எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்
பெரியார் சிலையை உடைக்கச் சொன்ன பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி 8.3.2018 அன்று மாலை 5 மணிக்கு மேட்டூர் பெரியார் பேருந்து நிலையத் தில் மேட்டூர் நகர கழக ஒருங் கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவை இளவரசன் வரவேற்புரை யாற்ற மாவட்டத் தலைவர் சூரியக் குமார் தலைமை தாங்கினார். சு.கிருட் டிணசாமி (தி.மு.க.), எஸ்.பி.ராஜா (நகர அவைத் தலைவர் தி.மு.க.), வைகோ முருகன் (நகர செயலாளர் ம.தி.மு.க.), பாலு, தினேசு (நகர பொறுப்பாளர் நாம் தமிழர் கட்சி), ராசு குமார் (மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), சிவக்குமார் (மேட்டூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் வி.சி.க.), மெய்யழகன் (மாவட்டச் செயலாளர் வி.சி.க), கருப்பண்ணன் (மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி), அ. சக்திவேல் (கழக மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இ. கோவிந்தராசு (கழக மாவட்டச் செயலாளர்) ஆகியோர்...