ஆனந்தி – அஸ்வின் குமார் இணையேற்பு விழா

சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலை கழகத் தோழர் அஸ்வின் குமார் – ஆனந்தி ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 03.02.2023 வெள்ளி அன்று சென்னை தேனாம்பேட்டை, டாக்டர் கிரியப்பா சாலை, சமூக நலக்கூடத்தில் மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.  விழாவிற்கு தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி முன்னிலை வகித்தார்.

இணையேற்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.  ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.  கழக ஏட்டுக்கு ரூ.5,000/- நன்கொடை வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 09022023 இதழ்

 

You may also like...