சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

24.12.2022 சனிக்கிழமை அன்று  சத்தியமங்கலம் எஸ்.பி.சி. மகாலில் நடைபெற்ற பெரியார்-அம்பேத்கர் உருவாக்கிய சமூகப் புரட்சி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பான முறையில் கருத்துரை வழங்கினார். இக்கருத்தரங்கத்திற்கு மு.தமிழரசன்  தலைமை தாங்கினார்.

கூட்டத்தில்  திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், தோழமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி தொடக்கத்தில் சத்தி முத்துவின் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் கே.எ.கிருஷ்ணசாமி,சதுமுகை பழனிசாமி, சித்தா பழனிசாமி மற்றும் சதுமுகை கனகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக செந்தில்நாதன்  வழக்குரைஞர், தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் சேகர், வேலுச்சாமி, வீரா. கார்த்தி, சுந்தரம், குப்புசாமி, சிவக்குமார் மற்றும் சரத் அருள்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, சிவகாமி  (தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்), மாவட்ட அமைப்பாளர் – நிவாசு, மாவட்ட பரப்புரைஅணி செயலாளர் – வேணுகோபால் மற்றும் மாவட்ட செயலாளர் எலத்தூர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பவானிசாகர் சட்ட மன்ற பொறுப்பாளர் தம்பிதுரை, தமிழ்ப் புலிகள் கட்சி தலைமை நிதி செயலாளர் அப்துல்லா மற்றும் சமூக நீதிக் கட்சி மாவட்டச் செயலாளர் தேவராஜ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் பிரபாகரன் – காயத்திரி குழந்தைக்கு  கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களால் ‘நிறைமதி’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

பெரியார் முழக்கம் 29122022 இதழ்

You may also like...