‘வீர சாவர்க்கார் யார்?’ நூல் விற்பனைக்குத் தயார்

விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்’ இரண்டாம் பதிப்பாக வெளி வந்திருக்கிறது. நூலின் விலை ரூ.25. பக்கங்கள் 40.

‘நாளை விடியும்’ இதழாசிரியரும் பெரியாரியலாளருமான திருச்சி அரசெழிலன், தனது  சொந்த செலவில் இந்த நூலை அச்சிட்டு கழகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏற்கனவே ‘காந்தியைத் துளைத்த கோட்சேயின் குண்டுகள்’ எனும் விடுதலை இராசேந்திரன் எழுதிய நூலை இதேபோல் தனது சொந்த செலவில் அச்சிட்டு கழகத்துக்கு வழங்கினார்.

கழகத்தின் இயக்கப் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தோழர் அரசெழிலன் அவர்களுக்கு கழக சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்.

– ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம்

பெரியார் முழக்கம் 31012019 இதழ்

You may also like...