Category: திவிக

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மேட்டூரில் கழக மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜன்-மு.கீதா இணையரின் மகள் தேன்மொழி-மணிகண்டன், ஜாதி மறுப்பு மண விழா, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மேட்டூரில் நடந்தது. மணவிழா மகிழ்வாக தோழர் சி.கோவிந்தராஜன், ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். கடந்த வார இதழில் வெளி வந்த மணவிழா செய்தியில் பிப்.3 என்பதற்கு பதிலாக ஜனவரி 3 என்று தவறாக வெளி வந்துவிட்டது. மணமகளின் தந்தை சி. கோவிந்தராஜன் பெயரில் கி. கோவிந்தராஜன் என்றும் தவறாக வெளி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்) பெரியார் முழக்கம் 28022019 இதழ்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு,  பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10032019

தமிழக அரசே ..! பொள்ளாச்சி பெண்கள் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்து, கைது செய்துள்ள குற்றவாளிகளின் மீது பெண்கள் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடை, எஞ்சிய உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து எந்தவித பாரபட்சமும் இன்றி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கு இந்த வழக்கில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்து என வலியுறுத்தி #கண்டன_ஆர்ப்பாட்டம் #தோழர்_வினோதினி தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்… நேற்று (மார்ச் 10) மாலை 5 மணிக்கு நடைபெற்றது … இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை: #பேராசிரியர்_சரசுவதி PUCL _துணைதலைவர் #ஆசிரியர்_சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம் கண்டன உரை : #திமுக_நகர_துணைசெயலாளர் நா. கார்த்திகேயன் வெள்ளிங்கிரி யாழ் திவிக மாவட்டச் செயலாளர் #மடத்துக்குளம்_மோகன் திவிக செயற்குழு உறுப்பினர் #திருப்பூர்_துரைசாமி திவிக மாநில பொருலாளர் #காசு_நாகராசன் ஒருகினைப்பாளர், தமிழ்நாடு திக #தேன்மொழி தமிழ்நாடு மாணவர் கழகம் நன்றியுரை...

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது”  – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது” – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு

”பெரியார் சிலைகளை மூடக்கூடாது”  – சென்னை உயர்நீதி மன்ற உத்தரவு (2011 ஆம் ஆண்டு திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு) வரும் 2019 ஏப்ரல் 18 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை எங்காவது மறைத்தால் அவர்களிடம் இந்த நீதி மன்ற உத்தரவை காண்பித்து பெரியார் சிலைகளை மறைப்பதை தடுப்பதற்கு இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ளும்படி தோழர்களை கேட்டுக்கொள்கிறோம். (2016 ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு) வரும் 2019 ஏப்ரல் 18 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை எங்காவது மறைத்தால் அவர்களிடம் இந்த நீதி மன்ற உத்தரவை காண்பித்து பெரியார் சிலைகளை மறைப்பதை தடுப்பதற்கு இந்த உத்தரவை பயன்படுத்திக்கொள்ளும்படி தோழர்களை கேட்டுக்கொள்கிறோம்.

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் 15032019

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் 15032019

திருப்பூரில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! நாள் : 15.03.2019 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.00 மணி இடம் : மாநகராட்சி அலுவலகம் அருகில்,திருப்பூர். தமிழக அரசே ..! பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட எஞ்சியுள்ள உண்மை குற்றவாளிகளையும் உடனடியாக கண்டுபிடித்து எந்தவித பாரபட்சமும் இன்றி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்! பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கு ! இந்த வழக்கில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்து என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ! தலைமை : #தோழர்_சுசீலா_அவர்கள். முன்னிலை : #தோழர்கள்_பார்வதி_சங்கீதா_முத்துலட்சுமி_கோமதி. கண்டன உரை : #தோழர்_கொளத்தூர்_மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_திருப்பூர்_துரைசாமி, பொருளாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_ஈரோடு_ரத்தினசாமி, அமைப்புச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_முகில்ராசு, மாவட்டத்தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். #தோழர்_ஆறுமுகம், மாட்டத்தலைவர்,திராவிடர் கழகம், #தோழர்_சண்_முத்துக்குமார், மாநகரத்தலைவர்,த.பெ.தி.க. #தோழர்_துரைவளவன், மாநில துணைச்செயலாளர்,வி.சி.க. #தோழர்_துரை,திருவள்ளுவர் பேரவை. #தோழர்_அபுதாஹீர்,எஸ்டிபிஐ. #தோழர்_அஸ்லம்,த.ம.ஜ.க....

பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 15032019

பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 15032019

*பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.!* *சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம்* *சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வரும் 15.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு* கண்டன உரை : *பேராசிரியர்.சரசுவதி* PUCL *முனைவர்.சுந்தரவள்ளி* த.மு.எ.க.சங்கம் *வழக்கறிஞர். அஜிதா* சென்னை உயர்நீதிமன்றம் *தோழர்.பா.மணியம்மை* திராவிடர் கழகம் *தோழர்.மார்ட்டினா* மனிதி *தோழர்.சுதா காந்தி* த.தே.வி.இயக்கம் *விடுதலை இராசேந்திரன்* திவிக *தோழர்.செந்தில்* சேவ் தமிழ் *தோழர்.பிரவீன்* மே 17 இயக்கம் தோழர்களே அனைவரும் வாரீர்.! *தொடர்புக்கு : 7299230363*

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 10032019

பொள்ளாச்சி மாணவிகள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம். நாள் : 10.03.2019 ஞாயிறு நேரம் : மாலை 4 மணி இடம்: திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி. கண்டன உரை : “பேராசிரியர் சரசுவதி”, துணைத் தலைவர் (PUCL) திராவிடர் விடுதலைக்கழகம் – பொள்ளாச்சி.

அன்னை மணியம்மையார்  நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் தின பொதுக்கூட்டம் பெரம்பூர், சென்னை 09032019

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் தின பொதுக்கூட்டம் பெரம்பூர், சென்னை 09032019

“அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா” மற்றும் “மகளிர் தின பொதுக்கூட்டம்.” வட சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்…. நாள் : 09.03.019. சனிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : பாரதி சாலை, பெரம்பூர், சென்னை. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் ஓவியா, புதிய குரல். தோழர் சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். தோழர் மணிமேகலை. “விரட்டு” கலைக்குழுவினரின் பறையாட்டம், வீதி நாடகம் கலை நிகழ்ச்சி நடைபெறும்

உலக மகளிர் நாள் விழா ! சித்தோடு, ஈரோடு 08032019

உலக மகளிர் நாள் விழா ! சித்தோடு, ஈரோடு 08032019

இன்று (மார்ச். 8 ) மாலை ஈரோட்டில் உலக மகளிர் நாள் விழா ! ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், நாள் : 08.03.2019,வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : பெரியார் நினைவு சமத்துவபுரம்,சித்தோடு, ஈரோடு தோழர் ‘மடத்துக்குளம் மோகன்’ அவர்களின் “அறிவியல் விளக்க நிகழ்ச்சி” நடைபெறும்.

ஈரோடு தெற்கு மாவட்டத்தின் தெருமுனைக்கூட்டம் 24022019

ஈரோடு தெற்கு மாவட்டத்தின் தெருமுனைக்கூட்டம் 24022019

தெருமுனைக்கூட்டம். —————————————- சமூகநீதிக்கும் , ஒடுக்கப்பட்டோருக்கும் எதிராக காட்டாட்சி நடத்திவரும் பாசிச பாஜகவின் கொடூரத் திட்டங்களை..மக்களிடையே எடுத்துரைக்கும் வகையாக திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக பவானி சாலையிலுள்ள..மாயவரம் பகுதியில் 24 / 2 /19 ஞாயிறு மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. CM நகர் பிரபு தலைமையேற்க..சீ.ரா .சௌந்தர் , P.கிருஷ்ணமூர்த்தி உரைக்குப் பிறகு தோழர் .வீரா கார்த்தி யின் சிறப்புரையாற்றினார். கு. சண்முகப்பிரியன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு இடம் தெரிவு செய்தும் ,மின்சாரம் வழங்கியும்,  நிகழ்ச்சி முடிந்தபின் தோழர்களுக்கு தேநீர் வழங்கியும் பெரிதும் தோழமை பாராட்டி நின்றார் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தத் தோழர் .ராமகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும். நிகழ்வில் கலந்து கொண்டத் தோழர்கள் : ஜெயபாண்டி விஜயகுமார் பிடல்சேகுவேரா சத்யராஜ் குமார் கமலக்கண்ணன் கிருஷ்ணன் பிரபு விஜயரத்தினம் எழிலன்… கூட்டத்தின் முடிவில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது…. மத்திய பி.ஜே.பி. அரசின் மக்கள் விரோதப் போக்கை மக்களிடையே கொண்டுசெல்லும்...

செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் கருத்தரங்கு 23022019

செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் கருத்தரங்கு 23022019

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23 -02-19 அன்று செஞ்சியில் பெரியார் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் கருத்தரங்கு பெரியார் சாக்ரட்டீஸ் தலைமையில்  நடைபெற்றது.  மாவட்ட கழக தலைவர் பூஆ.இளையரசன் வரவேற்பு உரையாற்றினார். நிகழ்சியில்   பழங்குடி மக்கள் முன்னனி தோழர் சுடரொளி சுந்தரம்,  த.மு.மு.க சையத் உசேன்,  அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிப்பாண்டியன் ,  விடுதலைசிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன்,  சி.பி.அய் வட்டச் செயலாளர் தோழர் செல்வராசு, வர்த்தக சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர் கண்ணன்,   மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே மணி, மற்றும்  தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். நிறைவுரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நிகழ்சி தொடங்கும்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களை திராவிடர் கழக தலைவர் தஞ்சையில் நடக்கும் மாநாட்டில் அறிவித்துள்ளார். எனவே...

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மணிகண்டன்-தேன்மொழி மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.10,000 நன்கொடை

மேட்டூரில் கழக மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜன்-மு.கீதா இணையரின் மகள் தேன்மொழி-மணிகண்டன், ஜாதி மறுப்பு மண விழா, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மேட்டூரில் நடந்தது. மணவிழா மகிழ்வாக தோழர் சி.கோவிந்தராஜன், ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளார். கடந்த வார இதழில் வெளி வந்த மணவிழா செய்தியில் பிப்.3 என்பதற்கு பதிலாக ஜனவரி 3 என்று தவறாக வெளி வந்துவிட்டது. மணமகளின் தந்தை சி. கோவிந்தராஜன் பெயரில் கி. கோவிந்தராஜன் என்றும் தவறாக வெளி வந்துள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்) பெரியார் முழக்கம் 28022019 இதழ்

தூத்துக்குடியில்  ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

தூத்துக்குடியில் ‘திராவிடம் அறிவோம்’ விவாத நிகழ்வு

17.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “திராவிடம் அறிவோம்” என்ற பெயரில் புதிய தோழர்களுக்கான கேள்வி- பதில் நிகழ்வு நடைபெற்றது. இயக்கத்தில் இணைய விரும்பும் தோழர்கள், தோழமை இயக்க தோழர்கள் பெரியார், அம்பேத்கர், திராவிடம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்த அய்ய வினாக்களுக்கு விடைதேடும் நிகழ்வாக நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தோழர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்தார். புதிய தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மிகச்சிறப்பான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக இது அமைந்தது. பெரியார் முழக்கம் 28022019 இதழ்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

ஆழ்வார் திருநகரில் 10 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டித்து கழகப் பொதுக் கூட்டம்

16.02.2019 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆழ்வை ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் உயர்சாதி ஏழைகளுக்கு 10ரூ இட ஒதுக்கீடு என்ற பெயரில் சமூகநீதியை சீர்குலைக்கும் உயர்ஜாதி இடஒதுக்கீட்டைக் கண்டித்து ஆழ்வார் திருநகரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய திவிக தலைவர் நாத்திகம் முருகேசனார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திவிக தலைவர் கோ.அ.குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ச.இரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், பால்ராசு,  பிரபாகரன், ஆதித் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரா.வே.மனோகர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் உயர்ஜாதி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

20.02.2019 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில், திராவிடர் விடுதலைக் கழக சார்பில் உயர் ஜாதியினருக்கு 10ரூ இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து கள்ளக்குறிச்சி நகர அமைப்பாளர் மு.சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிதாசன், கார்மேகம், ஆசைத்தம்பி, நாகராஜ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ச.கு. பெரியார் வெங்கட், மாவட்ட செயலாளர க, இராமர், மாவட்ட அமைபாளர் சி,சாமிதுரை, மாவட்ட தலைவர் க. மதியழகன் சங்கை ஒன்றிய அமைப்பாளர் செ.வே. ராஜேஷ்,  பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன் நிறைவுரையாற்றினார். காரனுர் மணி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 28022019 இதழ்

பொழிலனின்  “தமிழ் தேசம்” நூல் வெளியீடு

பொழிலனின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு

சென்னை புத்தகக் கண்காட்சி 300 அரங்கில் பொழிலன் முன்னிலை யில் (அருவி புத்தக உலகம்) கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘தமிழ் தேசம்” என்ற நூலை ஜனவரி 11ஆம் தேதி மாலை வெளியிட்டார். இந் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பிறகு அரங்கு 222 (பொதுமை பதிப்பகத்தில்) வேல் முருகன் நூலை வெளியிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்று கொண்டு உரையாற்றினார்கள். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

கழகத்தின் மாவட்ட செயலாளர் மேட்டூர் கி.கோவிந்தராஜ்-மு.கீதா இணையரின் மகள் கீ.கோ. தேன்மொழி – திருப்பூர் நா. பரமசிவம்-ப. மாலதி ஆகியோரின் மகன் கழகத் தோழர் ப. மணிகண்டன் ஆகியோர் ஜாதி-சடங்கு மறுப்பு மண விழா ஜன. 3, 2019 பகல் 11 மணியளவில் மேட்டூர் அணை அரசப்பா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். மாவட்ட கழகத் தலைவர் ப.கு. சூரிய குமார் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ. தமிழரசு, காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) நா. முனியன் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியும் பறை இசையும் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு வந்திருந்தனர். அனைவரும் ‘தமிழின உரிமைக்கு எதிரி யார்?’ நூல் பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

திருப்பூர் மாஸ்கோ நகரில்  தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா

திருப்பூர் மாஸ்கோ நகரில் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா

திருப்பூரில் நடந்த பொங்கல் விழாவில் கழகப் பொருளாளர் துரைசாமி மற்றும் கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினர். 27.01.2019 ஞாயிறு அன்று  காலை 8.00 மணி முதல் மாலை வரை சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி பெரியார் திடல், மாஸ்கோ நகரில் நடைபெற்றது காலையில் முதல் நிகழ்வாக பொங்கல்  வழங்கி மாவட்ட தலைவர் முகில்ராசு தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் அகிலன் மற்றும் மாநகர செயலாளர் மாதவன்   விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தினர் மாலை ‘விரட்டு” கலைக் குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் நடை பெற்றது. பகுத்தறிவு கருத்துகளை எளிய முறையில் நாடக வடிவில் மக்களிடம் பரப்பினர். நிகழ்வில் பறையாட்டம், ஒயிலாட்டம், மயில் காளை ஆட்டம், மான்கொம்பு ஆட்டம், பாடல்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் பெரியார் முழக்கம் 07022019 இதழ்

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா எனும் சிவக்குமார் – ஜெயந்தி (கழகத் தோழர் முழக்கம் உமாபதியின் சகோதரி) ஜாதி மறுப்பு மணவிழா ஜனவரி 27ஆம் தேதி பெண்ணாடம் வள்ளலார் மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குனர் கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.  கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் உமாபதி, இளையராஜா, சூலூர் பன்னீர் செல்வம் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனிப் பேருந்தில் மணவிழாவுக்கு வந்திருந்தனர். மணமக்கள் வரவேற்பு சென்னை இராஜா அண்ணாமலைபுரம் சமூக நலக் கூடத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிறப்புடன் நிகழ்ந்தது. கழகத் தோழர்கள் உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சி நிதிக்கு மணமக்கள்...

திருப்பூர் தொழில் துறையை சீரழித்த மோடிக்கு கறுப்புக் கொடி

திருப்பூர் தொழில் துறையை சீரழித்த மோடிக்கு கறுப்புக் கொடி

திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் ஜனவரி 10, 2019 அன்று திருப்பூர் இரயில் நிலையம் பெரியார்-அண்ணா சிலை அருகே மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். ‘ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் கொள்கையால் திருப்பூரில் சிறு, குறு தொழில்களுக்கு மூடு விழா நடத்திய மோடியே திரும்பிப் போ’ என்று முழக்கமிட்டனர். த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பூர், மேட்டூர், ஈரோடு, நாமக்கல்பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். கூட்டமைப்பு சார்பில் 330 தோழர்கள் கைது செய்யப்பட்டு இரவு விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா

மதவெறியர்களால் மிரட்டப்பட்ட ஓவியர் முகிலனுக்கு பாராட்டு விழா

இலயோலா கல்லூரி வீதி திருவிழவில் இந்துத்துவப் பாசிசத்தைப் படம் பிடிக்கும் முகிலனின் ஓவியக் கண்காட்சி  இடம் பெற்றிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த சில படங்கள் இந்துக்களைப் புண்படுத்துவதாக பா.ஜ.க. தலைவர் தமிழிசை உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓவியர் முகிலனை மிரட்டினர்.  இதைத் தொடர்ந்து ஓவியர் முகிலனுக்கு திராவிடர் விடுதலைக் கழக சார்பில்  01.02.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஓவியர் முகிலனுக்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் தலைமையில் கழகத் தலைமை அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. ஓவியர் முகிலனுக்கு கழகப்  பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சால்வை அணிவித்து பெரியார் சிலை மற்றும் புத்தகம் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி ஆகியோர் முகிலன் அவர்களின் ஓவியங்கள் குறித்தும் இந்துப் பார்ப்பனியப் புரட்டு வாதங்களையும் அம்பலப்படுத்தி  உரையாற்றினர். நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். பெரியார்...

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் 09.01.2019 அன்று காலை 11.00 மணியளவில் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ஈரோடு ரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் நா. இளையராஜா வரவேற்றார். கழக வார பத்திரிகை புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் மாத இதழ் நிமிர்வோம் சந்தா தலைவரிடம் கொடுக்கப்பட்டது. கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை கழகத் தலைவர் அறிவித்தார். மாவட்டத் தலைவர்  ம.மகாலிங்கம்; மாவட்ட செயலாளர் தெ.மகேசு; மாவட்ட பொருளாளர் ந.விஜயராகவன்; மாவட்ட அமைப்பாளர் கு.செந்தில் குமார்; மாவட்ட துணைத் தலைவர் தெ. ரமேஷ்; மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் நன்மாறன் மயிலாடுதுறை நகரம்: நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர்; நகர செயலாளர் நி.நடராசன்; நகர அமைப்பாளர் தில்லை நாதன்; நகர துணை தலைவர் ராஜராஜன்; நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன்....

விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்

விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்

தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்து வந்தது விழுப்புரம் மாவட்டம். பொதுமக்கள் தங்களது பல்வேறு துறை சார்ந்த வேலைகளுக்காகவும்  மாவட்ட ஆட்சியர் சந்திப்பதற்கும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கல்லக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கும்படி தமிழக அரசுக்கு பொதுமக்களும் கட்சிகளும் இயக்கங்களும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தன. இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கல்லக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக அரசை  வாழ்த்தி நன்றி தெரிவிக்கும் விதமாக கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கல்லக்குறிச்சி மாவட்டத்தில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டன. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

நாகர் கோயிலில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகர் கோயிலில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

சாலை மற்றும் வீதிகளிலும் அரசுஅலுவலகங்களிலும் சாதிப் பெயர்களை அகற்றக் கோரி தெற்கு எழுத்தாளர் இயக்கம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 28.01.2019 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தியது. திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம். சார்பாக தோழர்கள் தமிழ்மதி, நீதிஅரசர் ஆகியோர் கலந்து கொண்டு பெரியாரியல் கருத்துகளை எடுத்துரைத்தனர். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ நூல் வெளியீடு

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ நூல் வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் வெளி யிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் தோழர் ஈஸ்வரன் முதல் படியை பெற்றுக்கொண்டார் உடன் கவிநிலா பதிப்பகம் தோழர் பாரதி வாசன், கவிஞர் து சோ பிரபாகர், தாய் தமிழ் பள்ளி தாளாளர் எழில், சூலூர் பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டு மய்யம் தோழர் யோகி செந்தில், சேரன் வரைகலை தோழர் ஆனந் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்தனர் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாவட்ட தலைவர் முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா மற்றும் மாவட்ட அமைப்பாளர் தோழர் மாதவன் மற்றும் தோழர் தனபால் உடனிருந்தனர்                                     செய்தி :  விஜய்குமார் பெரியார் முழக்கம் 07022019 இதழ்

பெங்களூர் வந்த இராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி

பெங்களூர் வந்த இராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி

9-02-2019 காலை 10 மணி அளவில் ‘இந்திய இலங்கை வெளியுறவு கொள்கையின் எதிர்காலம்’  என்ற தலைப்பிலான  இந்துக் குழும நிகழ்வில்  கலந்து கொள்ள பெங்களூருக்கு வந்த இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெங்களுர் ப்ரீடம் பார்க் அருகில் நடந்தது. கருநாடக தமிழர் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 300 பேர் இந்திய சிங்கள இனக்கொலை கூட்டணியை  அம்பலப்படுத்தியும் இனக்கொலையாளி இராஜபக்சேவே திரும்பிப் போ என்றும் இனக்கொலைக்கு துணை போகிற இந்துக் குழுமம் ராமை கண்டித்தும் எழுச்சியுடன் முழக்கமிட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம், கருநாடக தமிழர் கட்சி, நாம் தமிழர் கட்சி, கருநாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம், பாசிச எதிர்ப்பு  கூட்டமைப்பு, கருநாடக தமிழர் பேரவை, கன்னட தமிழர் பெடரேசன், கருநாடக தமிழ் மக்கள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்க வயல் நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை, இளந்தமிழகம்,  மே 17...

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து… பிப்ரவரி 2019 மாத இதழ்

நிமிர்வோம் தடைகளைத் தகர்த்து… பிப்ரவரி 2019 மாத இதழ்

*”நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….* திராவிடர் விடுதலைக் கழகத்தின் *”பிப்ரவரி 2019″* மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📚 *தலையங்கம் – அண்ணா தந்த அறிவாயுதங்கள்* 🗞🖋 *வைதீகத்தைத் துளைத்தெடுத்த அண்ணாவின் எழுத்துகள்* 💯 *கீழ்வெண்மணி மறைக்கப்பட்ட வரலாறு* 📜 *10 சதவீத ஒதுக்கீடு : ஒரு ஆய்வு* 📢 *பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்* 🌍 *மோடி பூமியின் காவலரா?* 💸 *பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் ரூ.70,000/- கோடி* 👶 *மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது…சமீபத்திய ஆய்வு முடிவுகள்* இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 *அஞ்சல் வழியாக பெற – ₹ 300/-* 💰 *தனி இதழ் விலை – ₹ 20/-* *தொடர்புக்கு : 7299230363*

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள் கருத்தரங்கம் சென்னை 24022019

வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள் கருத்தரங்கம் சென்னை 24022019

பிப்ரவரி 24 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை நிருபர்கள் சங்கத்தில் #காந்தியார் நினைவு நாள் #வரலாற்றில்_பார்ப்பனிய_வன்முறைகள்கருத்தரங்கத்தை திராவிடர் விடுதலை கழகம் நடத்துகிறது. சிறப்புரையாற்றுவோர்: தோழர் : #கொளத்தூர்_மணி தலைவர், திராவிடர் விடுதலை கழகம் ( காந்தியார் கொலையின் பிண்ணணி) தோழர் : #விடுதலை_ராசேந்திரன் பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம். (புத்தம் – சமணத்தை வீழ்த்திய பார்ப்பனிய வன்முறை) தோழர் : ம.கி.எ. #பிரபாகரன் (இராமன் அயோத்தியில் பிறந்தானா? வரலாறும் கற்பிதங்களும்) தோழர் : #துரை (இந்து ராஷ்டிரத்து ரத்த சாட்சிகள் தபோல்கரிலிருந்து கவுரி லங்கேஷ் வரை) அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு : 9962190066 / 7299230363.

நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 07022019

நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை 07022019

தமிழ்நாடு திராவிடர் கழகம் நடத்திய 28 ஆண்டுகளாக சிறைவாசம் இன்னமும் தொடர்வது நியாயம்தானா? நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கம் விளக்கப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 07, 2019 அன்று மாலை 6 மணிக்கு இராயப்பேட்டை , வி.எம்.தெருவில் நடந்தது #தொடக்கவுரை : தோழர்.க.சு.நாகராஜ் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு திராவிடர் கழகம் #சிறப்புரை : தோழர்.தனியரசு.,எம்.எல்.ஏ தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக தோழர்.திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பாளர், மே17 தோழர்.பொழிலன் தமிழக மக்கள் முன்னணி நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் சென்னை திவிக சார்பில் உணவு வழங்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு

திருப்பூர் புத்தக திருவிழா நிமிர்வோம் 35 அரங்கில் கருஞ்சட்டை கலைஞர் புத்தக வெளியீடு புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் வெளியிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் தோழர் ஈஸ்வரன் முதல் படியை பெற்றுக்கொண்டார் உடன் கவிநிலா பதிப்பகம் தோழர் பாரதி வாசன், கவிஞர் து சோ பிரபாகர், தாய் தமிழ் பள்ளி தாளாளர் எழில், சூலூர் பன்னீர்செல்வம், தமிழ் பண்பாட்டு மய்யம் தோழர் யோகி செந்தில், சேரன் வரைகலை தோழர் ஆனந் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்தனர் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாவட்ட தலைவர் முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா மற்றும் மாவட்ட அமைப்பாளர் தோழர் மாதவன் மற்றும் தோழர் தனபால் உடனிருந்தனர் செய்தி – விஜய்குமார்

பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி”

பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி”

நாளை பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி” கழகத் தலைவர் அறிவிப்பு : GST வரியால்  திருப்பூர் பனியன் தொழில் துறை கடும் வீழ்ச்சியடையவும், கோவை சிறுதொழிற்கூடங்கள் ஆயிரக்கணக்கில் மூடவும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கவும் காரணமானவர் பாஜக பிரதமர் மோடி எந்த பயனும் அளிக்காத பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எனும் பெயரில் ஏழை எளிய மக்களை இரவிலும் பகலிலும் தெருவில் நிறுத்தி பல பேர் உயிரிழக்க காரணமானவர் பாஜக பிரதமர் மோடி ஸ்டைர்லைட், மீத்தேன், சாகர் மாலா, கூடங்குளம் என தமிழ்நாட்டை நாசமாக்கும் திட்டங்களை ஆதரிப்பவர் பாஜக பிரதமர் மோடி. 10% பொருளாதார இடஒதுக்கீடு எனும் பெயரில் அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிராக சமூக நீதியை குழி தோண்டி புதைக்க முயல்பவர் பாஜக பிரதமர் மோடி. புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை, புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடக் கூட வராமல் இப்போது தேர்தலுக்காக தமிழ்நாடு வருபவர் பாஜக பிரதமர் மோடி. தனது...

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி

“கருஞ்சட்டைக் கலைஞர்” – தோழர் கொளத்தூர் மணி. திருச்செங்கோடு கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய முழு உரை நூல் வடிவில் திராவிடர் விடுதலைக் கழக வெளியீடு…. விற்பனையில்…. *நன்கொடை ₹ 30/-* தொடர்புக்கு : 9841489896/ 044-24980745

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி !

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி !

திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி ! பிப்.10 ஞாயிறு அன்று ! ”மோடியே திருப்பிப்போ!” எனும் முழக்கத்தோடு ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்கிறார் ! நாள் : 10.02.2019 ஞாயிறு நேரம் : பிற்பகல் 1.00 மணி இடம் : புதிய பேருந்து நிலையம், திருப்பூர் தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை அறிவிக்கும் மோடியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு ! பன்னாட்டு முதலாளிகளின் எடுபிடி மோடியே திரும்பிப் போ ! ஒருங்கிணைப்பு : பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு. தொடர்பு எண் : முகில் இராசு – 98422 48174

சங்கராபுரம் ஆணவப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம்

சங்கராபுரம் ஆணவப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம்

பெரியார் அம்பேத்கர் நினைவு நாட்களை முன்னிட்டு  “தமிழக அரசே ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்று” என்கிற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் பாக்கம் (சங்கராபுரம்)  கிராமத் தில் 19.12.2018 (தி.பி. 2049 புதன்) அன்று மாலை 5 மணி அளவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. “அன்னை மணியம்மை”  இசைக் குழுவினரின் பறை இசை மற்றும் பகுத்தறிவு சாதி ஒழிப்பு பாடல்களுடன் கூட்டம் தொடங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் நாகராசன், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். கூட்டத்திற்கு இரா.துளசிராசா தலைமை வகித்தார். பெரியார் பிரபு வரவேற்புரை ஆற்றினார். தனிமொழி, சோபனா, முத்துலட்சுமி, செந்தாமரை, சத்யா  மற்றும் இராமச்சந்திரன், நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்தினசாமி, துரைசாமி, அய்யனார், இராமர்,பெரியார் பாரதிதாசன் ஆகியோர்  ஆணவக் கொலைகளின் பாதிப்புகள் குறித்து உரையாற்றினார்கள். கூட்டத்தில் சாதி மறுப்பு திருமணமும் நடைபெற்றது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் நூரோலையைச் சேர்ந்த ரஷ்யா ஆகிய...

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ அரங்கு

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ‘நிமிர்வோம்’ அரங்கு

கழகத்தின் “நிமிர்வோம்” இதழ் அரங்கு கடந்த ஆண்டைப் போலவே திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக அரங்கு (எண்.35) தனியே எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை கண்காட்சி நடைபெறுகிறது. அரங்கில் கழக வெளியீடுகள்,  பெரியாரிய, அம்பேத்கரிய மார்க்சிய நூல்களும் கிடைக்கும். தொடர்புக்கு  : முகில் ராசு 9842248174, விஜய்குமார் 9841653200, கவிஞர் தம்பி 9789381010 பெரியார் முழக்கம் 07022019 இதழ்

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் உயர்சாதியினருக்கான 10ரூ இடஒதுக்கீடு திட்டத்தை கண்டித்துக்  கல்லக்குறிச்சி  மாவட்டம் சங்கராபுரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மொழிப் போர் தியாகிகளின் தினமான 25-01-2019 (வெள்ளி) அன்று  அவர்களின் நினைவாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலியோடு ஆர்பாட்டம் தொடங்கியது. மாவட்ட துணைச் செயலாளர். மு.நாகராசு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் செ.வே.இராசேசு, க.மதியழகன், க.இராமர்,பூ.ஆ.இளையரசன் ஆகியோர்  இட ஒதுக்கீடு வரலாறு குறித்தும் உயர்சாதியினருக்கான 10ரூ இட ஒதுக்கீட்டின் பாதிப்புகள் குறித்தும் உரையாற்றினார்கள்.தலைமை செயற்குழு உறுப்பினர் ந. அய்யனார் பல்வேறு கருத்துகளை தொகுத்து இறுதி உரையாற்றினார்.செ.க.வேலாயுதம் நன்றி உரையாற்றினார். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மத அடையாளமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மத அடையாளமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் முகப்பை ஒரு குறிப்பிட்ட மத அடையாளமான கோபுர வடிவில் அமைப்பது இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது என்பதால் அந்த வடிவமைப்பை கைவிட வேண்டும் என்றும் மேம்படுத்தப்படும் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் என்றும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழத்தின் மதுரை மாவட்ட செயலாளர்  மா.பா.மணியமுதன் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றினாலோ, மத அடையாள வடிவமைப்பை வைத்தாலோ தோழமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் அறிவிக்கப்படும் என அறிவித்தார். தற்போது “தந்தை பெரியார் பேருந்து நிலையம் எனும் பெயர் மாற்றப்படாது” என மதுரை மாநகராட்சி...

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது. உள்ளுக்குள் பொறுமியவாறு சடங்குத்தனமாக உரையாற்றி விட்டு பறந்தார் மோடி. நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள். “தேர்வு கால பதற்றத்தை கையாள்வது எப்படி’’ என்பது மோடியின் நிகழ்ச்சிகளுள் ஒன்று. இந்தியில் இதற்குப் பெயர் “பரிக்ஷா பே சர்ச்சா 2.0’’ பதட்டம் குறையுதோ இல்லையோ நிகழ்ச்சியின் பெயரைக் கேட்டாலே மாணவர்களுக்கு எரிச்சல் வருவது நிச்சயம். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் நேரலையில் கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யச் சொல்லி “மேலிட உத்தரவாம்’’. கல்லூரியின் பெரியார் கலையரங்கத்தில் ‘படம் காட்ட’ ஏற்பாடுகளை செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என மிரட்டி வரவழைத்திருக் கின்றனர். இவற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், “கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’...

மொழிப் போர் தியாகிகள் நினைவுத் தூண்களுக்கு தோழர்கள் மரியாதை

மொழிப் போர் தியாகிகள் நினைவுத் தூண்களுக்கு தோழர்கள் மரியாதை

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுநாளில், அ.வ.அ.கல்லூரி வாயிலில் அமைந்துள்ள மொழிப்போர் ஈகி சாரங்கபாணி நினைவுதூணில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள். விசிக திருச்சி மாவட்ட நெறியாளர் வேலு.குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு. மகேசு கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 31012019 இதழ்

ஈழ விடுதலைப் போராளி முத்துக்குமாருக்கு தோழர்கள் வீர வணக்கம்

ஈழ விடுதலைப் போராளி முத்துக்குமாருக்கு தோழர்கள் வீர வணக்கம்

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த முத்துக்குமார் நினைவு நாளான 29.1.2019 அன்று கொளத்தூர், சென்னை பகுதியில் அமைந்துள்ள முத்துக்குமார் நினைவிடத்தில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்து வீர வணக்கத்தை செலுத்தினார். இதில் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு  அய்யப்பன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, அருண், கன்னியப்பன், முரளி, வடசென்னை பாஸ்கர், தட்சணாமூர்த்தி ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர். பெரியார் முழக்கம் 31012019 இதழ்

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார்

‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார்

விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்’ இரண்டாம் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. நூலின் விலை ரூ.25. பக்கங்கள் 40. ‘நாளை விடியும்’ இதழாசிரியரும் பெரியாரியலாளருமான திருச்சி அரசெழிலன், தனது  சொந்த செலவில் இந்த நூலை அச்சிட்டு கழகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏற்கனவே ‘காந்தியைத் துளைத்த கோட்சேயின் குண்டுகள்’ எனும் விடுதலை இராசேந்திரன் எழுதிய நூலை இதேபோல் தனது சொந்த செலவில் அச்சிட்டு கழகத்துக்கு வழங்கினார். கழகத்தின் இயக்கப் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தோழர் அரசெழிலன் அவர்களுக்கு கழக சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். – ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 31012019 இதழ்

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி

மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி காட்டச் சென்ற 500க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மோடியின் பார்ப்பன இந்துத்துவா கொள்கையினால் தமிழ்நாடு கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அவர் திடீரென்று அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழ்நாட்டில் நடுத்தர ஏழை மக்களும் தங்களின் வங்கிச் சேமிப்புப் பணத்தை அன்றாட செலவுக்காக எடுப்பதற்கு பல மணி நேரம் கியூவில் காத்திருந்தனர். அவரது இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்ததது என்பதை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பலரும் குற்றம் ச hட்டினர். செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், கருப்பு பணம் முடங்கிவிடும் என்ற மோடியின் அறிவிப்பு செல்லாத அறிவிப்பாகி 95 சதவீத கருப்புப் பணம் மீண்டும் வெள்ளைப் பணமாக வங்கிக்கே திருப்பி வந்து விட்டது. நுழைவுத் தேர்வு கிராமப்புற மக்களைப் பாதிக்கும் என்று தமிழகம் நுழைவுத் தேர்வையே இரத்து...

வாழ்க்கை இணையேற்பு விழா தேன்மொழி – மணிகண்டன் மேட்டூர் 03022019

வாழ்க்கை இணையேற்பு விழா தேன்மொழி – மணிகண்டன் மேட்டூர் 03022019

வருகின்ற 03-02-2019 ஞாயிறு காலை 11 மணியளவில் மேட்டூர் நகரில் திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு அவர்களின் மகள் கீ.கோ.தேன்மொழிக்கும் திருப்பூர் தோழர் ப.மணிகண்டன் அவர்களுக்கும் ஜாதி – சடங்கு மறுப்பு வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா மேட்டூர் அரசப்பா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் தலைமையேற்கவும்  கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை க.இராசேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.

குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

ஏற்கனவே 21.01.2019 அன்று, கொளத்தூர் மணி மற்றும் கோவை இராமகிருட்டிணன் சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்கள் பெரியாரின் எழுத்தும் பேச்சும் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது ஆகவே யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பல ஆவணங்களையும், உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற தீர்ப்புகளையும் காரணம் காட்டி வாதிட்டார். மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி அவர்கள் சார்பாக வழக்கறிஞர் திரு வீரசேகரன் ஆஜராகி இரண்டு புதிய ஆவணங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். அதில் ஒரு ஆவணம் வரும் 31.01.2019 அன்று கோவையில் நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில் மூவரும் அதாவது திரு கி.வீரமணி, திரு கொளத்தூர் மணி மற்றும் திரு இராமகிருட்டிணன் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள், அதற்கான அழைப்பிதழ் என்றும் மற்றொன்று மேற்படி அழைப்பிதழ் விடுதலை பத்திரிக்கையில் பிரசுரம் ஆகி உள்ளது என்றும்...

ஓவியர் முகிலன் அவர்களுக்கு திவிக நடத்தும் பாராட்டு விழா 01022019

ஓவியர் முகிலன் அவர்களுக்கு திவிக நடத்தும் பாராட்டு விழா 01022019

ஓவியர்.முகிலன் அவர்களுக்கு #திவிக நடத்தும் #பாராட்டு விழா. நாள் : 01.02.2019 நேரம்: மாலை 4 மணிக்கு இடம் : திவிக தலைமை அலுவலகம் பேச. : 7299230363/9962190066. அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் மதுரை திவிக கோரிக்கை

தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் மதுரை திவிக கோரிக்கை

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் முகப்பை ஒரு குறிப்பிட்ட மத அடையாளமான கோபுர வடிவில் அமைப்பது இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது என்பதால் அந்த வடிவமைப்பை கைவிட வேண்டும் என்றும் மேம்படுத்தப்படும் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் என்றும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் மா.பா.மணியமுதன் அவர்கள் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றினாலோ,மத அடையாள வடிவமைப்பை வைத்தாலோ தோழமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் அறிவிக்கப்படும் என் அறிவித்தார். தற்போது ”தந்தை பெரியார் பேருந்து நிலையம் எனும் பெயர் மாற்றப்படாது” என மதுரை மாநகராட்சி...

திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019  திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு

திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019 திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு

“திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019” அரங்கு எண் : 35 திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு. நாள் : ஜனவரி 31 to பிப்ரவரி 10 வரை. நேரம் : காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை. இடம் : பத்மினி கார்டன்,காங்கேயம் சாலை, திருப்பூர். எமது அரங்கில் பெரியாரிய,அம்பேத்கரிய மார்க்சிய புத்தகங்களும், திவிக மாத இதழ், வார ஏடு ஆகியவை கிடைக்கும். தொடர்புக்கு : தோழர் முகில் ராசு 9842248174

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து  ”மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி !”

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து ”மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி !”

பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து ”மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி !” மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி காட்டச் சென்ற 500க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மோடியின் பார்ப்பன இந்துத்துவா கொள்கையினால் தமிழ்நாடு கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அவர் திடீரென்று அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழ்நாட்டில் நடுத்தர ஏழை மக்களும் தங்களின் வங்கிச் சேமிப்புப் பணத்தை அன்றாட செலவுக்காக எடுப்பதற்கு பல மணி நேரம் கியூவில் காத்திருந்தனர். அவரது இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்ததது என்பதை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பலரும் குற்றம் ச hட்டினர். செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், கருப்பு பணம் முடங்கிவிடும் என்ற மோடியின் அறிவிப்பு செல்லாத அறிவிப்பாகி 95 சதவீத கருப்புப் பணம் மீண்டும் வெள்ளைப் பணமாக வங்கிக்கே திருப்பி வந்து விட்டது. நுழைவுத் தேர்வு...

காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் ! கோவை 31012019

காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் ! கோவை 31012019

இன்று (31.01.2019) மாலை கோவையில் காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வீரமணி, த.பெ.தி.க.பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார்கள். நாள் : 31.01.2019 வியாழக்கிழமை, நேரம் : மாலை 5.00 மணி இடம் : வி.கே.கே.மேனன் சாலை, புதுசித்தாப்புதூர், கோவை.