திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ நிலையம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புத்தகத் திருவிழாவில் கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ புத்தக நிலையம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா  ஜனவரி 25 முதல் பிப் 4 வரை நடக்கும் இந்நிகழ்வில்அரங்கு எண் 94இல்  திராவிடர் விடுதலைக் கழகப் புத்தகங்கள் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ – வார ஏடு, ‘நிமிர்வோம்’ மாத இதழுக்கு சந்தாக்கள் சேர்க்கப்படுகின்றன. திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் பங்கேற்கும் முதல் புத்தக திருவிழா இது என்பதோடு கழக வெளியீடுகள் மட்டுமின்றி பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கருப்பு பிரதிகள், அங்குசம் பதிப்பகம் மற்றும் கலப்பை ஆகிய பதிப்பங்களிலிருந்தும் பல்வேறு சமூக சீர்திருத்த புத்தகங்களும் வாசகர்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் மிகப் பெரிய ஆதரவு கழக மாத இதழான ‘நிமிர்வோம்’ இதழுக்கு இந்த புத்தக கண்காட்சியில் கிடைத்துள்ளது. 4 நாட்களுக்குள் 100 பிரதிகள் விற்பனையாகிவிட்டதோடு அனைவரும் கடந்த மாதப் பிரதிகளையும் ஆர்வத்தோடு வாங்கி சென்றனர். கழகக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மிக சிறப்பான எளிய வழியாக இந்த புத்தக திருவிழாவை திருப்பூர் மாவட்ட கழகம் முன்னெடுத்துள்ளது.  புத்தக அரங்கிற்குள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் படத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பெயரோடு தாங்கி நிற்கும் பதாகைகள் பார்ப்பவர் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

பெரியார் முழக்கம் 02022018 இதழ்

You may also like...