“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம். தூத்துக்குடி 14042018

 

‘தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை’

தூத்துக்குடி- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” எனும் தலைப்பில் தமிழக மாணவர்களின் உரிமை மீட்பு பரப்புரை பயணம் மாநில பரப்புரை செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் அவர்களின் தலைமையில் தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல்14,15 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது..

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா, நியுட்ரினோ, ஸ்டெர்லைட், கூடங்களம் போன்ற தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் எண்ணற்ற நாசகர திட்டங்களை போட்டு தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு, இப்போது நம் தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையில் “புதிய கல்விக் கொள்கை” எனும் பெயரில் கை வைத்திருக்கிறது.

இந்த புதிய கல்வி கொள்கையை மக்களிடையே அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் இப்பரப்புரை பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தவிருக்கிறது.

Image may contain: one or more people and text

You may also like...