சனாதனத்துக்கு தமிழ்நாட்டில் சவக்குழி!

மாநாட்டின் இறுதி நிகழ்வாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சனாதன எதிர்ப்பு உறுதி மொழியை வாசிக்க, தோழர்கள் உறுதி எடுத்தனர். உறுதி மொழி விவரம்:

இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில் அந்த கொள்கை உணர்வோடும் இலட்சிய துடிப்போடும் ஆயிரக் கணக்கில் கூடியிருக்கிற இளைஞர்

களாகிய நாங்கள் கீழ்கண்ட உறுதியினை ஏற்கிறோம்.

ஜாதியற்ற தமிழர்களாக வாழ்ந்த நமது சமூகத்தை ஆரியம் ஊடுருவி வர்ணாசிரம சனாதனத்தால் வீழ்த்தியது.

1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம், பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்து உருவான திராவிடர் கழகம் தொடர்ந்து வந்த திராவிட ஆட்சிகள் ஆகியவற்றின் உழைப்பால் திராவிடர் என்ற பெருமையோடு நாம் தலை நிமிர்ந்தோம்.

பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுத்து நம்மை இழிமக்களாக்கிய ஆரிய சனாதனத்திற்கு எதிரானது எங்கள் திராவிடம்.

ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான சமத்துவம் சம நீதியே எங்கள் திராவிடம்.

ஆனால் சனாதன ஒன்றிய ஆட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சமத்துவத்தை சம நீதியை தமிழ்நாட்டின் தனித்துவத்தை சீர்குலைத்துக் கொண்டு இருக்கிறது.

சனாதனத்தால் வஞ்சிக்கப்பட்ட நம் மக்களையே நயவஞ்சகமாக உள்ளிழுத்து கொண்டு அவர்களைப் பயன்படுத்தி தமிழகத்தை சனாதனப் பாதைக்கு இழுத்துச் செல்லத் துடிக்கிறது.

இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உண்டு என்று உணர்ந்த இளைஞர்களாகிய நாங்கள் இந்த இலட்சிய உணர்வுகளோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் களம் காண தயாராகவே இங்கே கூடியிருக்  கிறோம்.

சனாதனமே மிரட்டிப் பார்க்காதே

தமிழ்நாடு தான் உனக்கு சவக்குழி!

இது திராவிட மண்,

பெரியார் மண்

என்பதை எச்சரிக்கவே இந்த மாநாடு.

செயல்படுத்தவே இந்த உறுதியேற்பு!

நமது முன்னோர்கள் விட்டு சென்ற சமூகநீதி தமிழ்நாட்டை சாதியற்ற நமது இனத்தின் அடையாளத்தை தொடர்ந்து முன்னெடுக்க உறுதி ஏற்கிறோம்.

இந்த வரலாற்று போராட்டத்தில் மய்யப் புள்ளியாக இணைந்து கரம் கோர்த்து நிற்கும் பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய முற்போக்கு சக்திகளாகிய நாம் மக்களை அணி திரட்டி சமூகத்தை பின்னோக்கி இழுத்து செல்லும் சீரழிவு சக்திகளை துடைத்தறிவோம்!

சனாதனத்திற்கு

எச்சரிக்கை!

எச்சரிக்கை!!

எச்சரிக்கை!!!

பெரியார் முழக்கம் 04052023 இதழ்

 

You may also like...