கருத்தரங்கைத் தடுக்க வந்த பா.ஜ.க.வினர்

‘தமிழை மறுக்கும் வேத மரபுகள்’ நிகழ்ச்சிக்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் தலைமை தாங்கினார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொறுப்பாளர் வாலாஜா வல்லவன், பேராசிரியர் சுந்தரவள்ளி, விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினர். மயிலைப் பகுதி கழகப் பொறுப்பாளர் சுகுமார் வரவேற்புரையாற்றினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி தொகுத்து வழங்கினார். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி தரக் கூடாது என்று அரங்கிற்கு வெளியே பா.ஜ.க.வினர் காவல்துறையிடம் எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியை தடைப்படுத்த முயன்றனர். தடைகளைத் தகர்த்து பார்ப்பனியத்தின் வேதமரபுகளையும் தமிழ் எதிர்ப்பை யும் உரையாளர்கள் ஆதாரங்களோடு விளக்கினர்.

பெரியார் முழக்கம் 08022018 இதழ்

You may also like...