மக்கள் மன்றத் தோழர்கள் கைதைக் கண்டித்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவப் படத்தை நீக்கியதைக் கண்டித்து, ஒரு குறிப் பிட்ட மத அடை யாளத்தை மட்டும் முன்னிறுத்தி வரைந்த படங்களை அகற்றிய காஞ்சி மக்கள் மன்ற தோழர்களை கைது செய்த காவல்துறையைக் கண்டித்தும், வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் திராவிடர் விடுதலைக்கழக காஞ்சி மாவட்டம் சார்பாக 4.1.18 அன்று பெரியார் தூண் காஞ்சிபுரம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் இரவிபாரதி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், வேலூர் மாவட்டம் பா சிவா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில்  சிறை சென்று மீண்ட காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் நால்வருக்கும் கறுப்பாடை அணிவித்து மரியாதை செய்தனர்.

பெரியார் முழக்கம் 11012018 இதழ்

You may also like...