கட்டமைப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார் மகேஷ் – இளவரசி இல்லத் திறப்பு விழா

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மகேஷ்-இளவரசி, புதிய இல்லத் திறப்பு விழா, மார்ச் 11ஆம் தேதி காலை மயிலாடுதுறை மாப்படுகை பகுதியில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தைத் திறந்து வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அழகிரி (ம.தி.மு.க.), வழக்கறிஞர் குபேந்திரன், பத்திரிகையாளர் சுகுணா திவாகர் உள்ளிட்ட பலரும் விழாவில் உரையாற்றினர். முன்னதாக பெரம்பலூர் தாமோதரன், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளை நடத்தினார். அனைவருக்கும் பேராசிரியர் வெற்றியழகன் எழுதிய ‘வாஸ்து சாஸ்திர மோசடி’ நூல் விழா நினைவாக வழங்கப்பட்டது. கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.10,000/-மும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சிக்கு ரூ.5000/-மும் மகேஷ் வழங்கினார். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்-ஆர்)

பெரியார் முழக்கம் 22032018 இதழ்

You may also like...