காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர், பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், பொருளாளர் மாவட்டம் தோறும் கழகத் தோழர்களை சந்தித்து உரையாடி வருகிறார்கள். சில பகுதிகளில் மாவட்டக் கழக அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. கழக ஏடுகளுக்கு ‘சந்தா’க்களை தோழர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல மாவட்ட கலந்துரையாடல் செய்திகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதி மாலை கூடுவாஞ்சேரி தலைநகர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட பொறுப்பாளர் களை கழகத் தலைவர் அ றிவித்தார்.

மாவட்டத் தலைவர் செ.கு. தெள்ளமிழ்து; மாவட்ட செயலாளர் மு. தினேசுகுமார்; மாவட்ட அமைப்பாளர் கா. இரவிபாரதி; மாவட்ட துணைத் தலைவர் சி. சிவாஜி; மாவட்ட துணை செயலாளர் சு. செங்குட்டுவன்; மாவட்ட இளைஞரணி தலைவர் மூ. ராஜேஷ்; மாவட்ட இளைஞரணி செயலாளர் ஊமைத்துரை; மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந. இராமஜெயம்; கூடுவாஞ்சேரி நகர அமைப்பாளர் கோபி, குன்றத்தூர் நகர அமைப்பாளர் கரிகாலன்.

சென்னை மாவட்டம் : சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 21ஆம் தேதி காலை 11 மணியளவில் இராயப்பேட்டையிலுள்ள ஆனந்த் அரங்கில் நடந்தது. கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள், கழக வளர்ச்சி, கழகச் செயல்பாடுகள் குறித்துப் பேசினர். கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.

எம்.ஜி.ஆர். நகர் பகுதி : தலைவர் ஜெயசீலன்; செயலர் பெரியார் மணிமொழியன்; பொருளாளர் சு. துரைராசு.

விருகம்பாக்கம் பகுதி : தலைவர் க. செல்வம்; செயலாளர் தம்பி தமிழ் சேக்வரா; பொருளாளர் மூவேந்தோர்.

இராமபுரம் பகுதி : தலைவர் சுப்பிரமணி; செயலாளர் மணிபாரதி; பொருளாளர் குலசேகரன்.

கே.கே. நகர் பகுதி : தலைவர் ஆசிரியர் இளங்கோ, செயலாளர் டெய்லர் கண்ணன்; பொருளாளர் கவிஞர் மன்னார்.

வடசென்னை பொறுப்பாளர்கள் : மாவட்டத் தலைவர் முனுசாமி; மாவட்ட செயலாளர் ராஜீ; மாவட்ட அமைப்பாளர் தட்சணாமூர்த்தி.

பெரியார் முழக்கம் 10012019 இதழ்

You may also like...