Author: admin

கழக ஏட்டுக்கு 100 சந்தா;  கால்பந்து போட்டிகள்  மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

கழக ஏட்டுக்கு 100 சந்தா; கால்பந்து போட்டிகள் மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

27.09.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்மேரீஸ் பாலம் அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி சார்பாக மாநில சுயாட்சியின் நாயகன் டாக்டர் கலைஞர் நினைவரங்கில் பெரியாரின் 140வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் கால்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை த.குமரன் தலைமையில், தோழர்கள் பி.அருண், து.அரவிந்தன், இரா.பரணிதரன் ஆகியோர் முன்னிலை யில் சீ.பிரவீன் குமார் வரவேற்புரையாற்ற தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாறன் ஒருங்கிணைத்தார். முதல் நிகழ்வாக புதுகை பூபாளம் குழுவினரின் பகுத்தறிவு, நையாண்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பகுதி மக்கள் ஓரணியாகத் திரண்டு வந்து பகுத்தறிவு கருத்துகளைக் கேட்டு சிந்தித்தனர். அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள் அருண்,  திருமூர்த்தி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ச்சியாக ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான், கழகத் தலைவர் கொளத்தூர் மணி...

ஏழு தமிழர் விடுதலை : ஆளுநரின் தாமதம் சட்டப்படி சரியானதல்ல

ஏழு தமிழர் விடுதலை : ஆளுநரின் தாமதம் சட்டப்படி சரியானதல்ல

ஏழு தமிழர்கள் விடுதலையில் அமைச்சரவை யின் முடிவை ஆளுநர் தாமதப்படுத்துவது சட்டப்படி சரியானது அல்ல என்பதை விளக்கி வழக்கறிஞர் மனுராஜு சண்முக சுந்தரம், ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரையும் விடுதலை செய்து உத்தரவிடுவதை மேலும் தாமதப்படுத்துவது ‘சட்டத்தின் முன்னால் சமமாக நடத்தப்படுவதோ அல்லது சட்டப் பாதுகாப்போ எந்தவொரு நபருக்கும் மறுக்கப்படக் கூடாது’ என்று வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் 14-வது கூற்றை மீறுவதாகும். ஏழு தமிழர்களின் வழக்கு ஏராளமான திருப்பங்களைக் கொண்டது. அவர்களது கருணை மனுக்கள் 2000 தொடங்கி 2011 வரைக்கும் 11 ஆண்டுகள் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமலேயே உயர் அதிகார மையங்களில் கிடப்பில் போடப்பட்டிருந்தன. 2011 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றமே அவர்களது மரண தண்டனையை இரத்துசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய ஒன்றியம் எதிர் வி.ஸ்ரீஹரன் (முருகன்) (2005) வழக்கில், உச்சநீதிமன்றம் மரண தண்டனை இரத்து செய்து எஞ்சிய...

செயலவைக் கூட்டம் – மாற்றுத் தேதி அறிவிப்பு

செயலவைக் கூட்டம் – மாற்றுத் தேதி அறிவிப்பு

பெருமழை அறிவிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திராவிடர் விடுதலைக் கழக மாநில செயலவைக் கூட்டம் வரும் அக்.14 ஞாயிறு அன்று, திருப்பூரில் நடைபெறும். நாள் : 14.10 2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் :                காலை 9.00 மணி இடம் :                 டைய்யர்ஸ் அசோசியேசன் கட்டிடம், முருகன் கோயில் பின்புறம், வாலிபாளையம், திருப்பூர். கழக செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். மாவட்டத்தின்  மற்ற செயலவை உறுப்பினர்களுக்கும் தெரிவியுங்கள். – கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 11102018 இதழ்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. நீண்ட நெடிய காலம் தன்னுடைய அரசியலால், எழுத்துகளால், இலக்கியப் பணிகளால், கலை செயல்பாடுகளால் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞரை நாம் இழந்து நிற்கிறோம். இதில் தலைப்பே கூட கருஞ்சட்டைக் கலைஞர் என்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பெரியார் இயக்கத்தில், சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றிய கலைஞர், அதற்குப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகமாக உருப்பெற்ற பிறகு தன்னுடைய வீரியமிக்க சொற் பொழிவுகளால் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் எழுச்சியை, இன எழுச்சியை ஏற்படுத்தியதில் ஒரு பங்கு உடையவர் என்பதையும் தாண்டி அவர் ஒரு பெரியாரின் தொண்டர் என்ற அடிப்படையில், பெரியாரிய பார்வையில் அவர் ஆற்றிய பணிகள், அவருடைய செயல்பாடுகளைப் பற்றி நாம் பேசுவதைத்தான் நோக்கமாகக் கொண்டு தோழர்கள் ’கருஞ்சட்டைக் கலைஞர்’ என்ற தலைப்பைக் கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன். “உலகத்தின்...

கழக வளர்ச்சிக்கு நன்கொடை

கழக வளர்ச்சிக்கு நன்கொடை

கருவூலத் துறை கணக்கு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரும் மயிலாடுதுறையில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளராக செயல்பட்டவருமான பெரியாரியலாளர் அரங்கராசன் கழக வளர்ச்சிக்கு ரூ.15,000 நன்கொடை வழங்கினார். ஓய்வு பெற்ற ஆசிரியரும் அன்னை மணியம்மையார் நடத்திய இராவண லீலா விழா மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியருமான அண்ணாதாசன் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். கழக ஆதரவாளர் மயிலாடுதுறை பி. இராசேந்திரன் கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்) பெரியார் முழக்கம் 04102018 இதழ்

சாதியை எதிர்க்க இணைந்து நிற்போம்: அம்ருதா-கவுசல்யா உருக்கமான சந்திப்பு

சாதியை எதிர்க்க இணைந்து நிற்போம்: அம்ருதா-கவுசல்யா உருக்கமான சந்திப்பு

தெலுங்கானாவில் தொழில் அதிபரின் மகள் அம்ருதா, பிரனாய் என்ற தலித் இளைஞரை காதலித்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். அம்ருதாவுக்கு வயது21. பிரணாய்க்கு வயது 24. இவர்களின் குழந்தை அம்ருதாவின் வயிற்றில் வளருகிறது.  அம்ருதாவின் தந்தையான தொழில் அதிபர், கூலிப்படையை வைத்து பிரணாயை வெட்டிக் கொலை செய்து விட்டார். இதற்காகக் கூலிப் படைக்கு அவர் கொடுத்த பணம் ஒன்றரை கோடி ரூபாய். இணையர்  இருவருமே படித்தவர்கள். பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்தவர்கள். இளம் காதல் கணவனை இழந்து தவிக்கும் அம்ருதா, “எனது வயிற்றில் வளரும் குழந்தையை ஜாதி எதிர்ப்புப் போராளியாக வளர்ப்பேன். இனி நானும் ஒரு ஜாதி எதிர்ப்புப் போராளி” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதேபோல் ஜாதி வெறிக்கு தனது கணவரை பலி கொடுத்த உடுமலை கவுசல்யா, ஓடோடிச் சென்று அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் அம்ருதாவுக்கு தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றையும் எழுதி நேரில்...

பெரியார் – திராவிட இயக்கம் குறித்து நடந்த இரண்டு நாள் ஆய்வரங்கம்

பெரியார் – திராவிட இயக்கம் குறித்து நடந்த இரண்டு நாள் ஆய்வரங்கம்

பெரியார் திராவிட இயக்கம் குறித்து இரண்டு நாள் ஆய்வரங்கம் ‘திராவிட அரசியல் வரலாற்றுத் தடங்கள்’ என்ற தலைப்பில் 2018  செப்டம்பர் 29, 30 ஆகிய இரு நாட்களிலும் சென்னை இராஜா முத்தையா ஆராய்ச்சி நூலக வளாக அரங்கில் நடைபெற்றது. சமூக மாற்றத்துக்கான ஆய்வு நடுவம், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இராஜா முத்தையா ஆராய்ச்சிக் கழகம் ஒருங் கிணைந்து நடத்திய இந்த ஆய்வரங்கில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆய்வாளர்கள் ஆய்வுரை வழங்கினர். அது குறித்து விவாதங்களும் நடந்தன. செப். 29 அன்று காலை 10 மணிக்கு ‘பொது மன்றமும் மாறும் சமூக அடையாளங்களும்’ தலைப்பில் தொடங்கிய முதல் அமர்வை முனைவர் ராஜன்குறை நெறியாள்கை செய்தார். வீ.எம்.எஸ். சுபகுணராஜன் – ‘பெரியார் ஜாதிச் சங்கங்களும் ஜாதி ஒழிப்பும்’ என்னும் தலைப்பிலும், பேராசிரியர் ஜி.அலோசியஸ் – ‘சூத்திரத் தன்மையிலிருந்து சுயமரியாதைக்கு’ என்னும் தலைப்பிலும், பேராசிரியர் சுந்தர் காளி – ‘தமிழகத்தில் பொது மன்ற...

எச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்

எச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்

திருப்பூரில் பெரியார் சிலையின் சுற்றுச் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த எச்.ராஜாவின் பிறந்தநாள் சுவரொட்டிகள் பா.ஜ.க.வினரை வைத்தே கிழித்தெறியப் பட்டது. தமிழகம் முழுவதும் பெரியார் சிலையை சேதப்படுத்தல் மற்றும் சிலையை அவமானப்படுத்தும் விதத்தில் இந்துத்துவவாதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தின் முன்பு தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாசிலை உள்ளது. இந்த சிலைகள் உள்ள இடத்தின் சுற்றுச்சுவரில் வெள்ளியன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. திட்டமிட்டு வன்முறையை உண்டாக்கும் வகையில் இந்துத்துவவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த செயலை அறிந்த பெரியாரிய அமைப்பினர் அவ்விடத்தில் ஒன்று திரண்டு போராட்டத்திற்கு தயாராகினர். இதற்கிடையே, இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டுவதற்காக திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை பாஜகவினரே கிழித்து எறிய வேண்டும் என பெரியார் அமைப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து பாஜக நிர்வாகிகளிடம் பேசிய காவல்துறையினர், அக்கட்சியைச் சேர்ந்தவர்களை...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (4) கலைஞர் சந்தித்த ‘ஜாதிய-பாகுபாடுகள்’

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (4) கலைஞர் சந்தித்த ‘ஜாதிய-பாகுபாடுகள்’

தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் பங்கேற்று நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) 1990களில் உலகமயமாக்கல் எனும் தாராளமயக் கொள்கையை அன்றைய நரசிம்மராவ் ஆட்சி இந்தியாவுக்குள் கதவு திறந்து விட்டது. அதன் பிறகு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அரசு ஒதுங்கிக் கொண்டு, தனியார் துறைகள் மேலாதிக்கம் பெறத் தொடங்கின. இந்தப் பின்னணியில் 1996-2001ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த கலைஞரின் செயல்திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தின் மிகச் சிறந்த நிர்வாகம் நடைபெற்ற காலமாக இது, இன்றளவும் பேசப்படுகிறது. தனியார் துறை வேகமாக வளர்ந்து கல்வியை தனியார் மயமாக்கிய அக்காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் அரசுப் பல்கலைக்கழகங்களை அதிகமாகத் தொடங்கினார் கலைஞர். 1989இல் மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் திருநெல்வேலியிலும், 2000-த்தில் பெரியார் பெயரில்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் கருஞ்சட்டைக் கலைஞர் என்ற தலைப்பில் செப்டம்பர் 30ஆம் தேதி திருச்செங்கோட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் து.சதிசுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் தொடக்கத்தில் பெரியார் பிஞ்சு இரா.தர்சினி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் மாவட்ட தலைவர்  மு.சாமிநாதன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மற்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலைஞரின் செயல்பாடுகளை விளக்கி சிறப்புரையாற்றினர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவகாமி, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் ஆகியோரும் உரையாற்றினர். சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி பேசுகையில், “காவிகளை தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்றபோது உறுதியளித்திருக்கிறார். அவருடைய பாதையில் நாங்களும் காவிகளை எதிர்க்க உறுதியாய்...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

ஈரோடு தெற்கு : 17.09.2018 பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. காலை, ஈரோடு ப.செ. பூங்கா பெரியார் சிலை வளாகத்திலுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின் தி.க., த.பெ.தி.க., தி.வி.க. அமைப்புகளின் சார்பாக நூற்றுக்கணக்கான தோழர்கள் ஊர்வலமாக பெரியாரின் இல்லத்தை அடைந்து அங்கும் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இரு சக்கர வாகன ஊர்வலத்தில் கருஞ்சட்டை தோழர்கள் பெரியாரை வாழ்த்தி முழக்கமிட்டபடி சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். இறுதியாக சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாகன பேரணியை நிறைவு செய்தனர். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும்...

1971இல் சேலம் மாநாட்டில்  பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது

1971இல் சேலம் மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது

1971ஆம் ஆண்டு ஜன.23, 24ஆம் தேதிகளில் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் பெரியார் முன்னிலையில் திராவிடர் கழகம் ஒரு புரட்சிகர தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘ஒருவரின் மனைவி மற்றொருவருடன் உடல் உறவு கொண்டால் – அதை கிரிமினல் குற்றமாகக் கருதக் கூடாது’ என்ற அத்தீர்மானம் அப்போது பொது வெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ‘இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தினமணி’ போன்ற பார்ப்பன நாளேடுகள் திரித்து, ‘ஒருவன் மனைவியை மற்றவன் அபகரித்துக் கொண்டு போவது குற்றமல்ல’ என்று செய்தி வெளியிட்டன. இதை எதிர்த்து அந்த ஏடுகள் மீது திராவிடர் கழகம் நீதிமன்றத்தில் (சென்னை பெருநகர 5ஆவது நீதிமன்றம்) வழக்கு தொடர்ந்தது. வழக்கு தொடர்ந்த பிறகும், மீண்டும் ஒரு முறை ‘இந்து’ நாளேடு, அதே போன்று ‘திரிபு’ செய்தியை வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் அந்த ஏட்டின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ‘இந்து’ ஏடு...

இந்து மதமும் திராவிடர் இயக்கமும்

இந்து மதமும் திராவிடர் இயக்கமும்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். காவி ஆட்சியை வீழ்த்துவோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இப்போது அறிவிக்கிறார். இவரே எங்களது கட்சியில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று ஏற்கனவே கூறியவர் தானே? இது முரண்பாடு அல்லவா? என்று கேட்டார்கள். முரண்பாடு அல்ல என்று நான் பதில் கூறினேன். பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் அனைவருமே விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ‘இந்து’க்கள் என்ற பட்டியலில் தான் அடைத்து வைக்கப்பட் டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலை உருவாக்கி அவர்களுக்கு சமூகநீதி உரிமைகள் வழங்கப்பட்டாக வேண்டும் என்ற நிலையை உருவானதற்கே அடிப்படை என்ன? இந்த மக்களை இந்துக்களாகி, பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடிமையாக்கி,  அவர்கள் மீது சுமத்திய இழிவை நீக்கவும் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத் தரவும் இந்த இடஒதுக்கீடு பட்டியல்களே வந்தன! ‘இந்துக்கள்’ என்றாக்கப்பட்டதால் உழைக்கும் மக்கள் கொடுத்த கடும் விலை இது. திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் – சுயமரியாதை,...

கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

15.09.2018 அன்று கழகத் தலைவர்  கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்ற தமிழர் கல்வி உரிமை மீட்புப் பயணம் குறித்த தலைமைக் குழு – பயண ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் –  இயக்கக் கொள்கைப் பரப்புரைக்கும்,  மக்களிடையே கருத்துகளை எளிமையாகக் கொண்டு சேர்ப்பதற்கும் கலைக்குழுக்களின் தேவை குறித்து விரிவாக  விவாதிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் முதல் முன்னெடுப்பாக தமிழ்நாடு மாணவர் கழகமும், மாற்றம் பகுத்தறிவு கலைக் குழுவும் இணைந்து சேலம் மாவட்டம் கொளத்தூர், உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் இரண்டு நாள் பறை பயிற்சிப் பட்டறையை எதிர்வரும் 3.11.2018,  4.11.2018 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு மட்டும் நுழைவுக் கட்டணமாக ரூ.500 (பயிற்சி, உணவு செலவுகள் உட்பட) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான பயிற்சிக் கட்டணம்  ரூ.1200 ஆகும். பயிற்சி பெற விரும்பும்  கழகத் தோழர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்களுக்குத்...

மயிலை கழகம் நடத்திய கால்பந்து போட்டி

மயிலை கழகம் நடத்திய கால்பந்து போட்டி

சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி நடத்தும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 6ஆம் ஆண்டு கால்பந்து போட்டி 23.09.2018 அன்று காலை 8.00மணிக்கு குருபுரம் விளையாட்டு திடலில் தொடங்கப்பட்டது. போட்டியை காங்கிரசை சார்ந்த ஐடீஊ பாலு தொடங்கி வைத்து சுயமரியாதை கால்பந்து கழகத்திற்கும், கழகத் தோழர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். மாலை 6.00 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகை தந்து சுயமரியாதை கால்பந்து கழகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து, இறுதி சுற்றுக்கு தகுதியான அணிகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து இறுதிச் சுற்றை தொடங்கி வைத்தார். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

வடசென்னை  கழகம் நடத்திய கருத்தங்கம்

வடசென்னை கழகம் நடத்திய கருத்தங்கம்

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளில் அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம் 22.09.2018 அன்று மாலை 6 மணிக்கு தாய் ரமாபாய் பவன், பெரம்பூரில் தட்சணாமூர்த்தி முன்னிலையில், நா.பாஸ்கர் வரவேற்புரையாற்ற, இராஜீ தலைமையில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி நிகழ்வை ஒருங் கிணைத்தார். இந்த கருத்தரங்கத்தில் “பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்” என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆய்வுரையாற்றினார். “பா.ஜ.க ஆட்சியில் சந்திக்கும் அடக்குமுறைகள்” என்ற தலைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் .ஆளுர் ஷாநவாஸ்  சிறப்புரையாற்றினார். இறுதியாக வட சென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திராவிடர் இயக்க பணிகளும் கலைஞர் பங்களிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் 17.09.18 அன்று  மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. எழுத்தாளர் வி.எம்.எஸ் சுபகுணரஜன்,  பேராசிரியர் கல்யாணி, ஆசிரியர்  இராமமூர்த்தி ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை மருதம் இரவி கார்த்திகேயன்   ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, கழகத் தலைவரை சால்வை அணிவித்து வரவேற்று நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து கேட்டுகொண்டிருந்தார். தி.மு.க. கட்சித் தோழர்கள், அய்.ஏ.எஸ் பயிற்சி மாணவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக செயற்குழு உறுப்பினர் அய்யனார்,  விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன்,  செஞ்சி பெரியார் சாக்ரட்டீஸ்,  சென்னை தம்பி மண்டேலா, நடராசன், தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி பரப்புரை செயலாளர் விஜி,  இளங்கோவன்,  பெரியார் கணேசன், அழகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (3) இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (3) இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முதல் மாநில முதல்வர் கலைஞர்

தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. குடும்ப வாரிசுரிமை சட்டத்தில் பெண் களுக்கு பங்கு உண்டு என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாகக் கொண்டு வந்தது கலைஞர் ஆட்சி தான் என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். (சென்ற இதழ் தொடர்ச்சி) கலைஞரின் சிந்தனையில் இந்த சட்டத்தைக் கொண்டு வரத் தூண்டுதலைத் தந்தது. 1929இல் செங்கல்பட்டில் பெரியார் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் சட்டத்தை நிறைவேற்றி விட்டு கலைஞர் சொன்னார், செங்கல்பட்டு மாநாடு முடிந்து 60 ஆண்டு கழித்தல்லவா, இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்ற முடிந்திருக் கிறது!” என்றார். பின்னர் நாடு முழுதும் இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டதற்குக்கூட தூண்டுகோலாக இருந்தது, அன்றைய நடுவண் ஆட்சியில் தி.மு.க.வின் பங்கேற்பு தான். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு; பெண்களை முதன் முதலாக...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

குமரி மாவட்டம் : திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் நடத்திய பெரியார்140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணிக்கு, விண்ணரசு வித்யா கேந்திரா, அழகிய மண்டபத்தில் தக்கலை எஸ்.கே.அகமது (பெரியாரியலாளர்) தலைமையில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஷ்ணு “பெரியார் பார்வையில் கடவுள் மறுப்பு” என்னும் தலைப்பிலும், நீதி அரசர் (பெரியார் தொழிலாளர் கழகம், மாவட்டத் தலைவர்) “பெரியார் பார்வையில் இடஒதுக்கீடு” என்னும் தலைப்பிலும், தமிழ் மதி (மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) “பெரியார் பார்வையில் நீட்” என்னும் தலைப்பிலும், போஸ் (மார்க்சியலாளர்) “பெரியார் பார்வையில் பொதுவுடைமை” என்னும் தலைப்பி லும், மகிழ்ச்சி (ஒருங்கிணைப்பாளர், பொது வுடைமை தொழிலாளர் கட்சி) “இளைஞர்கள் எதை நோக்கி பயணிப்பது” என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். பின்பு கலந்துக்கொண்ட அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். சூசையப்பா (முன்னாள்மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) நன்றி கூறமுடிவுற்றது. கூட்டத்தில் மஞ்சு குமார் (மாவட்டப்...

பயணக் குழுவினர் ஆக்கபூர்வ யோசனைகளை முன்வைத்தனர் ஈரோட்டில் பரப்புரைப் பயண மீள் ஆய்வுக்குழு கூட்டம்

பயணக் குழுவினர் ஆக்கபூர்வ யோசனைகளை முன்வைத்தனர் ஈரோட்டில் பரப்புரைப் பயண மீள் ஆய்வுக்குழு கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்பு பரப்புரைக் குழுவில் பங்கேற்ற தோழர்கள், பயண ஒருங்கிணைப்பாளர்கள் செப்டம்பர் 15 அன்று கூடி, பயணத்தின் அனுபவங்கள், மேலும் பயணத்தை செழுமை யாக்குதல் குறித்து விரிவாக விவரித்தனர். ஈரோடு கே.எஸ்.கே. மகாலில், 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் இராம.  இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். கோவை நிர்மல் குமார், சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் மோகன், விழுப்புரம் அய்யனார், சென்னை உமாபதி, மேட்டூர் அ. சக்திவேல், கொளத்தூர் பரத், காலாண்டியூர் ஈஸ்வரன், குருவை நாத்திகஜோதி, பவானி வேணுகோபால், திருப்பூர் முத்துலட்சுமி, காவை இளவரசன், சந்தோஷ் குமார், பெரம்பலூர்...

ஆர்.எஸ்.எஸ். அணியும் புதிய ‘முகமூடி’

ஆர்.எஸ்.எஸ். அணியும் புதிய ‘முகமூடி’

புதுடில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சில அதிரடி அறிவிப்புகளை டெல்லி விஜயபவன் அரங்கில் வெளியிட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தனது ‘வேத நூலாக’ மதித்துப் பின்பற்றி வரும் குருகோல்வாக்கரின் பஞ்ச் ஆப் தாட்ஸ் (BUNCH OF THOUGHTS) கருத்துகளை இப்போது அப்படியே நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; அது ஒரு காலத்தில் கோல்வாக்கர் வெளியிட்ட கருத்து; அவரது உரைகளின் தொகுப்பே அந்த நூல் என்று கூறியிருக்கிறார். சட்டப்படி வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு உரிமைகளை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் பசுவைப் பாதுகாப்பது எங்கள் கொள்கை என்றாலும் அதற்காக நடத்தப்படும் தாக்குதல்களை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். ‘இராமர் கோயிலை’க் கட்ட விரும்புவதாகவும், அது சட்டத்தின் அனுமதியோடுதான் செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கருதவில்லை என்றும் பேசியிருக்கிறார். வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வை அதிகாரத்தில் அமர்த்துவதற்காகவே இந்த ‘வேடங்களை’ ஆர்.எஸ்.எஸ். போடத் தொடங்கியிருக்கிறது. மோகன் பகவத்தின் இந்த கருத்துகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு மட்டும் தானா...

மலேசியாவில் பெரியார் நூல்கள் வெளியீடு

மலேசியாவில் பெரியார் நூல்கள் வெளியீடு

மலேசியாவில் பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா சிலாங்கூர் மாநிலம் முன்னாள் நகராண்மைக் கழகத்தில் செப்.17 அன்று கொண்டாடப்பட்டது. டாக்டர் சி. தர்மலிங்கம் (சிலாங்கூர் மலேசிய தி.க. தலைவர் – ம.தி.க.) வரவேற்புரையில் த. பரமசிவம் (தலைவர், ம.தி.க. சிலாங்கூர் மாநிலம்) தலைமையில், ம.தி.க. பொறுப்பாளர்கள் எம். காந்தராஜ், பெரு. அ. தமிழ்மணி (தமிழர் தன்மான இயக்கத் தலைவர்), குணராஜ் ஜார்ஜ் (சட்டமன்ற உறுப்பினர் செந்தோசா), கணபதி ராவ் (சட்டமன்ற உறுப்பினர், சிலாங்கூர்) ஆகியோர் உரை யாற்றினர். விழாவில் கே.எம். பாலசுப்பிரமணியம் எழுதிய ‘பெரியார் ஈ.வெ. இராமசாமி’ எனும் ஆங்கில நூலும், நாரா. நாச்சியப்பன் எழுதிய ‘பெரியார் வரலாறு’ நூலும் வெளியிடப்பட்டன.  கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியா கோ நூல்களை வெளியிட்டார். ‘தோழர் பெரியார்’ நாடகம் காணொளி வழியாக ஒளிபரப்பப்பட்டது.  இதே இடத்தில் 2017 ஜூன் மாதம் விடுதலை இராசேந்திரன் அ. மார்க்ஸ் பேசிய கூட்டத்தில்  பெரியார் எதிர்ப்பாளர்கள் கலவரம்...

‘மாவீரன் ராஜா’வே எங்கே பதுங்கினாய்?

‘மாவீரன் ராஜா’வே எங்கே பதுங்கினாய்?

காவல்துறை அதிகாரிகளை மிரட்டி இட்லர் பாணியில் பேசியதோடு, “உயர்நீதிமன்றம் என்ன மயிரா?” என்று வீர கர்ஜனை செய்த “மாவீரன்” ராஜா, இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்திருக்கிறது. திருமயம் காவல்துறை, பிணையில் வெளி வர முடியாத எட்டு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து, “மாவீரன்” ராஜாவைப் பிடிக்க தனிப்படைகளை நியமித்திருக்கிறது. ‘அப்படி எல்லாம் நான் பேசவே இல்லை’ என்று பல்டி அடித்த பார்ப்பன ராஜா, இப்போது தனது அலைபேசியை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டாராம். ‘முண்டா தட்டும் வீராதி வீரன்’ எங்கே பதுங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. யாராவது கண்டுபிடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும். காவல்துறை போலீஸ் மோப்ப நாயைப் பயன்படுத்தியாவது இந்த ‘சங்கியை’த் தேடிப் பிடித்துக் கைது செய்யவேண்டும் என்று தமிழகம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. பெரியார் முழக்கம் 20092018 இதழ்

செங்கோட்டையில் இசுலாமியர்கள் மீதான மதbறி தாக்குதலுக்கு கழகம் கண்டனம்

செங்கோட்டையில் இசுலாமியர்கள் மீதான மதbறி தாக்குதலுக்கு கழகம் கண்டனம்

செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தும் வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கையும், இசுலாமிய மக்களுக்கு தக்க பாதுகாப்பும் வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தியும்,  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி விடுத்த அறிக்கை. செங்கோட்டையில் கடந்த 13.09.2018 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலம் திட்டமிட்டு கலவரமாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த ஊர்வலத்தில் இந்து தீவிரவாதிகள் வன்முறையை உருவாக்கி இசுலாமிய மக்களின் வீடுகள்,வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டு சிலரை தாக்கி அம்மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அடுத்தநாளும் வன்முறை தொடர்ந்து அப்பகுதி ஒரு பதட்டமான பகுதியாக மாறியுள்ளது. ஒவ்வொரு வருடமும் சங்கபரிவார அமைப்புகள் திட்டமிட்டே இப் பகுதியில் வன்முறையை தூண்டுவது காவல்துறையில் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதிவு செய்யப்பட் டுள்ளது.இந்த ஆண்டும் வன்முறை நிகழவிருக்கும் ஆபத்தை சுட்டிக் காட்டி தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என இசுலாமிய அமைப் புகள் முன்கூட்டியே காவல்துறை...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (2) கலைஞரின் தனித்துவமான நிர்வாகத் திறன்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (2) கலைஞரின் தனித்துவமான நிர்வாகத் திறன்

தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் உரையில் குறிப்பிட்ட தாவது: (சென்ற இதழ் தொடர்ச்சி) ‘முன்னேறிய ஜாதியினருக்கு இடஒதுக்கீடுகள் வேண்டாமா?’ என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கேட்ட போது, கலைஞர் இப்படி பதில் கூறினார். ‘அழுக்குத் துணிகளைத்தான் சலவைக்குப் போட வேண்டும். ஏற்கனவே சலவை செய்து அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகளை சலவைக்குப்  போட வேண்டிய தேவையில்லை” என்றார். 1971இல் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், பெரியார் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘சூத்திரர்கள்’ நுழைவதற்கு இருந்த தடையை எதிர்த்து, கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். போராட்ட வீரர்களின் பட்டியல் ‘விடுதலை’ ஏட்டில் வெளியிடப்பட்டு வந்தன. பெரியாரை சந்திக்க வந்த கலைஞர், ‘என்னுடைய ஆட்சி நடக்கும்போது, நீங்கள் போராடலாமா?’ என்று கேட்டார். “நான் எனது கடமையைச் செய்கிறேன்; நீங்கள் உங்கள்...

ஈரோடு-சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

ஈரோடு-சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

ஈரோட்டில் : ஈரோட்டில் செப்.15 அன்று மாலை 5 மணி யளவில் விநாயகன் சிலை அரசியல் ஊர்வலத்தில் நடக்கும் ஒழுங்கு மீறல்களைக் கண்டித்து காளை மாடு சிலை அருகிலிருந்து பெரியார் கைத்தடி ஊர்வலம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் புறப்பட்டது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடங்கி வைத்தார். கழகத் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, இரவு 8 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். அமைப்புச் செய லாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட 100 தோழர்கள் கைதானார்கள். ஆதித் தமிழர் பேரவை நாகராஜன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் அக்கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் : மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 16.09.2018 அன்று மாலை 4 மணிக்கு ஐஸ் அவுஸ் மசூதி அருகில்...

அம்பேத்கர் மதமாற்றத்தை வரவேற்று  அண்ணா எழுதியக் கட்டுரை

அம்பேத்கர் மதமாற்றத்தை வரவேற்று அண்ணா எழுதியக் கட்டுரை

அம்பேத்கர் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு 3 இலட்சம் மக்களுடன் புத்த மார்க்கம் தழுவியதை வரவேற்று அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ ஏட்டில் எழுதிய கட்டுரை. இந்து மதத்தைவிட்டு உளம் வெந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகிற மக்களை, தனது அரவணைப்புக்குள் அன்புடன் தழுவிக் கொள்ளும் பணியினை, இப்போது புத்தநெறி ஆற்றி இருக்கிறது. ஒரே இடத்தில், ஒரே நாளில், ஆடவரும் பெண்டிரும் சிறார்களுமாகச் சேர்ந்து மூன்று இலட்சம் மக்கள், ஒரு மதத்தைவிட்டு வேறொரு மதம் புகுந்த சம்பவம், அதிலும் இந்து மதத்தைவிட்டுப் புத்த மதம் தழுவிய செய்தி, இதுவரை வரலாற்றில் இடம்பெற்றிருக்கவில்லை. இம்மத மாற்றச் செய்தியைச் சித்தரித்துள்ள ஒரு நிருபர், “உலகில் வேறு எங்கும் நடைபெறாத இந்தச் சம்பவம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். மூன்று இலட்சம் மக்கள் கூடியிருந்த காட்சியை யும், அந்த இடத்தின் பரப்பையும், அதே நிருபர், “நகருக்கு வெளியே 10 இலட்சம் சதுர அடி விஸ்தீரணமுள்ள மைதானம் என்றும், மைதானம்...

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

பேராவூரணி: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி ஆவணம் சாலை முகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, மதிமுக பொறுப்பாளர்கள் குமார், கண்ணன், மணிவாசன், தேனி ஆல்பர்ட், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், வீரக்குடி ராஜா, சத்துணவு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் முத்துராமன், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் வனராணி, ஜேம்ஸ்,   முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கீ.ரே. பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திரைப்படப் பாடலாசிரியர் செங்கை நிலவன், பெரியார் அரும்புகள் அறிவுச் செல்வன், அரும்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு : தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளான...

செருப்புத் தூக்கும் மதவெறி!

செருப்புத் தூக்கும் மதவெறி!

சென்னை  அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை மீது ஒரு ஆசாமி செருப்பு வீச, அருகே இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்பட சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் நடத்தி செருப்பு வீசிய நபரையும் அவரைத் தூண்டிவிட்ட எச்.ராஜாவையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வெ.கி. எஸ். இளங்கோவன் சென்னையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அளித்த பேட்டியில், ‘எச். ராஜாவின் தூண்டுதலினால் செருப்பு வீசிய ஆசாமியையும் ராஜாவையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையிலும் தாராபுரத்திலும் பெரியார் சிலையை அவமதித்த மதவெறிக் கும்பலை வன்மையாகக் கண்டித்து தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி அறிக்கை விடுத்துள்ளார். பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுதும் பல்லாயிரக்கணக்கில்...

திராவிடர் விடுதலைக் கழகம்  மாநில செயலவைக் கூட்டம்  திருப்பூர் 14102018  தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் மாநில செயலவைக் கூட்டம் திருப்பூர் 14102018 தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் மாநில செயலவைக் கூட்டம் திருப்பூர் 14.10.2018 தீர்மானங்கள் தீர்மானம் 1 பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கும் வழிவகுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கிய மூன்று தீர்ப்புகளை இந்த செயலவை பாராட்டி வரவேற்கிறது. ஒன்று – சபரிமலை அய்யப்பன் கோயிலில் இடையில் சில ஆண்டுகளாக  “தீட்டாகிறார்கள்” என்று காரணம் கூறி பெண்களை அனுமதிக்க மறுத்து வந்த பாகுபாட்டை உச்சநீதிமன்றம் செல்லாதாக்கியிருக்கிறது. மற்றொன்று – இந்தியத் தண்டனை சட்டத்தில் 497 வது பிரிவு செல்லாது என்ற தீர்ப்பாகும். ஒரு மனைவி கணவன் சம்மத்துடன் வேறு ஒருவனை உடல்உறவு கொள்ள முடியும். கணவன் சம்மதமின்றி உடல்உறவு கொண்டால் கிரிமினல் குற்றம் என்று கூறுகிறது இப்பிரிவு. ஒரு பெண் -கணவனின் ஏகபோக உடைமையல்ல. பெண்ணுக்கான பாலுறவு சுதந்திரம் கணவனால் மட்டுமே தரப்பட வேண்டும் என்ற இந்த பிரிவை நீக்க வேண்டும் என்று 1971 ஜனவரி 23, 24 தேதிகளில் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில்...

திவிக செயலவை கூட்டம் 14102018 திருப்பூர்

திவிக செயலவை கூட்டம் 14102018 திருப்பூர்

“செயலவைக் கூட்டம்” மாற்று தேதி அறிவிப்பு. பெருமழை அறிவிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திராவிடர் விடுதலைக் கழக மாநில செயலவைக் கூட்டம் வரும் அக்14 ஞாயிறு அன்று, திருப்பூரில் நடைபெறும். நாள் : 14.10 2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 9.00 மணி இடம் : டைய்யர்ஸ் அசோசியேசன் கட்டிடம், முருகன் கோயில் பின்புறம், வாலிபாளையம், திருப்பூர். கழக செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். மாவட்டத்தின் மற்ற செயலவை உறுப்பினர்களுக்கும் தெரிவியுங்கள். – கொளத்தூர் தா.செ.மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் . 06.10.2018.

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !

செங்கோட்டையில் இசுலாமிய மக்கள் மீது இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் ! வன்முறையாளர்கள் மீது தக்க நடவடிக்கையும்,இசுலாமிய மக்களுக்கு தக்க பாதுகாப்பும் வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல் ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை. செங்கோட்டையில் கடந்த 13.09.2018 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலம் திட்டமிட்டு கலவரமாக ஆக்கப்பட்டுள்ளது. அந்த ஊர்வலத்தில் இந்து தீவிரவாதிகள் வன்முறையை உருவாக்கி இசுலாமிய மக்களின் வீடுகள்,வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டு சிலரை தாக்கி அம்மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அடுத்தநாளும் வன்முறை தொடர்ந்து அப்பகுதி ஒரு பதட்டமான பகுதியாக மாறியுள்ளது. ஒவ்வொரு வருடமும் சங்கபரிவார அமைப்புகள் திட்டமிட்டே இப்பகுதியில் வன்முறையை தூண்டுவது காவல்துறையில் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டும் வன்முறை நிகழவிருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என இசுலாமிய...

கழக தலைவர் மீது அவதூறு – காவல்துறை முன்னாள் அதிகாரிக்கு எச்சரிக்கை

கழக தலைவர் மீது அவதூறு – காவல்துறை முன்னாள் அதிகாரிக்கு எச்சரிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்களைப் பற்றியும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தோழர்.கொளத்தூர்மணி அவர்களைப் பற்றி, தவறான, உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்றை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் வீடியோவாக வெளியிட்டு தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.. அந்த வீடியோவில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய குண்டு சாந்தனை தோழர்.கொளத்தூர்மணி தான் காட்டிக் கொடுத்ததாக அவதூறாகக் கூறியுள்ளார்.. மேலும், அந்த வீடியோவில், வேலூர் சிறையிலிருந்து 44 விடுதலைப்புலிகள் சுரங்கம் தோண்டி தப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட கொளத்தூர்மணியை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர்நிறுத்திய போது, தன் கையில் துப்பாக்கி இருந்தால் அப்போதே சுட்டுக் கொன்றிருப்பேன் என்றும் பேசியுள்ளார்.. தனது பணிக்காலத்தில் இது போன்று பேசாமல், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு அந்த அதிகாரி இது போன்று பேசவேண்டிய அவசியம், மர்மம் என்ன என்பதையும் அறிய வேண்டி உள்ளது.. ராஜீவ்...

அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா ! ஆண்டிமடம் 16092018

அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா ! ஆண்டிமடம் 16092018

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் – கவரப்பாளையம் பெரியார் அண்ணா வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா பெரியார் அரங்கம் மற்றும் சிலை திறப்பு விழா ! நாள் : 16-09-2018 மாலை 2 .00 மணி #சிலை_திறப்பு_நிகழ்ச்சி -1 தந்தை பெரியார். – தோழர் கொளத்தூர் மணி பேரறிஞர் அண்ணா – பேரா.மணியன் மக்கள்திலகம் MGR – எஸ் ஆர் இராதா நாள் : 17-09-2018 காலை 9 .00 மணி #சிலை_திறப்பு_நிகழ்ச்சி -2 வான் புகழ் வள்ளுவர். – தோழர்.Dr.தொல்.திருமாவளவன் பெருந்தலைவர் காமராசர். – தோழர்.டி.கே அரங்கராசன் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் – புதுக்கோட்டை பாவாணன் பிரபாகரன் காவியம் நூல் வெளியிடுபவர் தோழர் .கோவை.கு .இராமகிருட்டினன்

அன்பு ஏகலைவன் – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு விழா ! மயிலாடுதுறை 02092018

அன்பு ஏகலைவன் – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு விழா ! மயிலாடுதுறை 02092018

அன்பு ஏகலைவன் – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு விழா ! நாள் – 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி இடம்- கோவிந்தம்மாள் திருமண மண்டபம், மயிலாடுதுறை. இணையர்கள்- மு.அன்பு, மாவட்ட அமைப்பாளர், திவிக அ.இளமதி தலைமை – ம.மகாலிங்கம் மாவட்டத்தலைவர், வரவேற்புரை- நா.இளையராஜா, தலைமைக்குழு உறுப்பினர், நடத்தி வைத்து வாழ்த்துரை – தோழர் கொளத்தூர் மணி முன்னிலை – விடுதலை இராசேந்திரன், வாழ்த்துரை- பேரா.த.ஜெயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சாக்கோட்டை மு.இளங்கோவன், நன்றியுரை- ப.தமிழ்வேலன் நகர செயலாளர்.

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுசூழல் பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை கொண்டு தயார் செய்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்யவும்,உச்சநீதி மன்றம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பிறப்பித்துள்ள உத்தரவுகளை அமுல் படுத்த வலியுறுத்தியும்,மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரியும் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை கொண்டு தயார் செய்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த ஆட்சித்தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத் தலைவர் தோழர் முகில்ராசு அவர்கள் தலைமையில் 10.09.2018 மாலை மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கழகத் தோழர்கள் மனுவை அளித்தனர். அப்போது கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் விஜயகுமார்,அகிலன், ராமசாமி,தனபால்,முத்து, நீதிராசன் ஆகிய பொறுப்பாளர்கள் உடன்...

தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணக்குழு கருத்துக் கேட்புக் கூட்டம் ஈரோடு 15092018

தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணக்குழு கருத்துக் கேட்புக் கூட்டம் ஈரோடு 15092018

”தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணக்குழு கருத்துக் கேட்புக் கூட்டம்” இடம்: KKSK மகால்,பவானி ரோடு,ஈரோடு நாள்: 15.9.18,சனி, காலை 10 மணி *தலைமை:* தோழர்.கொளத்தூர்மணி *முன்னிலை:* தோழர்.விடுதலை இராசேந்திரன் *நிகழ்ச்சி ஏற்பாடு:* தோழர்.இரத்தினசாமி *தொடர்புக்கு:* தோழர்.வேணுகோபால் 97883 64964 தோழர்.சண்முகப்பிரியன் 99444 08677

”திராவிட இயக்கப்பணிகளும், ‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்” – கருத்தரங்கம் விழுப்புரம் 17092018

”திராவிட இயக்கப்பணிகளும், ‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்” – கருத்தரங்கம் விழுப்புரம் 17092018

”திராவிட இயக்கப்பணிகளும், ‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்” எனும் தலைப்பில் ”கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் கருத்துரையாற்றுகிறார். நாள் : 17.09.2018,திங்கள் நேரம் : மாலை 5.00 மணி. இடம் : தளபதி அரங்கம்,கலைஞர் அறிவாலயம், விழுப்புரம். எழுத்தாளர் சுபகுணராஜன்,பேராசியர் பா.கல்யாணி ஆகியோரும் கருத்துரையாற்றுகிறார்கள்.

தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் ! 29092018 மணவாசி கரூர்

தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் ! 29092018 மணவாசி கரூர்

”திராவிடமும் தமிழ்தேசியமும்” எனும் தலைப்பில் கழகத்தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் விழா மற்றும் டாக்டர் கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் ! நாள் : 29.09.2018 சனிக்கிழமை நேரம் : மாலை 5.00 மணி. இடம் : பெரியார் நினைவு சமத்துவபுரம்,மணவாசி. கலைஞர் படம் திறந்துவைத்து உரை : ‘திருமிகு சுப்புலட்சுமி ஜெகதீசன்’, துணைப்பொதுச்செயலாளர்,தி.மு.க. ”திராவிடர் மாணவர் எழுச்சி” எனும் தலைப்பில் ‘மானமிகு பொத்தனூர் கா.சண்முகம்’ ( தலைவர்,பெரியார் அறக்கட்டளை) அவர்களும், ”பெரியாரின் இன்றைய தேவை” எனும் தலைப்பில் ‘திரு.ஆ.வந்தியத்தேவன்’,(அமைப்புச்செயலாளர் ம.தி.மு.க.)அவர்களும், ”பெரியாரும் பெண்ணியமும்” எனும் தலைப்பில் ‘தோழர் கிறிஸ்டினா சாமி’,(அகில இந்திய துணைத்தலைவர்,சுய ஆட்சி இந்தியா) அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், கரூர் மாவட்டம்.

ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ ! 15092018

ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ ! 15092018

ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ ! கழகத்தலைவர் ”தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் தலைமையில்…. மதத்தை அரசியலாக்காதே ! மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து ”பெரியார் கைத்தடி ஊர்வலம்” நாள் : 15.09.2018,சனிக்கிழமை நேரம் : மாலை 4.00 மணி இடம் : தந்தை பெரியார் சிலை வளாகம் (ப.செ.பூங்கா), ஈரோடு. பேரணியை துவக்கி வைப்பவர் : தோழர் விடுதலை ராசேந்திரன்,பொதுச்செயலாளர், தி.வி.க. தோழமை அமைப்புகளும் பங்கேற்கின்றன.

சென்னையில், பெரியார் கைத்தடி ஊர்வலம்! 16092018

சென்னையில், பெரியார் கைத்தடி ஊர்வலம்! 16092018

சென்னையில், பெரியார் கைத்தடி ஊர்வலம் ! தென்சென்னை மாவட்டச்செயலாளர் தோழர் இரா.உமாபதி அவர்கள் தலைமையில், மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து. நாள் :16.09.2018(ஞாயிற்றுக்கிழமை) நேரம் : மாலை 4 மணிக்கு இடம் : திருவல்லிக்கேணி,ஐஸ்அவுஸ் மசூதி அருகில். மதத்தை அரசியலாக்கும் மதவாதத்திற்கு எதிராக அணிதிரள்வோம்… வாரீர் தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சென்னை பெரம்பூரில், ”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.”

சென்னை பெரம்பூரில், ”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.”

சென்னை பெரம்பூரில், ”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.” தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு…. நாள் : 22.09.2018 (சனிக்கிழமை) நேரம் : மாலை 6 மணி இடம் : தாய் ராமாபாய் பவன்,சடையப்பதாஸ் தெரு, பெரம்பூர். கருத்துரை: ‘தோழர்.விடுதலை இராசேந்திரன்’ பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் ‘தோழர்.ஆளூர் ஷாநவாஸ்’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #வாருங்கள்_தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு :7299230363

பாரூக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி உதவிய தோழர்கள்

பாரூக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி உதவிய தோழர்கள்

மதவெறிக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் குழந்தைகளுக்கான  2018 முதல் பருவ பள்ளிக் கட்டணம் ரூ46,492/- செலுத்தி அவர்களது இரண்டாம் வருடத்திய கல்வியினை துவக்கி வைத்துள்ள வழக்கறிஞர் சிவகுமார், வழக்கறிஞர் கலையரசு ஆகியோருக்கும்,  கடந்தாண்டு இரண்டாம் பருவ கட்டணம் ரூ. 34000 செலுத்திய மதுரை வழக்கறிஞர் தன பாலாஜி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. பாரூக் குழந்தைகளை இஸ்லாமிக் பள்ளியில் இருந்து எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு இரண்டு பருவக்கட்டணம் செலுத்த வேண்டும். வாய்ப்புள்ள தோழர்களிடம் உதவி பெற்று செலுத்தி வருகிறோம். வாய்ப்பிருக்கும் தோழர்கள், ஆதரவாளர்கள், பள்ளிக் கட்டணத்திற்கு உதவ விரும்பினால் மகிழ்வோம். நேருதாஸ், திராவிடர் விடுதலைக் கழகம் , கோவை மாவட்டம் பெரியார் முழக்கம் 13092018 இதழ்

வேலூரில் திராவிட வேர்கள் கருத்தரங்கம்

வேலூரில் திராவிட வேர்கள் கருத்தரங்கம்

8.9.2018 சனிக்கிழமை காலை 10 மணியளவில் வேலூர் விரிஞ்சிபுரம் வி.எஸ்.பி மகாலில் திராவிட வேர்கள் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு எழுத்தாளர் டான் அசோக் தலைமை தாங்க திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, கல்வியாளர் பாலா கருத்துரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘கருஞ்சட்டை கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அந்த நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி தோழர்கள் திராவிட கருத்தியலில்  ஆர்வம் கொண்ட இளைஞர்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தின் வேலூர் மாவட்ட அமைப்பாளர்கள் நெமிலி திலீபன், குடியாத்தம் சிவா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றார்கள். பெரியார் முழக்கம் 13092018 இதழ்

பெரியார் விழா: திருப்பூர் தயாராகிறது

பெரியார் விழா: திருப்பூர் தயாராகிறது

திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09.09.2018 அன்று வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு மற்றும் மாவட்ட மாநகர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது பெரியார் 140ஆவது பிறந்தநாள் அன்று 17.09.2018 மாலை 4 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத் தில் இருந்து பேரணியாக புறப்பட்டு இரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு. 24.09.2018 திங்கள் அன்று காலை 9 மணிக்கு தந்தை பெரியார் சிலையில் இருந்து இரு சக்கர வாகன ஊர்வலமாய் நகரில் 25 இடங்களில் கொடியேற்று விழா மிகச் சிறப்புடன் நடைபெற திட்டம் வகுக்கப்பட்டு கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைக்கிறார். கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம் வெற்றி பெற பங்கெடுத்து அனைவரும்...

தமிழ்க் குரிசில் படத்திறப்பு

தமிழ்க் குரிசில் படத்திறப்பு

09.09.2018 அன்று மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடந்த தோழர் தமிழ்க்குரிசில்  படத்திறப்பு நிகழ்ச்சி காலை 10.30 மணியளவில் தொடங்கி யது. தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்க மணி  வரவேற்புரையாற்ற திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் நிர்வாகியாக இருந்து செயல்பட்ட வரும் தமிழ்நாடு தாய்த் தமிழ் கல்வி யின் செயலாளராக இருந்தவரும், பெரியாரிய சிந்தனையாளரும், குடிஅரசு வெளியீட்டில் தொகுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தலைமை யேற்று நடத்தியவருமாகிய தமிழ்க்குரிசில்  படத்தை பேராசிரியர் கல்விமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் ஏற்பாடுகளையும், உணவு ஏற்பாடுகளையும் மேட்டூர் நகர கழகத் தோழர்கள் செய்தார்கள். நிகழ்ச்சியில் நினைவேந்தல் உரையாக கோபி தாய்த் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் குமணன், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் மூர்த்தி, தமிழ்வழி கல்விக் கழகத்தின் சார்பாக வெற்றிசெழியன், பல்லடம் தாய்த் தமிழ்...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஜனநாயகப்படுத்தியவர் கலைஞர்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஜனநாயகப்படுத்தியவர் கலைஞர்

கோப்புகள் வழியாக மட்டும் பிரச்சினைகளைப் பார்க்காதவர். சமூகநீதி தத்துவத்தில் அடங்கியிருந்த சமூகவியல் குறித்து கலைஞருக்கு அபாரமான புரிதல்  இருந்தது என்று விடுதலை இராசேந்திரன் விளக்கினார். தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப் பட்டதால் மணியம்மையார் அரங்குக்கு மாற்றப் பட்டது. வெற்றி சங்கமித்ரா தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அருள்மொழி, ‘கலைஞரின் இந்துத்துவ எதிர்ப்பு’க் குறித்தும், இராஜன் செல்லையா ‘கலைஞரின் கலை இலக்கிய ஆளுமை’ குறித்தும், பூவிழியன், ‘கலைஞரின் சமூகநீதிப் பயணம்’ குறித்தும், விடுதலை இராசேந்திரன், ‘கலைஞரின் ஆட்சி நிர்வாகத் திறன்’ குறித்தும் பேசினர். தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் டி.கே.எஸ். இளங் கோவன் நிறைவுரையாற்றினார். விடுதலை இராசேந்திரன் உரையில் குறிப்பிட்ட தாவது:...

பரமசிவனின் ‘என்கவுண்டர்’

பரமசிவனின் ‘என்கவுண்டர்’

கதவுகள் இல்லாத குளியல் அறைக்கு குளிக்கப் போகிறாள் பார்வதி. புராண காலத்திலேயே குளியலறை இருந்திருக்கிறது. ஆனால் கதவு மட்டும் இல்லை. ‘சோப்பு’ தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தக் கதை தெரிந்தால் ‘இதுதான் பார்வதி குளித்த’ சோப் என்று தொலைக்காட்சி விளம்பரம் வந்திருக்கும். இனி அப்படி ஒரு விளம்பரம் வந்தாலும் வியப்பதற்கு இல்லை. குளியலறைக்குள் எவரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்கு ‘வாட்ச்மேன்’ ஒருவனை பார்வதி தயார் செய்திருக்கிறார். அந்த ‘வாட்ச்மேன்’தான் ‘விநாயகன்’. பார்வதி எனும் பெண் குளிக்கும் இடத்துக்குள் ஒரு ஆண் நுழைந்து விடாமல் தடுக்க ‘வாட்ச் வுமன்’ (றுயவஉh றடிஅயn) ஒருவரை தயார் செய்யாமல், ஏன் ‘வாட்ச்மேன்’ என்ற ஆண் நபரை தயார் செய்தார் என்று பெரியார் கேட்கிறார். அற்புதமான கேள்வி! நட்சத்திர ஓட்டல் குளியலறைக்குள்ளும் சில ‘பெண்கள் விடுதி குளியலறைகளிலும் ‘சி.சி. டி.வி.’ கேமிராக்கள் திருட்டுத்தனமாக பொருத்தப்படுகிறது என்ற செய்திகள் அவ்வப்போது வருகின்றன. பரமசிவன் என்று ஒரு கடவுள் இப்போது...

அறிவியலுக்கு எதிரான வினாயகன் கதை! வினாயகன் பிறப்புப் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை.

அறிவியலுக்கு எதிரான வினாயகன் கதை! வினாயகன் பிறப்புப் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை.

சதுர்த்தி விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப் படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப் போனால் அது ஏனைய `கடவுள்’களுக்கு மிகவும் வெட்கக் கேடாகும். அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்புப் பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து `இது உண்மையில் கடவுள்’ என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை. சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி...