பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி”

நாளை பிப்.10 திருப்பூரில் “மோடிக்கு கருப்புக்கொடி”

கழகத் தலைவர் அறிவிப்பு :

GST வரியால்  திருப்பூர் பனியன் தொழில் துறை கடும் வீழ்ச்சியடையவும், கோவை சிறுதொழிற்கூடங்கள் ஆயிரக்கணக்கில் மூடவும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கவும் காரணமானவர் பாஜக பிரதமர் மோடி

எந்த பயனும் அளிக்காத பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எனும் பெயரில் ஏழை எளிய மக்களை இரவிலும் பகலிலும் தெருவில் நிறுத்தி பல பேர் உயிரிழக்க காரணமானவர் பாஜக பிரதமர் மோடி ஸ்டைர்லைட், மீத்தேன், சாகர் மாலா, கூடங்குளம் என தமிழ்நாட்டை நாசமாக்கும் திட்டங்களை ஆதரிப்பவர் பாஜக பிரதமர் மோடி.

10% பொருளாதார இடஒதுக்கீடு எனும் பெயரில் அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிராக சமூக நீதியை குழி தோண்டி புதைக்க முயல்பவர் பாஜக பிரதமர் மோடி.

புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை, புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடக் கூட வராமல் இப்போது தேர்தலுக்காக தமிழ்நாடு வருபவர் பாஜக பிரதமர் மோடி.

தனது ஆட்சியில் தமிழர்களை வஞ்சித்த பாஜக பிரதமர் மோடி நாளை 10.02.2019 அன்று திருப்பூர் வருகிறார்.

பாஜக மோடியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த குரலாய் நம் கண்டனங்களை பதிவு செய்ய ” மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம்” நாளை (10.02.2019) மதியம் 1.00 மணியளவில் திருப்பூர் பெருமாநல்லூர் சாலை புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ளது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு தோழமை அமைப்புகள் கலந்து கொள்ளும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

கொளத்தூர் தா.செ.மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக்கழகம்.
09.02.2019.

(மோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பங்கேற்கிறார். கழகத் தோழர் தவறாமல் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வலிமைப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்)

You may also like...