும் இந்தத் திட்டங்களின் ஆபத்துகளை அறிவியல் பார்வையில் – அதன் சுரண்டல் மோசடிகளை மக்களிடம் எடுத்துக் கூறி விழிப் புணர்வை ஏற்படுத்தும் இயக்கங்கள்தான் – தங்களின் உண்மையான எதிரிகள் என்ற நினைக்கிறது. பார்பபன – பனியா – பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளைக்காக...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் போடும் ஓட்டைகள்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் போடும் ஓட்டைகள்

இந்தியாவில் 18 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள். ஒவ்வொரு 15 நிமிடத் துக்கும் ஒரு முறை ஒரு தலித் தாக்கப்படுகிறார்; நாள்தோறும் 6 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். 2007 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் 66ரூ அதிகரித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், தலித் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதும் இரட்டிப்பாகியிருக் கிறது. இந்த நிலையில்தான், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் ‘அப்பாவிகள் மீது பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டு அலைக்கழிக்கப் படுவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாமல் இருப்பதை நீக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ‘தேசிய குற்றப்பதிவு ஆணையம்’ (என்சிஆர்பி) அளித்துள்ள தரவுகள் எள் முனையளவைப் போன்றது; பெரிய மலையளவுக்கு குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. காரணம், ஆதிக்க சாதியினர் பழிவாங்குவார்கள் என்ற அச்சத்தில் பெரும்பாலானவர்கள் புகார் செய்வதே இல்லை. அப்படியே புகார் ஏற்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு...

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு

காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக் கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தைக் கழகம் அறிவித்தது. வருமான வரித் துறை அலுவலகம் எதிரே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிட மாட்டோம் என்ற முழக்கத்தோடு வருமான வரித் துறை அலுவலகம் நோக்கி சென்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கழகத் தோழர்களைக் கைது செய்தனர். பூட்டு – பூட்டுச் சங்கிலியை பறி முதல் செய்தனர். மாலை வரை ஆயிரம் விளக்கு சமூகநலக் கூடத் தில் வைக்கப்பட்டு, சொந்தப் பிணையில் காவல்துறை விடுதலை செய்தது. அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை மாவட்டக் கழகப் பொறுப் பாளர்கள் வேழவேந்தன், உமாபதி, ஏசு, செந்தில் (எப்டி.எல்.), மயிலை சுகுமார், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், ஜாதி...

நடுவண் ஆட்சி, தமிழகத்துக்கு துரோகம்!

நடுவண் ஆட்சி, தமிழகத்துக்கு துரோகம்!

காவிரிப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி பச்சையாக – தனது தேர்தல் அரசியல் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை திட்டமிட்டு பறித்துவிட்டது. 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், “6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் – இந்த 6 வார காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தது. (It is hereby made clear that no extension shall be granted for framing the scheme on any ground – தீர்ப்பு பக்.451) 6 வார காலத்துக்குள் தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பேட்டி அளித்தனர். தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இதே போன்ற கருத்துகளையே வெளியிட்டார். 6 வாரக் கெடு முடியும் வரை மத்திய அரசு தீர்ப்பை அமுல்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில்...

‘நிமிர்வோம்’ –  மார்ச் 2018 இதழ்

‘நிமிர்வோம்’ – மார்ச் 2018 இதழ்

தமிழர் பண்பாட்டில் – வைதிக ஊடுறுவல் – வரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல். ‘நீட்’ தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது. போப்பிடம் கடவுளை மறுத்த ஸ்டீபன் ஹாக்கிங். ‘இராமன்’ நேர்மையின் உருவமா? – பெரியார் உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்; ‘காவிப் பிடியில் அதிகார மய்யங்கள். இந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள் வரலாறு. மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com

திருப்பூர் மாவட்ட வழக்கு நிதி ரூ.3600

திருப்பூர் மாவட்ட வழக்கு நிதி ரூ.3600

பெரியார் சிலை உடைக்கப் பட்டதையடுத்து, எச்.ராசா, மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து பார்ப்பனர் களின் பூணூல், உச்சிக்குடுமியை அறுத்தெறிந்து, சிறை சென்ற தோழர் களுக்கு வழக்கு நிதியாக திருப்பூரில் 12.3.18 அன்று நடைபெற்ற பெண்ணே எழு, விடுதலை முழக்கமிடு! மாவட்ட மாநாட்டில் பொது மக்களிடம் துண்டேந்தி தோழர்கள் ரூ.3600 வசூல் செய்து சென்னை மாவட்ட செய லாளர் உமாபதியிடம் அளித்தார்கள். பெரியார் முழக்கம் 29032018 இதழ்

இராமர் ரதயாத்திரை-பெரியார் சிலை உடைப்புகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

இராமர் ரதயாத்திரை-பெரியார் சிலை உடைப்புகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

கடந்த 20ஆம் தேதி புதுக் கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித் தும், இராம ரதயாத்திரையைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்டம் சார்பில் பள்ளிப்பாளையத்தில் தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து   20.3.2018 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. கண்டன ஆர்பாட்டத்திற்கு திவிக நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் முத்துப் பாண்டி முன்னிலையில் ஆர்ப்பாட் டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார்.  மேலும்,  திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த,  குமாரபாளையம் நகரத் தலைவர் தண்டபாணி, பள்ளிப்பாளை யம் சஜீனா, மீனா, தமிழ் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆதவன் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோர் தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர். இறுதியாக தோழர் கவுதமன் நன்றி யுரையாற்றினார். திருப்பூர் : பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, பெரியாரிய கூட்டமைப்பு சார்பில் தோழமைக் கட்சிகள் ஒன்றிணைந்து  திராவிடர்...

2000 துண்டறிக்கைகளை வழங்கி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்

2000 துண்டறிக்கைகளை வழங்கி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்

‘மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது நமது எதிர்காலம்’ என்ற தலைப்பில் தமிழக மாணவர்களின் பறிபோகும் கல்வி, வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சென்னையில் பிப். 24 அன்று காலை விவேகானந்தர் கல்லூரி, இராணி மேரி கல்லூரி, எம்.ஜி.ஆர் ஜானகி, எஸ்.ஐ.வி.டி ஆகிய கல்லூரி மாணவர்களிடையே துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது.  மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவக்குமார், தோழர்கள் யுவராஜ், காவை கனி, ராஜேஷ், பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். 2000 துண்டறிக்கைகள் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.   இராமராஜ்ய இரதயாத்திரை – பெரியார் சிலை உடைப்புகளுக்கு எதிர்வினையாற்றிய சென்னை, மயிலாடுதுறை, சேலம் தோழர்கள் கைது! ‘‘இராமராஜ்ய இரதயாத்திரை’ தமிழகத்துக்குள் நுழைவதை எதிர்த்து, காவிப் பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பு தமிழக எல்லையில் மறியல் போராட்டம் நடத்தி, பல்லா யிரக்கணக்கில் கைதாகி, தமிழ் மண் மதக் கலவரத்துக்கு அனுமதிக்காது; இது பெரியார் மண் என்பதை இந்தியா முழுமைக்கும் உணர்த்தியது. எச்.ராஜா...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (7) திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகளின் வைதிக எதிர்ப்பு

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (7) திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகளின் வைதிக எதிர்ப்பு

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) கோயில்களுக்கு பெரும் கோபுரங்கள் கட்டப் படுவதும் அந்தக் கோபுரங்களின் சிற்பக் கலைகள் குறித்து தமிழர் கட்டிடக் கலைப் பெருமை பேசுவதும் ஒரு பக்கம் இருக்கட்டும். கோயிலுக்கு முன் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன? அது பக்தர்கள் அனைவரையும் கோயிலுக்குள் அழைக்கத் தூண்டுவதற்காகவா? அது அனைத்து மக்களையும் கோயிலுக்குள் வாருங்கள் என்று வரவேற்கும் சிற்பக்கலை அலங்காரமா? நிச்சயமாகஇல்லை; பின் எதற்கு இந்தக் கோபுரங்கள்? வரலாற்று ஆய்வாளரும் பல மன்னர்களின் வரலாற்றை நூலாக எழுதியவருமான இரா.சிவ. சாம்பசிவ சர்மா எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூலில் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன என்பதை இவ்வாறு விளக்குகிறார்: “வர்ணாஸ்ரமங்களைக் கடை பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார், கோயிலுக்குள்...

பெரியார் குறித்த பொய்யுரைகளுக்கு மறுப்பு

பெரியார் குறித்த பொய்யுரைகளுக்கு மறுப்பு

பொதுவாக ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பேசுபொருளாக இருந்த பெரியார் இன்று ஹெச்.ராஜாவின் விரல் வித்தையில் ட்ரெண்டாகி இருக்கிறார். பெரியார் என்றும் ராமசாமி நாயக்கர் என்றும் இரு தரப்புகள் கருத்து மோதல் நடத்துகின்றன. ஒரு வகையில் இது ஆரோக்கியமான விஷயம்தான். விவாதங்களின் வழி வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என்று பெரியாருமே ஆசைப்பட் டிருக்கிறார்தான். ஆனால் ராமசாமி என அடையாளப்படுத்தும் இளைஞர்கள் பலரும் வெறும் வாட்ஸ் அப்பில் வரும் அரைகுறை பார்வேர்டுகளை வைத்தே போர் தொடுக் கிறார்கள். ‘அவர் நிஜமாகவே அப்படி சொன்னாரா? அப்படியென்றால் ஏன் சொன்னார்?’ என திருப்பிக் கேட்டால் அவர்களிடத்தில் பதில் இல்லை. இப்படியான புரிதல் யாருக்கும் உதவப்போவதில்லை என்பதால் பெரியார் குறித்து சொல்லப்படும் சில அடிப்படை கேள்விகளுக்கான பதில்கள் இவை. இதில் எதுவுமே புதிது கிடையாது. பல ஆண்டு களாக… பலராலும் சொல்லப்படும் பதில்களின் டைம்லி ரீமேக்தான். கவலைப்படாதீர்கள்! வாட்ஸ் அப் பார்வேர்டுகளை வைத்து உளறிக் கொட்ட...

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் மத்திய அரசுப் பணிகளில் மாநில மக்களையே அமர்த்து!

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் மத்திய அரசுப் பணிகளில் மாநில மக்களையே அமர்த்து!

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளிலும் தமிழ்நாட்டின் அரசு மற்றும் ஆசிரியப் பணி நியமனங்களிலும் வடநாட்டுக்காரர்கள் குவிந்து வருவதைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசுப் பணிகளில் பறிபோகும் தமிழர் உரிமைகளைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில்  மார்ச் 22, 2018 காலை 10.30 மணியளவில் சென்னை வள்ளுவர்  கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மல்லை சத்யா  (ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்), சங்கர் (மேலாண்மை இயக்குனர், சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமி), அருண் முருகன் (மே 17 இயக்கம்), வேணுகோபால் (தமிழக வாழ்வுரிமை கட்சி), டைசன் (தமிழர் விடியல் கட்சி), எம்.எஸ். வெங்கடேசன் (பொதுச் செலயாளர், வருமானவரி ஊழியர் சங்கம்), ஜி. குணவதி (வருமானவரி பிற்படுத் தப்பட்டோர் ஊழியர் சங்கம்) ஆகியோர் உரை...

கழகத் தோழர் கார்த்திக்-திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் கார்த்திக்-திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் கார்த்திக்-திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மணவிழா சென்னையில் பணியாற்றும் மயிலாடு துறை கழகத் தோழர் இரா. கார்த்திக் – மோ. திரிபுரசுந்தரி ஜாதி மறுப்பு மண விழா 18.2.2018 ஞாயிறு காலை 9 மணியளவில் மயிலாடு துறை ‘ஆசிர்வாத்’ திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 22032018 இதழ்

கட்டமைப்பு நிதியாக  ரூ.10 ஆயிரம் வழங்கினார் மகேஷ் – இளவரசி இல்லத் திறப்பு விழா

கட்டமைப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார் மகேஷ் – இளவரசி இல்லத் திறப்பு விழா

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மகேஷ்-இளவரசி, புதிய இல்லத் திறப்பு விழா, மார்ச் 11ஆம் தேதி காலை மயிலாடுதுறை மாப்படுகை பகுதியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தைத் திறந்து வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அழகிரி (ம.தி.மு.க.), வழக்கறிஞர் குபேந்திரன், பத்திரிகையாளர் சுகுணா திவாகர் உள்ளிட்ட பலரும் விழாவில் உரையாற்றினர். முன்னதாக பெரம்பலூர் தாமோதரன், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளை நடத்தினார். அனைவருக்கும் பேராசிரியர் வெற்றியழகன் எழுதிய ‘வாஸ்து சாஸ்திர மோசடி’ நூல் விழா நினைவாக வழங்கப்பட்டது. கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.10,000/-மும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சிக்கு ரூ.5000/-மும் மகேஷ் வழங்கினார். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்-ஆர்) பெரியார் முழக்கம் 22032018 இதழ்

இராம ரதயாத்திரையை நிறுத்து! பெரியார் மண் கொதித்தெழுந்தது!

இராம ரதயாத்திரையை நிறுத்து! பெரியார் மண் கொதித்தெழுந்தது!

இராமராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழகம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து இது பெரியார் மண் என்பதை மீண்டும் உறுதி செய்தது. அயோத்தியில் ராமன் கோயில் கட்டுதல்; இராமராஜ்யம் உருவாக்குதல்; அரசு விடுமுறை நாளை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமையாக்குதல்; இந்து தேசிய நாள் ஒன்றை அரசு நாளாக அறிவித்தல் என்ற கோரிக்கைகளோடு ‘இராமராஜ்ய ரதயாத்திரை’ உ.பி., ம.பி., மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளம் வழியாக தமிழ்நாட்டின் எல்லையான செங்கோட்டையில் மார்ச் 21இல் நுழைந்தது. மதவெறியைத் தூண்டி விடும் நோக்கத்தோடு நடத்தப்படும் ரத யாத்திரையை எதிர்த்து மறியல் செய்வோம் என்று காவி பயங்கரவாத மக்கள் எதிர்ப்புக் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கங்களும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர், பாப்புலர் பிரன்ட் ஆப்இந்தியா, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இணைந்து உருவாக்கிய...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (6) ‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (6) ‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (8.3.2018 இதழ் தொடர்ச்சி) திருப்பள்ளியெழுச்சிக்கு எதிராக வடமொழியில் சுப்ரபாதம் ஏன் வந்தது என்பதைப் பார்த்தோம். வேத மதம் சமஸ்கிருத மொழியை மட்டுமே ஏற்கிறது. தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகளை வேத புரோகித மதம் ஏன் மறுக்கிறது என்பதற்கு வேதமே விளக்கம் தருகிறது. “தஸ் மாது ப்பிரா மணனே நம் பேச்சித வை நம அபபாஷித வை” இந்த சுக்ல யஜுர் வேதம் இதன் கருத்து என்ன? “தேவ-அசுரன் போராட்டத்தில் திராவிட-ஆரியருக்கான போரில் சமஸ்கிருதம் பேசிய தேவர்கள் வெற்றி பெற்றார்கள். சமஸ்கிருதம் பேசாத மிலேச்சர்கள் தோற்றார்கள். எனவே சமஸ்கிருதம் தவிர ஏனைய மொழிகள் கெட்ட மொழி; மிலேச்ச பாஷை” என்பதே இந்த சுலோகத்தின்...

நன்கொடை

நன்கொடை

நன்கொடை திருச்சி சுப்பிரமணியபுரம், நட்சத்திரா மொபைல்ஸ் உரிமையாளர் எஸ்.இரவிச்சந்திரன், 10.3.2018 அன்று திருச்சியில் கழகத் தலைவரிடம் கழக வளர்ச்சி நிதியாக ரூ.10,000/- அளித்தார். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் – ஆர்) பெரியார் முழக்கம் 22032018 இதழ்

காவிக் கூட்டத்தின் புளுகுக்கு மறுப்பு ஸ்டீபன் ஹாக்கிங் வேதத்தைப் புகழ்ந்தாரா?

காவிக் கூட்டத்தின் புளுகுக்கு மறுப்பு ஸ்டீபன் ஹாக்கிங் வேதத்தைப் புகழ்ந்தாரா?

மணிப்பூர் பல்கலைக்கழகத்தில், அறிவியல் மாநாட்டின் தொடக்கவிழாவில் உரையாற்றிய மத்திய அறிவியல் – தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அண்மையில் காலமான உலகப்புகழ் பெற்ற பேரண்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பெருமையைப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த இ=எம்சி ஸ்கொயர் என்ற சமன்பாட்டைக் காட்டிலும் உன்னதமான அறிவியல் கோட்பாடுகள் இந்திய வேதங்களில் இருந்திருக்கின்றன,” என்று சொல்லியிருப்பதாகக் கூறி, அரங்கில் கூடியிருந்த அறிவியலாளர்களை அசர வைத்தார். விழா முடிந்து வெளியே வந்த அமைச்சரிடம், அவர் பேசியதற்கு ஆதாரம் தர இயலுமா, ஸ்டீபன் ஹாக்கிங் எங்கே எப்போது அப்படிச் சொன்னார் என்று தெரிவிக்க முடியுமா என்று கேட்டார்கள். “அதைத் தேடுவது உங்கள் வேலை. தேடுங்கள், உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் பிறகு நான் ஆதாரம் தருகிறேன்,” என்று கூறி நழுவினார் அமைச்சர். ஊடகவியலாளர்கள் உடனே தேடலில் இறங்கினார்கள். அதில், ஸ்டீபன் ஹாக்கிங் பெயரில் ஒரு சமூக ஊடகப் பக்கம் இருக்கிறது, அதிலே அவர் இப்படிச் சொன்னதாகப்...

‘இராம ராஜ்யம்’ என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே!

‘இராம ராஜ்யம்’ என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே!

‘இராம ராஜ்யம்’ என்று காந்தியே கூறினாரே; அதைத் தானே நாங்கள் கூறுகிறோம் என்று பா.ஜ.க.வினர் சிலர் கூறுகிறார்கள். பா.ஜ.க. பேசும் இராஜ்யம், இந்து புராண நாயகன் ‘இராமன்’ அமைத்ததாக புராணங் களில் கூறப்படும் ‘இராஜ்யம்’. ஆனால் காந்தி கூறியது புராண கடவுளான ‘இராமராஜ்யம்’ அல்ல. வழிபாடு கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு காந்தியே இதைத் தெளிவு படுத்தியிருக்கிறார்: “டுநவ nடி டிநே உடிஅஅவை வாந அளைவயமந டிக வாiமேiபே வாயவ சுயஅய சுயதலய அநயளே ய சரடந டிக ழiனேரள.” (1947ஆம் ஆண்டு பிப். 6ஆம் நாளில் காந்தி கூறியது; காந்தியார் நூல் தொகுப்பு) தான் கூறும் இராமன் ஆட்சி ‘இந்துக்களின் ஆட்சி அல்ல’ என்று தெளிவுபடுத்துகிறார், காந்தி. சரி, ‘இராம இராஜ்யம்’ எப்படி நடந்தது? வால்மீகி இராமாயணம் என்ன கூறுகிறது? ‘சம்பூகன்’ என்ற பழங்குடி ‘சூத்திரன்’, ‘வர்ணாஸ்ரமத்தை’ மீறுகிறான். கடவுளை நேரடியாக வணங்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை மீறி,...

தமிழக அரசே பதில் சொல்!   மத யாத்திரையா? அரசியல் யாத்திரையா?

தமிழக அரசே பதில் சொல்! மத யாத்திரையா? அரசியல் யாத்திரையா?

‘இராமராஜ்யம் அமைப்போம்’ என்ற முழக்கத்தோடு உலாவரும் ‘இராமராஜ்ய யாத்திரை’யை மத ஊர்வலம் என்றும், அதை அரசியலாக்குவதை அனுமதிக்க முடியாது என்றும் தமிழக பா.ஜ.க. பினாமி முதல்வர் சட்டமன்றத்தில் உளறியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகள்: இராம பக்தி – இராம வழிபாட்டு பஜனை ஊர்வலம் என்று வந்தால், அது மத ஊர்வலம். ஆனால் இந்தியாவில் நடைபெறும் ஜனநாயகப் பாராளுமன்ற ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு, ‘இராமராஜ்யத்தை’ அதாவது இராமன் நடத்திய ‘அரசை’ அமைக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு வருவது மத ஊர்வலமா? அரசியல் ஊர்வலமா? கடந்த 2017 டிசம்பர் 6ஆம் தேதி மசூதி இடிக்கப்பட்ட நாளில் உ.பி. மாநில அரசு அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வெற்றி விழாவை நடத்தியதோடு அதில் மாநில முதல்வர் மாநில ஆளுநர் பங்கேற்று இராமர் கோயிலைக் கட்டுவோம் என்று சபதம் எடுத்தது தமிழக பா.ஜ.க. பினாமி முதல்வருக்கு தெரியுமா? அதே அயோத்தியிலிருந்து இப்போது இராமர் கோயிலைக் கட்டுவோம் என்ற...

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் முதலாமாண்டு நினைவு நாள் – குருதிக் கொடை முகாம் – மத எதிர்ப்புக் கருத்தரங்கம் – நினைவேந்தல் உரைகளுடன் கோவையில் மார்ச் 18 அன்று அண்ணாமலை அரங்கில் நிகழ்ந்தது. கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், உணர்வாளர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று, தோழர் பாரூக்கிற்கு வீரவணக்கம் செலுத்தினர். பகல் 11 மணியளவில் அண்ணாமலை அரங்கில் குருதிக் கொடை முகாமை பாரூக்கின் மனித நேயப் பயணத்தில் துணை நின்ற அவரது துணைவியார் ரசிதா பாரூக் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குருதிக் கொடை வழங்கினர். மதத்திற்கு குருதி பேதம் இல்லை என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முகாமை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின்...

சென்னையில் மோடிக்கு கறுப்புக் கொடி 12042018

சென்னையில் மோடிக்கு கறுப்புக் கொடி 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் இந்திய நாட்டின் பிரதமர் மோடியை கண்டித்து இன்று சென்னைக்கு வருகை தந்த மோடிக்கு… கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் தமிழக கூட்டமைப்பு இயக்கங்களுடன் இணைந்து… இன்று (12.04.2018) காலை 8 மணிக்கு கிண்டியில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். கறுப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363 Like

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் சென்னை 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் சென்னை 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ததை உடனடியாக திரும்ப பெறக் கோரியும்… கடந்த 4 நாட்களாக சென்னை பல்கலைக் கழகத்தை சார்ந்த மாணவர்கள் கார்த்திக், அன்பழகன், கார்த்திகேயன் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (12.04.2018) மாலை 7 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன், இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்)மற்றும் கழகத் தோழர்கள் மாணவர்களை நேரில் சந்தித்து பேசினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் 30042018 சென்னை

தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் 30042018 சென்னை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்… தோழர்.பத்ரி நாராயணன் நினைவு நாள்… #நிலம்_பாழ்..#நீர்_மறுப்பு..#நீட்_திணிப்பு “தன்மான தன்னுரிமை மீட்பு” மண்டல மாநாடு…. நாள் : ஏப்ரல் 30, 2018 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு… இடம் : வி.எம்.தெரு, இராயப்பேட்டை, சென்னை -14 வாருங்கள் தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு 14042018 சென்னை

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு 14042018 சென்னை

டாக்டர் அண்ணல்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான நாளை (14.04.2018) கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் காலை 8 மணிக்கு சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! 02.04.2018 – புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி. திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்காத மத்திய பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்து . Pause -5:25 Additional visual settings Enter Watch and ScrollClick to enlarge Unmute

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! திராவிடர் விடுதலைக்கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி,தமிழ்நாடு மக்கள் கட்சி (வி) ஆகிய அமைப்புத் தோழர்கள் மாவட்டத் தலைவர் தோழர் முகில்ராசு தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்யும் இந்திய நடுவண் பாஜக மோடி ஆட்சியை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் 05.04.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் நடைபெற்றது. ரயில் மறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக்கழகம்,தமிழக வாழ்வுரிமைக்கட்சி,தமிழ்நாடு மக்கள் கட்சி (வி) தோழர்கள் கைது செய்யப்பட்டு தற்போது கல்லூரி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் ரயில் மறியல் !

பொள்ளாச்சியில் ரயில் மறியல் !

பொள்ளாச்சியில் ரயில் மறியல் ! திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 180 பேர் கைது ! 05.04.2018 காலை 09.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி திருவள்ளுர் திடலில் இருந்து பேரணியாக சென்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட 180 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தில்,, திராவிடர் விடுதலை கழகம் திமுக தமிழ்நாடு திராவிடர் கழகம் வெல்ஃபேர் பார்ட்டி சிஅய்டியு காங்கிரஸ் தமிழ்ப் புலிகள் தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை ! திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 10 பேர் கைது ! 05.04.2018 காலை 10.30.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திவிக, தமிழ்ப்புலிகள்,பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்ட தோழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் நாமக்கல் மாவட்டம் சார்பில்04.04.2018 புதன்கிழமை மாலை 5 மணியளவில் நாசகார ஸ்டெர்லை ஆலையை மூட வலியுறுத்தியும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமலர் நாளிதழ் எரிப்பு !

தினமலர் நாளிதழ் எரிப்பு !

தினமலர் நாளிதழ் எரிப்பு ! தமிழை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை 05.04.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நங்க வள்ளியில் கழகத்தோழர் எரித்து தினமலரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! சென்னை

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! சென்னை

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! ”ஐபிஎல்_வேண்டாம் ! காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் !” என்று எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர் ! 05.04.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதியை சார்ந்த தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்களும் இணைந்து…. சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “#ஐபிஎல்_வேண்டாம்” “#காவிரி_மேலாண்மை_வாரியம்_வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி”

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி”

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி” தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 7299230363 கொடி அளவு : 3×2 விலை : ₹ 80/= (ரூபாய் எண்பது மட்டும்)

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது !

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது !

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியை சார்ந்த மக்கள் இணைந்து… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகையிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

கோவையில்  பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை – 90 பேர் கைது ! 10042018

கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை – 90 பேர் கைது ! 10042018

  எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்ட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்றது. 10.04.20188 அன்று கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலை மறியல் நடைபெற்றது. அப்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி,ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளர்...

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம். தூத்துக்குடி 14042018

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம். தூத்துக்குடி 14042018

  ‘தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை’ தூத்துக்குடி- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” எனும் தலைப்பில் தமிழக மாணவர்களின் உரிமை மீட்பு பரப்புரை பயணம் மாநில பரப்புரை செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் அவர்களின் தலைமையில் தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல்14,15 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது.. மீத்தேன், ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா, நியுட்ரினோ, ஸ்டெர்லைட், கூடங்களம் போன்ற தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் எண்ணற்ற நாசகர திட்டங்களை போட்டு தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு, இப்போது நம் தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையில் “புதிய கல்விக் கொள்கை” எனும் பெயரில் கை வைத்திருக்கிறது. இந்த புதிய கல்வி கொள்கையை மக்களிடையே அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் இப்பரப்புரை பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தவிருக்கிறது.

கோபியில், மகளிர் தின விழா மாவட்ட மாநாடு ! 15042018

கோபியில், மகளிர் தின விழா மாவட்ட மாநாடு ! 15042018

பெண்ணே எழு விடுதலை முழக்கமிடு எனும் முழக்கத்துடன்……….. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்……… நாள் : 15.04.2018 ஞாயிறு நேரம் : மாலை 6.00 மணி இடம் : பெரியார் திடல்,கோபி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் கவுசல்யா, ஜாதி ஒழிப்புப்போராளி, தோழர் திவ்யபாரதி, கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர். தோழர் வளர்மதி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம். தோழர் சிவகாமி, தலைவர்,தமிழ்நாடு அறிவியல் மன்றம். ”நிமிர்வு” கலைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

  30.04.2018 அன்று “தோழர்.பத்ரி நாராயணன்” அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளில் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான சுவர் விளம்பர பணியில் கழகத்தோழர்கள். நிலம் பாழ்,நீர் மறுப்பு,நீட் திணிப்பு இவற்றிற்க்கெதிராக “தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாடு நடைபெறவுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

இராசிபுரத்தில்  “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

இராசிபுரத்தில் “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

  இராசிபுரத்தில் திராவிடர்விடுதலைக்கழகத்தின் சார்பில் ஞாயிறு 08.04.18 அன்று”ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. தோழர் வசந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தோழர் சுமதி மதிவதனி அவர்கள்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக திமுகவின் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தோழர் வி.பாலு அவர்கள் கலந்து கொண்டார். கருத்துரையாக திரைப்பட துணை இயக்குநர் தோழர் கலைமதி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர் வீரா.கார்த்திக், திவிகவின் தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி ஆகியோர் பேசினர். தோழர் ஈரோடு மணிமேகலை அவர்கள் நன்றியுரையாற்றினார்.ஏராளமான கழகத்தோழர்கள் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சேப்பாக்க ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் !

சேப்பாக்க ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் !

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சேப்பாக்கம் விளையாட்டு அரங்கம் முற்றுகையிடப்பட்டது. சென்னை சேப்பாக்கம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என வலியுறுத்தி 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் நடை பெற்ற இப்போராட்டத்தில் சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு), சாலை மறியலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் ஈடுபட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் தமிழக வாழ்வுரிமை  கூட்டமைப்பின் சார்பாக எண்ணற்ற பல அமைப்பு சார்ந்த தலைவர்களும், தமிழர் நலம் சார்ந்த பல தலைவர்களும் சிறப்பு மிக்க பல ஆளுமைகளும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி மிகச்சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்டம் நட.பாரதிதாசன் தலைமையிலும் விழுப்புரம் மாவட்டம் தோழர் ராமர் தலைமையிலும் நாகப்பட்டினம் மாவட்டம் தோழர் விஜி மற்றும்  தோழர் மகேஷ் இவர்கள் தலைமையிலும், மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா அவர்களும் புதுச்சேரி மாநிலம் தோழர் லோகு அய்யப்பன் அவர்கள் தலைமையிலும், புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் தோழர் தீனா மற்றும் தோழர் பரத் அவர்கள் தலைமையிலும், அரியலூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் இராமகிருட்டினன் அவர்களும் தோழர் அறிவழகன் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சில தோழர்களும் மற்றும் சில பொது நல தோழர்களுடன் நெய்வேலி முற்றுகையில் பெருந்திரளாக தலைவர் தலைமையில் திவிக சார்பாக கலந்து கொண்டனர் புகைப்படங்களுக்கு

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….  திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மார்ச் 2018” மாத இதழ்

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மார்ச் 2018” மாத இதழ்

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மார்ச் 2018” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚தமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல் – வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஒரு விரிவான அலசல் 🛰 “போப்”பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி ” ஸ்டீபன் ஹாக்கிங்” 🐒 “இராமன்” நேர்மையின் உருவமா? 🖌 உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு யார் காரணம்? 🏢 அம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர் 🗿இந்து மதத்திலிருந்து விலகும் “லிங்காயத்துகள்” இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- தொடர்புக்கு : 7299230363 (தோழர்.இரா.உமாபதி)

‘சமூகச்சிந்தனையாளர் கி.கிருஷ்ணகுமார் எம்.ஏ.’அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ! பள்ளிகொண்டா 01042018

‘சமூகச்சிந்தனையாளர் கி.கிருஷ்ணகுமார் எம்.ஏ.’அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ! பள்ளிகொண்டா 01042018

‘சமூகச்சிந்தனையாளர் கி.கிருஷ்ணகுமார் எம்.ஏ.’அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ! நாள் : 01.04.2018 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 09.00 மணி. இடம் : தனம்மாள் ரங்கநாதன் திருமண மண்டபம்,பள்ளி கொண்டா. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றுகிறார்கள்.

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” –  சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும்  ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்.

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்.

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்  ”டாக்டர் அம்பேத்கர் – இந்திய சமூகம்” எனும் தலைப்பில் முற்பகல் முதல் அமர்வில் கருத்துரையாற்றுகிறார். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நிகழவிருக்கிறது. நாள் : 03.04.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : காலை 09.30.மணி. இடம் : பவளவிழா கலையரங்கம்,மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம்.  · Provide translation into English

வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை ! கைது ! புதுச்சேரி 02042018

வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை ! கைது ! புதுச்சேரி 02042018

வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை ! கைது ! புதுச்சேரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் .. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தும் உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வற்புறுத்தியும் புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் (சின்ன வாய்க்காலுக்கு அருகில்) உள்ள இந்திய வருவாய்த் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் (02.04.2018, திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது முற்றுகைப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழ் இன உணர்வாளர்கள் கைது திராவிடர் விடுதலைக் கழகம் புதுச்சேரி. காணொளிக்கு

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது ! பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் பேட்டி. திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக….. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து…. இன்று 02.04.2018 (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. காணொளிக்கு

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! 02.04.2018 – புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி. திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்காத மத்திய பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்து .   காணொளிக்கு