இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம் கொளத்தூர் 30122018

இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம்.

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் பகுதி தோழர் சரவணபரத் மற்றும் பிரியதர்சினி ஆகியோரது இணை அறிமுக விழா 30.12.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் , கொளத்தூர் ஒன்றியம் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக காலை 10 மணியளவில் அய்யம்புதூரைச் சார்ந்த பெரியார் பெரும் தொண்டர் தோழர்.சி.சுப்பிரமணி அவர்கள் அய்யம்புதூர் பகுதியில் அமைப்பின் கொடிகம்பத்தை நிறுவி , கொடியேற்று விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் .தோழர்.விடுதலை.இராசேந்திரன் அமைப்புக் கொடியை ஏற்றினார்.

பின்னர் ஊர்வலமாக தோழர்கள் அனைவரும் சென்றனர்.

அதற்கடுத்து காலை 11 மணியளவில் பெண்விடுதலைக் கருத்தரங்கம் நடைபெற்றது.

திவிக பொருளாளர். தோழர்.துரைசாமி தலைமை வகித்தார் .

சேலம் மாவட்ட தலைவர் தோழர்.சூரியக்குமார் முன்னிலை வகித்தார்.
தோழர்.ரத்தினசாமி மற்றும் தோழர்.சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) ஆகியோர் இணையர்களை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினர்

இணையேற்பு உரிமையும் பெண்ணும் என்ற தலைப்பில்.தோழர்.கௌசல்யா.

பெண்களை இழிவுபடுத்தும் சாஸ்திர சம்பரதாயங்கள் என்றத் தலைப்பில்.தோழர்.விடுதலை.இராசேந்திரன். அவர்களும்.

இராமனா?இராவணனா என்ற தலைப்பில்.
தோழர்.கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

இணை அறிமுக விழாவை ஒட்டி தோழர்.சரவணபரத் குடும்ப நிதியாக ரூபாய்.5000 ஐ தோழர்.செல்வி , வழங்கினார்

You may also like...