Category: திவிக

திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்டக் கழக முடிவுகள்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் வீரபாண்டி பிரிவு பொருளாளர் துரைசாமி வீட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் காமராசர் பிறந்த நாள் விழாவையொட்டி ஜூலை 14ஆம் தேதி திருப்பூரிலும், 15ஆம் தேதி பல்லடத் திலும், 16ஆம் தேதி மடத்துக்குளம் பகுதி களிலும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் திருப்பூர் தோழர்கள் துரைசாமி, முகில்ராசு, நீதிராசன், அகிலன், முத்து, தனபால், விஜயகுமார், அய்யப்பன், பரிமளராசன், சிவகாமி, முத்துலட்சுமி, கனல் மதி, பிரசாந்த், நஜ்முன்னிசா, பல்லடம்  கோவிந்தராஜ், சண்முகம், தேன்மொழி, மடத்துகுளம் மோகன், சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

கழகத்தின் நடவடிக்கையால் குன்னத்தூர் காவல்துறை விநாயகர் கோயில் அகற்றம்

கழகத்தின் நடவடிக்கையால் குன்னத்தூர் காவல்துறை விநாயகர் கோயில் அகற்றம்

குன்னத்தூர் காவல் நிலைய வளாகத்தில் சட்டவிரோதமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராய் தனியொரு மத வழிபாட்டுத் தலம் கட்டி வணங்கி வந்த நிலையில், திராவிடர் விடுதலைக் கழக குன்னத்தூர் நகர பொறுப்பாளர் தோழர் சின்னசாமி அவர்கள் 20.06.2019 அன்று புகார் மனு நேற்று அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து விநாயகர் கோயிலில் இருந்த சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். உயர்நீதிமன்ற அறிவுரைப்படி அரசு அலுவலகங்களில் மதவழிபாட்டு தலங்களை உடனடியாக நீக்கிய குன்னத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கும், காவல் துறை கண்காணிப்பாளருக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதோடு மேலும் கோயில் கட்ட எழுப்பிய சுவற்றையும் அப்புறப்படுத்தி இனி அந்த இடம் காவல்நிலைய பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் மாறுதல் செய்யவும் சட்டவிரோத வேறு கோயில்கள் அங்கே அமைவதை தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிக்கொள்கிறோம் குன்னத்தூர் நகர திவிக

கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா இணையேற்பு விழா

கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா இணையேற்பு விழா

12.5.2019 அன்று மாலை 6 மணியளவில் குடியாத்தத்தில் கழகத் தோழர் வி.கஜேந்திரன் – மோகனப்ரியா – இணையேற்பு விழா  சிறப்புடன் நடந்தது கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர், மருத்துவர் எழிலன் மற்றும் கழக முன்னோடிகள், அம்பேத்கரிய அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பறை இசை கலை நிகழ்ச்சிகளும் மண விழா மேடையில் அரங்கேறியது. பெரியார் முழக்கம் 06062019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

மே 25, 2019 அன்று மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவும் எழுச்சியுடன் நடை பெற்றது.  நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, சென்னையிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். உயர்நீதிமன்றம் வழியாக உத்தரவு பெற்று நடந்த நாத்திகர் பேரணி மேட்டூர் கேம்ப் பகுதியில் தொடங்கி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேரணியை மாலை 4 மணியளவில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணி 2 மணி நேரம் நடந்தது. பேரணி வரும்போதே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கொட்டும் மழையில் ஒரு மணி நேரம் தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர். பெண்களும் ஆண்களுமாக இளைஞர் கூட்டம். பேரணிக்காகவே தயாரிக்கப்பட்ட ‘டி சட்டைகளை’ அணிந்து முழக்கமிட்டு வந்த காட்சியை வீதியின் இருபுறங்களிலும் மக்கள் திரளாகக் கூடி நின்று பார்த்தனர்....

கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

கொளத்தூர் அய்யம்புதூரில் கழகம் நடத்திய பயிற்சி முகாம்

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொளத்தூர் ஒன்றியம் அய்யம்புதூர் கிராமத்தில் திராவிடர் விடுதலைக் கழக பெரியாரியல் பயிற்சிமுகாம், மே 23, 24 தேதிகளில் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதுவரை பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்காத புதிய இளைஞர் களுக்கான இந்த முகாமில் 20 பெண்கள் உள்பட 45 தோழர்கள் பங்கேற்றனர். காவலாண்டியூர் ஒன்றியக் கழகம் பயிற்சி முகாமை மாவட்டக் கழகம் சார்பில் முன்னின்று நடத்தியது. மே 23 அன்று மாலை 9.30 மணியளவில் முகாமை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தொடங்கி வைத்தார். முதல் வகுப்பாக ‘பெரியார் ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வகுப்பு எடுத்தார்.  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணியளவில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், ‘புராணம் – மூட நம்பிக்கைகள்’ என்ற தலைப்பில்  பேசினார். பிற்பகல் 4...

தலைமைக் கழக நிதி

தலைமைக் கழக நிதி

பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திவிக சார்பில் கழக கட்டமைப்புநிதி ரூ20000  கழகத் தலைவரிடம் தஞ்சைமாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், அறிவுச்செல்வன் பெரியசாமி, அரும்புச்செல்வன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர். பெரியார் முழக்கம் 23052019 இதழ்

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பி தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்தும், பொன்பரப்பியில் தடுக்கப்பட்ட வாக்குப்பதிவினை மீண்டும் நடத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி மற்றும் பா.ம.க.வைச் சேர்ந்த சாதிய வன்முறையாளர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்ட ஈட்டினை வழங்க வலியுறுத்தியும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 23.4.2019 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் அன்பு தனசேகரன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன் மற்றும் பரந்தாமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் உலகநாதன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வமணி, தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கண்டன உரை...

மே 25இல் மேட்டூரில் நாத்திகர் விழா: சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி

மே 25இல் மேட்டூரில் நாத்திகர் விழா: சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி

நாத்திகர் பேரணி தொடர்பாகத் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கில், பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நாத்திகர் விழாவுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். ஏப்ரல் மாதம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சேலம் மேட்டூரில் நாத்திகர் பேரணி மற்றும் விழா நடத்தவிருப்பதாகவும், அதற்கு அனுமதி கோரி மார்ச் மாதம் கருமலைக் கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், கருமலைக்கூடல் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமென்று கோரித் தங்களது மனுவை நிராகரித்தார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்திருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டுமென்று கூறி...

மேடை தோறும் திராவிடர் இயக்கக் கருத்தை முழங்கிய கோவை இராமநாதன் குரல் அடங்கியது

மேடை தோறும் திராவிடர் இயக்கக் கருத்தை முழங்கிய கோவை இராமநாதன் குரல் அடங்கியது

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க பேச்சாளரும், திராவிடர் இயக்கக் கருத்தியலை தனது உரையின் உயிர் மூச்சாகக் கொண்டு பேசியவரும் பெரியார் இயக்கக் கழக மேடைகளில் தொடர்ந்து பங்கேற்றுப் பேசிய வருமான கோவை இராமநாதன் (87) மே 11ஆம் தேதி கோவையில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய புலவர் குழந்தை நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுஅவர் நிகழ்த்திய நீண்ட உரையும், பழனியில் தமிழ் வழிபாட்டை ஆதரித்து பெரியார் இயக்க மேடையில் அவர் ஆற்றிய உரையும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாகும். 1977, 1984ஆம் ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும், 1996இல் நாடாளுமன்ற உறுப் பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றம் முன்னணியினர் அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களுடன் மே  11 அன்று மாலை அவரது இல்லம் சென்று குடும்பத் துக்கு ஆறுதல் கூறினார். கடந்த 2018ஆம்...

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஏப்ரல் 14 அன்று காலை 10.00 மணிக்கு அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் மு. நாகராஜ், பெரியார் பிரபு, பெரியார் துளசிராஜா, பெரியார் பாரதிதாசன் (த.மா.கழகம்), நீதிபதி செ.வே. ராஜேஷ் (சங்கை, ஒன்றிய செயலாளர்), ஜெ.க. வேலாயுதம், கல்லை ஆசைத் தம்பி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 09052019 இதழ்  

மூத்த பெரியாரியலாளர் ஆனைமுத்து துணைவியார் முடிவெய்தினார்

மூத்த பெரியாரியலாளர் ஆனைமுத்து துணைவியார் முடிவெய்தினார்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் வே.ஆனைமுத்து  வாழ்க்கைத் துணைவியார் சுசீலா அம்மையார் (83), ஏப். 30 அன்று முடிவெய் தினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள அவரின் வீட்டில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்ட செயலாளர்இரா. உமாபதி, கரு. அண்ணாமலை, திருப்பூர் விஜயகுமார், மேட்டூர் முத்து ராஜா உள்ளிட்ட தோழர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். திருமதி சுசீலா அம்மையாரின் உடல் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு உடற்கொடையாக அளிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 09052019 இதழ்

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

நன்கொடை திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி விட்டீர்களா?

கழகத் தோழர்களே! தலைமைக் கழகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் கட்டமைப்பு நிதி திரட்டும் களப் பணியை தொடங்கி விட்டீர்களா? அதற்கான துண்டறிக்கை – நன்கொடை ரசீதுகள் – தோழர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களைச் சந்திக்க வருகிறார்கள். தோழர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த ரூ.20,000/- நன்கொடை திரட்டும் இயக்கத்தில் தோழர்கள் ஆர்வம் காட்டி வருவது நமக்கு நல்ல நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அறிவித்த சில நாட்களிலே சில தோழர்கள் ரூ.20,000/- நன்கொடையை வழங்கியிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். கடந்த இதழ்த் தொடர்ச்சி: கோவை சுரேஷ் பாபு   –      ரூ. 20,000 குவைத் பாண்டியன்    –      ரூ. 20,000 ‘இட்லி’ தயாரிப்பாளர் இனியவன்    –      ரூ. 20,000 சென்னை தோழர்கள் : உதயசங்கர், கார்த்திகேயன், டாக்டர் சுந்தர், –      ரூ. 20,000 கோவை தங்கவேலு, அரிகிருஷ்ணன் இணைந்து    (பட்டியல் பெருகட்டும்) பெரியார் முழக்கம்...

ஆசிரியர் சிவகாமி-முகில்ராசு இணையரின் இல்லத் திறப்பு-மத மறுப்பு மண விழா

ஆசிரியர் சிவகாமி-முகில்ராசு இணையரின் இல்லத் திறப்பு-மத மறுப்பு மண விழா

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு இணையரின் மகன் சி.இரா. கதிர்முகிலன் – அ. நஜ்முன்னிசா ஆகியோரின் காதல், மத மறுப்பு மணவிழா 24.4.2019 காலை 11 மணியளவில் சிறப்புடன் நிகழ்ந்தது. அதே நாளில் சிவகாமி-முகில்ராசு இணையரின் புதிய இல்லத் திறப்பு விழாவும் சிறப்புடன் நடந்தது. நிமிர்வு கலையகத்தின் பறை இசையோடு தொடங்கியது இல்லத் திறப்பு. இல்லத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். மணமக்களுக்கு பேராசிரியர் சரசுவதி உறுதிமொழி கூறி மணவிழாவை நடத்தி வைத்தார். இல்லத் திறப்பு நிகழ்வுக்கு கழகப் பொருளாளர் சு. துரைசாமி தலைமை தாங்கினார். அவர் தமது உரையில் ஆசிரியர் சிவசாமியும் தோழர் முகில்ராசுவும் கழகத்துக்கு முழு நேரக் களப்பணியாளர்களாக தொண்டாற்றுவதையும் கழகத் தோழர்களுக்கு நெருக்கடி வந்தால், ஓடோடிச் சென்று உதவி வருவதையும் திருப்பூர் மாவட்டத்தில் கழகத் தோழர்களை ஒருங்கிணைத்து களப்பணியாற்றுவதில் முனைப்பும் ஆர்வமும் காட்டி செயல்படுவதையும்...

களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு – மகளிர் நாள் விழா

களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு – மகளிர் நாள் விழா

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா –    மகளிர் தினவிழா –  சிறந்த பெண் சேவையாளர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா இராசிபுரம் கன்னட சைனீகர் திருமண மண்டபத்தில் 21.4.2019 ஞாயிறு மாலை  5.45 மணியளவில்  தொடங்கியது சுமதி மதிவதனி (தி.வி.க. இராசிபுரம்) தலைமை தாங்கினார். மணிமேகலை (தி.வி.க. ஈரோடு) வரவேற்புரை யாற்றினார். வி.பாலு (தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்), கழகத் தலைவர் கொளத்தூர்மணி, முனைவர் சுந்தரவள்ளி (த.மு.எ.க.ச.) நிகழ்வில் சிறப்புரையாற்றினர். 1)     மதவாத சக்திகளுக்கு எதிராகவும், சமூக நீதி காக்கவும் துணிச்சலாக களமாடி வருகிற முனைவர் சுந்தரவள்ளி அவர்களுக்கு ‘மக்கள் அரசியல்’ விருதினையும், 2)     கரூர்மாவட்டம் பள்ளப்பட்டியைச் சார்ந்த பெரியார் பற்றாளரும் இந்தியாவின் தலைசிறந்த 100 இயற்கை வேளாண்மை விவசாயிகளில் ஒருவராக டெல்லியில் தனியார் ஊடகம் ஒன்றால் தேர்ந்தெடுக்கப் பட்டவரும், காடுகளை அழித்தொழித்த ஈஷா யோகா...

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

கழகப் போராளி பத்ரி நாராயணன் 15ஆவது நினைவு நாள் ஏப்.30, 2019 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ‘வெளிச்சத்துக்கு வராத தொண்டர்கள்’ விழாவாக நடத்தப்பட்டது. சென்னை இராயப்பேட்டைப் பகுதியை பெரியார் இயக்கத்தின் கோட்டையாக மாற்றிய களப் போராளி பத்ரி நாராயணன், சமூக விரோத சக்திகளால் 2004, ஏப். 30  அன்று பட்டப் பகலில் படுகொலைச் செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அவர் வாழ்ந்த இராயப்பேட்டை வி.எம். தெரு பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. பல இளைஞர்களை அந்தப் பாதையி லிருந்து விடுவித்து பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லி பெரியார் கொள்கைப் பாதைக்குத் திரும்பியவர் பத்ரி நாராயணன். அப்பகுதியில் அவரால் உருவாக்கிய 120 இளைஞர்களைக் கொண்டுதான் சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் 1996, ஜூலை 16ஆம் நாள் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி உறுதியேற்றுத் தொடங்கியது. பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புடன் இணைந்து பார்ப்பனியத்தில் மூழ்கி...

போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் – கழகத் தலைவர் பேட்டி

05.05.2019 தேதியிட்ட ஈழத்தமிழர்களால் அமெரிக்காவிலிருந்து நடத்தப்படும் ”இலக்கு” வாராந்திர மின்னிதழுக்கு ‘தாயகக் களம்’ பகுதியில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் குறித்தும், தற்போதைய ஈழச்சூழல், தமிழீழம் குறித்தும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அளித்துள்ள பேட்டி : ”போர்க்கலை வல்லுநர்களின் கணிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்” ‘வன்னிக்காட்டில் அவருடன் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை’ – ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் தா.செ.மணி. முள்ளிவாய்க்காலுக்கு முன் எமது மண்ணின் விடுதலைப் போராட்டத்திற்கு ஈக வரலாறு இருப்பது போல் அதற்கு தோள் கொடுத்து நின்ற தாய்த்தமிழகத்திற்கும் ஓர் ஈக வரலாறு உண்டு. கடலினும் பெரிதான ஈக நெஞ்சங்களின் ஒரு துளி சாட்சி தான் திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைவரும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கொளத்தூர் தா.செ.மணி. 1984 சனவரி 05 முதல் 1986 நவம்பர் இறுதிவரையான மூன்று ஆண்டுகளுக்கு புலிகள் பயிற்சி எடுப்பதற்காக தன்னுடைய...

மே 25ல் மேட்டூரில் நாத்திகர் விழா !  சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவு !

மே 25ல் மேட்டூரில் நாத்திகர் விழா ! சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவு !

  நாத்திகர் பேரணி தொடர்பாகத் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கில், பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். ஏப்ரல் மாதம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சேலம் மேட்டூரில் நாத்திகர் பேரணி மற்றும் விழா நடத்தவிருப்பதாகவும், அதற்கு அனுமதி கோரி மார்ச் மாதம் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், கருமலைக்கூடல் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமென்று கோரித் தங்களது மனுவை நிராகரித்தார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டுமென்று கூறி உத்தரவிட்டது. ஆனால், தங்களின் மனுவை இதுவரை பரிசீலிக்கவில்லை என்றும்,...

மேட்டூர் நாத்திகர் விழா தள்ளி வைப்பு

மேட்டூர் நாத்திகர் விழா தள்ளி வைப்பு

சேலம் மேட்டூரில் ஏப்ரல் 27ஆம் தேதி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நாத்திகர் விழா என்ற பெயரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் சக்திவேல் மனு அளித்திருந்தார்.  தேர்தலைக் காரணம் காட்டி, மாவட்ட ஆட்சியரை அணுகக் கூறி, காவல்துறையினர் மனுவைத் திரும்ப அளித்தனர். தங்கள் மனுவைத் திரும்ப அளித்ததன் மூலம் நிகழ்ச்சியைத் தாமதப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, விழாவுக்கு அனுமதி அளிக்க மாவட்ட ஆட்சியருக்கும், கருமலைக்கூடல் காவல் நிலையத்தினருக்கும் உத்தரவிடக் கோரி சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை இரண்டு நாட்களில் பரிசீலிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். நாட்கள் கடந்தபின்னும் இன்னும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காமல் தாமதம் செய்வதால் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதாக சக்திவேல் அறிவித்துள்ளார். விரைவில் நீதிமன்ற அனுமதி பெற்று மூடநம்பிக்கைக்கு எதிரான நாத்திகர் விழா...

கட்டமைப்பு நிதி : திருப்பூர் தொழிலதிபர் ஒரு இலட்சம் நன்கொடை

கட்டமைப்பு நிதி : திருப்பூர் தொழிலதிபர் ஒரு இலட்சம் நன்கொடை

திருப்பூர் தொழிலதிபரும் ஏ.கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ்  நிறுவனருமாகிய லோகு, கழக கட்டமைப்பு நிதியாக ரூபாய் ஒரு லட்சம் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். இந்தச் சிறப்பான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த சேலம் சங்கீதா மெடிக்கல் பாலசுப்பிரமணிக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் 02052019 இதழ்

புரட்சிக் கவிஞரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் புரட்டு வாதங்கள்

புரட்சிக் கவிஞரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் புரட்டு வாதங்கள்

பதியப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் வாய்ப்புக்கேற்ப மாற்றிப் பேசும் கெடுவாய்ப்பும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டுள்ளது. அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை தந்தை பெரியாருக்கு எதிராக நிறுத்தும் தவறானப் போக்காகும். பாவேந்தர் பெரியார் மேல் கொண்டிருந்த தாளாப் பற்றைத் தமிழகம் அறியாததல்ல. “மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு வஞ்சர்க்கோ கொடிய நெருப்பு மிக்க பண்பின் குடியிருப்பு விடுதலைப் பெரும் படையின் தொகுப்பு தமிழர் தவம்கொடுத்த நன்கொடை தன்மானம் பாயும் தலை மேடை நமக்குத் தாண்டி அந்த வாட்படை நமைஅவரின் போருக்கு ஒப்படை” பெரியார் குறித்துப் பாவேந்தர் தீட்டியுள்ள இந்தப் பாட்டோவியம் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். 1908ஆம் ஆண்டு நடந்த புலவர் தேர்வில் மாநி லத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சி பெற்றவர் அன்றைய கனக சுப்புரத்தினம். மயிலம் ஸ்ரீஷண்முகன் வண்ணப்பாட்டும், மயிலம் சுப்பிரமணியர் துதியமு தும் பாடிக்கொண்டிருந்த கனக சுப்புரத்தினம், அதே ஆண் டில் புதுவை வேணு நாய்க்கர் வீட்டுத் திருமண நிகழ்வு ஒன்றில் முதன்முதலாய்ப்...

கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

விழுப்புரம் கழகம் தீவிரம் விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்  20.04.2019 அன்று காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது மாவட்ட கழகத் தலைவர் பூஆ. இளையரசன் ஒருங்கிணைத்தார், மாவட்டச்  செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.   கழகத்தின் அடுத்தகட்ட செல்பாடு மற்றும் தலைமைக் கழக அலுவலகத்திற்கான நிதியை விரைவாக. மே 15 க்குள் வசூலித்து கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மே மாத இறுதியில் பொதுக்கூட்டம் மற்றும்  பயிற்சி வகுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது மாவட்ட துணைத் தலைவர் சிறீதர், ஒன்றிய பொறுப்பாளர்கள் பாபு,  கிருஷ்ணராஜ், மூர்த்தி மற்றும் தோழர்கள் கெஜராஜ், சிலம்பரசன், அருண், திருமாவளவன், சிறீநாத், மதியழகன், வசந்த்  ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு கழகம் தீவிரம் கழகக் கட்டமைப்பு நிதி தொடர்பான, திருச்செங்கோடு  நகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் 28.04.2019 மாலை...

கட்டமைப்பு நிதி : கடலூர் மாவட்டம் தீவிரம்

கட்டமைப்பு நிதி : கடலூர் மாவட்டம் தீவிரம்

06.04.2019 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி  அறிவழகன்  வீட்டில் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கழகத்தின் கட்டமைப்பு நிதியாய் ரூபாய் 20000 மே மாதம் 10-ந் தேதிக்குள் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது வருகின்ற 17ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தலைமைக் கழகத்தின் முடிவான திமுக கூட்டணியை ஆதரிப்பது என்பதை ஆதரித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் சிதம்பரம் கடலூர் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது மே மாதம் கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்டத் தலைவர் இளையரசன் மற்றும் விழுப்புரம் மாவட்டம் பெரியார் சாக்ரடீஸ் ஆகியோர் கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தனர். நட பாரதிதாசன் (மாவட்டத் தலைவர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம்...

13 உயிரைப் பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்

13 உயிரைப் பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிய சவப் பரிசோதனை அறிக்கையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் ‘பிரண்ட் லைன்’ இதழ் அதை வெளிக் கொண்டு வந்துள்ளது. அந்த அறிக்கையை அலசி மருத்துவர் புகழேந்தி ‘ஜூனியர் விகடன்’இதழில் எழுதிய கட்டுரை இது. தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய மக்கள்மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மறக்கமுடியா பெருந் துயரம்! துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேர்களின் உடற் கூராய்வு சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி யுள்ளார் தடயவியல்துறை மருத்து வரான புகழேந்தி. அவரிடம் பேசுகையில், “சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின், கந்தையா, தமிழரசன், செல்வசேகர் ஆகியோரின் உடல்களுக்கு 2018ஆம் ஆண்டு மே மாதம் 24, 25ஆம் தேதிகளில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை ஆய்வு மற்றும் அறிக்கைகள் அவசரக் கோலத்தில் நடந்துள்ளன என்பதை உடற்கூராய்வு அறிக்கைகளை வைத்தே சொல்ல முடியும். போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் 151-ன்படி இறந்தவர்கள் அணிந் திருந்த...

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு கழகம் மாலை அணிவிப்பு

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு கழகம் மாலை அணிவிப்பு

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் எதிரிலுள்ள அண்ணலின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்க முழக்கம் எழுப்பப்பட்டது. பெரியார் முழக்கம் 25042019 இதழ்

பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 10.04.2019 புதன் கிழமை மாலை 4.00க்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத வெறியர்கள் பெரியார் சிலையை உடைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பட்டத் திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மு. நாகராஜ் தலைமையேற்றார். அதில் பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்தும், பார்ப்பன மதவாதத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சி. சாமிதுரை, பெரியார் வெங்கட், கல்லை சங்கர், செ.வே ராஜேஷ், பெரியார் பாரதி, கார்மேகம், ஜெ.க. வேலாயுதம், துளசி உள்ளிட்ட 30 மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 25042019 இதழ்

குமரி மாவட்டக் கழகம் நடத்திய அம்பேத்கர் கருத்தரங்கு

குமரி மாவட்டக் கழகம் நடத்திய அம்பேத்கர் கருத்தரங்கு

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம் நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் 14.04.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00மணிக்கு அமைப்பாளர் தமிழ் அரசன் தலைமையுரையுடன் துவங்கியது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஸ்ணு ‘சாதியால் அம்பேத்கர் சந்தித்த பாதிப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் டி.மத்தியாஸ், ‘அம்பேத்கரின் இன்றையத் தேவை’ என்ற தலைப்பிலும், தமிழ்மதி ‘அம்பேத்கரை விழுங்கும் இந்துத்துவா’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பின்பு கேள்வி பதில் நிகழ்வுகள் நடைப்பெற்றது. மஞ்சுகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் தோழர்கள் ரமேஸ்பாபு, இராஜேஸ்குமார், சஜிகுமார், முத்து, இரவி, சங்கர், இராஜேந்திரபிரசாத் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் 25042019 இதழ்

சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

சங்கர் சமூகநீதி அறக்கட்டளை சார்பில் சங்கர் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் 13.3.2019 அன்று உடுமலைப்பேட்டை குமரலிங்கம் பேருந்து நிலையம் அருகில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில், ‘தந்தை பெரியார் வழியில் சமூகநீதி’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ‘பெண் விடுதலைத் தளத்தில் சமூகநீதி’ தலைப்பில் தமுஎச மாநிலத் துணைச் செயலாளர் சுந்தரவள்ளி, ‘அண்ணல் அம்பேத்கர் ஒளியில் சமூகநீதி’ தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழ்த் தேசிய மரபில் சமூகநீதி’ தலைப்பில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் வே. பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாலை 4 மணிக்கு சங்கர் தனிப் பயிற்சி மய்யக் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பெரியார் முழக்கம் 25042019 இதழ்

துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு : மயிலை கழகத் தோழர்கள் நடவடிக்கை

துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு : மயிலை கழகத் தோழர்கள் நடவடிக்கை

02.04.2019 அன்றுகாலை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில்…. துப்புரவு பணியாளர்கள் சாக்கடை அடைப்பு, குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலையில் எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இன்றி வேலையில் ஈடுபட்டிருந்தனர். இதை அறிந்த திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த மயிலாப்பூர் பகுதியின் இளைஞர்கள் பீரவீன்குமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்களைப் பாதுகாப்புக் கருவியின்றி வேலை செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பணியாளர்களை இந்த பணியில் ஈடுபடுத்திய வார்டு 123ஆவது பகுதி மாநகராட்சி பொறுப்பாளர் பலராமனைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். பாதுகாப்புக் கருவிகளை உடனே தருமாறும், அதன் பின்னே அவர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், பலராமன்முன்னுக்கு பின்னான பதில்களைத் தோழர்களிடம் கூறியுள்ளார். துப்புரவுப் பணியாளர்களைத் தொடர்ந்து பணியில் பாதுகாப்பு கருவிகளிலின்றி ஈடுபட அனுமதிக்க முடியாது எனக் கூறி, கழக மயிலாப்பூர் பகுதித் தலைவர் மாரி மற்றும் தோழர்கள் சென்னை மாநகராட்சியில்...

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தலைமைக் கழக அலுவலகத்தைத் தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்பு நிதி கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்காக சென்னையில் அமைந்துள்ள தலைமையகத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை கழகத் தோழர்கள் நன்றாக உணர்வார்கள். கடும் முயற்சி எடுத்து குத்தகைக்கு எடுத்து அந்தத் தலைமை அலுவலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு மட்டுமல்ல; எத்தனையோ சிறிய அமைப்புகள், இயக்கங்கள் தங்களுக்கான கலந்துரை யாடல், சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதற்கு ‘தாய் வீடாக’ நமது தலைமைக் கழகம் பயன்பட்டு வருகிறது. நகரின் மய்யப் பகுதியில் உள்ள  அந்த அலுவலகத்தை அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடிவெடுத்தபோது தலைமைக் கழகம் இல்லாமல் போய் விடுமே என்ற கவலையும் வருத்தமும் நமக்கு உருவானது. இதைக் காப்பாற்றிக் கொள்ள  வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்காக ஆதரவாளர்கள் நண்பர்களிடம் கட்டமைப்பு நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினோம். பலரும் ஆர்வத்துடன் உதவினார்கள். நட்புக்கரம் நீட்டினார்கள். ஆனாலும் அலுவலக கட்டிடத்தை வாங்கு வதற்கான தொகையில் பாதியளவைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை....

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

சென்னையில் : டாக்டர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளான 14.04.2019 காலை 9 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் ஜாதி, மத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் கழகத்  தோழர்கள் ராஜீ, சங்கீதா, அம்பிகா, பூர்ணிமா ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். திருப்பூரில் :  திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 14.04.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொரு ளாளர்...

வெளிச்சம் பெறாத தொண்டர்கள் விழா பொதுக்கூட்டம் சென்னை 30042019

வெளிச்சம் பெறாத தொண்டர்கள் விழா பொதுக்கூட்டம் சென்னை 30042019

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் நடத்தும்…. தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 15 நினைவு நாளில்…. வெளிச்சம் பெறாத தொண்டர்கள் விழா பொதுக்கூட்டம்….. 30.04.2019 (செவ்வாய்கிழமை) அன்று காலை 8.00 மணிக்கு தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் மயிலாப்பூர் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு, வி.எம்.தெரு, லாயிட்ஸ் சாலை, பெரியார் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெறும். விரட்டு கலைக்குழுவினரின் பறையிசை, வீதிநாடகம் நடைபெறும். சிறப்புரை : தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும்….திராவிடர் இயக்க சிந்தனையாளர்கள் அனைவரும் வாரீர் தோழர்களே.! தொடர்புக்கு : 7299230363

நாத்திகர் விழா – அனுமதி கோரி வழக்கு

நாத்திகர் விழா – அனுமதி கோரி வழக்கு

நாத்திகர் விழா: அனுமதி கோரி வழக்கு! நாத்திகர் விழாவுக்கு அனுமதி அளிக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 27ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் நாத்திகர் விழா நடத்த முடிவு செய்துள்ளது திராவிடர் விடுதலைக் கழகம். இதற்கு அனுமதி அளிக்கக் கோரி, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நாத்திகர் விழா நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி, கடந்த மாதம் 28ஆம் தேதியன்று கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், அங்கிருந்த காவல் துறை ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறித் தங்களது மனுவை நிராகரித்ததாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். “கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று மாவட்டத் தேர்தல் அதிகாரியாக உள்ள மாவட்ட ஆட்சியரிடம் விழா நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தோம். எங்களது...

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128வது பிறந்தநாள் விழா சென்னை 14042019

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128வது பிறந்தநாள் விழா சென்னை 14042019

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128வது பிறந்தநாளை முன்னிட்டு… நாளை (14.04.2019) காலை 9.00 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணல் அம்பேத்கர் திருவுறுவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் வருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

கதிர் முகிலன் – நஜ்முன்னிசா இணையேற்பு

கதிர் முகிலன் – நஜ்முன்னிசா இணையேற்பு

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி ஆகியோர் மகன் கதிர் முகிலனுக்கும், திருப்பூர் அப்துல் ஜப்பார் – சுபைதா பேகம் ஆகியோரின் மகள் நஜ் முன்னிசாவிற்கும் 3.4.2019 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் வாழ்க்கை இணையேற்பு நடைபெற்றது. இது மத மறுப்புத் திருமணமாகும். பெரியார் முழக்கம் 11042019 இதழ்

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

”மறக்கமுடியுமா?” • சங்பரிவாரங்கள் நடத்திய ‘ராம ரதயாத்திரை’க்கு தமிடிநநாட்டில் காவல் துறை பாதுகாப்புடன் அனுமதி வழங்கியது எடப்பாடி ஆட்சி. தமிழ்நாட்டை மதக் கலவரமாக்கும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று மதவெறி எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் வேண்டுகோளைப் புறந்தள்ளி எதிர்ப்பு தெரிவித்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கைது செய்தது எடப்பாடி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. • முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களைக் கைது செய்து 17 முன்னணித் தோழர்களை ‘ரிமாண்ட்’ செய்ததும் எடப்பாடி ஆட்சி தான். இவர்கள் தான் இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையின் ஆதரவாளர்களைப்போல் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசி வருகிறார்கள். • அதே முள்ளிவாய்க்கால் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருமுருகன் காந்தி (மே 17), இளமாறன் மற்றும் டைசன் (தமிழர் விடியல் கட்சி) ஆகிய தோழர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்து பா.ஜ.க. எஜமானர்களிடம் தனது...

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு

விழுப்புரத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு

23.2.2019 அன்று மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் பேராசிரியர் கல்யாணி ஒருங்கிணைப்பில் நடந்த பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உரைக்குப் பின்  திராவிடர் விடுதலைக்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  பழங்குடி மக்கள் மீது அரசும் காவல்துறையும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார். நிறைவுரையாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவன் பேசினார். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. பொன்முடி, சமூக சமத்துவப் படை தலைவர் ப. சிவகாமி, அய்.ஏ.எஸ்., மனித நேய மக்கள் கட்சி ப. அப்துல் சமது, த.நா. மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் டில்லி பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ. இளையரசன், மாவட்டச் செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கடலூர் மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர்  இராவண கோபால், திண்டிவனம் நகர...

ஈரோடு மரவபாளையத்தில் கழகப் பயிற்சி வகுப்பு

ஈரோடு மரவபாளையத்தில் கழகப் பயிற்சி வகுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக , மரவபாளையம் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் 10.03.2019 ஞாயிறு அன்று சமூகநீதிப் போரில் பெரியாரும் அம்பேத்கரும் என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலை 11 மணிக்கு வகுப்பு துவங்கியது  தோழர்களின் அறிமுகத்தை தொடர்ந்து , முதல் அமர்வாக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் “சமூகநீதிப் போரில் பெரியார்” என்னும் தலைப்பில் நெடிய வரலாற்று தரவுகளுடன் வகுப்பெடுத்தார். மதியம் 3 மணிக்கு வளைதளப் பொறுப்பாளர் விஜய் கழகத்தின் வளைதளப் பக்கங்களைப் பற்றியும் twitter பற்றியும் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து , இரண்டாம் அமர்வாக கழகத் தலைவர் கொளத்தூர்மணி “சமூகநீதிப் போரில் அம்பேத்கர்” என்ற தலைப்பில் மாலை 7 மணிவரை வகுப்பெடுத்தார். இறுதியாக கழகத்தின் பெயர்ப் பலகையை கழகத் தலைவர் திறந்து வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 40 தோழர்கள் பங்கு பெற்றனர்.  மாநகரத் தலைவர் ப.குமார் , சிவானந்தம் இருவரும் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்...

ஃபாரூக் துணைவியார் குடும்பத்தினருக்கு  கழகத் தலைவரின் அன்பு வேண்டுகோள்

ஃபாரூக் துணைவியார் குடும்பத்தினருக்கு கழகத் தலைவரின் அன்பு வேண்டுகோள்

கோவையில் அண்ணாமலை அரங் கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை 23.03.2019 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டம் கவரபாளையம் சரோஜா-இராமகிருஷ்ணன் ஆகியோரின் மகன் இராவண கோபால்  – ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலட்சுமி-நாச்சிமுத்து ஆகியோரின் மகள் கோமதி வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   திருமணத்தை தலைமையேற்று நடத்திய கழகத் தலைவர் இந்தத் திருமணத்தில் ஒருவர் கணவனை இழந்தவர், ஒருவர் மனைவியைப் பிரிந்தவர். வாழ்க்கை இணையேற்கும் இரண்டு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். மேலும் கோமதியின் மகன், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பிரபாகரன்தான் இந்த மறுமணத்திற்கு முன் முயற்சியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடைபெறும் இத்திருமணத்திற்கு வந்துள்ள ஹமீது (ஃபாரூக் தந்தை), இப்ராஹீம் (ரஷீதா தந்தை), ஷாஜகான்...

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ தேர்தல் சிறப்பிதழ்: தோழர்களுக்கு வேண்டுகோள்!

‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ் தேர்தல் சிறப்பிதழாக – பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. கூட்டணியின் மக்கள் விரோதக் கொள்கைகளை விளக்கி ஏராளமான செய்திகள், கட்டுரைகள் இடம் பெறுகின்றன. கூடுதல் இதழ் தேவைப்படுவோர் மார்ச் 30 தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு : 7299230363 / 9841489896 பெரியார் முழக்கம் 28032019 இதழ்

பழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள்

பழங்குடி மக்களைப் பாதுகாக்க களமிறங்கினர் கள்ளக்குறிச்சி கழகத் தோழர்கள்

பழங்குடியினர் – மலைவாழ் மக்களை அந்த மக்கள் வாழக்கூடிய பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த மாதம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. வேறெங்கும் வீடு கட்டப்படுவதற்கான இடமோ அல்லது நிலமோ இல்லாத நிலையில் பன்னெடுங் காலமாக பழங்குடியினர் – மலைவாழ் மக்கள் வசித்துவந்த  பகுதியில் இருந்து வெளியேற்ற வற்புறுத்தல் செய்தால் அந்த மக்கள் சொந்த மண்ணிலே அகதிகளாக இருக்க வேண்டிய ஒரு அவல நிலை ஏற்படும்.எனவே பழங்குடி- மலைவாழ் மக்களை அவர்கள் வசிக்கின்ற பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும், பழங்குடியினர்- மலைவாழ் மக்களுக்கு சாதி இருப்பிட சான்றிதழ்களை அரசு  விரைவாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி  கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்டம் முழுவதும் 200-சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பழங்குடியினர்- மலைவாழ் மக்கள் வாசிக்கக் கூடிய சில பகுதிகளில் தோழர்கள் நேரில்...

பொள்ளாச்சி பாலுறவு வன்முறை: மேட்டூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலுறவு வன்முறை: மேட்டூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டூர் அனை சதுரங்காடி பெரியார் திடலில் 16.3.2019 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்துக் கட்சி, முற்போக்கு இயக்கங்கள், மகளிர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கி. கோவிந்தராசு தலைமை தாங்கினார். ஈழவளவன் (நாம் தமிழர்), அப்துல் கபூர் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), கே. நடராஜன் (அய்.என்.டி.யு.சி.), செ. மோகன்ராஜ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), வசந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), என்.பி. இராஜா (தி.மு.க.), மா. சிவக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்), ஏ.எஸ். வெங்கடேஸ்வரன் (மேட்டூர் காங்கிரஸ் கட்சி), அ. சக்திவேல் (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கழகத் தோழர் ம. குமரேசன், கண்டன முழக்கமிட்டு நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் காவை. ஈசுவரன் (கொளத்தூர் ஒன்றிய செயலாளர்), மேட்டூர் நகர செயலாளர் ஆ. சுரேசு குமார், மாவட்ட...

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க  தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் திருப்பூரில் 20.3.2019 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி. கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி...

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள்  மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள் மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

கோவையில் அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக் மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார். இதைக் கண்டித்து மனிதநேய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. நிகழ்வின் தொடக்கத்தில் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் சமூக ஊடகங்களில் மதவெறி பற்றியும், கழகப் பகுத்தறிவு பரப்புரைக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் டுவிட்டர் பயன்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார். இந்தக் கூட்டத்தில் ‘மதங்களை மறப்போம், மனிதத்தை விதைப்போம்’  என தலைவர்கள் பேசினர். அதேபோல, மதங்களால் நடைபெறும் படு கொலைகள் தடுக்கப்படவேண்டும், மத அடிப்படை வாதங்கள் மாற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. திருப்பூர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மேட்டுப்பாளையம்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கண்டன ஆர்ப்பாட்டம் ஆனைமலை 19032019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கண்டன ஆர்ப்பாட்டம் ஆனைமலை 19032019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் அரசியல் தலையீடு இல்லாமல் கைது செய்யவும் ஆனைமலை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து தோழமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து 19032019 மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வலியுறுத்தியும் எஞ்சிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் தோழர்கள் முழக்கமெழுப்பினர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் 17032019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் 17032019

தமிழகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் அரசியல் தலையீடு இல்லாமல் கைது செய்யவும், இனிமேல் இதுபோல் குற்றங்கள் நடக்காமலிருக்க நிரந்தர தீர்வான “பாலியல் கல்வியை” பள்ளி பாடங்களில் நடைமுறைபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைய நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து தோழமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து  ஞாயிறு(17.03.2019) மாலை 5 மணிக்கு பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு பள்ளிபாளையம் நகரத் தலைவர் தோழர் மீனா தலைமை வகிக்க, திருச்செங்கோடு நகர அமைப்பாளர் தோழர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட தலைவர் தோழர் சாமிநாதன் வரவேற்புறையாற்றினார். பாலியல் குற்றவாளிகளை கண்டித்து, CPIML நகரச்செயலாளர் மாரியப்பன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் அஜ்மீர், திராவிடர் கழகம் மாவட்ட துணைச்செயலாளர் பொன்னுசாமி, DYFI ஒன்றியக்குழு செயலாளர் பிரபாகரன், புரட்சிகர இளைஞர் முன்னணி அமுதன், திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல்...

திருச்செங்கோட்டில் மூடப்பட்ட தந்தை பெரியார் சிலை மீண்டும் திறப்பு

திருச்செங்கோட்டில் மூடப்பட்ட தந்தை பெரியார் சிலை மீண்டும் திறப்பு

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பின்புறம் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை தேர்தல் அதிகாரிகளால் கடந்த 13.03.2019(புதன்) அன்று மூடப்பட்டிருந்த நிலையில், திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், வட்டாட்சியர் அவர்களிடம் முறையிட்டதன் எதிரொளியால் 14.03.2019(வியாழன்) இரவு மீண்டும் திறக்கப்பட்டது.  

சமூகநீதிப் போரில் பெரியார் அம்பேத்கர் பயிலரங்கம் மரவபாளையம் ஈரோடு 10032019

சமூகநீதிப் போரில் பெரியார் அம்பேத்கர் பயிலரங்கம் மரவபாளையம் ஈரோடு 10032019

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக , மரவபாளையம் CSI தொடக்கப் பள்ளியில் 10.03.2019 ஞாயிறு அன்று சமூகநீதிப் போரில் பெரியாரும் அம்பேத்கரும் என்னும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலை 11 மணிக்கு வகுப்பு துவங்கியது  தோழர்களின் அறிமுகத்தை தொடர்ந்து , முதல் அமர்வாக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சமூகநீதிப் போரில் பெரியார் என்னும் தலைப்பில் நெடிய வரலாற்று தரவுகளுடன் வகுப்பெடுத்தார். மதியம் 3 மணிக்கு வளைதளப் பொறுப்பாளர் தோழர் விஜய் கழகத்தின் வளைதளப் பக்கங்களை பற்றியும் Twitter பற்றியும் வகுப்பெடுத்தார். அதைத் தொடர்ந்து , இரண்டாம் அமர்வாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி சமூகநீதிப் போரில் அம்பேத்கர் என்ற தலைப்பில் மாலை 7 மணிவரை வகுப்பெடுத்தார். இறுதியாக கழகத்தின் பெயர்ப் பலகையை கழகத்தலைவர் திறந்துவைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 40 தோழர்கள் பங்குபெற்றனர்.  மாநகரத் தலைவர் ப.குமார் , சிவானந்தம் இருவரும் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை...

மார்ச் 31 மதுரையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

மார்ச் 31 மதுரையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

மார்ச் 31 மதுரையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சிறப்புரை தோழர் கொளத்தூர் மணி தோழர் விடுதலை இராசேந்திரன்   நாள் மார்ச் 31 மாலை 4 மணி இராமசுப்பு அரங்கம் மதுரை தொடர்புக்கு 7305538966

”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” கோவை 23032019

”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” கோவை 23032019

”தோழர் ஃபாரூக் நினைவேந்தல் !” இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித நேயன் தோழர் ஃபாரூக் நினைவேந்தல் கருத்தரங்கம் ! நாள் : 23.03.2019 சனிக்கிழமை. நேரம் : மாலை : 04.00 மணி இடம் : அண்ணாமை அரங்கம்,இரயில் நிலையம் எதிரில்,கோவை. உரை : ”தோழர் கொளத்தூர் மணி”, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். ”முனைவர் தோழர் சுந்தரவள்ளி”, மாநிலத்துணைச் செயலாளர்,தமுஎசக. ”தோழர் பாமரன்”, எழுத்தாளர். ”தோழர் பீர் முகமது”. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம், கோவை மாநகர் மாவட்டம். 9677404315 – 98652 85827 – 99942 85382