Category: பெரியார் முழக்கம்

திருமகன் ஈவெரா துயர முடிவு: கழகம் ஆழ்ந்த இரங்கல்

திருமகன் ஈவெரா துயர முடிவு: கழகம் ஆழ்ந்த இரங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மரணமடைந்து விட்டார் என்ற செய்தி தாங்க முடியாத ஒரு துயரமாகும். உண்மையிலேயே இது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அவரது தந்தை காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு தேசிய இயக்கத்தின் முன்னணி தலைவராக இருந்தும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், இப்போதும் தன்னை ஒரு பெரியாரியவாதியாக, பகுத்தறிவாதியாக, பெரியார் குடும்பத்தைச் சார்ந்தவராகப் பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோலத் தான் தன்னுடைய மகன் திருமகன் ஈவெரா அவர்களையும் வளர்த்தார். திருமகன் ஈவெரா அவர்களும் தலைச்சிறந்த ஒரு பெரியாரியவாதியாகவே வாழ்ந்தார்; பகுத்தறிவுவாதியாகவேத் திகழ்ந்தார். சென்னையில் திருமகன் ஈவெரா திருமணம் புரட்சிகரமாக நடந்தது. பதிவாளரை நேரில் அழைத்து அதில் மணமக்கள் கையொப்பம் பெற்று சில நிமிடங்களில் மணவிழா புரோகித மறுப்புடன் நடந்து முடிந்தது. இந்த இழப்பு உண்மையிலே தாங்கிக்...

இந்துவானால் என்ன? முஸ்லீமானால் என்ன?

இந்துவானால் என்ன? முஸ்லீமானால் என்ன?

தெலுங்கு மூலம்: ஸைக்அலிகோரிஸய்யத், தமிழில்: பா. ஆனந்தகுமார் நான் முஸ்லிமானால் என்ன? நீ இந்துவானால் என்ன? உன் கோவில் முன் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் இந்துவாக இருந்தாலும் நீ மார்போடு தழுவப் போவதில்லை; பக்கிரிகள் முஸ்லிமானாலும் நான் கட்டியணைக்க                            போவதில்லை!   நீ எத்தனை விரதங்கள் இருந்தால் என்ன? நான் எத்தனை நோன்புகள் நோற்றாலென்ன ? நீ வரி கேட்பதற்கு எந்த பிரிவுகளைத் தேடுவாயோ நானும் அதே பிரிவுகளைப்பின்பற்றுகிறேன். உனது மந்திரங்கள் சமஸ்கிருதம் ஆனாலும் எனது ஸமூராக்கள் அராபியானாலும் நமது பிள்ளைகளின் ஆங்கில வழி படிப்பை நிறுத்தும் துணிவு உனக்குமில்லை எனக்குமில்லை!   உனது கோயிலுக்குப் போகும் பாதையில் எந்தக் குண்டும் குழியுமான சாலையில் முட்டி மோதி போவாயோ, நானும் அதே கருங்கல் மிதக்கும் மட்டமான சாலையில் மசூதிக்குப் போவேன்!   நீ பண்டிகைகளுக்கு எந்த சைவ சமையல் செய்தாலும், எனது பண்டிகைகளுக்கு எந்த அசைவ சமையல் சமைத்தாலும் மளிகைக் கடையில்...

தலையங்கம் அது என்ன “பாரதம்”?

தலையங்கம் அது என்ன “பாரதம்”?

ஆளுநர் ரவியின் உளறல் பேச்சுக்கு தமிழ்நாடு இப்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். சன்தொலைக்காட்சிநடத்திய விவாதம் ஒன்றில் பங்கேற்ற பேராசிரியர் வீ. அரசு தமிழகம் என்றாலே தமிழ்நாடு என்பதுதான் அதற்குப் பொருள் என்று சரியான விளக்கத்தைத் தந்திருக்கிறார். ஆளுநருக்கு சொல்லிக் கொடுத் தவர்கள் இதைக் கூட சொல்லிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார் களா? என்ற கேள்வியை அவர் எழுப்பி இருக்கிறார். சரி; தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும்,  தமிழ்நாடு என்று  அழைக்கக் கூடாது சொல் லுகிற ஆளுநராக இருந்தாலும் சரி, அவரது சங்பரிவார் கூட்டமாக இருந் தாலும் சரி இந்தியாவை இந்தியா என்று அழைக்காமல் பாரதம், பாரதீயம் என்று அழைப்பது ஏன்? அவர்கள் கட்சிகளுக்கும் துணை அமைப்புகளுக்கும் இந்தியா என்ற பெயரை முழுமையாக தவிர்ப்பது ஏன்?  இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பாரதம்,  பாரதம் என்றால் என்ன?...

சிறப்பு வினா விடை

சிறப்பு வினா விடை

தி.மு.க. பொதுக் கூட்ட மேடையில் பேசுவதை எல்லாம் ஆளுநர் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? – அண்ணாமலை நியாயம் தான். ஆளுநர் அவர் பேசும் பொதுக் கூட்ட மேடையில் பேசுவதைத் தானே சட்டசபையில் பேச முடியும். அப்படித்தான் அவரே எழுதிக் கொண்ட அரசியல் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத்திருக்கிறார் போல! ‘தேசிய கீதம்’ பாடலையும் புறக்கணித்து ஆளுநர் வெளியேறியது தேசத்துக்கு அவமதிப்பு. – அமைச்சர் தங்கம் தென்னரசு அதெல்லாம் இல்லை. ஆளுநர் ஏற்றுக்கொண்ட தேசிய கீதம் ‘வந்தே மாதரம்’. ‘ஜனகணமன’ அவருக்குப் பிடிக்காது. ஆளுநரை வைத்துக் கொண்டே முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தது தவறு. – அண்ணாமலை முதல்வரை வைத்துக் கொண்டே அரசு தயாரித்த உரையின் பகுதிகளை நீக்கி விட்டுப் பேசியது – ஆளுநரின் ‘பெருந்தன்மை’யோ? பெரியார், அண்ணா, காமராசர் பெயரை எல்லாம் நீக்கி விட்டு ஆளுநர் உரையை வாசித்தது எல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும். –...

ஆளுநர், தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும்!

ஆளுநர், தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும்!

ஆளுநர் ரவிக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை, பழமொழி ஒன்றை கிராமத்தில் கூறுவார்கள், ஆற்றின் மீது கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போய் விட்டானாம் ஒருவன், அதைப்போல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் ஆற்ற வேண்டிய உரைக்கு ஜனவரி ஏழாம் தேதி ஒப்புதல் அளித்து விட்டு சபைக்கு உரையாற்ற வருகின்ற போது அதில் அவருக்கு கசக்கின்ற வார்த்தைகளை உச்சரிக்கவே மறுத்து விட்டார். ஆளுநரின் செயலை தமிழக சட்டமன்றம் ஏற்காத நிலையில் அவரே வெளி நடப்பு செய்து விட்டார். அதுவும் ‘தேசிய கீதத்தை’ப் புறக்கணித்து வெளி நடப்பு செய்துள்ளார். அவருக்கு ஒவ்வாமையாக அமைந்து போன, அவர் வெறுக்கின்ற வார்த்தைகள் என்ன தெரியுமா? திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திராவிட மாடல் இத்தனைக்கும் மேலாக அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராசர், கலைஞர், இவை அனைத்தும் உச்சரிப்பதற்கு அவர் வாய் மறுத்து விட்டது. உரையில் அடங்கியிருக்கிற இந்த சொற் றொடர்களை அவர்...

கழக வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா மறைவு

கழக வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா மறைவு

கழகத்தின் வழக்குகளுக்காக தொடர்ந்து வாதாடி வரும் வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா முடிவெய்தினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், கழகத்தின் வழக்குகளுக்காகத் தொடர்ந்து வாதாடி வரும் திருமூர்த்தி அவர்களின் தந்தை கோ.இராமையா (77), 22.12.2022 அன்று கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தில் முடிவுற்றார். இராமைய்யாவின் இறுதி ஊர்வலம் 23.12.2022 அன்று சிறுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உடன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், காவை ஈஸ்வரன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களுக்கு கழக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்...

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கலந்துரை யாடல்கள்: கடலூர் :  27.12.2022 அன்று சிதம்பரம் ஏபிஎன் மஹாலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பிஞ்சு சி.சந்தோஷ் பெரியார் பாடல் பாட நிகழ்ச்சி தொடங்கியது. மா.து.தலைவர் செ.பிரகாஷ், வரவேற்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் இயக்கத்தின் தேவை மற்றும் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். அதன்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆ. சதிசு – மாவட்ட அமைப்பாளர்,  ர.சிவகுமார் – மாவட்ட செயலாளர்,  ப.அறிவழகன் – அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர், அ.மதன்குமார் – மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பெரியார் பார்வை ஆசிரியர் கவி பங்கேற்று தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இக்கூட்டத்தில்,  கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இயக்கத்தின் நோக்கம் பற்றியும்...

தமிழரின் வைதீக நோய் தீர்க்கும் மாமருந்து சுயமரியாதை பேராசிரியர் க. அன்பழகன்

தமிழரின் வைதீக நோய் தீர்க்கும் மாமருந்து சுயமரியாதை பேராசிரியர் க. அன்பழகன்

பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அவர் ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதிய கட்டுரையை (செப்.17, 1986) வெளியிடுகிறோம். (சென்ற இதழ்த் தொடர்ச்சி) பல்வேறுபட்ட குல (கூட்ட) மக்களாக வாழ்ந்த நிலையை ஏதுவாக்கி வருணாசிரமக் கொள்கையைப் புகுத்தி – தமிழர்களைச் சூத்திரர்களாகவும், பஞ்சமர் களாகவும் ஏற்றிடும் நிலையை பார்ப்பனர்கள் உருவாக்கினர். ஆரிய கலாச்சாரத்தினைப் பரப்பியவர் ‘எசமானர்’ நிலைப் பெற்றனர். வழிவழி வந்த உயர்ந்த பண்பாட்டில் நிலைப் பெற்றிருந்த தமிழர் – கற்பனையாக பிறவி இழி மக்கள் ஆக்கப்பட்டு மீளா அடிமைகளாயினர். அதனால் தான் பிறிதொரு இனத்துடன் வரலாற்றுத் தொடர்பு ஏற்படும் காலத்திலும் – அதைத் தொடர்ந்து வளர்ந்திருக்க வேண்டிய இன உணர்வும்-மொழிப் பற்றும்- மங்கி, மறைந்து தேய்ந்து போயிருப்பதைக் காண்கிறோம். “வைதீக மத வழிபற்று” ஆரியத்தைப் பிரித்துக் காணும் ஆற்றலை (சிந்தனையை) இழக்கச் செய்தது. வருணாசிரம – மனுதர்ம நெறி தமிழர் களை ஒன்று பட முடியாத அளவுக்கு...

“அறிவு கெட்ட மூடனே; பசு மாடே”

“அறிவு கெட்ட மூடனே; பசு மாடே”

ஜாதி மனிதர்களை மட்டுமல்ல; பறவை விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கிளி உயர்ஜாதி, கழுகு கீழ் ஜாதி, ‘கோமாதா’ ‘பிராமணாள்’; கழுதை ‘சூத்திராள்’; கோமாதாவின் சிறுநீர், சாணம் எல்லாம் புனிதம். பசுவைக் கூட செத்தாலும் வெட்டக் கூடாது. அதற்காக சட்டங்களே பா.ஜ. க. ஆட்சிகளில் போடப்பட்டு வருகின்றன. பார்ப்பனர் வாசிக்கும் தாளக் கருவியான மிருதங்கம், இளம் பசு மாட்டுத் தோளில் தான் செய்யப்படுகிறது. ஆனால் அதைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோர் கீழ்ஜாதியினர். பாலக்காடு பார்ப்பன மிருதங்க வித்வான் ஒருவர், காஞ்சி சீனியர் சங்கராச்சாரியிடமே நேரில் போய் பசு மாட்டுத் தோலில் உருவாகும் மிருதங்கத்தை நாம் வாசிப்பது பாவமில்லையா என்று கேட்டாராம். சங்கராச்சாரி, “எல்லாவற்றுக்குமே விதிவிலக்கு உண்டு; தோஷமில்லை” என்று பதில் கூறினாராம். பார்ப்பனர்களை எதிர்த்துப் பேசி வரும் டி.எம். கிருஷ்ணா (இவரும் பார்ப்பனர் தான்). தனது நூலில் இதை எழுதி வைத்துள்ளார். பசுவுக்கு புனிதம் பேசும் வேதியர் கூட்டம் அதே பசு செத்துப்...

காற்றில் பறக்கும் ஒற்றை இந்தியா

காற்றில் பறக்கும் ஒற்றை இந்தியா

ஒன்றிய ஆட்சி ஒற்றை இந்தியாவின் பெருமையைப் பேசிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே ரேசன் கார்டு, ஒரே மொழி அதிலும் புனித மானது சமஸ்கிருதம் என்றெல்லாம் ஒற்றை ஆட்சி பற்றிப் பேசி, நாட்டை சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் சென்று இந்தியாவை இந்து இராஷ்டிரமாக மாற்றலாம் என்பது அவர்கள் போடுகிற தந்திரமான கணக்கு. சரி இருக்கட்டும்; ஒற்றை இந்தியாவை இவர்கள் உருவாக்குவதற்கு முன்பாக, இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிற மாநிலங் களில் தற்போது தலைதூக்கி ஆடிக் கொண்டிருக்கிற எல்லைப் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்களே அதற்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள். 1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது பெலகாவி மாவட்டத்தில், மராத்தி பேசும் மக்கள் வசிக்கும், 865 கிராமங்கள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. அதே போன்று மகராஷ்டிராவில் ஜாட் தாலுகாவில் கன்னடம் பேசும் கிராமங்கள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இரு மாநிலங்களின் எல்லைகளிலும்...

வெட்கப்பட வேண்டும்

வெட்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டுக் கிராமங்களில் தீண்டாமை வெறி இன்னமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இது மறுக்கப்பட முடியாத உண்மை. அரசியல் கட்சிகள் அனைத்தும் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஓட்டு வங்கி அரசியலை முன் வைத்து தான் அவர்கள் பிரச்சனை களை பார்க்கிறார்களே தவிர, சமூக அவலங்கள் அவர்களின் கண்களுக்குத் தெரிவதே இல்லை. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவிடியல் கிராமத்தில் இருந்து வெட்கக் கேடான, நாம் அனைவரும் தலைகுனிய வேண்டிய  செய்தி வந்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழ்கின்ற தலித் மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தொட்டியில், மனித மலத்தைக் கலந்து வைத்திருக்கிறது ஜாதி வெறி கும்பல் ஒன்று. அந்தப் பகுதி குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், புகார் வரவே மாவட்டத் ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட காவல் துறை அதிகாரி வந்திதா பாண்டே ஆகியோர், வருவாய் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டபோது, தண்ணீர் தொட்டி யில் மலம் கலந்திருப்பது உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டிரு க்கிறது. 5...

2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்

2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்

2022இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஒரு சுருக்கமான தொகுப்பு. ஜனவரி : டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட தமிழக ‘சுதந்திரப் போராட்டக்காரர்களான’ வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் அலங்கார ஊர்தியை கடைசி நேரத்தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அனுமதிக்க மறுத்தது. தமிழ்நாட்டின் குடியரசு தின அணி வகுப்பில் இந்த ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர். இந்தத் தலைவர்களோடு பெரியார் சிலையையும் சேர்த்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழக அரசு மக்கள் பார்வைக்கு வைத்ததோடு குடியரசு நாள் அணி வகுப்பிலும் பங்கேற்கச் செய்தது, தமிழக அரசு. மருத்துவ உயர் மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது. தமிழக அரசு தமிழ்நாட்டுக்கு...

சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

24.12.2022 சனிக்கிழமை அன்று  சத்தியமங்கலம் எஸ்.பி.சி. மகாலில் நடைபெற்ற பெரியார்-அம்பேத்கர் உருவாக்கிய சமூகப் புரட்சி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பான முறையில் கருத்துரை வழங்கினார். இக்கருத்தரங்கத்திற்கு மு.தமிழரசன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில்  திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், தோழமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி தொடக்கத்தில் சத்தி முத்துவின் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் கே.எ.கிருஷ்ணசாமி,சதுமுகை பழனிசாமி, சித்தா பழனிசாமி மற்றும் சதுமுகை கனகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக செந்தில்நாதன்  வழக்குரைஞர், தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் சேகர், வேலுச்சாமி, வீரா. கார்த்தி, சுந்தரம், குப்புசாமி, சிவக்குமார் மற்றும் சரத் அருள்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, சிவகாமி  (தலைவர், தமிழ்நாடு...

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பாக பெரியாரின் 49 ஆவது நினைவு நாளை ஒட்டி, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணி யளவில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தியாகராயர் நகர் பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். நகர், ஆலந்தூர், வன்னியம்பதி, மயிலாப்பூர் சென்மேரிஸ் பாலம், சுப்பராயன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலை, உருவபடங்களுக்கு தோழர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பெரியார் நினைவு மற்றும் கொள்கை முழக் கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வுகள் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக பொறுப் பாளர்கள், மாவட்டம், பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டச்...

தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா

தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் கிருஷ்ணவேணி – தேவராஜ் ஆகியோரது புதிய இல்லம் பல்லடம் அருகே வரபாளையம் கிராமத்தில் “தமிழ்க் குடில்” எனும் பெயரில் 04.12 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் திறந்து வைக்கப் பட்டது. இல்லத்தை தோழர்களின் பெற்றோர்கள் கிட்டாள்- மாறன், இலட்சுமி – பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இல்லத் திறப்பு விழாவிற்கு ப.மாறன் தலைமை தாங்கினார்கள் தே. சுப்பிரமணியன் – ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கற்பி சமூக கல்வி மையத்தின் இரா.விடுதலைச்செல்வன்  வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரம்பலூர் டாக்டர் அம்பேத்கர் சமூகக் கல்விப் பொருளாதார அறக்கட்டளையின் இரா.க.கிருஷ்ணசாமி, பாடகர் மா.பா. கண்ணையன், கழகப் பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர்சிவகாமி, தி.வி.க. திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் மா.தேவராஜ்  நன்றி கூறினார்.   பெரியார்...

தமிழ் வாழ்வியலை வீழ்த்திய பார்ப்பனிய ஊடுருவல்

தமிழ் வாழ்வியலை வீழ்த்திய பார்ப்பனிய ஊடுருவல்

பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அவர் ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதிய கட்டுரையை (செப்.17, 1986) வெளியிடுகிறோம். உலகத்தில் வளர்ச்சியும் வாழ்வும் பெற்றுள்ள மேல் நாட்டு மக்களும், சீனா, ஜப்பானியரும் நாகரிகத்தின் முகப்பில் அடி எடுத்து வைக்கும் முன்னரே, நாகரிக வாழ்வு கண்டு, நானில வகை கண்டு, நாடாளும் முறை கண்டு, ஒரு தனித் தன்மையுடன் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள் – தென்னாட்டுத் திராவிட மக்கள் – கடந்த சில நூற்றாண்டுகளாகவே வாழ்விழந்து, வளமிழந்து, உரிமை மறந்து, தலைதாழ்ந்து கிடக்கின்றனர். பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒரு மொழி கண்டு, எட்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூடி வாழும் வாழ்க்கைக்கு முறை கண்டு, அய்யாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கோனாட்சிக்கு வழிகண்டு, இயற்கையில் முத்தமிழாய் முகிழ்த்த தமிழன் சிறப்பு கண்டு, சிந்தனையைச் செய்யுள் வடிவத்தில் கண்டு, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியங்கட்கு இலக்கணங்கண்டு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகம் வியக்கும் ‘திருக்குறள்’...

மணமகள் தேவை

மணமகள் தேவை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த தோழர் இனியவன், வயது 26. பொறியியல் பட்டம் முடித்து சொந்தமாக வணிகம் நடத்தி வருகிறார். தோழருக்கு பெரியாரிய சிந்தனைக் கொண்ட பெண் தோழர்  தேவை. தொடர்புக்கு : 8903461202 பெரியார் முழக்கம் 29122022 இதழ்

வினா விடை

வினா விடை

  ஏழுமலையானுக்கு உலகம் முழுதும் அசையா சொத்து 85,705 கோடி ரூபாய்; தங்க நகைகள் 9,259 கிலோ. –  செய்தி அசையா கடவுளுக்கு அசையா சொத்துக்கள்; அமலாக்கத் துறையால் அசைக்கவே முடியாது. திருப்பதியில் சொர்க்க வாசல் போக இலவச தரிசனம்; இலவச டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. – செய்தி ‘புண்ணியம்’ எதுவும் செய்ய வேண்டாம்; டோக்கன் பெற்றாலே ‘சொர்க்கம்’ தான்! உ.பி. சிறைகளில் சைவ உணவுகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. – செய்தி தண்டிக்கப்பட்டு உள்ளே வந்த பிறகும் தண்டனையா? இராமேஸ்வரம் கடல் பகுதியில் இராமர் பாலம் இருந்ததாக உறுதியான சான்றுகள் இல்லை. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல். – செய்தி அடுத்து ராமன் என்று ஒருவர் இருந்தான் என்பதற்கே உறுதியான சான்றுகள் இல்லை என்பதை எப்போது அறிவிக்கப் போகிறீர்கள்? கிருஷ்ண பகவானுக்கு உலகிலே உயரமான சிலை – குஜராத் பா.ஜ.க. ஆட்சி முடிவு. – செய்தி ‘பிரபஞ்ச’த்திலேயே உயரமான சிலையை...

ராமன் பாலம்: உறுதியான ஆதாரம் இல்லை; பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல்

ராமன் பாலம்: உறுதியான ஆதாரம் இல்லை; பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல்

இலங்கைக்கு இராமேஸ்வரத்தி லிருந்து இராமன் பாலம் கட்டினான் என்றும், அந்தப் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை அமுல் படுத்தக்கூடாது என்றும் இந்துத்துவவாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். சுப்ரமணிய சுவாமியும் உச்சநீதி மன்றத்திலே வழக்கு தொடர்ந்தார். இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. ‘இராமேஸ்வரம் கடல் பகுதியில் இராமர்  பாலம் இருந்ததாகக் கூற முடியாது’ இப்படிக் கூறியிருப்பவர், ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங். கூறி யிருக்கிற இடம் நாடாளுமன்றம். அவர் மேலும் கூறுகிறார், ‘19 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால், இராமர் பாலம் பற்றி துல்லியமாக கண்டறிய முடியவில்லை என்றும், செயற்கைக் கோள் படங்களில் கடலில் சில பாறைகள் இருப்பது போல் கண்டறியப்பட்ட போதிலும், அது இராமர் கட்டிய பாலம் என்று கூறுவது கடினம்’ என்று தெரிவித்து இருக்கிறார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவார்கள், அதேபோல 19...

தலையங்கம் கோட்சே பரம்பரை

தலையங்கம் கோட்சே பரம்பரை

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சங் பரிவாரக் கும்பலை “கோட்சே பரம்பரை” என்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார். கோட்சே பரம்பரை என்பது திராவிடர் இயக்கத்திற்கு பழகிப்போன ஒரு சொல் தான், காந்தியாரை சுட்டுக் கொல்லப்பட்ட அந்த காலத்தில் திராவிடர் இயக்க மேடைகளிலும் திராவிடர் இயக்க நூல்களிலும் அந்தக் கும்பலை சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொல் தான் கோட்சே பரம்பரை என்பதாகும். காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டது மாலை 5:12 க்கு, ஆனால் அகில இந்திய வானொலி அவரது மறைவு செய்தியை ஒலிபரப்பியது 6 மணிக்குத்தான். அதற்கு முக்கிய காரணம், ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக் கொன்றுவிட்டார்’ என்ற வதந்தியை இந்த கோட்சே பரம்பரை அப்போதே பரப்பியது. மவுண்ட் பேட்டன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து பிர்லா மாளிகை விரைந்த உடன் கூட்டத்திலிருந்த ஒரு சங்கி, ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக்...

விடுதலை இராசேந்திரன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன முதல்வர் நேரில் மரபுரிமைத் தொகை வழங்கினார்

விடுதலை இராசேந்திரன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன முதல்வர் நேரில் மரபுரிமைத் தொகை வழங்கினார்

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய 59 நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. அதற்கான மரபு உரிமைத் தொகையாக ரூ.15 இலட்சத் துக்கான காசோலையை தமிழக முதல்வர் நேரில் வழங்கினார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆசிரியர், பெரியாரியலை தன் வாழ் வியலாக்கி, கழகத்தை குடும்பமாக்கி, பெரியாரிய பத்திரிக்கையாளராக 50 ஆண்டுகளைக் கடந்தும் எழுதிக் கொண்டிருக்கும் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல்களை தமிழ்நாடு அரசு 59 நூல்களை நாட்டுடமையாக்கியது. 22.12.2022 பகல் 11 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டுடமையாக்கப் பட்டதற்கான மரபு உரிமை காசோலையை வழங்கினார். அப் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் இணையர் பேராசிரியர் சரசுவதி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் உடனிருந்தனர். தொடர்ந்து, இலாயிட்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவிக்க தோழர்கள் முழக்கம் எழுப்பினர்....

நாட்காட்டி தயார்!

நாட்காட்டி தயார்!

2023ஆம் ஆண்டுக்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாட்காட்டி தயாராக உள்ளது.  சனாதன எதிர்ப்பாளர்கள், சமூகப் புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள் படங்களுடன் அழகிய வடிவமைப்பில் உள்ள நாட்காட்டி ஒன்றின் விலை ரூ.50/-  (ரூபாய் அய்ம்பது மட்டும்). முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நாட்காட்டி அனுப்ப இயலும். நாட்காட்டி தேவைப்படுவோர் தொடர்புக்கு : தபசி குமரன் (99417 59641) தலைமை நிலையச் செயலாளர்,  திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் முழக்கம் 22122022 இதழ்

கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்

கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்

கழகத் தலைவர் மற்றும் தலைமைக் குழுப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் மூன்றாம் கட்டப் பயணம் கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது. 05.01.2023 காலை 10.00 மணி – சேலம் மேற்கு மாவட்டம் 05.01.2023 மாலை 4.00 மணி – தர்மபுரி மாவட்டம் (இரவு தங்கல் கிருட்டிணகிரி) 06.01.2023 காலை 10.00 மணி – கிருட்டிணகிரி  மாவட்டம் 06.01.2023 மாலை 4.00 மணி – கள்ளக்குறிச்சி மாவட்டம் (இரவு தங்கல் சேலம்) 07.01.2023 காலை 10.00 மணி – சேலம் கிழக்குமாவட்டம் 07 01.2023 மாலை 4.00 மணி – ஈரோடு தெற்கு மாவட்டம் (இரவு தங்கல் ஈரோடு) 08.01.2023 காலை 10.00 மணி –  ஈரோடு வடக்கு மாவட்டம் மேற்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் ஊர் மற்றும் இடத்தை முடிவு செய்து தலைமைக் கழகத்திற்கு  தகவல் தரக் கேட்டு கொள்ள படுகிறார்கள்.   பெரியார் முழக்கம் 22122022 இதழ்

விழுப்புரத்தில் ஜாதிக் கொடுமைகள்: களமிறங்க கழகத் தோழர்கள் முடிவு

விழுப்புரத்தில் ஜாதிக் கொடுமைகள்: களமிறங்க கழகத் தோழர்கள் முடிவு

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-12-22 அன்று மாலை 4.30  மணியளவில்  கழக மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம்,  காவை. ஈஸ்வரன், ந. அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு கழகம் விழுப்புரம் மாவட்ட அளவில் முன்னெடுக்க வேண்டிய  வேலைத் திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் ஜாதி பிரச்சனைகள், தலித் மக்கள் சுடுகாட்டில் பிணத்தை அடக்கம் செய்வதில்  பிரச்சனைகள் பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. இதுகுறித்து மாவட்ட கழகத் தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம்  துணை நிற்க வேண்டும் என்றும் இன்றைய அரசியல் சூழல், கழக வார ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’...

அடுக்கடுக்கான பட்டியல்: பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா?

அடுக்கடுக்கான பட்டியல்: பாஜகவில் வாரிசு அரசியல் இல்லையா?

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, பாஜகவினர் திமுக வில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று தொடர்ந்து குற்றம் சாட்டியே வருகின்றனர். குற்றம் சாட்டுவதுடன், பாஜகவில் வாரிசு அரசியலே கிடையாது என்றும் கூறி வருகின்றனர். பாஜகவிலும் வாரிசு அரசியல் உள்ளது என்பதை பலரும் சுட்டிக்காட்டி வரும் நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், “பாஜகவில் தலைமை பொறுப்புக்கு, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவது கிடையாது. தேசியத் தலைமை மட்டுமல்ல, எந்தவொரு மாநிலத் தலைமையிலும் வாரிசுகள் இல்லை” என்று குறிப்பிடப்பட் டுள்ளது. பாஜகவின் பொறுப்புகளில் வேண்டுமானால் வாரிசுகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இந்திய ஒன்றியத்தின் அமைச்சரவையிலும், பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சரவைகளிலும் பாஜக வின் வாரிசுகள் எந்தளவிற்கு இடம் பெற்றுள்ளனர் என்பதை சிறு புள்ளிவிவரத்தின் மூலம் காணலாம். பியூஸ் கோயல் – மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், தந்தை: வேத் பிரகாஷ்...

வீட்டு வேலைகள் ஆண்களுக்கு கட்டாயம்; பெண்கள் வீட்டு வேலைக்கு ஊதியம் கியூபா நாட்டின் புரட்சிகர பெண்ணுரிமைச் சட்டம்

வீட்டு வேலைகள் ஆண்களுக்கு கட்டாயம்; பெண்கள் வீட்டு வேலைக்கு ஊதியம் கியூபா நாட்டின் புரட்சிகர பெண்ணுரிமைச் சட்டம்

திருநங்கையாகவோ திருநம்பியாகவோ தன்னுடைய மகனோ மகளோ இருக்கிறார் என்பதையே தாங்கிக் கொள்ள முடியாத இந்திய பெற்றோர்களால்; திருநங்கைகளையும் திருநம்பிகளையும் வீட்டை விட்டு வெளியேற்றும் இந்திய பெற்றோர்களால்; ஓரினச் சேர்க்கை யாளர்களை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? எனவே கியூபா அரசின் தொலைக்காட்சி & வானொலி பிரச்சாரங்களைப் போலவே, தமிழ்நாடு அரசும் இது குறித்த அறிவியல் பூர்வமான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் டுழுக்ஷகூ+ மக்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளில் இருந்தும், சொல்லொணாத் துயரங்களில் இருந்தும், அவர்களுக்கு விடுதலை கிடைக்கும். “தேர்தல் அரசியல் இல்லாத கியூபா நாட்டில் (ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை), மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி குடும்பச் சட்டங்களை வகுத்து முதல்முறையாக வெளியிட்டுள்ளது அரசு. டுழுக்ஷகூ+ (வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை உணர்த்தும் குறிப்புச் சொல்) நலன், பெண்கள் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன் உள்ளிட்ட அனைத்து நலன்களும் பேணிப் பாதுகாக்கும்படியாக இக்குடும்பச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை...

உதயநிதியின்  ஒற்றை வரி பதில்கள் இந்தியா – வி.பி.சிங்

உதயநிதியின் ஒற்றை வரி பதில்கள் இந்தியா – வி.பி.சிங்

விகடன் யூடியூபிற்கு, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், நெறியாளர் கூறும் பெயர்களுக்கு ஒரே வார்த்தையில் பதிலளிக்கும் வகையில், அவர் அளித்த ஒரு வார்த்தை பதில்கள். தமிழ்நாடு – கலைஞர் இந்தியா – வி.பி.சிங் பெரியார் – தன்மானம் கலைஞர் – தமிழ் மு.க.ஸ்டாலின் – உழைப்பு திமுக – கலைஞர் கடவுள் – இல்லை பெரியார் முழக்கம் 22122022 இதழ்

சைனி-அபிலாஷ் இணையேற்பு விழா

சைனி-அபிலாஷ் இணையேற்பு விழா

கழகத் தோழர் சைனி – அபிலாஷ் ஆகியோரின் இணையேற்பு விழா 14.12.2022 அன்று காலை 12 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கமாக நிமிர்வு குழுவினரின் பறை இசை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கழகச் செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தோழர்கள் புரட்சித் தமிழன், மாதவன் சங்கர், வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சபரிகிரி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிருட்டிணன் நன்றியுரை யாற்றினார். நிகழ்ச்சியை சிவராசு தொகுத்து வழங்கினார்.. கழகத் தோழர்கள் சார்பாக மணமக்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது. தோழர்கள் அய்யப்பன், துளசி, ஆனந்த், விவேக், ரேணுகா, மணிகண்டன், ராஜபாளையம் மு.ராம்குமார் ஆகியோர் இணையேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் முழக்கம் 22122022 இதழ்

உதயநிதி ஸ்டாலின் நியமனம் பெரியாரிஸ்டுகள் மகிழ்ச்சி!

உதயநிதி ஸ்டாலின் நியமனம் பெரியாரிஸ்டுகள் மகிழ்ச்சி!

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் வாரிசுகள் அரசியலுக்கு வரக் கூடாதா ? உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய  நியமனத்திற்கு நமது  மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் முதலில் தெரிவித்துக் கொள்வோம். வாரிசு அரசியல் வந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் புலம்புவதில் எந்த நியாயமும் இல்லை. அப்படி ஒரு அளவுகோளில் பார்த்தால் இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் இதிலிருந்து  தப்பி விட முடியாது. (இது குறித்த விரிவான பட்டியலைத் தனியாக வெளியிட் டுள்ளோம்) ஆனால் வாரிசு அரசியல் இப்போது எந்தப் பார்வையில் பார்க்கப்படுகிறது என்று சொன்னால்,  மன்னர்கள் காலத்தில் நடந்த வாரிசு அரசியலோடு ஜனநாயக காலத்தில் நடக்கின்ற வாரிசு அரசியலை ஒப்பிட்டுப் பேசுகின்ற  ஒரு போக்கு தான் காணப்படுகிறது. இரண்டுக்கும் பண்பு ரீதியில், குணாதிசய வகையில்  வேறுபாடு உண்டு. ஜனநாயக முறையில்  வாரிசு அரசியலில் ஈடுபடுகின்றவர்கள்  நேரடி நியமனங்கள் வழியாக வராமல் தேர்தலில் நின்று  மக்கள்...

தலையங்கம் ‘ஜெய் ராம்’ முழக்கம் கேட்குது! ‘ஜெய் சீதா’ ஏன் கேட்பதில்லை?

தலையங்கம் ‘ஜெய் ராம்’ முழக்கம் கேட்குது! ‘ஜெய் சீதா’ ஏன் கேட்பதில்லை?

பாரத ஒற்றுமைப் பயணத்தில் இருக்கும் இராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ்-அய்ப் பார்த்து, “ஆர்.எஸ்.எஸ். என்றைக்குமே பெண்களை மதிக்காத இயக்கம்” என்று கூறியிருக்கிறார். இது 100ரூ உண்மை. ஆர்.எஸ்.எஸ்.இல் ஒரு ‘சுவயம் சேவக்’காக இதுவரை பெண்கள் சேர்க்கப்படுவதே இல்லை. தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராகக் கூட வர முடியும், ஆனால் ஆர்.எஸ்.எஸ்.இல் சுவயம் சேவக்காக வர முடியாது. வானதி சீனிவாசனுக்கும் அதே நிலைதான். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இன் முன்னணி அமைப்புகளை உருவாக்கி அதில் பெண்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சுவயம் சேவக்காக மட்டும் இன்று வரை அவர்கள் பெண்களை சேர்ப்பது கிடையாது. இராகுல் காந்தி எழுப்பியிருக்கிற முக்கிய கேள்வி, ‘ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை முன் வைக்கிற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஏன் ஜெய் சீதா என்ற முழக்கத்தை முன் வைக்கவில்லை?’ இது ஒரு நியாயமான கேள்வி. சீதையைப் பொறுத்தவரை இராமனுடைய கட்டளை களை பல இடங்களில் மீறி தன்னுடைய உரிமையை நிலை நாட்டியிருக்கிறார் என்று நம்மால் கூற...

வேள்விகளை வெடி வைத்துப் பொசுக்கியவர்

வேள்விகளை வெடி வைத்துப் பொசுக்கியவர்

வேரோடிப் போயிருந்த சனாதனத்தை வெட்டியதோர் நெடுவாளே ! இந்த நாட்டில் ஊரோடு கிளிப்பாட்டுப் பாடி டாமல் உயர்கருத்தைத் தந்தவரே ! தமிழன் ஆட்சித் தேரோட்டப் பாதைக்குத் தடைநிற் போரின் திமிர் அடக்கி வந்திட்ட புலியே ! மண்ணில் ஈரோடு வரலாறு பிறக்கா விட்டால் எம்வழியை மாற்றுதற்கே யார்பிறப்பார் ? காக்கையொன்று கரைந்தாலும் அதனைக் கேட்டு கால்பயணம் மாற்றிடுவார் ! வேலி யோரச் சீக்காளிக் கழுதையொன்று கதறு மானால் தெய்வம் வந்து சொன்னதென்று நின்று கேட்பார் ! தேக்குமர இடுக்கினிலே பல்லி ஒன்று தீனிகண்டு குரல்தந்தால் புத்தி போகும் போக்கு கெட்ட தமிழர்களை எழுப்பித் தட்டிப் ‘புதுமதி’யை ஊட்டியவர் நீங்கள் தானே ! பெண்ணொருத்தி குளிப்பதனை எட்டிப் பார்த்தால் பிழைஎன்று சட்டமுள்ள இந்த நாட்டில் கண்ணெடுத்துப் பார்த்திட்ட தன்றி, அன்னார் கட்டிவந்த சேலையெல்லாம் திருடிச் சென்ற வெண்ணெய் வெட்டிக் கண்ணன் அவன் படத்தைப் போட்டு வெறும் மேனிக் கன்னியரை எதிரில் காட்டி, சிண்ணாரம்...

மறைந்த 80வயது ஸ்டேன் பாதிரியார் மீது பொய் வழக்கு கணினிகளில் என்.அய்.ஏ. நடத்திய மோசடிகள்

மறைந்த 80வயது ஸ்டேன் பாதிரியார் மீது பொய் வழக்கு கணினிகளில் என்.அய்.ஏ. நடத்திய மோசடிகள்

போலி ஆதாரங்கள் மூலம் கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருப்பது அம்பல மாகிவிட்ட பிறகும், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்காமல் சிறையில் அடைத்து வைப்பது எவ்வித நியாயமும் அற்றது. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கணினியில் திட்டமிட்டு ஹேக்கர் களால் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் திணிக்கப்பட்டது அமெரிக்க நிறு வனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் அம்பலமாகி யுள்ளது. 1818 ஜனவரி 1ஆம் தேதி மராட் டியத்தில் உள்ள பீமா கோரே கானில் பிரிட்டிசாருக்கும் பேஷ்வா பார்ப்பனர்களுக்கும் இடையே போர் நடந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆதரவோடு பேஷ்வா பார்ப்பனர்களைக் கிழக்கிந்திய கம்பெனி வீழ்த்தி போரில் வெற்றி பெற்றது. போரில் உயிர் நீத்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 49 பேரின் நினைவாக பீமா கோரே கானில் நினைவுத்தூண் அமைக்கப் பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அதன் 200 ஆவது...

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவுநாளை யொட்டி கழக சார்பில் பல்வேறு இடங்களில் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சென்னை : புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9:30 மணியளவில், இரண்யா  கொள்கை முழக்கங்களை எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, கிருத்திகா மாலை அணிவித்தார். இறுதியாக, இராயப்பேட்டை வி.எம். தெரு படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர்  படத்திற்கு தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார். தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டப் பொறுப் பாளர்கள், பகுதி கழகப் பொறுப் பாளர்கள் உட்பட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். விழுப்புரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 66ஆவது நினைவு நாளை யொட்டி விழுப்புரம் அரசு மருத்து வமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அனிவித்து கொள்கை முழக்கம் உறுதியேற்பு...

செல்போன் எதற்கு?

செல்போன் எதற்கு?

¨        அம்பேத்கர் சிலைக்கு விபூதி அடிக்கும் இந்து முன்னணி கும்பல் தைரியம் இருந்தால் தங்கள் சொந்த மதமான இந்து மதத்தைச் சார்ந்த பெருமாள் சிலைகளுக்கு விபூதி அடிக்குமா? அய்யங்கார்கள் கூட்டம் வாலை ஒட்ட நறுக்கி விடும்! ¨        கோயில்களில் செல்போன் கொண்டுவர உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதுகூட ஒரு வகையில் நியாயம்தான் சமஸ்கிருத மந்திரங்களை கருவறையில் உள்ள கடவுள்கள் நெட்வொர்க் இல்லாமலே புரிந்து கொள்ளும் போது வீணாக எதற்கு செல்போன்? ¨        ஆகமக் கோயில்களைக் கணக்கெடுக்க அறநிலையத் துறைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம். ஓய்வுபெற்ற நீதிபதி குழுதான் கணக்கெடுக்க வேண்டும் என்று  ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டதை மீறக்கூடாதாம். சரி, ஆகமக்கோயில் சிலை திருட்டையும். ஓய்வு பெற்ற நீதிபதிதான் கண்டு பிடிக்க வேண்டுமா ? – விடுதலை இராசேந்திரன் டுவிட்டரிலிருந்து பெரியார் முழக்கம் 15122022 இதழ்

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் வெளியீட்டு விழாவில் அஜிதா கேள்வி ‘இந்து தேசிய இனம்’ என்று ஒன்று இருக்கிறதா?

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் வெளியீட்டு விழாவில் அஜிதா கேள்வி ‘இந்து தேசிய இனம்’ என்று ஒன்று இருக்கிறதா?

தனது ஆரிய இனத்துக்கு தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை என்கிறார் ஹெட்கேவர். காந்தி கொலை செய்வதற்கு 15 நாட் களுக்கு முன்பு ஒரு கொலை முயற்சியை நடத்தி தோல்வி கண்டது கோட்சே கும்பல். பிரிட்டிஷார் வெளியேறும் முன்பு ஆட்சி அதிகாரத்தைத் தங்களிடம் வழங்கு வார்கள் என்று நம்பியது ஆர்.எஸ்.எஸ். கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணியளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்’ நூல் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் அஜிதா, நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். (சென்ற இதழ்த் தொடர்ச்சி) கோல்வாக்கர் என்று சொல்லக்கூடிய, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு 33 ஆண்டுகள் தலைவராக இருந்த அவர் எழுதிய புத்தகம், ‘க்ஷரnஉh டிக வாடிரபாவள’ இது ஆர்.எஸ்.எஸ்.இன் வேத நூலாக கருதப்படுகின்றது. இதை வேத நூல் என்று ஏன் சொல்கிறோம் என்றால்,  அதற்கு...

சேலம் சங்கரமடத்தைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கழகத் தோழர்கள் விடுதலை

சேலம் சங்கரமடத்தைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கழகத் தோழர்கள் விடுதலை

2018ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி எச்.ராஜா திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் என அவர் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். அச்சமயம் சேலம் மரவனேரியில் உள்ள சங்கரமடம் கல்வீசி தாக்கப்பட்டது. முன் விளக்குகள் உடைக்கப்பட்டன அங்கு இருந்த ஜெயேந்திரன் பதாகை கிழித்து எறியப்பட்டது. எச்.ராஜாவின் பேச்சுக்கு எதிர்வினையாக கழகத் தோழர்கள் கோ. இராஜேந்திரன், த. மனோஜ்குமார் மற்றும் பொ. கிருஷ்ணன் ஆகியோர் இந்தத் தாக்குதலை நடத்தியாகக் கூறி 21.03.2018 அன்று அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தோழர்களைக் கைது செய்தனர். 2018இல் இருந்து 4 ஆண்டுகள் நடந்த அவ்வழக்கில் 02.12.22 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.கழகத் தோழர்கள் அவ்வழக்கில் இருந்து குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட தோழர்கள் சேலம் பெரியார் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினர். இந்த வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபனுக்கும்...

அயோத்தி ‘ராமன்’ மீது சூரிய ஒளி விழுவது எப்படி?

அயோத்தி ‘ராமன்’ மீது சூரிய ஒளி விழுவது எப்படி?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் இராமன் கோவில் உண்மையிலேயே இராமன் பிறந்த இடம் தான். இராமன் பிறந்த இடத்தில் தான் கோவில் கட்டியிருக்கிறோம். இராமன் தான் அங்கு பட்டாவோடு குடியிருக்கிறான் என்பதை மக்களிடம்  நம்ப வைப்பதில் ஒன்றிய ஆட்சி தீவிரமாக இறங்கியிருக்கிறது. இராம நவமி அன்று இராமர் சிலை மீது ராமநவமி நாளன்று சூரியக் கதிர்கள் விழப் போகிறது என்ற ஒரு செய்தியைப் பரப்பி வருகிறார்கள். அப்படி சூரியக் கதிர்களை விழும்படி செய்வதற்காக செயற்கையான கருவி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆடிகள் என்று சொல்லப்படுகின்ற லென்சுகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற அந்தக் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் மத்திய ஆராய்ச்சி நிறுவனமும், மத்திய கட்டிட ஆராய்ச்சி மய்யமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஒன்றிய ஆட்சி கட்டாயப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவியல் தகவல்களை அளிப்பதற்காக இந்திய வானியல் நிறுவனமும், அயுக்கா என்ற வானியல் நிறுவனமும் ஈடுபட வேண்டும் என்றும் ஒன்றிய ஆட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது....

G-20 தலைமைப் பதவியால் இந்தியாவுக்கு தனிப் பெருமை ஏதும் இல்லை

G-20 தலைமைப் பதவியால் இந்தியாவுக்கு தனிப் பெருமை ஏதும் இல்லை

G-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இப்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில் இந்தியா பெருமை கொள்ள எதுவும் இல்லை. இந்த அமைப்பின் உறுப்பு நாடு ஒவ்வொன்றுக்கும் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 19ஆவது சுற்றில் தலைமைப் பதவி மோடிக்கு கிடைத்திருக்கிறது. அந்த முறையில் தற்போது இந்தியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதையொட்டி, டெல்லியில் பிரதமர், அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை கூட்டி இந்தியா முழுவதும் 200 இடங்களில் இது தொடர்பான கூட்டங்களை நடத்துவது என்ற முடிவை எடுத்திருக்கிறார். தமிழ்நாடு முநலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்து கொண்டிருக்கிறார். மிகவும் பெருந்தன்மையோடு இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தரும் என்று அறிவித்திருக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு ‘ளுவயவநளஅயn’ என்ற முறையில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிற ஒரு சிறப்பான முடிவு. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிற கருத்தையும்...

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

கிராமியக் கலாச்சாரம், கிராமியப் பண்பாடு இவைகளி லெல்லாம் புனிதம் கற்பிப்பதோ, பெருமைபடுவதற்கோ ஒன்றும் இல்லை. இவைகளெல்லாம் சாதி கட்டமைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மூட நம்பிக்கைகள்,  சடங்கு கள், கிராமத் திருவிழாக்கள், செத்தப் பிணங்களைக் கூட பொது சுடுகாட்டிற்குள் புதைக்க அனுமதி மறுக்கப்படுகின்ற மனிதாபிமானமற்ற கொடு மைகள், சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அபராதம் என்றெல்லாம் கிராமியக் கலாச் சாரம் பழமைப் படுகுழிக்குள் மூழ்கிப் போய் கிடக்கின்றது. அதன் காரணமாகத்தான், கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி நகர்ப்பெயர்வுகள் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவிலேயே கிராமத்தி லிருந்து நகரத்தை நோக்கி வரு கின்றவர்களின் எண்ணிக்கை யில் முதலிடம் பெற்ற மாநிலமாக (63 சதவீதம்) தமிழ்நாடு இருக்கின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி அருகே தொகரப் பள்ளி என்று ஒரு கிராமம், இந்த கிராமத்தில் காதல் செய்வது என்பதே குற்றம். அதிலும் ஒரே சமூகத்தில் காதலித்தால்கூட அது குற்றமாகக் கருதப்பட்டு அபராதம் விதித்து ஊரை...

ஒழுக்கமில்லாத ‘இந்து’வே வெளியேறு!

ஒழுக்கமில்லாத ‘இந்து’வே வெளியேறு!

“இந்துவாக இருப்பவர் ஒழுக்கவாதி; ‘இந்துத்துவா’வை ஏற்றுக் கொண் டவர், பலே பலே ஒழுக்கவாதி” என்று நாம் சொன்னால், அண்ணாமலைக்கு கோபம் வந்து விடும். “யாரடா  அப்படி சொன்னது? நீ எந்த ஊடகம்பா? மரியாதையாகப் பேசு; மான நஷ்ட வழக்கு போடுவேன்” என்று பொங் கிடுவார். ஏதோ, கிண்டலுக்காக நாம் எழுதவில்லை. அவரது பேச்சை ‘தினமலர்’ (டிசம்.12) வெளியிட்டிருப்ப திலிருந்துதான் கூறுகிறோம். அண்ணா மலைக்கு எல்லாவற்றுக்கும் ஆதாரம் வேண்டுமே! “திராவிட இயக்கங்களில் இருப்பவர்களே அஞ்சி வெட்கப்படும் அளவிற்கு பாலியல் குற்றச்சாட்டுகள் நம்மோடு இருப்பவர்கள் மீது பரபரப்பாக எழுகிறது. ஒழுக்கக் கேடானவர்களுக்கு பா.ஜ.க.வில் இடம் இல்லை. அவர்கள் கட்சியிலிருந்து விலகி விடலாம்” என்று கண்டிப்பாகக் கூறியிருக்கிறார். அதாவது பாலியல் குற்றச்சாட்டிலும் பா.ஜ.க.வை அடிச்சுக்கவே முடியாது; அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியை அல்ல; வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன சார் இது – இதெல்லாம் ஒரு பிரச்சினையா… நம்ம இந்து தர்மத்தில் பகவான்...

இந்தியாவில் பொருளாதாரக் குவிப்பை நிர்ணயிப்பதே ஜாதிக் கட்டமைப்பு தான் – முனைவர் கலையரசன்  தமிழில் ர. பிரகாசு

இந்தியாவில் பொருளாதாரக் குவிப்பை நிர்ணயிப்பதே ஜாதிக் கட்டமைப்பு தான் – முனைவர் கலையரசன் தமிழில் ர. பிரகாசு

ஜாதிய சமூகத்தில் சமூக மாற்றத்துக்கான அடிப்படையில் முதன்மையாகக் களையப்பட வேண்டியது ஜாதி அமைப்பு; பொருளாதாரம், அதற்கு துணை சேர்க்கும் காரணி தான் என்பதே பெரியாரியலின் அடிப்படை. ஜாதியைவிட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து விட்டால் ஜாதியப் பாகுபாடுகள் பலவீனமாகி விடும் என்பது இடதுசாரிகளின் பார்வை. இப்போது சமூகக் கல்வி ரீதியான இடஒதுக்கீட்டில் முதன்மைக் காரணியாகக் கருதப்படும் ஜாதியைப் புறந்தள்ளி பொருளாதாரத்தை அளவுகோலாக மற்றும் முயற்சியே 10 சதவீத உயர்ஜாதி இடஒதுக்கீடு. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கே ஜாதி அடிப்படையாக இருக்கிறது என்பதை ஆய்வு ரீதியாக நிறுவுகிறார், முனைவர் கலையரசன் – இக்கட்டுரையில். நாட்டின் சொத்து ஏழை, பணக்காரர் என்ற வர்க்கப் பிரிவில் பகிர்ந்து கிடக்காமல், உயர்ஜாதி யினரிடம் அதிகமாகவும், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பிரிவினரிடம் குறைவாகவும் குவிந்திருப்பதைத் தரவுகளுடன் நிறுவுகிறார். ‘புரட்சிக் பெரியார் முழக்கம்’ வாசகர்களுக்கு ஆழமான இந்தக் கட்டுரையைத் தமிழில் தருகிறோம். இட ஒதுக்கீட்டால் தகுதி, திறமை பாழ்பட்டு விட்டது, நாட்டின்...

நடராசன் முதல்வர் கனவில் வருவாரா?

நடராசன் முதல்வர் கனவில் வருவாரா?

¨        தில்லை நடராசன் கோயிலில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்கிறார் சுப்பிரமணியசாமி. நந்தன் கனவில் நடராஜன் வந்து சொன்னது போல் தமிழக முதல்வரிடம் கனவில் வந்து சொன்னால் பரிசீலிக்கலாம். ¨        புதுச்சேரி கோயில் யானை மாரடைப்பால் மடிந்தது பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சோகம் தான். காடுகளில் இயற்கையாக வாழும் விலங்குகளை கோயிலுக்குள் கொண்டு வந்து மதச்சாயம் பூசி மாரடைப்பால் மரணிக்க வைப்பது கொடுமை அல்லவா? எந்த ஆகமத்தில் யானையைக் கோவிலுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறது. விலங்குகளை இயற்கையாக மதம் இன்றி வாழ விடுங்கள். ¨        கோயில்களில் செல்போன் கொண்டு வர உயர்நீதிமன்றம் தடை விதித் திருப்பது நியாயம்தான். சமஸ்கிருத மந்திரங்களை கருவறைக் கடவுள்கள் நெட் வொர்க் இல்லாமலே புரிந்து கொள்ளும் போது வீணாக எதற்கு செல்போன்? ¨        உறுப்புகளோடும் உயிரோடும் பிறக்கும் குழந்தைகள், மத அடையாளங்களை சுமந்து வரவில்லை. அவர்களை மதத்துக்குள் இழுப்பதே கட்டாய மதமாற்றம் தான்!...

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாநகர மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 4.12.2022 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா. இராமச்சந்திரன் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, கழகப் பொருளாளர் சு. துரைசாமி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: பெரியார் முழக்கம் சந்தா சேர்த்து டிசம்பர் இறுதிக்குள் தலைவரிடம் ஒப்படைப்பது. டிசம்பர் 6 / டிசம்பர் 24இல் அம்பேத்கர்/பெரியார் நினைவு நாட்களில் வீரவணக்கம் செலுத்துவது. கோவையில் கழகத் தோழர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்துவது கோவை மாநகரப் பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டன. கோவை மாநகர. தற்காலிக அமைப்பாளராக நா.வே.நிர்மல் குமார் நியமிக்கப்படுகிறார். கோவை மாநகரில் தோழமை இயக்கங்கள், கட்சிகள் நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும் மாநகரத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்து கொள்வதாக இருந்தால் அமைப்பாளரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றே கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது....

தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்

தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்

அனைத்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரை யாடி மாவட்ட அமைப்புகளைப் புதுப்பிக்க / மாற்றியமைக்க, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்,  மாநிலப் பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு பயணத்துக்குத் திட்டமிடப்பட் டுள்ளது. முதற்கட்டப் பயணம்: 16.12.2022 காலை 10.30 மணி மூ கள்ளக்குறிச்சி மாவட்டம் 16.12.2022 மாலை 4.00 மணி- விழுப்புரம் மாவட்டம். 17.12.2022- மாலை 06.00 மணி – வேலூர் மாவட்டம் (இரவு தங்கல் வேலூர் மாவட்டம்) 18.12.2022 காலை 10.00 மணி கிருட்டிணகிரி மாவட்டம் 18.12.2022 மாலை 04.00 மணி தர்மபுரி மாவட்டம் இரண்டாம் கட்டப் பயணப் பட்டியல்: 26.12.2022 காலை 10.00 மதுரை மாவட்டம் 26.12.2022 மாலை 4.00 சிவகங்கை மாவட்டம் 26.12.2022 இரவு 07.00 மணி தஞ்சை மாவட்டம் (இரவு தங்கல் தஞ்சை மாவட்டம் ) 27.12.2022 காலை 11.00 மணி மயிலாடுதுறை மாவட்டம் 27.12.2022 மாலை 04.00 மணி கடலூர் மாவட்டம் (இரவு தங்கல் பெரம்பலூர் மாவட்டம்...

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் திறனாய்வு: அஜிதா பேச்சு

‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் திறனாய்வு: அஜிதா பேச்சு

பெரியார் தொடங்கிய பார்ப்பனரல்லாதார் இயக்கமே ஆர்.எஸ்.எஸ். உருவாகத் தூண்டியது ஹெட்கேவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதும் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லை என்பதும் அப்பட்டமான பொய். இந்து மகாசபையிலும் காங்கிரசிலும் இரட்டை உறுப்பினராக இருக்க காங்கிரஸ் தடை விதித்தது. கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணியளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்’ நூல் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் அஜிதா, நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் என்ற புத்தகத்தை நாம் படித்தால், இந்துத்துவா பற்றிய பார்வை நமக்கு சரியானதாக மாறும். தமிழ்நாட்டில் ஒரு கதை கூறுவார்கள், கண் பார்வை இல்லாதவர்கள் ஒரு பெரிய யானையைத் தொட்டுப் பார்த்துவிட்டு இது ‘தூண் போல இருக்கிறது’, ‘இது முறம் போல் இருக்கிறது’ என்று கூறுவார்கள். அதே...

நாம் இருவர் ; நமக்கேன் இன்னொருவர் ?

நாம் இருவர் ; நமக்கேன் இன்னொருவர் ?

முன்பெல்லாம், நாம் இருவர், நமக்கு மூவர் என்று சொன்னோம்.  அது படிப்படியாக குறைந்து நாம் இருவர், நமக்கு இருவர். இப்பொழுது நாம் இருவர், நமக்கு ஒருவர், நாளைக்கு இதுவும் மாறலாம், நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர். நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை. இப்படி எல்லாம் பிரசாரம் இருக்கிறது. இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, நாட்டினுடைய நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையைக் கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களைப் பெற்று அதற்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில், இல்லற வாழ்வில் நீங்கள் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்,  சமத்துவத்தை, சமூகநீதியை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏதோ முதலமைச்சராக அல்ல, உங்களுடைய தந்தை என்கின்ற அந்த இடத்தில் இருந்து உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன். அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் ஆற்றிய உரையிலிருந்து. பெரியார்...

வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் (டைரி) ஜாதி கேட்கும் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் (டைரி) ஜாதி கேட்கும் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் விதமாக மாணவர்கள் பயன்படுத்தும் தினசரி வீட்டுப்பாட டைரியில் “ஐடென்டி சர்டிபிகேட்” என்ற பெயரில் சாதி, மதம் ஆகியவற்றை விவரக்குறிப்பேட்டில் பதிவிட ஒரு பகுதியை உருவாக்கி கட்டாயமாக பதிவிட வலியுறுத்தி வருகிறது. அதேபோல பெரும்பாலான பள்ளிகளில் சாதி பெயர்களைப் பதிவிடுவதுடன் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, ஓசி (ளுஊ, ளுகூ, ஆக்ஷஏ, டீஊ) என பிரித்து பதிவிட வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த  சம்பவங்கள் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் சாதி, மத உணர்வைத் தூண்டுவதாக உள்ளது என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும், மாணவர்களின் அடையாள குறிப்புகளில் சாதி, மதம் அடை யாளம் கேட்பதைத் தடை செய்ய வலியுறுத்தியும்,  2021 ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகரத் தலைவர் நேருதாஸ் கோவை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்....

தலையங்கம் இடஒதுக்கீட்டை குழி பறிக்கும்  அய்.அய்.டி.யின் புதிய கொள்கை

தலையங்கம் இடஒதுக்கீட்டை குழி பறிக்கும் அய்.அய்.டி.யின் புதிய கொள்கை

சென்னை ‘அய்.அய்.டி.’ பார்ப்பனர் கோட்டை யாகவே இருந்து வருகிறது என்பதற்கு மேலும் சான்றுகள் குவிந்து வரு கின்றன. 577 பேராசிரியர் களில் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடியைச் சார்ந்தவர்கள் 19 பேர் மட்டுமே (மூன்று சதவீதம்) என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறுகிறது. 2021 மார்ச் 31 நிலவரப் படி திறந்த போட்டிக்கான இடங் களில் 515 பேராசிரியர், இணைப் பேராசிரியர்கள் இருந்தனர். இதில் பிற்படுத்தப் பட்டோர் 62 பேர் மட்டுமே. பட்டியல் மற்றும் பழங்குடிப் பிரிவினர் 16 பேர் தான். ஆய்வுப் பட்டப் படிப்பைப் பொறுத்த வரை 2018-2019, 2019-2020இல் 196பேர் மட்டுமே பெண்கள்; பிற்படுத் தப்பட்டோர் 74; பொருளா தாரப் பின்தங்கிய பிரிவினர் 74; எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் முறையே 27 மற்றும் 5 பேர் மட்டுமே. பெண்களும் முற்றாக புறக்கணிக்கப்படு கின்றனர். 2021-2022ஆம் ஆண்டு துறைரீதியாக விவரங்களைத் தர, தகவல்...

‘இராமனு’க்கு 2000 கோடி சாலை

‘இராமனு’க்கு 2000 கோடி சாலை

அயோத்தி ‘இராமனு’க்கு அடிக்குது ‘லாட்டரி’; சர்வதேச சுற்றுலா கதாநாயகனாக மாறப் போகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, உ.பி. காவிச் சட்டை ஆதித்யநாத் என்பவருக்கு முதலமைச்சர் என்ற பெயரும் உண்டு. இராமன் தரிசனத்துக்கு கோயிலைச் சுற்றி அமையப் போகும் சாலைக்கு அவரது இராமராஜ்ய உ.பி. ஆட்சி ஒதுக்கியுள்ள தொகை 2000  கோடி ரூபாய். மக்கள் வரிப் பணத்தில் மக்களுக்கான திட்டங்களுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, 2000 கோடியை கோயிலுக்கு சாலை போட கொட்டி அழும் ஆட்சியை உலகில் எங்கேயாவது பார்த்திருக்க முடியுமா? இது அந்த இராமனுக்கே அடுக்காது” என்று எதிர்க் கேள்வி கேட்கக் கூடிய மக்கள் அங்கே இல்லை. ‘இந்துத்துவ மாடல்’ இப்படித் தான் சேறு வாரி பூசிக் கொண்டு ஆட்டம்  காட்டும்! உ.பி. மாநிலமே ‘இராமனுக்கு’ பட்டா போட்டாகி விட்டது. இனி அடுத்தடுத்து கீழ்க்கண்ட திட்டங்களும் வரலாம். சர்வதேசப் பயணிகளை கோயிலுக்கு வரவேற்க அனுமார் படை உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் தரப்படும். திறமையுள்ள...

எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் பா.ஜ.க.வின் படுபாதகச் செயல்கள் ம.கி. எட்வின் பிரபாகரன்

எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் பா.ஜ.க.வின் படுபாதகச் செயல்கள் ம.கி. எட்வின் பிரபாகரன்

“2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக இந்த எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் செய்த அட்டூழியங்கள் ஏராளம். டெல்லி பொருளாதாரக் கல்லூரி பேராசிரியர் நந்தினி சுந்தரும், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் கவுஹர் ஃபஸ்லியும் இணைந்து, ஜூன் 2020 வரை நடந்த அதிகார அத்துமீறல்களை, ஆய்வறிக்கையாக வெளி யிட்டனர் . தற்போது அந்த ஆய்வறிக்கையோடு புது தகவல் களை சேர்த்து, செப்டம்பர் 2022 வரை நடந்த சீர்கேடு களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்பட்டுள்ளது. வேறு நால்வர் இப்பணியை செய்துள்ளனர். 6 பகுதிகளாக இந்த கொடுங்கோன்மைகள் பிரித்து விளக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இங்கு பார்க்கலாம். பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் தலையீடு: சிந்தனை யாளர் காஞ்சா அய்லையா எழுதிய ‘நான் ஏன் இந்து அல்ல?’, அருந்ததி ராய் எழுதிய ‘தோழர்களுடன் ஒரு பயணம்’, நாவலாசிரியர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’, எழுத்தாளர் பாமா சூசைராஜ் எழுதிய ‘சங்கதி’, சுகிர்த ராணி எழுதிய ‘கைம்மாறு’, ‘என் உடல்’, ராமானுஜன்...