Category: பெரியார் முழக்கம் 2018

கூட்ட மேடையில் தமிழர் 
‘பீப்’ பகோடா

கூட்ட மேடையில் தமிழர் 
‘பீப்’ பகோடா

திருவொற்றியூர் பொதுக் கூட்ட மேடையில் ஒரு மேஜை மீது ஸ்டவ் அடுப்பும், அதற்கு மேல் எண்ணெய் சட்டியும் வைக்கப்பட்டு, கீழே அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட் டிருந்தது. மோடியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் “தமிழர் பீப் பகோடா  இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். உரிமையாளர் ஜெயா, எம்.ஏ., எம்.பி.எல்., பி.எச்டி.” என்று எழுதப்பட் டிருந்தது. பகோடா விற்று நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கும் இளைஞர்கள்கூட எங்கள் ஆட்சியின் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன் பெற்றவர்கள்தான் என்று பிரதமர் மோடி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியை கிண்டல் செய்து, இந்தக் காட்சியை மேடையில் தோழர்கள் அரங் கேற்றியிருந்தனர். கூட்டத்தினர் இதை மிகவும் பாராட்டி இரசித்தார்கள். பெரியார் முழக்கம் 15022018 இதழ்

பெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா?

பெரியார் பல்கலைக்கழகத்தில் மதயாத்திரைக்கு வரவேற்பா?

கழகம் கருப்புக் கொடி; தோழர்கள் கைதுசேலம் பெரியார் பல்கலைக்கழகம், பா.ஜ.க.வின் மதவாத யாத்திரைக்கு அனுமதித்து, மாணவர்களைப் பயன்படுத்தியதற்கு கழகத் தோழர்கள் கருப்புக் கொடிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சுவாமி விவேகானந்தரின் மேலை நாட்டுச் சீடரான நிவேதிதை 150ஆவது பிறந்தநாள் ரத யாத்திரையை பெரியார் பல்கலைக் கழகம் வரவேற்கும் நிகழ்ச்சிக்கு, திராவிடர் விடுதலைக் கழம் எதிர்ப்பு தெரிவித்து 10-02-2018 மாலை 3 மணிக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட் டத்தில் ஈடுபட்ட  42 தோழர்கள் கைதானார்கள். சுவாமி விவேகானந்தரின் மேலை நாட்டுச் சீடரான நிவேதிதை 150 வது பிறந்து நாள் விழா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நிவேதிதை 150 வது ரத யாத்திரை கடந்த 22ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றி எதிர் வரும் 22-ம் தேதி ரத யாத்திரை முடிவடைகிறது. பா.ஜ.க. பின்னணியோடு இது நடக்கிறது. இந்த நிலையில்...

பணி ஓய்வு பெற்ற தோழர் கழக ஏட்டுக்கு நன்கொடை

பணி ஓய்வு பெற்ற தோழர் கழக ஏட்டுக்கு நன்கொடை

இராயப்பேட்டை கழகத் தோழர் கண்ணதாசன் மாமனாரும், மயிலை கச்சேரி சாலை அஞ்சலகத்தில் அஞ்சல் ஊழியராக 34 ஆண்டுகள் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவருமான திருநாவுக்கரசு அவர்களை கழகத் தோழர்கள் இரா. உமாபதி, சு. பிரகாசு, செந்தில், அருண், விழுப்புரம் அய்யனார் ஆகியோர் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். சமூகச் சிந்தனைக் கொண்ட திருநாவுக்கரசு, கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 08022018 இதழ்

பார்ப்பனியக் கட்சி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது திராவிடக் கட்சிகளை வீழ்த்த ஈரோட்டில் பா.ஜ.க. யாகம்!

பார்ப்பனியக் கட்சி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது திராவிடக் கட்சிகளை வீழ்த்த ஈரோட்டில் பா.ஜ.க. யாகம்!

திராவிட கட்சிகளை வீழ்த்தி, பா.ஜ.க.வின் ‘இந்து சாம்ராஜ்யத்தை’ தமிழகத்தில் நிறுவுவதற்கு ஈரோட்டில் பல கோடி ரூபாய் செலவில் பா.ஜ.க. தலைமை, யாகம் நடத்தியுள்ளது. இது குறித்து ‘ஜூனியர் விகடன்’ ஏடு (7.2.18) வெளியிட்டுள்ள செய்தி: “இஸ்லாமியர்களை விரட்டிவிட்டு இந்து சாம்ராஜ்ஜியத்தைப் பலப்படுத்த அஸ்வமேத ராஜ சூய யாகத்தை சத்ரபதி சிவாஜி நடத்தினார். அப்படியொரு யாகத்தை ஈரோட்டில் பல கோடி ரூபாய் செலவில் நாங்கள் நடத்தியுள்ளோம். ‘இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய யாகம் இது’ என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறினார்” என்று பெருமையுடன் நம்மிடம் கூறினார், பி.ஜே.பி. விவசாய அணியின் தமிழகப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜு. ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே ஏ.இ.டி. பள்ளி வளாகத்தில், பி.ஜே.பி. சார்பில் ஜனவரி 26, 27, 28 தேதிகளில் பிரமாண்டமான முறையில் யாகம் நடத்தப் பட்டது. இந்த யாகத்தில், குதிரையை உயிருடன் எரித்ததாகத் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் காட்டுத் தீ போல பரவிய தகவல், பெரும்...

மீனாட்சிக் கோயிலில் ‘அக்னி’ பகவான்

மீனாட்சிக் கோயிலில் ‘அக்னி’ பகவான்

மதுரை மீனாட்சிக் கோயில் மண்டபம் தீப்பிடித்து எரிந்துவிட்டது. ‘தீ விபத்து’ என்று பா.ஜ.க.வின் ‘தமிழிசை’யும், ‘தேசபக்தர்’ எச்.ராஜாவும் கூறுகிறார்கள். ராஜா இன்னும் ஒரு படி மேலேயே போய்விட்டார். ‘சி.பி.அய். விசாரணை வேண்டும்’ என்கிறார். ‘இந்துக்கள் வழிபாடு – கோயில் நிர்வாகங்களில் அரசு தலையீடு கூடாது’ என்று நீட்டி முழங்கும் ‘ஆன்டி இந்தியன்’ புகழ் ராஜாவும் இந்து முன்னணியும் இப்போது சி.பி.அய். விசாரணை கோருவது அரசின் தலையீடு அல்லவா? ‘ஆகம விதிப்படி பூஜை புனஸ்காரங்கள்’, ‘அவாள்களை’க் கொண்டே நடத்தாவிட்டால் ஆபத்து வந்து விடும் என்று அலறும் பார்ப்பனர்கள், இப்போது மீனாட்சி கோயிலில் ஆகமக் குளறுபடிகள் நடந்துவிட்டனவா என்று ஆராயாமல், சி.பி.ஐ. விசாரணையைக் கோருவது ஏன்? பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் காப்பாற்றும் முயற்சியல்லவா? இவர்களுக்கு இப்படி எல்லாவற்றிலும் இரட்டை வேடம் தான். ‘பூஜை புனஸ்காரங்கள்’ நடக்கும்போது கோயிலுக்குள் இருக்கும் சிலையை ‘பகவான்’ என்பார்கள். அதே பகவான் வெளிநாடு கடத்தப்படும்போது அல்லது கோயிலுக்குள்ளே விபத்துகள் ஏற்படும்போது, பகவானை...

ஜாதி மறுப்புத் திருமணத்தைத் தடுப்போருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

ஜாதி மறுப்புத் திருமணத்தைத் தடுப்போருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

இருவேறு சாதியைச் சேர்ந்த வயது வந்த ஆணும் பெண்ணும்விருப்பப்பட்டு செய்து கொள்ளும் காதல் திருமணங்களைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மேலும், சாதி மறுப்புத் திருமண தம்பதியரை தாக்குவது சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளநீதிபதிகள், இவ்விஷயத்தில் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகளை மத்திய அரசே முன்வந்துதடை செய்ய செய்ய வேண்டும்; இல்லையேல் நீதிமன்றம் தலையிட்டு உரிய முடிவெடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் நடைபெறும் கட்டப் பஞ்சாயத்துகளை குறிப்பிட்டு, சக்தி வாஹினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கடந்த 2010இல் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கருத் தைக் கேட்டிருந்தது. அதற்கு, “கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்க – கண்காணிக்க உச்சநீதிமன்றமே ஏதாவது வழிமுறையை சொல்ல வேண்டும்” என்று மத்திய அரசு கூறிவிட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,...

கருத்தரங்கைத் தடுக்க வந்த பா.ஜ.க.வினர்

கருத்தரங்கைத் தடுக்க வந்த பா.ஜ.க.வினர்

‘தமிழை மறுக்கும் வேத மரபுகள்’ நிகழ்ச்சிக்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் தலைமை தாங்கினார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொறுப்பாளர் வாலாஜா வல்லவன், பேராசிரியர் சுந்தரவள்ளி, விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினர். மயிலைப் பகுதி கழகப் பொறுப்பாளர் சுகுமார் வரவேற்புரையாற்றினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி தொகுத்து வழங்கினார். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி தரக் கூடாது என்று அரங்கிற்கு வெளியே பா.ஜ.க.வினர் காவல்துறையிடம் எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியை தடைப்படுத்த முயன்றனர். தடைகளைத் தகர்த்து பார்ப்பனியத்தின் வேதமரபுகளையும் தமிழ் எதிர்ப்பை யும் உரையாளர்கள் ஆதாரங்களோடு விளக்கினர். பெரியார் முழக்கம் 08022018 இதழ்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழை அவமதிப்பதே வேத மரபு

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழை அவமதிப்பதே வேத மரபு

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… இன்று காந்தி பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள். எனவே காந்தியாருக்கும் வேத மரபான பார்ப்பனியத்திற்கும் இடையிலான ‘உறவுகள்’ குறித்து சில கருத்துகளைப் பதிவு செய்துவிட்டு, பிறகு, எனது தலைப்புக்கு வருகிறேன். தமிழ்நாட்டில் காந்தி மேற்கொண்ட பயணங்களின் செய்திகளைத் தொகுத்து தமிழ்நாடு காதி வாரியம், ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலை வெளியிட்டிருக் கிறது. தொகுத்தவர் பெயர் இராமசாமி. அதில் உள்ள தகவல்கள் இவை: 16.10.1927 அன்று பாலக்காட்டில் காஞ்சி மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரசாமி காந்தியாரை சந்தித்தார். சந்தித்த இடம் மாட்டுக் கொட்டகை. காரணம், காந்தி பிறப்பால் ‘பிராமணன்’ அல்ல என்பதுதான். அப்போது தீண்டப்படாதவர்களாக புறக்கணிக்கப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ‘ஆலயப் பிரவேசப்’...

கொளத்தூரில் மாட்டுக்கறி விருந்துடன் கழகம் நடத்திய ‘இந்துமதப் பெருமைகள்’ ஆய்வரங்கம்!

கொளத்தூரில் காவல்துறை, ஆண்டாள் ஆய்வரங் கத்துக்கு தடைபோட்டது; உடனே ‘ஆண்டாள் அருள்வாக்கு மகிமை’ என்ற தலைப்பில் கழகம், ஆய்வரங்கை பெயர் மாற்றி நடத்தி முடித்தது. இது குறித்த செய்தி விவரம்: 03.02.2018 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த “ஆண்டாள் ஆய்வுக்குரியவளே” எனும் கருத்தரங்கிற்கு காவல்துறை தடை விதித்தது. மறுப்பு அறிவிப்பினை நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் சேலம் மாவட்ட அமைப்பளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் வீட்டுக் கதவுகளில் வருவாய்த்துறை அலுவர்கள் முன்னிலை யில்  31.01.2018 அன்று ஒட்டினர். இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருந்ததாவது: இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக படியுங்கள் ! வரும் 03.02.2018, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டம், கொளத்தூர் பெரியார் படிப்பகம் அல்லது லட்சுமி திருமண...

விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘சங்பரிவாரங்களின் சதி வரலாறு’ – கன்னட மொழியில் வெளியீடு : ஒரே நாளில் 2500 பிரதிகள் விற்றன

விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘சங்பரிவாரங்களின் சதி வரலாறு’ – கன்னட மொழியில் வெளியீடு : ஒரே நாளில் 2500 பிரதிகள் விற்றன

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தமிழில் எழுதிய ‘சங் பரிவாரங்களின் சதி வரலாறு’ எனும் ஆய்வு நூல் கன்னட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு “சஞ்சகரா சங்க பரிவார” எனும் பெயரில் 20.01.2018 சனிக்கிழமை அன்று பெங்களூரில் வெளியிடப்பட்டது. பெரியாரியலாளர் கலைச் செல்வி, அகஸ்டியா ஆகியோர் இந்நூலை கன்னட மொழியில் மொழி பெயர்த்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்சின் எம்.எஸ். கோல்வால்கரின் தீய எண்ணங்கள் மற்றும் கொடூரமான கருத் தாக்கங்களை இந்நூல் ஆவணப்படுத்து கிறது. பெங்களூரில் உள்ள கன்னட பவனில் கன்னட எழுத்தாளர் திரு.முரளிசித்தப்பா இந்நூலை வெளியிட, பிரபல கன்னட ‘அக்னி’ வார இதழ் ஆசிரியர் பத்திரிக்கை யாளர் ‘அக்னி’ ஸ்ரீதர், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு. பி.கே. ஹரி பிரசாத் ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய ஹரிபிரசாத், ஆர்.எஸ்.எஸ். என்றால் ‘வதந்தியை பரப்பும் அமைப்பு’ (சு.ளு.ளு =‘சுரஅடிரச ளுயீசநயனiபே ளுடிஉநைவல’) என்றும், இது அரசியலமைப்பை எதிர்க் கிறது மற்றும் சமூகத்தில் அனைவரின்...

பெரியாரிய-அம்பேத்கரிய-மார்க்சிய சிந்தனைகள் ஒரு புள்ளியில் இணைய வேண்டும் நேர்காணல்: பசு கவுதமன்

‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரி புத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந் தொகுப்பு களினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்ற பசு. கவுதமன் பேட்டி. (சென்ற இதழ் தொடர்ச்சி) தங்களின் அடுத்த படைப்புகள் பற்றி… அடுத்ததாக மீண்டும் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி ‘பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள்’ தொகுப்பினை கொண்டு வரவேண்டும் எனும் வேலையை துவக்கியுள்ளேன். அது சமகாலத் திற்கு தேவைப்படும் மிக முக்கிய பதிவு என கருதுகிறேன். அதே போல பெரியாருக்கும் கம்யூனிஸ்ட் களுக்குமான உறவு அல்லது சொல்லாடல் எனும் அடிப்படையில் பல அம்சங்களைக் கொண்ட புரிதலோடு ஒரு தொகுப்பையும் உருவாக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். வெண்மணி பற்றிய என்னுடைய கள ஆய்வுகள் மூலம் அச்சம்பவம் குறித்து வெளிவராத பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதை பச்சைத் தீ என்ற தலைப்பில் ஆவணப்...

திருப்பூர் புத்தகத் திருவிழாவில்  ‘நிமிர்வோம்’ நிலையம்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ நிலையம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புத்தகத் திருவிழாவில் கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ புத்தக நிலையம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா  ஜனவரி 25 முதல் பிப் 4 வரை நடக்கும் இந்நிகழ்வில்அரங்கு எண் 94இல்  திராவிடர் விடுதலைக் கழகப் புத்தகங்கள் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ – வார ஏடு, ‘நிமிர்வோம்’ மாத இதழுக்கு சந்தாக்கள் சேர்க்கப்படுகின்றன. திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் பங்கேற்கும் முதல் புத்தக திருவிழா இது என்பதோடு கழக வெளியீடுகள் மட்டுமின்றி பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கருப்பு பிரதிகள், அங்குசம் பதிப்பகம் மற்றும் கலப்பை ஆகிய பதிப்பங்களிலிருந்தும் பல்வேறு சமூக சீர்திருத்த புத்தகங்களும் வாசகர்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் மிகப் பெரிய ஆதரவு கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ இதழுக்கு இந்த புத்தக கண்காட்சியில் கிடைத்துள்ளது. 4 நாட்களுக்குள்...

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  முக்கிய அறிவிப்பு

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

  டிசம்பர் (2017) மாதத்தோடு சந்தா முடிவடைந்த வாசகர்களுக்குப் பிப்ரவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவைப் புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி ஆண்டுக்கட்டணம் ரூ.200   ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  வங்கிக் கணக்கு கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை, ‘கரண்ட்’ அக்கவுண்ட். எண் : 1257115000002041  – கைளஉ மஎடெ0001257 ஆண்டுக்கட்டணம்  ரூ.200 தொடர்புக்கு: ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,  திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. &9841489896   பெரியார் முழக்கம் 02022018 இதழ்

‘நிமிர்வோம்’  ஜனவரி 2018 இதழ்

‘நிமிர்வோம்’ ஜனவரி 2018 இதழ்

அதிகாரம் + பார்ப்பனியம் கோடிகளில் புரளும் கார்ப்பரேட் ஆன்மிகம் கீதையைப் பேசும் ரஜினியின் அரசியல் ஆன்மிகம் பா.ஜ.க. கொண்டாடும் ஆன்மிகம் எது? ஆன்மீகமா? பார்ப்பனீயமா? – பெருஞ்சித்திரனார் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் – ஒரு பார்வை முதுகுளத்தூர் கலவரம் வாதங்களும் எதிர்வாதங்களும் – செந்தில் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமிர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com nimirvom@gmail.com   பெரியார் முழக்கம் 02022018 இதழ்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் கொளத்தூரில் வரும் 03.02.2018 அன்று நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் சடகோப ராமானுஜ ஜீயர் என்பவர் சென்று சோடா பாட்டில் வீசுவோம், எதற்கும் துணிவோம் எனவும் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது நான் சொல்வது போல் செய்யுங்கள். இந்தக் கால சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் தேவைப்பட்டால் நாங்களும் கண்ணாடி விடுவோம். எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். அதனை மேடையில் இருப்பவர்களும் ஆமோதித்து கைதட்டுகிறார்கள். நான் சொன்னபடி செய்வீர்களா என அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து கேட்கிறார், அனைவரும் செய்வோம் என முழங்குகிறார்கள். எனவே சடகோப ராமானுஜ ஜீயர், மேடையில் இருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் ஆகியோர் மீது வன்முறையை தூண்டுதல், கலவரத்தை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடனும் கூட்டுச் சதியிலும் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 27.01.2018 மாலை...

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு  நீதி கேட்கும் பொதுக் கூட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு நீதி கேட்கும் பொதுக் கூட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மரணித்த மாணவர்களுக்கு நீதி கேட்கும் பொதுக் கூட்டம் நாள்     :                 6.2.2018 வெள்ளிக்கிழமை நேரம்                   :                 மாலை 5.00 மணி இடம் :                 நெல்லுக்குத்தி மண்டபம் அருகில், திருச்செங்கோடு சிறப்புரை  : ஆசிரியர் சிவகாமி டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் (பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்) கொளத்தூர் மணி (தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர்க் கழகம், நாமக்கல் மாவட்டம் பெரியார் முழக்கம் 02022018 இதழ்

சரத்பிரபுவுக்கு திருப்பூரில் இரங்கல்

சரத்பிரபுவுக்கு திருப்பூரில் இரங்கல்

படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் சரத்பிரபு உடல் பிரத பரிசோதனை முடிந்து தில்லியிலிருந்து 18.1.2018 இரவு 11 மணிக்கு திருப்பூரில் அவரின் இல்லத்தை வந்தடைந்தது.  மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு, வடசென்னை மாவட்ட  செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கழகத் தோழர்கள் 10 பேர் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர் காலை 7 மணிக்கு இடுவம்பாளையம் இடுகாடு சென்று இறுதியஞ்சலி செலுத்த திட்டமிட்டு தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களோடு மருத்துவர் சரத்பிரபு அவர்களின் இல்லத்தில் ஒன்றுகூடினர். அங்கிருந்து 3 கிலோமீட்டர் வரை இறுதி ஊர்வலம் நடந்தது. இந்த மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலையே என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டு இதன் மீதான மேற்கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று வலியிறுத்தினர். தமிழ்ப் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, இளந்தமிழகம், அம்பேத்கர் தேசிய இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட தோழர்களை காவல் துறை கைது செய்து இரவு எட்டு மணிக்கு...

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

கோபி இளங்கோவன்           –                 ரூ.1,00,000/- சென்னை கு. அன்பு தனசேகர்        –                 ரூ.1,00,000/- மேட்டூர் மார்டின்     –                 ரூ.50,000/- மேட்டூர் சம்பத்           –                 ரூ.50,000/- மயிலாடுதுறை இளையராசா      –                 ரூ.20,000/- மயிலாடுதுறை மகேஷ்    –                 ரூ.10,000/- சேலம் மேச்சேரி சூரி (எஸ். எஸ். சில்க்ஸ்)              –                 ரூ.10,000/- சூரிய குமார் (கொளத்தூர்)                 –                 ரூ.10,000/- வேணுகோபால்        –                 ரூ.10,000/- காவை சசி      –                 ரூ.10,000/- நல்லதம்பி மெடிக்கல்ஸ்                   –                 ரூ.10,000/- கோவிந்தராஜ்             –                 ரூ.5,000/- காவை இளவரசன்                   –                 ரூ.5,000/- விஜி    –                 ரூ.5,000/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் வளர்ச்சி நிதி திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர், திருவரங்கம்டாக்டர்...

விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து...

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழாக்களை எழுச்சியுடன் நடத்தினர். சென்னையில் கழகம் நடத்தும் 18ஆம் ஆண்டு பொங்கல் விழா வழக்க மான உற்சாகம், கலை நிகழ்வுகளுடன் ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை ‘பத்ரி நாராயணன்’ படிப்பகம் எதிரே வி.எம். சாலையில் நடந்தது. அதிர்வு குழுவினர் பறை இசை பழந்தமிழர்க் கலை நிகழ்வுகள், கிராமியப் பாடல்கள், ஜாதி ஒழிப்புப் பாடல் களோடு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘அருண் டிரம்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் திரையிசை நிகழ்ச்சி நடந்தது. பெரியார், அம்பேத்கர் பாடல்களும், நீட் எதிர்ப்பு, அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்தும் கானா பாடல் களும் பாடப்பட்டன. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் என்று அனைத்துக் கட்சிகளையும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து இந்த விழாவை நடத்தி வருகிறார்கள். பகுதி வாழ் குழந்தைகள், சிறுவர்கள், வெவ்வேறு வேடங்களில் பங்கேற்றுப் பேசும் மாற்றுடைப்...

பிரகாஷ் ராஜ் கருத்தரங்க அரங்கை பசு மூத்திரம் தெளித்து தீட்டுக் கழித்த பா.ஜ.க.வினர்

பிரகாஷ் ராஜ் கருத்தரங்க அரங்கை பசு மூத்திரம் தெளித்து தீட்டுக் கழித்த பா.ஜ.க.வினர்

நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்தரங்கு நடத்திய மண்டபம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி கருநாடக பா.ஜ.க.வினர் பசுமாட்டு மூத்திரம் தெளித்து, துளசி செடிகளோடு தீட்டு கழிக்கும் சடங்குகளை நடத்தியுள்ளனர். கருநாடக மாநிலம் கன்வர் மாவட்டத்தில் சிர்சீ எனும் ஊரில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த ஜன.13 அன்று திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பிரகாஷ் ராஜும் கருத்தரங்கில் பேசியவர்களும் இந்து எதிர்ப்பாளர்கள்; மாட்டுக்கறி சாப்பிடக் கூடியவர்கள்; எனவே ‘புனித காரியங்கள்’ நடக்கும் மண்டபம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி, மாவட்ட பா.ஜ.க. பெண்கள் பிரிவு தலைவர் ரேக்கா ஹெக்டே என்பவர் தலைமையில் சிரிசி பா.ஜ.க. இளைஞர் பிரிவு தலைவர் விஷால் மராத்தே உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கடந்த ஜன.15 அன்று திடீரென்று மண்டபத்துக்குள் நுழைந்து, மண்டபம் முழுதும் மாட்டு மூத்திரத்தைத் தெளித்தனர். ஜன.13 அன்று மண்டபத்தில் கருத்தரங்கு நடத்திய நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் அவருடன் பேசியவர்கள் இந்து மத எதிர்ப்பாளர்கள்; மாட்டுக்...

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

கழக சார்பில் திருப்பூரில் ஜன.14 அன்று காலை 8 மணி முதல் மாலை வரை, வீரபாண்டிப் பிரிவு பெரியார் திடலில் கோலாகலமாக கொண் டாடப்பட்டது. அனைவருக்கும் பொங்கல் வழங்கி நிகழ்ச்சிகள் தொடங்கின. ஆடிட்டர் பழனிச்சாமி பொங்கல் வழங்கி தொடங்கி வைத்தார். 9 மணியளவில் சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமுதம் இரா. கணேசன் தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமையில் பரிசளிப்பு விழா பொங்கல் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்பு களைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்று உரையாற்றினர். பங்கேற்றோர் : முகில்ராசு (மாவட்டத் தலைவர்), மு. ரவிச்சந்திரன் (மாவட்ட பொருளாளர்), சு. நீதிராசன் (மாவட்ட செயலாளர்), க. அகிலன் (மாவட்ட அமைப்பாளர்), வி. தனபால் (மாநகர தலைவர்), சி. மாதவன் (மாநகர செயலாளர், த.சங்கிதா (மாவட்ட அமைப்பாளர்), மா. இராம சாமி (தெற்கு பகுதி செயலாளர்), அ.க. கருணாநிதி (வடக்குப் பகுதி செயலாளர்), சு. முத்துக்குமார்...

பெரியாரின் ‘இதழில்’ தனித்துவமானது

 ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்ற பசு. கவுதமனிடம் ஒரு நேர்காணல். (சென்ற இதழ் தொடர்ச்சி) பெரியாரின் அறிவியல் பார்வை குறித்து…? அவர் தான் சொன்ன அனைத்திற்கும் அறிவியல் பார்வை கொண்டே விளக்கமளித்துள்ளார்… தமிழர்களின் பண்பாட்டு விசயங்களில் அவர் பார்வையே இன்னும் நமக்கு உறுதுணையாக இருக்கிறது என்றால் மிகையல்ல. குறிப்பாக தீபாவளி குறித்து அவர் பல சூழலில் பேசியுள்ளார் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த நிகழ்வு நம் பண் பாட்டின் அடையாளமா என்பதை அறிவியலின் துணை கொண்டே விளக்கினார். அது குறித்த விவாதங்கள் இன்றளவிலும் நடைபெறுவதையும், இக்கால தலைமுறையினர் பலர் அதை எவ்வாறு ஏற்றுக் கொண்டு பல மூடபழக்கங்களை புறந்தள்ளு கின்றனர் என்பதையும் பார்க்க முடிகிறதே. அது போலவே பெண்கள் கர்ப்பத்தடை குறித்து அவரின் பதிவுகள், அவரின் அறிவியல் தொலைநோக்குப்...

தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!

டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங், ஒரு தலித் மாணவன். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர் நன்றாகப் படிக்கும் மாணவர். பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். மருத்துவர் ஆக வேண்டும் என்பது மட்டுமே அவரது இலட்சியம், கனவு. ஆனால் அந்தக் கனவு நிறைவேற இந்த சமூகம் அனுமதிக்கவில்லை. ஜஸ்ப்ரீத் சிங் வறுமையால் வாடும் சாதாரண தலித் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். வீட்டின் மூத்த பிள்ளையான இவரோடு, மற்ற மூன்று இளைய சகோதரிகளையும் உள்ளடக்கியது அவரது குடும்பம். தந்தை வேலைக்குப் போகிறார். தாய் வீட்டு வேலைகளையும் கவனித்தபடியே தூங்கும் நேரம் தவிர எப்போதுமே தையல் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார். படிப்பில் திறமையுடன் விளங்கிய ஜஸ்ப்ரீத்தின் படிப்புக்காக மொத்தக் குடும்பமுமே ரத்தத்தை வியர்வை யாக்கி, உழைத்துத் தியாகம் செய்தது. மகனை ஒரு ஊர் போற்றும் மருத்துவனாகப் பார்க்க அந்தத் தாயும் ஆசைப்பட்டாள். மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரதட்சிணைக்கு...

மோடி அரசு கொல்ல சதி : தொகாடியா அலறல்

மோடி அரசு கொல்ல சதி : தொகாடியா அலறல்

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகிலஇந்தியத் தலைவர் பிரவீன் பாய் தொகாடியா என்ற பார்ப்பனர் 15.1.2018 அன்று திடீரென மாயமானதாக கூறப்பட்டது. குஜராத் போலீசார்தான் அவரை கைது செய்திருப்பதாக விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.இந்நிலையில் தொகாடியா, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக, சுயநினைவில்லாத நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே பிரவீன் தொகாடியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது குரலை அடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் தொகாடியா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் போலீசார் தன்னை மிரட்டியதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்கவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தப்பித்து வந்தேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.  “அவர்கள் (மோடி அரசு) என்னை என் கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தனது நண்பர்களிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது” என்றார். பெரியார் முழக்கம் 25012018 இதழ்

பார்ப்பன உயர்கல்வி நிறுவனத்தின் அவமதிப்பு மற்றொரு மாணவர் பலியானார்!

தமிழ்நாட்டிலிருந்து உயர்கல்வி பயிலச் செல்லும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பார்ப்பன உயர்கல்வி நிறுவனங்கள் காட்டும் பாகுபாடு – திணிக்கும் மனஅழுத்தத்தால் உயிர்ப் பலியாகி வருகிறார்கள். தில்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் எம்.டி. எனப்படும் முதுநிலை பொது மருத்துவ படிப்பில்முதலாம் ஆண்டு படித்து வந்த திருப்பூர் மருத்துவ மாணவர் சரத்பிரபு (24) தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி தனலட்சுமி. செல்வமணி காங்கயம் சாலையில் சொந்தமாக டையிங் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு சரத்பிரபு என்கிற மகனும், சினேகபொன்மணி என்கிற மகளும் உள்ளனர். சரத்பிரபு கோவை மருத்துவக்கல்லூரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்முடித்துவிட்டு கேரள மாநிலம் திருச்சூரில் நீட் கோச்சிங் முடித்து கடந்த2017 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் எம்.டி., பொது மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாயன்று இரவு தனது...

கிருஷ்ணராயபுரத்தில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

கிருஷ்ணராயபுரத்தில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

6-1-2018 சனிக்கிழமை மாலை 6-00 மணியளவில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், கோவக்குளத்தில் பெரியாரின் 44ஆவது நினைவு நாள் பொதுக் கூட்டம், பேரூர்க் கழக ம.தி.மு.க. மாணவரணியின் ஏற்பாட்டில்  நடைபெற்றது. கூட்டத்துக்கு கரூர் மாவட்ட ம.தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் பொறியாளர் காமராஜ் தலைமையேற்றார். தமது தலைமை உரையில் பெரியாரைப் பின்பற்றவேண்டிய தேவைகளை விளக்கியதோடு.கோவக்குளத்தில் பெரியாரின் நினைவு நாளன்று நிறுவப்பட்ட பெரியாரின் மார்பளவு சிலை வருவாய், காவல்துறையால் அகற்றச் செய்யப்பட்டதை எடுத்துரைத்ததோடு, அடுத்த பெரியார் நினைவு நாளுக்குள் அச்சிலை உரிய அனுமதியோடு நிறுவப்படும் என்பதை உறுதிபட எடுத்துரைத்தார். மாவட்ட ம.தி.மு.க.விவசாய அணித் துணைச்செயலாளர் மரு.முத்து வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் ம.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், கரூர் பகுத்தறிவு மன்றத் தலைவர் வழக்குரைஞர் குடியரசு, த.பெ.தி.க. மாவட்டத் தலைவர் கு.கி.தனபால், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முல்லையரசு, தி.மு.க. பேரூர்க் கழக செயலாளர் எம்.மகாலிங்கம் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர்...

அம்பேத்கர் – பெரியார் குறித்த சர்ச்சைகள் தொடர வேண்டாம்!

அம்பேத்கர் – பெரியார் குறித்த சர்ச்சைகள் தொடர வேண்டாம்!

அம்பேத்கர்-பெரியாரிடையே மோதலை உருவாக்கும் சதித் திட்டத்தை சங் பரிவாரங்கள் அரங்கேற்றி வருகின்றன. அந்த வலையில் உண்மையான கொள்கை உணர்வு கொண்ட பெரியார்-அம்பேத்கர் இயக்கங்கள் விழுந்துவிடக் கூடாது. திரைப்பட இயக்குனர் ரஞ்சித் அளித்த ஒரு பேட்டியில், ‘பெரியார் பெயரை உச்சரிக்கவில்லை’ என்று முகநூலில் ‘விவாதப்போர்’ நடந்து வருகிறது. தலைவர்களின் பெயரை உச்சரிப்பது என்பதைவிட அந்தத் தலைவர்கள் இலட்சியங்களைப் பேசுகிறார்களா? என்பதுதான் முக்கியம். ஜாதி ஒழிப்புக் கருத்துகளைப் பேசும் ஒவ்வொருவரும் அம்பேத்கரிஸ்ட்டுதான்; பெரியாரிஸ்டுதான். அம்பேத்கரைப் பேசும்போது பெரியார் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்று பெரியாரிஸ்டுகள் எழுப்பும் கேள்விகள் தேவையற்றவை என்பதே நமது கருத்து. தலித் அல்லாதவர்களைவிட ‘தலித்’ மக்கள் ஜாதி ஒடுக்குமுறைக்குள்ளாகி வருகிறார்கள் என்பதே உண்மை. ஜாதிய ஒடுக்குமுறைக்குள்ளாகிறவர்களின் கூடுதலான உணர்வுகளையும் நியாயங்களையும் சரியாகப் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்களே பெரியாரிஸ்டுகளாகவும் இருக்க முடியும். சொல்லப் போனால் அம்பேத்கர், பெரியாரைப் பற்றி அதிகம் பேசாத நிலையில் பெரியார் தான் அம்பேத்கரைப் பற்றி பேசினார். அம்பேத்கரை...

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

இயற்கை வளங்களை சுரண்டும் கும்பலுக்கு எதிராகவும் மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் அணுமின்சாரம், மீத்தேன் போன்ற திட்டங்களையும் எதிர்த்து மக்கள்ப் போராட்டங்களை நடத்தி வரும் போராளி முகிலன் தொடர்ந்து காவல்துறையால் குறி வைத்து சித்திரவதைக்கும் முறைகேடான கைதுக்கும் உள்ளாகி வருகிறார். ஆனாலும், அவரது கொள்கை உறுதியை இந்த அடக்குமுறைகள் சித்திரவதைகள் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மக்கள் உரிமைக்காகப் போராடும் போராளிகளை காவல்துறையும் அரசும் எவ்வளவு மூர்க்கமாக ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்த புரட்சிப் பெரியார் முழக்கம் முகிலனின் இந்த கடிதத்தை வெளியிடுகிறது. போராளி முகிலன் ஒரு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முகிலன். சிறையிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) சிறை அதிகாரி வழியாக அனுப்பிய கடிதம் இது: (4.1.2018 இதழ் தொடர்ச்சி) “கரூர் மாவட்டம் வாங்கலில் 14.12.2016 அன்று மாலை ‘புதிய மணல்குவாரி அமைக்கக் கூடாது, ஏன்?’ என்ற ஆலோசனைக் கூட்டம் முடிந்து,...

‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்றால் அர்த்தம் என்னவோ?

‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்றால் அர்த்தம் என்னவோ?

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. “ஆண்டாள் ஒரு தேவதாசி” என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் “அவரது தலை உருள வேண்டும்” என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் படிக்கிற எவருக்கும் ஆண்டாள் ஒரு தேவதாசியாக இருக்கலாம் எனும் சந்தேகம் வராமல் போகாது. எச் ராஜாவே “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்று பெருமையோடு பேசியிருக்கிறார். அதன் அர்த்தம் என்னவோ? தான் சூடிய மாலையை விஷ்ணுவிற்கு அனுப்பினால் அதன் பொருள் அந்தக் கடவுளை மணந்தார் என்பது. பொட்டுக்கட்டும் சடங்கில்தான் ஒரு கடவுளை மணப்பது வரும். அப்புறம், தனது பாடல்களில் விஷ்ணு தன்னை உறவுகொள்ள வரவேண்டும்...

நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார், தத்துவமயமாக்கப்பட வேண்டும்!

 ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்றவர்; இன்னும் பல படைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகளில் இருக்கிறார். சூழலியலாளர். இயற்கைமுறை விவசாயத்திலும், மீன் வளர்ப்பிலும் முனைப்புடன் இருப்பவர். தன்னுடைய இயற்கை வேளாண் பண்ணையில் – எழில் கொஞ்சும் சூழலில் பல கேள்விகளுக்கு மடைதிறந்த வெள்ளமென பதிலளித்தார். அவர் எழுத்தாளராக உருவானது எப்படி? ஏன்? எந்த சூழல் தன்னை மாற்றியது உள்ளிட்ட பல விவரங்கள்.…. தன் உடல்நலத்தை பெருமளவுக்கு கண்டு கொள்ளாமல் பெரியாரை பெரியாராகவே அறிமுகப்படுத்தும் அவரது முனைப்பு தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ள வேண்டிய ஒன்றாகும். இனி உரையாடலிலிருந்து…. தங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்…? என் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பொன்மலை ரயில்வேதுறையில் பணியாற்றினார். அய்யா பெரியாருடனும், மணியம்மையாருடனும் ஆசிரியர் வீரமணி அவர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். பழைய தஞ்சை மாவட்டத் தில் சுயமரியாதை இயக்க,...

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட – முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்களே! நமது எதிர்காலம் இருள்மயமாகி வருவதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்தத் துண்டறிக்கையைப் படியுங்கள்! மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் வேலை இல்லாத் திண்டாட்டத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது என்ற அதிர்ச்சியான தகவல் தரப் பட்டிருக்கிறது. இந்தியாவில் வேலை கிடைக்காத இளைஞர்களின் தேசிய சராசரியைவிட (3.6) தமிழ்நாடு கீழாக நிற்கிறது (3.7). 2.45 இலட்சம் பொறியாளர்களும், 4307 டாக்டர் பட்டம் பெற்ற மாணவர்களும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக் கிறார்கள். 2017 மார்ச் 30 வரை வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் நமது இளைஞர்கள் 81.30 இலட்சம் பேர். பதிவு செய்யாமலே வேலை தேடி அலைவோர் இதைவிடப் பன்மடங்கு என்பதை சொல்லத் தேவை இல்லை. மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு...

‘குடிஅரசு’ வழக்கு :‘விடுதலை’க்கு ஒரு விளக்கம் !

பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதை எதிர்த்து ரூ.15 இலட்சம் இழப்பீடு கேட்டார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார இயக்கச் செயலாளர் கி.வீரமணி அவர்கள். ‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை இல்லை என்று உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற அமர்வு, உச்சநீதிமன்றம் வரை அறிவித்த பிறகும் இழப்பீடு கேட்கும் பிரதான வழக்கை அவர்கள் கைவிடத்தயாராக இல்லை. 2010க்குப் பிறகு மீண்டும் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தவே விரும்புகிறார்கள் என்பதையே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. “மீண்டும் நாங்கள் புதிய வழக்கைப் போடவில்லை; ‘புரட்சிப்பெரியார் முழக்கம்’ தவறான செய்தியை வெளியிடுகிறது” என‘விடுதலை’ ஏடு மறுத்துள்ளது. ‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு தடை இல்லை என்ற தீர்ப்புகள் வந்த பிறகும் வழக்கை அத்துடன் முடித்துக் கொள்ளாமல், பழைய வழக்கை பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோண்டி எடுத்துத்...

‘திராவிடத்தால் எழுந்தோம்’ குமரியில் விளக்கக்கூட்டம்

‘திராவிடத்தால் எழுந்தோம்’ குமரியில் விளக்கக்கூட்டம்

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 09-12-2017, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு குலசேகரம் அரச மூடு சந்திப்பில் நடைப் பெற்ற “திராவிடத்தால் எழுந்தோம்” விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வே.சதா, குமரி மாவட்ட பெரியார் தொழிலாளர் கழகத் தலைவர் நீதி அரசர் ஆகியோர் தலைமை தாங்கினர். கழகத் தோழர்கள் தமிழ் அரசன், தமிழ் மதி, மஞ்சு குமார், ஜான் மதி, சூசையப்பா, இரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்ணு வரவேற் புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள்: கேரளாபுரம் முருகன், மேசியா, சத்திய தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் பேபி செபக்குமார், ‘மந்திரமல்ல! தந்திரமே!’ எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். 1913-ல்,கோயிலுக்கு நன்கொடையாக ரூ 10,000 கொடுக்குமளவிற்கு பணக்காரரா யிருந்தாலும் சர். பிட்டி. தியாகராயர் அவமானப்படுத்தப்பட்டதும், எவ்வளவுப்...

குமரி மாவட்டம் – பள்ளியாடி – தமிழ் மதி இல்லவிழா

குமரி மாவட்டம் – பள்ளியாடி – தமிழ் மதி இல்லவிழா

குமரி மாவட்ட கழகச் செயலாளர் தமிழ் மதி-பிரேம லதா இணையர் மகன் தமிழ் நவிலன் முதல் பிறந்த நாள் விழா 10.12.2017, ஞாயிற்றுக் கிழமை மதியம் 12.00 மணிக்கு பள்ளியாடி இருதய அரங்கில் கொண் டாடப்பட்டது. விழாவில் தமிழ் மதியின் உறவினர்கள், கழகத் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள், சமூக ஆர்வலர்கள் பெருவாரியாகக் கலந்துக் கொண்டனர்.  தமிழ் மதி பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறோம் என்றும், தமிழ்ப் பெயர் ஏன் சூட்டினோம் என்றும் கூறி வரவேற்புரையாற்றினார். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் பேபி செபக்குமார் மந்திரமல்ல!தந்திரமே! எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். பின்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் நவிலன் பிறந்த நாளில் பெற்றோருக்கு அறிவுரையாக சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம் மூடநம்பிக்கைகள் குறித்தும், பிள்ளைகளை சமூகத்துடன் இணைந்து வாழக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் கூறி தமிழ் நவிலன் சமூகச் சிந்தனையுடன் வாழ, வளர, வெல்ல வேண்டுமென வாழ்த்துரையாற்றினார்....

அறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா?

அறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா?

கோவிலுக்குள் தமிழ் ஒலிக்க முயற்சி எடுக்காத பாரதிய சனதா கட்சி, ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் பற்றி பேசுவது அபத்தம். 28.12.2017 அன்று புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த கே.டி.ராகவன் “தமிழகம் பெரியார் மண் அல்ல; ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் நிறைந்த மண்” என்றார். வேதங்களையும், மநு நீதியையும் ஏற்றுக்கொண்டு மதவாத ஆட்சி புரியும் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த ராகவன், தமிழர்களிடம் ஓட்டுவாங்குவதற்காக ஆழ்வார் களையும், நாயன்மார்களையும் இழுத்துப்போட்டுக் கொள்வது வேடிக்கையாக உள்ளது. சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐயா ஆறுமுகசாமி திருவாசகம் ஓதுவதற்கு அங்குள்ள பார்ப்பனர்கள் எதிர்த்தபோது அதை எதிர்க்க முடியாத பா.ச.க. இப்போது ஆழ்வார் களையும், நாயன்மார்களையும் இழுப்பது ஏன் என்று தெரியாதவர்களா தமிழர்கள்? உங்களின் ஓட்டரசியலுக்கு நாயன்மார்கள் தேவைப்படுகிறார்கள், ஆலயங்களுக்குள் திருவாசகம் தேவையில்லை என்றால் உங்களின் எண்ணத்தை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள். தமிழகம் என்றுமே “பெரியார் மண்தான்”. கடவுள் நம்பிக்கை கொணட...

பேஷ்வா பார்ப்பனர்களை எதிர்த்து திரண்டனர் தலித் – ஒடுக்கப்பட்ட மக்கள்

பேஷ்வா பார்ப்பனர்களை எதிர்த்து திரண்டனர் தலித் – ஒடுக்கப்பட்ட மக்கள்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே வட்டாரத்தில் பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோரிகாவுன் கிராமத்தில் 1818 ஜனவரி 1ல் நடந்த, மூன்றாம் ஆங்கிலோ மராத்தா போரின் இறுதிச் சண்டையில், அன்றைய பேஷ்வா பார்ப்பனர் படையை முறியடித்தனர். தலித் பிரிவைச் சார்ந்த மகர் வீரர்கள், கிழக்கிந்திய கம்பெனி படையில் இணைந்து போரிட்டனர். அந்த வெற்றியை ஆண்டுதோறும் தலித் மக்கள் நினைவுகூர்ந்து கொண்டாடி வருகிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டனிலிருந்து வந்த வணிக நிறுவனம் பிற்காலத்தில்தான் பிரிட்டிஷ் அரசே, கம்பெனியின் கீழிருந்த பகுதிகளைத் தன் வசம் எடுத்துக் கொண்டது. பேஷ்வா ஆட்சி என்பது பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த மன்னராட்சி. அவர்களது படைப் பிரிவுகளில் ஆங்காங்கே மஹர் (தலித்) சமூகத்தினரும் இருந்திருக்கிறார்கள். பேஷ்வா மன்னர் முதலாம் பாஜி ராவ் 1740ல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, நாட்டிற்கு உள்ளேயும் படைப்பிரிவுகளிலும் மஹர் மக்கள் பல்வேறு அவமதிப்புகளைக் கூடுதலாகச் சந்திக்கத் தொடங்கினார்கள்.கொடூரமான ஜாதிய ஒடுக்குமுறைகள் தடைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தால்...

தலைமைக் கழகத்தில் “நிமிர்வோம்” வாசகர் வட்டம்

தலைமைக் கழகத்தில் “நிமிர்வோம்” வாசகர் வட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாத இதழான “நிமிர்வோம்” இதழ் குறித்து வாசகர் வட்டம் (31.12.2017) மாலை 6 மணிக்கு தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமையில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தினை வே.இராமசாமி ஒருங்கிணைத்தார். பிப்ரவரி மற்றும் மார்ச் 2017 இதழ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், பிரகாஷ், மதன்குமார், வே.இராமசாமி இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் குறித்து தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்ற – மார்க்சிய  – பெரியாரிய ஆய்வாளர் க.காமராசன் “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூல் குறித்து விரிவாகப் பேசினார். தன் ஆழமான கருத்துகளையும், நூலின் சிறப்புகளை குறித்து தோழர்களிடம் தெளிவான விளக்கத்தை கொடுத்தார். மா.தேன்ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

சேலம் செயலவையில் ‘மதிப்புமிகு வணக்கம்’

சேலம் செயலவையில் ‘மதிப்புமிகு வணக்கம்’

29.12.2017 அன்று சேலத்தில் நடந்த திவிக செயலவை கூட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவகாமி, தன் உரையினூடே, இனி தோழர்கள் அனைவரும் தலைவர் கொளத்தூர் மணியை சந்திக்கும் போது குறைந்தது ரூ.100/- என நன்கொடை கொடுத்து வணக்கம் வைக்க வேண்டும் என்றும் அது மதிப்புமிகு வணக்கம் என்றும் வேண்டிக்கொண்டார். அதன் பின் பேச வந்த சேலம் மாவட்ட பொறுப்பாளர் சூரியகுமார், ரூ.500 கொடுத்து நானே இந்த மதிப்புமிகு வணக்கத்தினை தெரிவித்து ஆரம்பித்து வைக்கிறேன் என்றார். பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் ரூ. 100 கொடுத்தார். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

சலசலப்புகளை முறியடித்து எழுச்சியுடன் நடந்த ஈரோடு காஞ்சிக் கோயில் தெருமுனைக் கூட்டம்

சலசலப்புகளை முறியடித்து எழுச்சியுடன் நடந்த ஈரோடு காஞ்சிக் கோயில் தெருமுனைக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 07.01.2018 ஞாயிறு மாலை 6:30 மணியளவில் காஞ்சிக்கோயில் நான்குமுனை சந்திப்பில் யாழ் எழிலன் தலைமையில் தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது.   சவுந்தர் தொடக்கவுரையாற்ற, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தைச் சார்ந்த  வீரா கார்த்தி பேசத் துவங்கிய பத்து நிமிடங்களில், அங்கு வந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கொங்கு அமைப்பைச் சார்ந்த கும்பல் கலவரம் செய்து கூட்டத்தை முடக்கும் நோக்கில் பேசாதே பேசாதே இந்துவைப் பற்றி பேசாதே என்று கூச்சலிட்டனர். அங்கு வந்த காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தியது.  தொடர்ந்து வீரா கார்த்தி நீட் தேர்வின் ஆபத்து குறித்தும், தமிழ்நாடு தேர்வாணையம் குறித்தும் மாட்டுக்கறி தடை பற்றியும் உரையாற்றினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி மூடநம்பிக்கை குறித்து பேசினார் . பெரியார் இயக்கம் இது போன்ற எண்ணற்றத் தடைகளை சந்தித்த இயக்கம் இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது, இன்னும் மூன்று மாதங்கள் கழித்து காஞ்சிக்...

கோபி, கோவையில் பெரியார் நினைவு நாள்

பெரியார் நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு அறிவியல் மன்ற தோழர் கற்பகம் மற்றும் மணிமொழி ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்வில் மாநில வெளியீட்டு செயலர் இராம.இளங்கோவன்,நிவாஸ், அருளானந்தம், சுப்பிரமணி, ரகுநாதன் மற்றும் அறிவியல் மன்ற தோழர்கள் ஆசைத்தம்பி, விசயசங்கர், மாணவர் கழக தோழர் அறிவுமதி, பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட பொறுப்பாளர்கள் யுவராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை : கோவை நகரில் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் 44ஆவது நினைவுநாளை மிகச்சிறப்பாக நடத்தியது. மாவட்ட தலைவர் நேருதாசு தலைமையில் சிலைக்கு மாலையிட்டு, பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நன்றி உணர்வுடன்  முழக்கமிட்டனர்.  மாணவர் கழகப் பொறுப்பாளர் வைதீஸ்வரி உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்களும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

சமூக செயல்பாட்டாளர்கள், வழக்குரைஞர்கள் மீது அடக்குமுறை சட்டம் பாய்வதற்கு கடும் கண்டனம்

சமூக செயல்பாட்டாளர்கள், வழக்குரைஞர்கள் மீது அடக்குமுறை சட்டம் பாய்வதற்கு கடும் கண்டனம்

அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் 8.1.2018 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது: வீரப்பன் தேடுதல் வேட்டை எனும் பெயரில் பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும், திட்டமிட்டு நடத்திய பரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் ஆந்திராவில் செம்மரக் கடத்தல் எனக் கூறி 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது வரையிலான மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த குடியுரிமை பாதுகாப்பு நடுவம் மாநில ஒருங்கிணைப்பாளரும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான முருகன், மாவோயிஸ்டுகள் என்று கைது செய்யப்பட்ட சந்திரா மற்றும் கலா ஆகியோருக்காக எந்த வழக்கு பார்த்து வந்தாரோ அதே வழக்கின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2017 ஜனவரி 8 அன்று கொடுஞ்சட்டமான தேசவிரோத தடுப்புச் சட்டத்தின் (ரயயீய) கீழ் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஓர் ஆண்டு காலமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்....

பெரியாரைப் படி; அதுவே விடுதலைக்கு முதல் அடி

ஈரோட்டில் டிசம்பர் 16 அன்று நடைபெற்ற பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் மணிமேகலை நிகழ்த்திய தலைமையுரை: விடுதலைக் காற்றை சுவாசிக்க வைத்த  எம் தந்தையும், இவ்வுலகில் தோன்றிய அத்துணைப் புரட்சிக்காரர் களையும் விட, பெண்ணுரிமைக்கும் அவர்தம் விடுதலைக்கும் பெரியதாய் சிந்தித்த… குரல் கொடுத்த… போரிட்டக் கலகக்காரரான எங்கள் அய்யாவை பெரியாரை நன்றியோடு கைகூப்பி வணங்குகிறேன். இப்பெண்கள் சுயமரியாதை மாநாட்டின் நோக்கத்தையும் தற்காலப் பெண்களின் நிலையையும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள், அவர்கள் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் அவல நிலையில் வாழ்கிறார்கள் என்பதை இங்கு வந்திருக்கிற ஆளுமைகள், விசாலமாக வும், விசாரணையுடனும், பெரும் தரவு களோடும் எடுத்துரைக்க இருப்பதால், நான் சிறியத் தகவல் ஒன்றோடு என் தலைமை உரையை முடித்துக் கொள்ள நினைக்கிறேன். நாங்கள் களப்பணிக்கு சென்ற போதெல்லாம் மக்களின் எண்ணங்கள், குறிப்பாக பெண்களின் மத்தியில் பெரியார் பற்றிய உருவகம் இப்படியாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். பெரியார் என்பவர் கடவுளை மறுப்பவர்! பெரியார் என்பவர்...

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பெரியார் நினைவு நாளை முன்னிட்டு  பெரியாரின் கனவாக இருந்த அனைத்து சாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை  தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகம் சார்பாக (23-12-2017) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்  க.இராமர், செ.வே.ராஜேஷ்,  பூ.ஆ. இளையரசன், க.மதியழகன், ந.அய்யனார் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக இராஜேந்திரன், தமிழ்ச் சங்கம் சார்பாக கவிஞர் முருகேசன் ஆகியோர் உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

சாகித்ய அகாடமி விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு

மக்கள் கவிஞர் இன்குலாப்பின் கவிதை நூலுக்கு நடுவண் அரசு ‘சாகித்ய அகாடமி’ விருது வழங்க முன் வந்ததை, அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இது குறித்து குடும்பத்தினர் தந்துள்ள விளக்கம்: இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது: “எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்.’’ “அவ்வப்பொழுது விசாரணைக் காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும். அதற்கும் மேலே என் பேனா அழுந்துகையில் எழுத்தாளன் எவனுக்கும் கிடைக்காத பரிசு இந்திய மண்ணில் எனக்கு நிச்சயம். ‘’ இவ்வாறு விசாரணைகளை வாழும் காலத்திலும் இறந்த பின்னும் நேர்கொண்ட இன்குலாபுக்கு அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம்.ஆனால் இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும்காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார். அரசு முகங்கள் மாறலாம். ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே. அடக்குமுறையும், இனவாத மும், வர்க்கபேதமும், வன்முறையும் தலைவிரித்தாடிக்...

புதிய தொழிற்சாலைகள் இல்லை; வேலை வாய்ப்பின்மை தமிழகத்தில் அதிகரித்துள்ளது

புதிய தொழிற்சாலைகள் இல்லை; வேலை வாய்ப்பின்மை தமிழகத்தில் அதிகரித்துள்ளது

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கை இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாத மாநிலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கூறுகிறது. 15 வயதிலும் அதற்கு மேற்பட்ட வயதிலும் பல மாதங்களாக வேலை வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்கள் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் வேலை கிடைக்காதவர்கள் எண்ணிக்கை (3.8 சதவீதம்). தேசிய சராசரியைவிட (3.7) அதிகரித்திருக்கிறது. கருநாடகத்தில் இந்த அடிப்படையில் எடுத்த கணக்கீட்டின்படி வேலை கிடைக்காதவர்கள் 1.4 சதவீதம். தெலுங்கானாவில் (2.7 சதவீதம்), ஆந்திராவில் (3.5 சதவீதம்), குஜராத்தில் (0.6 சதவீதம்), மகாராஷ்டிராவில் 1.5 சதவீதம். சென்னை வளர்ச்சி ஆய்வு மய்யத்தின் (எம்.அய்.டி.எஸ்.) பொருளாதார பேராசிரியர் எம். விஜயபாஸ்கர் இது குறித்து, “தமிழ்நாடு போன்ற தொழில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் படித்தவர்கள். அவர்கள் கல்விக்கு ஏற்ற nவைலகள் கிடைக்க வில்லை. தங்கள் கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்” என்று ‘டைம்ஸ் ஆப்...

மக்கள் மன்றத் தோழர்கள் கைதைக் கண்டித்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவப் படத்தை நீக்கியதைக் கண்டித்து, ஒரு குறிப் பிட்ட மத அடை யாளத்தை மட்டும் முன்னிறுத்தி வரைந்த படங்களை அகற்றிய காஞ்சி மக்கள் மன்ற தோழர்களை கைது செய்த காவல்துறையைக் கண்டித்தும், வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் திராவிடர் விடுதலைக்கழக காஞ்சி மாவட்டம் சார்பாக 4.1.18 அன்று பெரியார் தூண் காஞ்சிபுரம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் இரவிபாரதி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், வேலூர் மாவட்டம் பா சிவா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில்  சிறை சென்று மீண்ட காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் நால்வருக்கும் கறுப்பாடை அணிவித்து மரியாதை செய்தனர். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

கழக ஏட்டுக்கு 500 சந்தாக்கள் வழிகாட்டுகிறது சேலம் (மேற்கு) மாவட்டம்

கழக ஏட்டுக்கு 500 சந்தாக்கள் வழிகாட்டுகிறது சேலம் (மேற்கு) மாவட்டம்

சேலம் தலைமைச் செயலவையில் சேலம் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஜி.பி. கோவிந்தராஜ், கொளத்தூர் சூரி உறுதி கூறியவாறு, சேலம் மேற்கு மாவட்டக் கழகம்,  ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு 500 சந்தாக்களை உடனடியாக சேர்த்து அதற்கான கட்டணத்தையும் அனுப்பி வைத்துள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு எப்போதுமே கூடுதல் சந்தாக்களை சேகரித்து, ஏட்டின் உயிர்ப்புச் சக்தியாகத் திகழும் மேட்டூர் பகுதி மீண்டும் தனது கடமையை சிறப்பாக செய்து முடித்துள்ளது. இது முதற் கட்டம். தொடர்ந்து சந்தா சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என்று கழகப் பொறுப்பாளர் ஜி.பி.கோவிந்தராஜ் கூறியுள்ளார். மேட்டூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் இந்த செயல்பாட்டை ஏனைய மாவட்டக் கழகங்களும் செயல்படுத்துமா? பெரியார் முழக்கம் 11012018 இதழ்

பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட்டதற்காக கழகத்திடம் ரூ.15 இலட்சம் இழப்பீடுக் கோரி மீண்டும் கி.வீரமணி வழக்கு

பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதற்காக பதிப்புரிமை சட்டப்படி தனக்கு ரூ.15 இலட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி மீண்டும் உயர்நீதிமன்றம் வந்துள்ளார். பெரியாரின் ‘குடிஅரசு’ வார இதழில் இடம் பெற்றிருந்த பெரியாரின் பேச்சு எழுத்துக்கள் நீண்டகாலமாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிடாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம், காலவரிசைப்படி தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட்டது. பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடும் உரிமை தங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்றும், பெரியார் திராவிடர் கழகம் வெளியிட உரிமை இல்லை என்றும், கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘குடிஅரசு’ பதிப்பாசிரியரும், அன்றைய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது வழக்கு தொடரப்பட்டது. 2009ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்துரு, பெரியார் தி.க. வெளியிட்ட ‘குடிஅரசு’ தொகுதிகளுக்கு 2008ஆம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை...

சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்தை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 04012018

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்தை நீக்கியதை கண்டித்தும் பட்டு நகரம்பேரறிஞர் அண்ணா படத்தை தவிர்த்தும் மற்ற மத அடையாளங்கள் இடம் பெறாமல் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி வரைந்த படங்களை அகற்றிய காஞ்சி மக்கள் மன்ற தோழர்களை கைது செய்த காவல்துறையை கண்டித்தும், வழக்குகளை திரும்ப பெற கோரியும் திராவிடர் விடுதலைக்கழக காஞ்சி மாவட்டம் சார்பாக 4/1/18 அன்று பெரியார் தூண் காஞ்சிபுரம் அருகே நடைப்பெற்றது காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரவிபாரதி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி, தலைமை கழக உறுப்பினர் தோழர் அய்யனார், வேலூர் மாவட்டம் பா சிவா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறை சென்ற மீண்ட காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் நால்வருக்கும் கறுப்பாடை அணிவித்து...