Author: admin

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய “பெண்கள் சந்திப்பு” நிகழ்வு 5.2.2023 ஞாயிறு அன்று ஈரோடு பிரியாணிபாளையம் உணவக அரங்கில் நடைபெற்றது. ஈரோடு மணிமேகலை நிகழ்விற்கு தலைமையேற்று சுவையான கவிதை நடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருப்பூர் கார்த்திகா வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்கவுரையாற்றினார். பெரியார் தனது இயக்கத்தில் பெண்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றியும் பெரியார் நடத்திய மாநாடுகளில் தொடக்க உரையாகவோ கொடியேற்றி தொடங்கி வைப்பவராகவோ கட்டாயம் ஒரு பெண் தோழர் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் என்பதையும் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் இயக்கங்கள் தங்களது பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து ‘அம்பேத்கரும் பெரியாரும்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, ‘மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, ‘பெண் கல்வியும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்...

‘அருட்பா-மருட்பா’ மோதல்: பின்னணி என்ன? விடுதலை  இராசேந்திரன்

‘அருட்பா-மருட்பா’ மோதல்: பின்னணி என்ன? விடுதலை இராசேந்திரன்

சென்ற இதழ் தொடர்ச்சி ¨           வள்ளலார் பிறந்த ஜாதியைக் கூறி இழிவு செய்தனர். ¨           சிதம்பரம் பேரம்பலத்தில் நடந்த கூட்டத்தில் காரசார மோதல். ¨           மான நட்ட வழக்கை அருட்பா-மருட்பா என்று தவறாக சித்தரித்தார் ம.பொ.சி. ¨           ‘வேதம்’ என்ற சொல்லையே எதிர்த்த வள்ளலார்.   நாவலர் வள்ளலாரின் பாடல்கள் ‘திருவருட்பா’ அல்ல என்று மறுத்தார், தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம் எனும் ஐந்து புராணங்கள் தான் திருவருட்பாவே தவிர மற்றவை அல்ல என்றார், வள்ளலார் பாடல்களை நேரடியாக கண்டித்து மருட்பா என்றார், பார்ப்பனர்களைக் கடுமையாக சாடும் திருமந்திரத்தையே அருட்பா பட்டியலில் சேர்க்காதவர் அவர், ஆறுமுக நாவலர் கருத்துக்கு எதிராக 1868இல் ‘திருவருட்பா தூசன பரிகாரம்’ எனும் நூலை திருமயிலை சண்முகம் பிள்ளை என்பவர் எழுதி வெளி யிட்டார். அருட்பா மருட்பா விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கின; அடிகளாருக்கு ஆதரவாக அட்டாவதனம் வீராசாமி செட்டியார், இறுக்கம் இரத்தினம் முதலியார், பூவை...

உடல் மற்றும் கண்கள் கொடை

உடல் மற்றும் கண்கள் கொடை

திராவிடர் விடுதலைக் கழக குமாரபாளையம் நகரச் செயலாளர் செ .வடிவேலு தந்தையார் செல்லமுத்து உடல் நலக்குறைவால் 28.11.2022 மதியம் அன்று சுமார் 2.45 மணியளவில் இயற்கை எய்தினார். அவர் இறந்த ஆறுமணி நேரத்திற்குள் அவரின் இரண்டு கண்களும் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கிடைக்கும் வகையில் ஈரோடு அரசன் கண் மருத்துமனைக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டது. அவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் விதமாக கொடையாக நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது அங்கிருந்து மருத்துவப் பேராசிரியர்கள் மிகுந்த மகிழ்வுடன் பெற்று கொண்டது மட்டுமில்லாமல் இது தான் இந்த மருத்துவக் கல்லூரிக்குக் கிடைத்த முதல் உடற்கொடை ஆகும். தொடர்ச்சியாக பெரியார் இயக்கத்தை சார்ந்தவர்கள் இப்பணியைச் செய்வது பாராட்டத்தக்கது என்று பாராட்டினார். தோழர் வடிவேல் மட்டும்தான் அவருடைய குடும்பத்தில் பெரியாரிய கொள்கையை ஏற்றுக் கொண்டவர். இருப்பினும் வடிவேல் மற்றும் கழகத் தோழர்களின் வேண்டு கோளையேற்று அவருடைய...

அறநிலையத் துறையைக் கலைக்கக் கோரும் அண்ணாமலைக்கு ஆன்மிகப் பேச்சாளர் சுகி. சிவம் பதிலடி

அறநிலையத் துறையைக் கலைக்கக் கோரும் அண்ணாமலைக்கு ஆன்மிகப் பேச்சாளர் சுகி. சிவம் பதிலடி

தமிழ்நாட்டில் பாஜக ஆட் சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத் துறையை ஒழிப்பது தான் முதல் வேலை என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணா மலை கூறியுள்ளார். இந்த பேச்சை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்துசமய அறநிலையத்துறையை ஒழிப்பது என்ற பேச்சு, கோவில் சொத்துக்களை தனிநபர்கள் கொள்ளை யடிக்கவே உதவி செய்யும் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்து ஆன்மீகப் பேச்சாளரும் அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினருமான சுகி சிவம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகிவிடுவார்.  சித்தப்பா பெண்ணை எப்படி கல்யாணம் முடிப்பது என்று ஒருவன் கேட்டால் எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்குமோ, அவ்வளவு குழந் தைத்தனமானது பாஜக அண்ணா மலையின் பேச்சு. பாஜக ஆட்சிக்கு வந்தால் என்று அவர் கூறுவது கற் பனையின் உச்சம். பாண்டிச்சேரி கூட்டணி அரசில் யார் இருக்கிறார்கள்? அங்குள்ள திருநள்ளாறு கோவில் யார் கட்டுப் பாட்டில் உள்ளது? முதல்வர்...

தலையங்கம் சரணாகதிப் படலம்

தலையங்கம் சரணாகதிப் படலம்

பாரதிய ஜனதாவின் கயிறுகள் அ.இ.அ.தி.மு.க.வின் அணிகள் என்ற பொம்மையை ஆட்டுவித்து பொம்மலாட்டம் நடத்துவதை இனியும் மறைக்க முடியாது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் இது வெளிச்சமாகிவிட்டது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதலில் தனது கட்சியே வேட்பாளரை நிறுத்தும் என்றார். தேர்தல் பணிக் குழுவையும் நியமித்தார். எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்கு நான் தான் தற்காலிக பொதுச் செயலாளர்; நானே அ.இ.அ.தி.மு.க. – எனவே நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என்றார். பா.ஜ.க.விடம் நேரில் சென்று ஆதரவு கேட்டார். நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒரு வேட்பாளரை அறிவித்தார். மற்றொரு அணியான ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் தாமே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றார். தனது கட்சி, பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால், ஆதரிக்கும்; நிறுத்தவில்லை என்றால், தங்கள் கட்சியே வேட்பாளரை நிறுத்தும் என்றார். இரண்டு கட்சிகளும் பா.ஜ.க.வின் முடிவுக்காக விடிய விடிய நாள்கணக்கில் காத்திருந்ததுதான் மிச்சம். பிறகு, ஓ. பன்னீர்செல்வமும் ஒரு வேட்பாளரை நிறுத்தி அவரை வேட்பு...

அனைத்து இந்துக்களையும் சேலம் திருமலைகிரி கோயில் நுழைவுக்கு அனுமதிக்கக் கோரி சேலத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

அனைத்து இந்துக்களையும் சேலம் திருமலைகிரி கோயில் நுழைவுக்கு அனுமதிக்கக் கோரி சேலத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 02.02.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் திருமலை கிரி கோவிலில் அனைத்து தரப்பு இந்து மக்களும் வழிபட ஆலய நுழைவை தமிழ் நாடு அரசு உறுதிப் படுத்த வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் க.சத்திவேல் தலைமை தாங்கினர். கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர் அ.சக்தி வேல், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, இளைஞரணி அமைப்பாளர் தேவபிரகாசு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்ட நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர்.  தோழர்கள் தங்களது உரையில் “கிராமப் பகுதிகளில் தொடர்ந்து நிலவும் ஜாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் இவற்றை தமிழ்நாடு அரசு கண்கானித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதேபோல அறநிலையத் துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து இந்து மக்களும் வழிபட தமிழ்நாடு...

மயிலையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம் ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து காவிகளின் மிரட்டலை சந்திக்கும்

மயிலையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம் ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து காவிகளின் மிரட்டலை சந்திக்கும்

‘கருப்பு-சிவப்பு-நீலம்’ இணைந்து தமிழ்நாட்டில் காவியை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று காந்தி படுகொலை கண்டனக் கூட்டத்தில் பேசிய அனைவரும் உறுதி ஏற்றனர். சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 6.2.2023 மாலை மந்தைவெளி இரயில் நிலையிம் அருகே காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் மக்கள் கலை இலக்கிய மய்யக் குழு பாடகர் கோவன் கலை நிகழ்ச்சிகளோடு எழுச்சியுடன் தொடங்கியது. காந்தியாரின் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்ட வடிவத்தில் தங்களுக்கு முரண்பாடு உண்டு என்றும், பகத்சிங் நிலைப்பாட்டையே தங்களது அமைப்பு அங்கீகரிப்பதாகவும் கூறிய பாடகர் கோவன், காந்தி படுகொலையை பார்ப்பன சங்கிகள் திட்டமிட்டு நடத்தியதைக் கண்டிப்பதிலும், அது நம் அனைவருக்குமான வரலாறு தரும் எச்சரிக்கை என்பதிலும் நாம் இந்த மேடையில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற தன்னிலை விளக்கத்தோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார். காந்தி படுகொலைக்குப் பின் இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டக் கோரினார் பெரியார். ஆனால் காந்தி பிறந்த...

திருப்பூர் மாஸ்கோ நகரில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூர் மாஸ்கோ நகரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

சிறுவர் சிறுமியர் விளையாட்டுப் போட்டிகள் – கலை நிகழ்ச்சி – தமிழிசைப் பாடல்கள் – பொதுக் கூட்டம் என ஒரு நாள் நிகழ்சியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 13ஆவது ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஆகியவை 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு வரை நடைபெற்றது.  விழாவிற்கு மாநகரச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக காலை 10.00 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் துரைசாமி, மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, தெற்கு பகுதி கழகச் செயலாளர் இராமசாமி, சரசு, பகுதி கழகத் தோழர் கோமதி,...

சென்னையில் காந்தி படுகொலை நாள் பொதுக்கூட்டம்

சென்னையில் காந்தி படுகொலை நாள் பொதுக்கூட்டம்

சென்னை மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் 6.2.2023 திங்கள் மாலை மந்தை வெளி இரயில் நிலையம் அருகே நடைபெற உள்ளது. உரை :      ஆளூர் ஷா நவாஸ், எம்.எல்.ஏ. பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்) வழக்கறிஞர் திருமூர்த்தி கு. அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்) கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். பெரியார் முழக்கம் 02022023 இதழ்

மொழிப் போர் தியாகிகள், முத்துக்குமார் நினைவிடங்களில் கழகம் மரியாதை

மொழிப் போர் தியாகிகள், முத்துக்குமார் நினைவிடங்களில் கழகம் மரியாதை

1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் வீரமரணம் அடைந்த நடராசன், தாளமுத்து நினைவிடம் வட சென்னை மூல கொத்தளம் பகுதியில் உள்ளது. அதேபோல ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமார் நினைவிடம் சென்னை கொளத்தூரில் உள்ளது. கழக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மயிலை சுகுமார், இராவணன், மனோகரன், பிரவீன், உதயகுமார், ரவி பாரதி, சிவா, கனி, நரேஷ் உள்ளிட்ட தோழர்கள் முறையே ஜன. 25 மற்றும் 30ஆம் தேதிகளில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 02022023 இதழ்

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருச்சி, பெரம்பலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில், காந்தியார் நினைவு நாள் கருத்தரங்கம், “காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை” என்ற தலைப்பில், 28.01.2023 அன்று மாலை 5 மணி யளவில், திருச்சி இரவி மினி அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை தாமோதரன் தலைமை வகித்தார். நிகழ்விற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரன் வரவேற்பு கூறினார். திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, திருவரங்கம் அசோக், விராலிமலை குமரேசன், திருச்சி ஆறுமுகம், போலீஸ் காலனி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கத்தில், மக்கள் கலை இலக்கிய கழகம் மய்யக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதவெறிக்கு எதிரான பாடல்களை கலைக்குழுவினர் பாடினர். தொடர்ந்து, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கருத்துரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சங் பரிவாரங்களின் மதவெறிக் கலவரங்கள் மற்றும் கொலைகளைப் பற்றி விரிவாக விளக்கி உரையாற்றினார்....

ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் சனவரி 26, காலை 10 மணிக்கு கோவை ஆதித்தமிழர் பேரவை அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் அண்மையில் மறைந்த தூத்துக்குடி மாவட்ட தலைவர் பால்ராசு, தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் இணையர் வசந்தி, தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைப் பொதுச்செயலாளர் சந்திரபோஸ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஈசா யோகா மையத்தில் தொடரும் மர்மங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்துவது, பெரியார் கொள்கைகளை விளக்கி புதிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது, தலைமைக் கழக வெளியீடுகளை மக்களிடத்தில் பரவலாக கொண்டு சேர்ப்பது, பெரியாரியல், திராவிடர் இயக்க பயிலரங்கங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு நூலகங்களில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செல்கிறதா என்பதில் தோழர்கள் கவனம் செலுத்தி இதழ் செல்வதற்கு வழி செய்ய தோழர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான கழக வார...

ஆறாம் திருமுறை இருட்டடிக்கப்படுவது ஏன்? விடுதலை  இராசேந்திரன்

ஆறாம் திருமுறை இருட்டடிக்கப்படுவது ஏன்? விடுதலை இராசேந்திரன்

¨           கடைசி 10 ஆண்டுகளில் மதங்கள் அனைத்தை யும் வேண்டாம் என்றார். ¨           ‘திருவருட்பா’ என்று தனது தொகுப்புக்கு  பெயர் சூட்டியது வள்ளலார் இல்லை. ¨           வள்ளலாரின் அய்ந்து திருமுறைகளையும் வெளியிட ஆர்வம் காட்டிய பலரும் 6ஆம் திருமுறையை வெளியிட விருப்பம் காட்டவில்லை; சைவப் பற்றே காரணம். ¨           வள்ளலாரே தனது 6ஆம் திருமுறையை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என்ற ம.பொ.சி.யின் கருத்து உண்மைக்கு மாறானது. ¨           தில்லை தீட்சதர்கள் அர்ச்சகர்களாக முடியாது; அவர்கள் சிவதீட்சைப் பெற்றவர்கள் அல்ல என்று கடுமையாக எதிர்த்தவர் ஆறுமுக நாவலர். சைவத்தில் பற்று வைத்து பிறகு சிந்தனை வளர்ச்சிப் போக்கில் சைவத்தின் மனித சமத்துவ எதிர்ப்புக் கருத்துக்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியதுதான் வள்ளலாரின் தனித்துவம். அவர் சுய மத மறுப்பாளர். சைவத்துடனேயே அவர் வாழ்நாள் முழுதும் போராட வேண்டியிருந்தது. “நாம் இலட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் இலட்சியம்...

அதானியை மோடி வளர்த்தது எப்படி?

அதானியை மோடி வளர்த்தது எப்படி?

குஜராத்தின் அஹமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு 1988ம் ஆண்டில் கௌதம் அதானி என்பவரால் அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மிகப் பெரிய வளர்ச்சிக்கு பிரதமர் மோடியே அடித்தளமிட்டவர். கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தனது ஆத்ம நண்பரான அதானியை ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் உடன் அழைத்துச் சென்றார். 2019இல் ஆஸ்திரேலியா சென்ற போது அதானியை அழைத்துச் சென்று, அங்குள்ள குயின்ஸ்லாந்தில் சார்பில் 12.3 பில்லியன் அமெரிக்க டாலர்களில் மேற்கொள்ளப்பட இருந்த பெரிய திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஆரம்பத்தைப் பெற்று தந்தார். இதற்கு இந்தியாவில் உள்ள வங்கிகள் பிணை வழங்கியது சர்ச்சைக்கு உள்ளானது. தொடர்ந்து இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை அதானி குழுமத்தின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததிலும் ஒன்றிய அரசின் ஒப்புதல் பரிபூரணமாக இருந்தது. ஒரு காலத்தில் அதானி குழுமத்தின் ஆதிக்கத்தின் கீழ் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவையும் வந்து...

நன்கொடை

நன்கொடை

மலேசியா சிலாங்கூர் பகுதியில் வசிக்கும் பெரியாரியலாளர் பரமசிவம், 2023ஆம் ஆண்டுக்கான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ.5,000/- வழங்கினார். பெரியார் முழக்கம் 02022023 இதழ்

பழனி கோயில் – பார்ப்பன அர்ச்சகர்கள் நுழைந்த வரலாறு

பழனி கோயில் – பார்ப்பன அர்ச்சகர்கள் நுழைந்த வரலாறு

பழனி மலைக் கோயிலில் 17 ஆண்டு களுக்குப் பிறகு தமிழில் குடமுழுக்கு நடந்து முடிந்திருக்கிறது. சொல்லப் போனால் பழனி மலை கோயில் என்பது பார்ப்பன ரல்லாத பண்டாரங்களின் கட்டுப்பாட்டில் சித்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கோயில் தான். மதுரையை திருமலை நாயக்கன் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்த போது அவனது படைத் தளபதியாக இருந்த தளவாய் ராமப்பய்யர் என்ற ஒரு பார்ப்பனர் பழனி மலை கோயிலுக்கு வழிபடச் சென்றார். அங்கே பார்ப்பனரல்லாத பண்டாரங்கள் வழிபாடு நடத்துவதைப் பார்த்து அவர் மனம் கொதித்துப் போனார். அவர்களிடம் இருந்து திருநீறை வாங்கிக் கொள்வதற்கு அவர் மறுத்தார், உடனடியாக மதுரைக்குத் திரும்பி பண்டாரங்கள் அத்தனை பேரையும் பதவியில் இருந்து நீக்கி இனி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்று உத்தரவிட்டார். இப்படித்தான் வழக்கமாக ஆகம விதிப்படி பண்டாரங்கள் வழிபாடு நடத்தி வந்த கோயிலில், ஆகமங்களை மீறி பார்ப்பனர்கள் திணிக்கப்பட்டார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக...

தலையங்கம் அதானி குழுமம் மோசடி: மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார்?

தலையங்கம் அதானி குழுமம் மோசடி: மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார்?

மோடி தனது செல்லப் பிள்ளையாக வளர்த்துவிட்ட அதானி, இப்போது தனது சாம்ராஜ்யம் ஆட்டம் காணும் வகையில் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. (மோடி – அதானியை வளர்த்த கதையை வேறு இடத்தில் வெளியிட்டிருக்கிறோம்) 2017ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் நிகழும் மோசடிகளை ஆய்வு செய்ய உருவான அமெரிக்க நிறுவனமே ஹிண்டன்பர்க். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி குழும நடவடிக்கைகளை ஆய்வு செய்தது; குழுமத்தின் முன்னாள் அதிகாரிகளை நேர்காணல் செய்தது. அதனடிப்படையில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்வு அலைகளை உருவாக்கியது. உலக பில்லியனர் இடத்தில் 3ஆவது இடத்தில் இருந்த அதானி (சொத்து மதிப்பு 11 இலட்சம் கோடி), இப்போது 7ஆம் இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளார். அதானி குழுமத்தில் அதிவேக வளர்ச்சியில் அதன் நிறுவனப் பங்குகளைப் பெரும் தொகைக் கொடுத்து வாங்கினர். அரசு பொதுத் துறை நிறுவனங்களும் முதலீடு செய்தன. ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.அய்.சி., ரூ.77,000 கோடியை...

காயாம்பட்டியில் ‘தீண்டாமை’ வன்முறை: பொய் வழக்கைக் கண்டித்து கழகம் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

காயாம்பட்டியில் ‘தீண்டாமை’ வன்முறை: பொய் வழக்கைக் கண்டித்து கழகம் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள காயாம்பட்டியில் ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கண்ணன் எனும் இளைஞர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது – காயாம்பட்டியை சார்ந்த ஆதிக்க ஜாதி வெறியர்கள் 7 பேர் சேர்ந்து தடுத்து நிறுத்தி “நீயெல்லாம் வண்டில வேகமா போறியா” என சொல்லி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  மேலும் அவரை நிர்வாணப்படுத்தி அவரது மனைவி மீதும் பாலியல் சீண்டல் செய்திருக்கின்றனர். இத் தகவலை அறிந்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன் மக்களை சந்தித்து உண்மை தகவலை அறிந்து பாதிக்கப்பட்ட சமூக மக்கள் 26 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடந்து 27-1-23 அன்று தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரியும்...

காந்தி கொலை: முன் கூட்டியே எச்சரித்தார் பெரியார் காந்தியை இந்துத்துவ தீவிரவாதிகள் படுகொலை செய்த நாள்  (30.01.1948).

காந்தி கொலை: முன் கூட்டியே எச்சரித்தார் பெரியார் காந்தியை இந்துத்துவ தீவிரவாதிகள் படுகொலை செய்த நாள் (30.01.1948).

காந்தியடிகளை (ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி கோட்சே) படுகொலை செய்யப்படக்கூடிய ஆபத்து இருப்பது குறித்து காந்தியிடமே முன்பே எச்சரித்தார் பெரியார். பெரியார் எச்சரித்தவாறே காந்தியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கொலை செய்தார்கள். பெரியார் காந்தியை நேரில் பார்த்து கூறினார் : “நான் சொல்லுகிறேன், தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக் கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவரை ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டு வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.” பெரியார் முழக்கம் 02022023 இதழ்

பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

காரைக்குடியில் கழகத் தோழர் இளங்கோவன் புதிதாகக் கட்டிய தனது இல்ல வளாகத்துக்குள் பெரியார் மார்பளவு சிலை ஒன்றை நிறுவி, அதன் திறப்பு விழாவுக்காக கழகத் தலைவர் கொளத்தூர் மணியை அழைத்திருந்தார். ஜன. 29 அன்று இல்லத் திறப்புக்கு முன்பே சிலையை அதிகாரிகள் அகற்றி விட்டனர். காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து வந்து அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளது; அகற்றுமாறு கோரினர். வீட்டின் வளாகத்துக்குள் சொந்த இடத்தில் வைத்துள்ள சிலையை ஏன் அகற்ற வேண்டும்? எதற்காக அனுமதி? என்று கேட்டு நீதிமன்றத் தீர்ப்புகளையும் கழகத் தோழர் எடுத்துக் காட்டினார். அதிகாரிகள் அது பற்றி கேட்காமலேயே சிலையை அகற்றி மூட்டையில் கட்டி வருவாய்த் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். பெரியார் சிலை அகற்றப் பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பிரச்சினை உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கோட்டையூரில் கழகத் தோழர் இல்லம் அருகே தான் பா.ஜ.க.வின் எச். ராஜா பண்ணை இல்லம் இருக்கிறது....

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்

சென்னை – திருப்பூர் – மேட்டூரில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. திருவல்லிக்கேணி : சென்னை திருவல்லிக்கேணி பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தமிழர் திருநாள், பொங்கல் விழா நிகழ்வு, மக்கள் கலை விழாவாக ஜனவரி 13ஆம் தேதி மாலை 6 மணியளவில், வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார். மேலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர்  விடுதலை இராசேந்திரன் மற்றும் திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் (திமுக) முனைவர் ஏ. ரியா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றி பரிசுகளை வழங்கினார்கள். கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மேலும், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் ஆகியோரும் பரிசுகளை வழங்கினர். பறையிசை, சிலம்பாட்டம், கிராமிய பாடல்கள்,...

கோவை இராமகிருட்டிணன் இணையர் வசந்தி முடிவெய்தினார்

கோவை இராமகிருட்டிணன் இணையர் வசந்தி முடிவெய்தினார்

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்களின் இணையர் வசந்தி (வயது 59) 20.01.2023 அன்று காலை 10 மணி அளவில் உடல்நலமின்றி இயற்கை எய்தினார். முடிவு செய்தி அறிந்த திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கழகப் பொருளாளர் துரைசாமி,  தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் கு. இராமகிருட்டிணன் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கு. இராமகிருட்டிணனின் நீண்ட கால பெரியார் பணிக்கு துணை நின்ற அம்மையாரது இறுதி வணக்க ஊர்வலம் 21.01.2023 காலை 10 மணியளவில் இராமகிருட்டிணன் இல்லத்தில் இருந்து அருகில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறுதி ஊர்வலத்திலும் கழகத் தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள், தோழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்....

சந்திரபோஸ் முடிவெய்தினார்

சந்திரபோஸ் முடிவெய்தினார்

தியாகி இமானுவேல் சேகரன் பேரவையின் பொதுச் செயலாளரும், ஐந்திணை மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகருமாகிய அருமைத் தோழர் சந்திரபோஸ் 21.01.2023 அன்று சனிக்கிழமை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் எனும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தோழரின் மரணம், ஜாதி ஒழிப்புக் களத்தில் நிகழ்ந்துள்ள ஒரு பேரிழப்பாகும். ஜாதியப் பெருமைகளைப் பற்றி எந்த நிலையிலும் சிந்திக்காமல், ஜாதிய இழிவுகள், புறக்கணிப்புகள், வஞ்சனைகள், உரிமைப் பறிப்புகள் பற்றி தொடர்ச்சியாக எடுத்துரைத்து அவற்றுக்குத் தீர்வு காண பெரும் போராட்டங்களையும் முன்னெடுப்புகளையும் நடத்தி வந்த ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர். பட்டியல் இன மக்களுக்குள்ளேயே ஏற்றத் தாழ்வினையும் பிரிவினையையும் பலரும் பேசி வருகிற சூழலில், சந்திரபோஸ், தியாகி இமானுவேல்சேகரனைப் போலவே அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு செயலாற்ற விரும்பியவர். தன் குடும்பத்து திருமண உறவுகளில் கூட அந்தப் பிரிவினைப் போக்கினை உடைத்துக் காட்டியவர் அவர்.  பல ஆண்டுகளாக தனது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய பணிகளை அவர்...

நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் வருகிறது ஜனநாயகத்தை இராமராஜ்யமாக்குகிறார்கள்

நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் வருகிறது ஜனநாயகத்தை இராமராஜ்யமாக்குகிறார்கள்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் ஒன்றிய அரசுக்கே முழு அதிகாரம்; உச்சநீதிமன்ற ‘கொலிஜியம்’ குறுக்கிடக் கூடாது என்று ஒன்றிய அரசு மோதலை உருவக்கி வருகிறது. மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜு டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ். சோதி அளித்த பேட்டியை தனக்கு சாதகமாக வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றமே அதிகார மிக்கது என்றும், உச்சநீதிமன்றம், நீதிபதிகள் நியமனங்களில் தலையிட முடியாது என்றும் அவர் பேசியிருந்தார். இதற்கிடையே உச்சநீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு ‘ஜனநாயக்’ நாட்டை ‘இராமராஜ்யமாக்க’ முயற்சிக் கிறது என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா வெளிப்படையாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது உரையை சூழ்நிலை கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. இந்தியா ஒரு பாசிச நாடாக மாறி வருவதாகவும், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு உச்சநீதிமன்றம் தனது சுயத்தை இழந்து வருவதாகவும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா குற்றம் சாட்டியுள்ளார். அயோத்தி...

சிறைத் துறைக்கு மாணவர் கழகம் நூல் அன்பளிப்பு

சிறைத் துறைக்கு மாணவர் கழகம் நூல் அன்பளிப்பு

சென்னை 46ஆவது புத்தகக் கண்காட்சியில் சிறைத் துறை சார்பில் நூல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “மரண தண்டனை ஒழிப்போம்” உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்கள் சிறைவாசிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. தோழர்கள் உதயகுமார், பிரவீன், வழக்கறிஞர் அன்பரசன், புகழ் பொன் வளவன் அருண், மகிழவன், விஷ்ணு, பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26012023 இதழ்

மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

சேலம் : சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.01.2023 வியாழன் காலை 10.00 மணியளவில் கொளத்தூர் எஸ்.எஸ். மஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்பு – ஆத்மா மறுப்புடன் தொடங்கியது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் சேலம் மேற்கு மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டிற்கான ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தா இதுவரை 475 ஆண்டு சந்தாக்களும், 84 ஐந்தாண்டு சந்தாக்களும் பெறப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள சந்தாக்களை விரைவில் முடித்து கொடுக்க வேண்டுமாய் தோழர்களிடம் கேட்டுக் கொண்டார். (கிழக்கு மாவட்ட சந்தாக்களையும் சேர்த்து ரூ.2,48,500/- வழங்கப்பட்டது) தொடர்ந்து பேசிய கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், “தமிழ்நாடு அரசு நமது இயக்க செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறதென்றும், தோழர்கள் அனைவரும் நமது இயக்க ஏடான (புரட்சிப் பெரியார் முழக்க’த்தை முழுமையாகப் படிக்க...

அறிவியல் துறையில் பெண்களின் பங்கேற்பு குறைவது ஏன்?  ம.கி. எட்வின் பிரபாகரன்

அறிவியல் துறையில் பெண்களின் பங்கேற்பு குறைவது ஏன்? ம.கி. எட்வின் பிரபாகரன்

ஆராய்ச்சியாளர்களில் 33.3% பெண்கள் இருக்கின்ற போதும், தேசிய அறிவியல் கூடங்களில் (NSAs) 12% பெண்கள் மட்டுமே உள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் 1:4 விகிதத்தில் தான் பெண்களும் ஆண்களும் உள்ளனர். ஒருங்கிணைந்த அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் & கணிதத் துறைகளிலும் (STEM) பெண்களின் எண்ணிக்கை குறைவே! யுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி, உலகளவில் STEM துறைகளில் 29.3% பெண்களே உள்ளனர். ஐ.நா. சபையின் பிப்ரவரி 2020 தகவல்களின்படி, (1901 – 2019) வரை நோபல் பரிசைப் பெற்றவர்கள் 900 பேர்; அவர்களில் வெறும் 53 பேர் மட்டுமே பெண்கள். STEM துறைகளில் கற்கும் மாணவர்களில் 35% பேர் பெண்கள். அனைத்து துறைகளிலும் ஆண்களும் பெண்களும் சம பங்களிப்பை வழங்கும் நிலை ஏற்பட வேண்டுமென்று உலகத்தார் எவ்வளவோ முயன்று பார்த்த பின்பும் இன்னும் அந்த இலக்கை நாம் அடைய வில்லை. அறிவியல் துறையும் இதற்கு விதி விலக்கல்ல. விஞ்ஞானத் துறையில் பாலினச்...

திருமகன் ஈவெரா துயர முடிவு: கழகம் ஆழ்ந்த இரங்கல்

திருமகன் ஈவெரா துயர முடிவு: கழகம் ஆழ்ந்த இரங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மரணமடைந்து விட்டார் என்ற செய்தி தாங்க முடியாத ஒரு துயரமாகும். உண்மையிலேயே இது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அவரது தந்தை காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு தேசிய இயக்கத்தின் முன்னணி தலைவராக இருந்தும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், இப்போதும் தன்னை ஒரு பெரியாரியவாதியாக, பகுத்தறிவாதியாக, பெரியார் குடும்பத்தைச் சார்ந்தவராகப் பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோலத் தான் தன்னுடைய மகன் திருமகன் ஈவெரா அவர்களையும் வளர்த்தார். திருமகன் ஈவெரா அவர்களும் தலைச்சிறந்த ஒரு பெரியாரியவாதியாகவே வாழ்ந்தார்; பகுத்தறிவுவாதியாகவேத் திகழ்ந்தார். சென்னையில் திருமகன் ஈவெரா திருமணம் புரட்சிகரமாக நடந்தது. பதிவாளரை நேரில் அழைத்து அதில் மணமக்கள் கையொப்பம் பெற்று சில நிமிடங்களில் மணவிழா புரோகித மறுப்புடன் நடந்து முடிந்தது. இந்த இழப்பு உண்மையிலே தாங்கிக்...

இந்துவானால் என்ன? முஸ்லீமானால் என்ன?

இந்துவானால் என்ன? முஸ்லீமானால் என்ன?

தெலுங்கு மூலம்: ஸைக்அலிகோரிஸய்யத், தமிழில்: பா. ஆனந்தகுமார் நான் முஸ்லிமானால் என்ன? நீ இந்துவானால் என்ன? உன் கோவில் முன் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் இந்துவாக இருந்தாலும் நீ மார்போடு தழுவப் போவதில்லை; பக்கிரிகள் முஸ்லிமானாலும் நான் கட்டியணைக்க                            போவதில்லை!   நீ எத்தனை விரதங்கள் இருந்தால் என்ன? நான் எத்தனை நோன்புகள் நோற்றாலென்ன ? நீ வரி கேட்பதற்கு எந்த பிரிவுகளைத் தேடுவாயோ நானும் அதே பிரிவுகளைப்பின்பற்றுகிறேன். உனது மந்திரங்கள் சமஸ்கிருதம் ஆனாலும் எனது ஸமூராக்கள் அராபியானாலும் நமது பிள்ளைகளின் ஆங்கில வழி படிப்பை நிறுத்தும் துணிவு உனக்குமில்லை எனக்குமில்லை!   உனது கோயிலுக்குப் போகும் பாதையில் எந்தக் குண்டும் குழியுமான சாலையில் முட்டி மோதி போவாயோ, நானும் அதே கருங்கல் மிதக்கும் மட்டமான சாலையில் மசூதிக்குப் போவேன்!   நீ பண்டிகைகளுக்கு எந்த சைவ சமையல் செய்தாலும், எனது பண்டிகைகளுக்கு எந்த அசைவ சமையல் சமைத்தாலும் மளிகைக் கடையில்...

தலையங்கம் அது என்ன “பாரதம்”?

தலையங்கம் அது என்ன “பாரதம்”?

ஆளுநர் ரவியின் உளறல் பேச்சுக்கு தமிழ்நாடு இப்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். சன்தொலைக்காட்சிநடத்திய விவாதம் ஒன்றில் பங்கேற்ற பேராசிரியர் வீ. அரசு தமிழகம் என்றாலே தமிழ்நாடு என்பதுதான் அதற்குப் பொருள் என்று சரியான விளக்கத்தைத் தந்திருக்கிறார். ஆளுநருக்கு சொல்லிக் கொடுத் தவர்கள் இதைக் கூட சொல்லிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார் களா? என்ற கேள்வியை அவர் எழுப்பி இருக்கிறார். சரி; தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும்,  தமிழ்நாடு என்று  அழைக்கக் கூடாது சொல் லுகிற ஆளுநராக இருந்தாலும் சரி, அவரது சங்பரிவார் கூட்டமாக இருந் தாலும் சரி இந்தியாவை இந்தியா என்று அழைக்காமல் பாரதம், பாரதீயம் என்று அழைப்பது ஏன்? அவர்கள் கட்சிகளுக்கும் துணை அமைப்புகளுக்கும் இந்தியா என்ற பெயரை முழுமையாக தவிர்ப்பது ஏன்?  இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பாரதம்,  பாரதம் என்றால் என்ன?...

சிறப்பு வினா விடை

சிறப்பு வினா விடை

தி.மு.க. பொதுக் கூட்ட மேடையில் பேசுவதை எல்லாம் ஆளுநர் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? – அண்ணாமலை நியாயம் தான். ஆளுநர் அவர் பேசும் பொதுக் கூட்ட மேடையில் பேசுவதைத் தானே சட்டசபையில் பேச முடியும். அப்படித்தான் அவரே எழுதிக் கொண்ட அரசியல் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத்திருக்கிறார் போல! ‘தேசிய கீதம்’ பாடலையும் புறக்கணித்து ஆளுநர் வெளியேறியது தேசத்துக்கு அவமதிப்பு. – அமைச்சர் தங்கம் தென்னரசு அதெல்லாம் இல்லை. ஆளுநர் ஏற்றுக்கொண்ட தேசிய கீதம் ‘வந்தே மாதரம்’. ‘ஜனகணமன’ அவருக்குப் பிடிக்காது. ஆளுநரை வைத்துக் கொண்டே முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தது தவறு. – அண்ணாமலை முதல்வரை வைத்துக் கொண்டே அரசு தயாரித்த உரையின் பகுதிகளை நீக்கி விட்டுப் பேசியது – ஆளுநரின் ‘பெருந்தன்மை’யோ? பெரியார், அண்ணா, காமராசர் பெயரை எல்லாம் நீக்கி விட்டு ஆளுநர் உரையை வாசித்தது எல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும். –...

ஆளுநர், தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும்!

ஆளுநர், தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும்!

ஆளுநர் ரவிக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை, பழமொழி ஒன்றை கிராமத்தில் கூறுவார்கள், ஆற்றின் மீது கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போய் விட்டானாம் ஒருவன், அதைப்போல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் ஆற்ற வேண்டிய உரைக்கு ஜனவரி ஏழாம் தேதி ஒப்புதல் அளித்து விட்டு சபைக்கு உரையாற்ற வருகின்ற போது அதில் அவருக்கு கசக்கின்ற வார்த்தைகளை உச்சரிக்கவே மறுத்து விட்டார். ஆளுநரின் செயலை தமிழக சட்டமன்றம் ஏற்காத நிலையில் அவரே வெளி நடப்பு செய்து விட்டார். அதுவும் ‘தேசிய கீதத்தை’ப் புறக்கணித்து வெளி நடப்பு செய்துள்ளார். அவருக்கு ஒவ்வாமையாக அமைந்து போன, அவர் வெறுக்கின்ற வார்த்தைகள் என்ன தெரியுமா? திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திராவிட மாடல் இத்தனைக்கும் மேலாக அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராசர், கலைஞர், இவை அனைத்தும் உச்சரிப்பதற்கு அவர் வாய் மறுத்து விட்டது. உரையில் அடங்கியிருக்கிற இந்த சொற் றொடர்களை அவர்...

கழக வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா மறைவு

கழக வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா மறைவு

கழகத்தின் வழக்குகளுக்காக தொடர்ந்து வாதாடி வரும் வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா முடிவெய்தினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், கழகத்தின் வழக்குகளுக்காகத் தொடர்ந்து வாதாடி வரும் திருமூர்த்தி அவர்களின் தந்தை கோ.இராமையா (77), 22.12.2022 அன்று கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தில் முடிவுற்றார். இராமைய்யாவின் இறுதி ஊர்வலம் 23.12.2022 அன்று சிறுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உடன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், காவை ஈஸ்வரன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களுக்கு கழக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்...

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கலந்துரை யாடல்கள்: கடலூர் :  27.12.2022 அன்று சிதம்பரம் ஏபிஎன் மஹாலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பிஞ்சு சி.சந்தோஷ் பெரியார் பாடல் பாட நிகழ்ச்சி தொடங்கியது. மா.து.தலைவர் செ.பிரகாஷ், வரவேற்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் இயக்கத்தின் தேவை மற்றும் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். அதன்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆ. சதிசு – மாவட்ட அமைப்பாளர்,  ர.சிவகுமார் – மாவட்ட செயலாளர்,  ப.அறிவழகன் – அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர், அ.மதன்குமார் – மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பெரியார் பார்வை ஆசிரியர் கவி பங்கேற்று தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இக்கூட்டத்தில்,  கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இயக்கத்தின் நோக்கம் பற்றியும்...

தமிழரின் வைதீக நோய் தீர்க்கும் மாமருந்து சுயமரியாதை பேராசிரியர் க. அன்பழகன்

தமிழரின் வைதீக நோய் தீர்க்கும் மாமருந்து சுயமரியாதை பேராசிரியர் க. அன்பழகன்

பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அவர் ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதிய கட்டுரையை (செப்.17, 1986) வெளியிடுகிறோம். (சென்ற இதழ்த் தொடர்ச்சி) பல்வேறுபட்ட குல (கூட்ட) மக்களாக வாழ்ந்த நிலையை ஏதுவாக்கி வருணாசிரமக் கொள்கையைப் புகுத்தி – தமிழர்களைச் சூத்திரர்களாகவும், பஞ்சமர் களாகவும் ஏற்றிடும் நிலையை பார்ப்பனர்கள் உருவாக்கினர். ஆரிய கலாச்சாரத்தினைப் பரப்பியவர் ‘எசமானர்’ நிலைப் பெற்றனர். வழிவழி வந்த உயர்ந்த பண்பாட்டில் நிலைப் பெற்றிருந்த தமிழர் – கற்பனையாக பிறவி இழி மக்கள் ஆக்கப்பட்டு மீளா அடிமைகளாயினர். அதனால் தான் பிறிதொரு இனத்துடன் வரலாற்றுத் தொடர்பு ஏற்படும் காலத்திலும் – அதைத் தொடர்ந்து வளர்ந்திருக்க வேண்டிய இன உணர்வும்-மொழிப் பற்றும்- மங்கி, மறைந்து தேய்ந்து போயிருப்பதைக் காண்கிறோம். “வைதீக மத வழிபற்று” ஆரியத்தைப் பிரித்துக் காணும் ஆற்றலை (சிந்தனையை) இழக்கச் செய்தது. வருணாசிரம – மனுதர்ம நெறி தமிழர் களை ஒன்று பட முடியாத அளவுக்கு...

“அறிவு கெட்ட மூடனே; பசு மாடே”

“அறிவு கெட்ட மூடனே; பசு மாடே”

ஜாதி மனிதர்களை மட்டுமல்ல; பறவை விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கிளி உயர்ஜாதி, கழுகு கீழ் ஜாதி, ‘கோமாதா’ ‘பிராமணாள்’; கழுதை ‘சூத்திராள்’; கோமாதாவின் சிறுநீர், சாணம் எல்லாம் புனிதம். பசுவைக் கூட செத்தாலும் வெட்டக் கூடாது. அதற்காக சட்டங்களே பா.ஜ. க. ஆட்சிகளில் போடப்பட்டு வருகின்றன. பார்ப்பனர் வாசிக்கும் தாளக் கருவியான மிருதங்கம், இளம் பசு மாட்டுத் தோளில் தான் செய்யப்படுகிறது. ஆனால் அதைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோர் கீழ்ஜாதியினர். பாலக்காடு பார்ப்பன மிருதங்க வித்வான் ஒருவர், காஞ்சி சீனியர் சங்கராச்சாரியிடமே நேரில் போய் பசு மாட்டுத் தோலில் உருவாகும் மிருதங்கத்தை நாம் வாசிப்பது பாவமில்லையா என்று கேட்டாராம். சங்கராச்சாரி, “எல்லாவற்றுக்குமே விதிவிலக்கு உண்டு; தோஷமில்லை” என்று பதில் கூறினாராம். பார்ப்பனர்களை எதிர்த்துப் பேசி வரும் டி.எம். கிருஷ்ணா (இவரும் பார்ப்பனர் தான்). தனது நூலில் இதை எழுதி வைத்துள்ளார். பசுவுக்கு புனிதம் பேசும் வேதியர் கூட்டம் அதே பசு செத்துப்...

காற்றில் பறக்கும் ஒற்றை இந்தியா

காற்றில் பறக்கும் ஒற்றை இந்தியா

ஒன்றிய ஆட்சி ஒற்றை இந்தியாவின் பெருமையைப் பேசிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே ரேசன் கார்டு, ஒரே மொழி அதிலும் புனித மானது சமஸ்கிருதம் என்றெல்லாம் ஒற்றை ஆட்சி பற்றிப் பேசி, நாட்டை சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் சென்று இந்தியாவை இந்து இராஷ்டிரமாக மாற்றலாம் என்பது அவர்கள் போடுகிற தந்திரமான கணக்கு. சரி இருக்கட்டும்; ஒற்றை இந்தியாவை இவர்கள் உருவாக்குவதற்கு முன்பாக, இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிற மாநிலங் களில் தற்போது தலைதூக்கி ஆடிக் கொண்டிருக்கிற எல்லைப் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்களே அதற்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள். 1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது பெலகாவி மாவட்டத்தில், மராத்தி பேசும் மக்கள் வசிக்கும், 865 கிராமங்கள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. அதே போன்று மகராஷ்டிராவில் ஜாட் தாலுகாவில் கன்னடம் பேசும் கிராமங்கள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இரு மாநிலங்களின் எல்லைகளிலும்...

வெட்கப்பட வேண்டும்

வெட்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டுக் கிராமங்களில் தீண்டாமை வெறி இன்னமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இது மறுக்கப்பட முடியாத உண்மை. அரசியல் கட்சிகள் அனைத்தும் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஓட்டு வங்கி அரசியலை முன் வைத்து தான் அவர்கள் பிரச்சனை களை பார்க்கிறார்களே தவிர, சமூக அவலங்கள் அவர்களின் கண்களுக்குத் தெரிவதே இல்லை. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவிடியல் கிராமத்தில் இருந்து வெட்கக் கேடான, நாம் அனைவரும் தலைகுனிய வேண்டிய  செய்தி வந்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழ்கின்ற தலித் மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தொட்டியில், மனித மலத்தைக் கலந்து வைத்திருக்கிறது ஜாதி வெறி கும்பல் ஒன்று. அந்தப் பகுதி குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், புகார் வரவே மாவட்டத் ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட காவல் துறை அதிகாரி வந்திதா பாண்டே ஆகியோர், வருவாய் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டபோது, தண்ணீர் தொட்டி யில் மலம் கலந்திருப்பது உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டிரு க்கிறது. 5...

2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்

2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்

2022இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஒரு சுருக்கமான தொகுப்பு. ஜனவரி : டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட தமிழக ‘சுதந்திரப் போராட்டக்காரர்களான’ வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் அலங்கார ஊர்தியை கடைசி நேரத்தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அனுமதிக்க மறுத்தது. தமிழ்நாட்டின் குடியரசு தின அணி வகுப்பில் இந்த ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர். இந்தத் தலைவர்களோடு பெரியார் சிலையையும் சேர்த்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழக அரசு மக்கள் பார்வைக்கு வைத்ததோடு குடியரசு நாள் அணி வகுப்பிலும் பங்கேற்கச் செய்தது, தமிழக அரசு. மருத்துவ உயர் மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது. தமிழக அரசு தமிழ்நாட்டுக்கு...

சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

24.12.2022 சனிக்கிழமை அன்று  சத்தியமங்கலம் எஸ்.பி.சி. மகாலில் நடைபெற்ற பெரியார்-அம்பேத்கர் உருவாக்கிய சமூகப் புரட்சி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பான முறையில் கருத்துரை வழங்கினார். இக்கருத்தரங்கத்திற்கு மு.தமிழரசன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில்  திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், தோழமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி தொடக்கத்தில் சத்தி முத்துவின் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் கே.எ.கிருஷ்ணசாமி,சதுமுகை பழனிசாமி, சித்தா பழனிசாமி மற்றும் சதுமுகை கனகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக செந்தில்நாதன்  வழக்குரைஞர், தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் சேகர், வேலுச்சாமி, வீரா. கார்த்தி, சுந்தரம், குப்புசாமி, சிவக்குமார் மற்றும் சரத் அருள்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, சிவகாமி  (தலைவர், தமிழ்நாடு...

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பாக பெரியாரின் 49 ஆவது நினைவு நாளை ஒட்டி, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணி யளவில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தியாகராயர் நகர் பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். நகர், ஆலந்தூர், வன்னியம்பதி, மயிலாப்பூர் சென்மேரிஸ் பாலம், சுப்பராயன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலை, உருவபடங்களுக்கு தோழர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பெரியார் நினைவு மற்றும் கொள்கை முழக் கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வுகள் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக பொறுப் பாளர்கள், மாவட்டம், பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டச்...

தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா

தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா

கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் கிருஷ்ணவேணி – தேவராஜ் ஆகியோரது புதிய இல்லம் பல்லடம் அருகே வரபாளையம் கிராமத்தில் “தமிழ்க் குடில்” எனும் பெயரில் 04.12 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் திறந்து வைக்கப் பட்டது. இல்லத்தை தோழர்களின் பெற்றோர்கள் கிட்டாள்- மாறன், இலட்சுமி – பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இல்லத் திறப்பு விழாவிற்கு ப.மாறன் தலைமை தாங்கினார்கள் தே. சுப்பிரமணியன் – ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கற்பி சமூக கல்வி மையத்தின் இரா.விடுதலைச்செல்வன்  வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரம்பலூர் டாக்டர் அம்பேத்கர் சமூகக் கல்விப் பொருளாதார அறக்கட்டளையின் இரா.க.கிருஷ்ணசாமி, பாடகர் மா.பா. கண்ணையன், கழகப் பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர்சிவகாமி, தி.வி.க. திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் மா.தேவராஜ்  நன்றி கூறினார்.   பெரியார்...

தமிழ் வாழ்வியலை வீழ்த்திய பார்ப்பனிய ஊடுருவல்

தமிழ் வாழ்வியலை வீழ்த்திய பார்ப்பனிய ஊடுருவல்

பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அவர் ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதிய கட்டுரையை (செப்.17, 1986) வெளியிடுகிறோம். உலகத்தில் வளர்ச்சியும் வாழ்வும் பெற்றுள்ள மேல் நாட்டு மக்களும், சீனா, ஜப்பானியரும் நாகரிகத்தின் முகப்பில் அடி எடுத்து வைக்கும் முன்னரே, நாகரிக வாழ்வு கண்டு, நானில வகை கண்டு, நாடாளும் முறை கண்டு, ஒரு தனித் தன்மையுடன் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள் – தென்னாட்டுத் திராவிட மக்கள் – கடந்த சில நூற்றாண்டுகளாகவே வாழ்விழந்து, வளமிழந்து, உரிமை மறந்து, தலைதாழ்ந்து கிடக்கின்றனர். பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒரு மொழி கண்டு, எட்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூடி வாழும் வாழ்க்கைக்கு முறை கண்டு, அய்யாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கோனாட்சிக்கு வழிகண்டு, இயற்கையில் முத்தமிழாய் முகிழ்த்த தமிழன் சிறப்பு கண்டு, சிந்தனையைச் செய்யுள் வடிவத்தில் கண்டு, மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியங்கட்கு இலக்கணங்கண்டு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகம் வியக்கும் ‘திருக்குறள்’...

மணமகள் தேவை

மணமகள் தேவை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த தோழர் இனியவன், வயது 26. பொறியியல் பட்டம் முடித்து சொந்தமாக வணிகம் நடத்தி வருகிறார். தோழருக்கு பெரியாரிய சிந்தனைக் கொண்ட பெண் தோழர்  தேவை. தொடர்புக்கு : 8903461202 பெரியார் முழக்கம் 29122022 இதழ்

வினா விடை

வினா விடை

  ஏழுமலையானுக்கு உலகம் முழுதும் அசையா சொத்து 85,705 கோடி ரூபாய்; தங்க நகைகள் 9,259 கிலோ. –  செய்தி அசையா கடவுளுக்கு அசையா சொத்துக்கள்; அமலாக்கத் துறையால் அசைக்கவே முடியாது. திருப்பதியில் சொர்க்க வாசல் போக இலவச தரிசனம்; இலவச டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. – செய்தி ‘புண்ணியம்’ எதுவும் செய்ய வேண்டாம்; டோக்கன் பெற்றாலே ‘சொர்க்கம்’ தான்! உ.பி. சிறைகளில் சைவ உணவுகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. – செய்தி தண்டிக்கப்பட்டு உள்ளே வந்த பிறகும் தண்டனையா? இராமேஸ்வரம் கடல் பகுதியில் இராமர் பாலம் இருந்ததாக உறுதியான சான்றுகள் இல்லை. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல். – செய்தி அடுத்து ராமன் என்று ஒருவர் இருந்தான் என்பதற்கே உறுதியான சான்றுகள் இல்லை என்பதை எப்போது அறிவிக்கப் போகிறீர்கள்? கிருஷ்ண பகவானுக்கு உலகிலே உயரமான சிலை – குஜராத் பா.ஜ.க. ஆட்சி முடிவு. – செய்தி ‘பிரபஞ்ச’த்திலேயே உயரமான சிலையை...

ராமன் பாலம்: உறுதியான ஆதாரம் இல்லை; பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல்

ராமன் பாலம்: உறுதியான ஆதாரம் இல்லை; பா.ஜ.க. ஆட்சி ஒப்புதல்

இலங்கைக்கு இராமேஸ்வரத்தி லிருந்து இராமன் பாலம் கட்டினான் என்றும், அந்தப் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை அமுல் படுத்தக்கூடாது என்றும் இந்துத்துவவாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். சுப்ரமணிய சுவாமியும் உச்சநீதி மன்றத்திலே வழக்கு தொடர்ந்தார். இப்போது நிலைமை எல்லாம் தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. ‘இராமேஸ்வரம் கடல் பகுதியில் இராமர்  பாலம் இருந்ததாகக் கூற முடியாது’ இப்படிக் கூறியிருப்பவர், ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங். கூறி யிருக்கிற இடம் நாடாளுமன்றம். அவர் மேலும் கூறுகிறார், ‘19 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால், இராமர் பாலம் பற்றி துல்லியமாக கண்டறிய முடியவில்லை என்றும், செயற்கைக் கோள் படங்களில் கடலில் சில பாறைகள் இருப்பது போல் கண்டறியப்பட்ட போதிலும், அது இராமர் கட்டிய பாலம் என்று கூறுவது கடினம்’ என்று தெரிவித்து இருக்கிறார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவார்கள், அதேபோல 19...

தலையங்கம் கோட்சே பரம்பரை

தலையங்கம் கோட்சே பரம்பரை

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சங் பரிவாரக் கும்பலை “கோட்சே பரம்பரை” என்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார். கோட்சே பரம்பரை என்பது திராவிடர் இயக்கத்திற்கு பழகிப்போன ஒரு சொல் தான், காந்தியாரை சுட்டுக் கொல்லப்பட்ட அந்த காலத்தில் திராவிடர் இயக்க மேடைகளிலும் திராவிடர் இயக்க நூல்களிலும் அந்தக் கும்பலை சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொல் தான் கோட்சே பரம்பரை என்பதாகும். காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டது மாலை 5:12 க்கு, ஆனால் அகில இந்திய வானொலி அவரது மறைவு செய்தியை ஒலிபரப்பியது 6 மணிக்குத்தான். அதற்கு முக்கிய காரணம், ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக் கொன்றுவிட்டார்’ என்ற வதந்தியை இந்த கோட்சே பரம்பரை அப்போதே பரப்பியது. மவுண்ட் பேட்டன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து பிர்லா மாளிகை விரைந்த உடன் கூட்டத்திலிருந்த ஒரு சங்கி, ‘காந்தியை ஒரு முஸ்லிம் சுட்டுக்...

விடுதலை இராசேந்திரன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன முதல்வர் நேரில் மரபுரிமைத் தொகை வழங்கினார்

விடுதலை இராசேந்திரன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன முதல்வர் நேரில் மரபுரிமைத் தொகை வழங்கினார்

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய 59 நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. அதற்கான மரபு உரிமைத் தொகையாக ரூ.15 இலட்சத் துக்கான காசோலையை தமிழக முதல்வர் நேரில் வழங்கினார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆசிரியர், பெரியாரியலை தன் வாழ் வியலாக்கி, கழகத்தை குடும்பமாக்கி, பெரியாரிய பத்திரிக்கையாளராக 50 ஆண்டுகளைக் கடந்தும் எழுதிக் கொண்டிருக்கும் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல்களை தமிழ்நாடு அரசு 59 நூல்களை நாட்டுடமையாக்கியது. 22.12.2022 பகல் 11 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டுடமையாக்கப் பட்டதற்கான மரபு உரிமை காசோலையை வழங்கினார். அப் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் இணையர் பேராசிரியர் சரசுவதி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் உடனிருந்தனர். தொடர்ந்து, இலாயிட்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவிக்க தோழர்கள் முழக்கம் எழுப்பினர்....

நாட்காட்டி தயார்!

நாட்காட்டி தயார்!

2023ஆம் ஆண்டுக்கான திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாட்காட்டி தயாராக உள்ளது.  சனாதன எதிர்ப்பாளர்கள், சமூகப் புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள் படங்களுடன் அழகிய வடிவமைப்பில் உள்ள நாட்காட்டி ஒன்றின் விலை ரூ.50/-  (ரூபாய் அய்ம்பது மட்டும்). முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே நாட்காட்டி அனுப்ப இயலும். நாட்காட்டி தேவைப்படுவோர் தொடர்புக்கு : தபசி குமரன் (99417 59641) தலைமை நிலையச் செயலாளர்,  திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் முழக்கம் 22122022 இதழ்

கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்

கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்

கழகத் தலைவர் மற்றும் தலைமைக் குழுப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் மூன்றாம் கட்டப் பயணம் கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது. 05.01.2023 காலை 10.00 மணி – சேலம் மேற்கு மாவட்டம் 05.01.2023 மாலை 4.00 மணி – தர்மபுரி மாவட்டம் (இரவு தங்கல் கிருட்டிணகிரி) 06.01.2023 காலை 10.00 மணி – கிருட்டிணகிரி  மாவட்டம் 06.01.2023 மாலை 4.00 மணி – கள்ளக்குறிச்சி மாவட்டம் (இரவு தங்கல் சேலம்) 07.01.2023 காலை 10.00 மணி – சேலம் கிழக்குமாவட்டம் 07 01.2023 மாலை 4.00 மணி – ஈரோடு தெற்கு மாவட்டம் (இரவு தங்கல் ஈரோடு) 08.01.2023 காலை 10.00 மணி –  ஈரோடு வடக்கு மாவட்டம் மேற்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் ஊர் மற்றும் இடத்தை முடிவு செய்து தலைமைக் கழகத்திற்கு  தகவல் தரக் கேட்டு கொள்ள படுகிறார்கள்.   பெரியார் முழக்கம் 22122022 இதழ்